Thursday, September 29, 2005

அண்ணை சொல்வதுதான் நடக்கும்

முடிவாக எமது தடுப்புக்காவலை அகற்றி, அவரை தமிழீழம் அனுப்புவதற்கு உடன் ஒழுங்கு செய்வதாக உறுதி அளித்தார் ரஜீவ்.





திரு பாலசிங்கத்தின் விடுதலை நூலிலிருந்து....


1987ம் ஆண்டு ஜீலை மாதம் 29ம் திகதி இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. பாரதப் பிரதமர் ரஜீவ்காந்தியும் இலங்கை அரச அதிபர் ஜே.ஆர் ஜெயவர்த்தனாவும் கொழும்பில் நிகழ்ந்த விசேட வைபவ மொன்றின்போது இவ்வுடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

இந்த ஒப்பந்தம் கைச்சாத்திட்ட தினத்திற்கு முதல்நாள். அதாவது 1987ம் ஆண்டு ஜீலை மாதம் 28ம் திகதி புதுடில்லியில் இந்தியப் பிரதமர் ரஜீவ்காந்திக்கும், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் மத்தியில் ஒரு இரகசிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

கைச்சாத்து இடப்படாத அந்த இரகசிய உடன்பாடு பற்றி அனேகருக்குத் தெரியாது. அக் காலகட்டங்களில் ரஜீவின் நிர்வாக ஆட்சிபீடம் மூடி மறைந்த உண்கைகளில் இதுவும் ஒன்று ரஜீவ்-பிரபா உடன்பாட்டில் சம்பந்தப்பட்டவர்களில் நானும் ஒருவன் என்பதால் அந்த வரலாற்று நிகழ்வை இங்கு பதிவு செய்வது முக்கியமெனக்கருதுகிறேன்.

தலைவர் பிரபாகரனும், நானும் யோகியும், திலீபனும் புதுடில்லிக்கு அழைத்து வரப்பட்டு அசோக்கா விடுதியில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டது பற்றியும், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை எம் மீது திணித்து விட எடுக்கப்பட்ட முயற்சிகள் பற்றியும் முந்திய கட்டுரையில் விபரித்தேன்.

தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் விடுதலைப்புலிகளுக்கு சார்பான நிலை எடுத்துக்கொண்டதால் இந்திய அரசுக்கு சங்கடமான நிலை எழுந்தது. கொழும்பு சென்று ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு முன்பாக எப்படியாவது விடுதலைப் புலிகளை வழிக்கு கொண்டுவர வேண்டும் என ரஜீவ்காந்தி விரும்பினார்.

அவருக்கு ஒரேயொரு மார்க்கம்தான் தென்பட்டது. புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை நேரடியாகச் சந்தித்து, ஒப்பந்தம் பற்றி அவரது கருத்துக்களை கேட்டறிந்து, அவருடன் ஒரு இணக்கப்பாட்டிற்கு வருவதுதான் சாலச்சிறந்த வழி என ரஜீவ்காந்தி முடிவு எடுத்தார்.

1987ம் ஆண்டு ஜீலை மாதம் 28ம் திகதி நள்ளிரவு. அசோக்கா விடுதியில் ஆழ்ந்த தூக்கத்திலிருந்த என்னையும் பிரபாகரனையும் அவசர அவசரமாக எழுப்பினார்கள் இந்தியப்புலனாய்வு அதிகாரிகள். பிரதமர் ரஜீவ்காந்தி மிகவும் அவசரமாக எம்மைச்சந்திக்க விரும்புவதாகவும் உடனே புறப்படுமாறும் பணித்தார்கள்.

ஆயுதம் தரித்த கரும் ப10னைகளின் வாகன அணி பின் தொடர பிரதமமந்தியிரியின் இருப்பிடத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டோம். வீட்டு வாசலில் எமக்காக காத்து நின்றார் பிரதமர். ரஜீவ் காந்தியுடன் உள்ளக புலனாய்வுத் துறையின் அதிபர் திரு.எம்.கே.நாராயணனும் நின்று கொண்டிருந்தார்.

புன்முறுவல் ப10த்தபடி மனமுவந்து எம்மை வரவேற்ற பிரதமர், பிரபாகரனைப்பார்த்து 'உங்களைப் பற்றி நிறையக்கேள்ளிப்பட்டிருக்கிறேன். உங்களை நேரில் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார். அங்கு தமிழக அமைச்சர் பண்டுருட்டி இராமச்சந்திரனும் எமக்காக காத்து நிற்றார். கலந்துரையாடல் உடனேயே ஆரம்பித்தது. 'இந்த ஒப்பந்தம் குறித்து நீங்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக அறிந்தேன். ஒப்பந்தத்தில் உள்ள குறைபாடுகள் பற்றி விபரமாக கூறுவீர்களா? என்று கேட்டார் ரஜீவ்காந்தி. எமது கருத்துக்களை விபரமாக விளக்கும்படி பிரபாகரன் என்னைப் பணித்தார். ஒப்பந்தத்திலுள்ள குறைபாடுகளை ஒவ்வொன்றாக விளக்கினேன்.

இனப்பிரச்சினையைப் பொறுத்த வரை தமிழரின் உரிமை மிக முக்கியமானது. இலங்கையில் வட,கிழக்கு மாகாணங்களைக் கொண்ட நிலப்பரப்பில் தமிழர்களும், தமிழ் பேசும் முஸ்லிம் மக்களும் வரலாற்று hPதியாக வாழ்ந்து வருகின்றார்கள். இந்த நிலம் அவர்களது சொந்த நிலம். அவர்களது தாய்நிலம். இந்த தாயக நிலத்தைப் பிரிக்கும் எந்தத் திட்டத்தையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. வட-கிழக்கு மாகாணங்களைக் கொண்ட நிலப்பரப்பு தமிழ் பேசும் மக்களின் தாயகமாக இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டபோதும், இந்த தாயக நிலத்தின் பிரதேச ஒருமைப்பாட்டை கருத்து வாக்கெடுப்பிற்கு விடுவது என்ற தீர்மானத்தை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. இது தமிழர் தாயகத்தை கூறுபோட வழிவகுக்கும் என்று விளக்கினேன்.

அடுத்ததாக, மாகாண சபைக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரபரவலாக்கம் வரையறுக்கப்பட்டது என்றும் அது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை ப10ர்த்தி செய்யவில்லை என்பதையும் விளக்கினேன்.

எல்லாவற்றிற்கும் மேலாக, வட-கிழக்கு மாகாண சபை கலைத்துவிடும் அதிகாரம் இலங்கையின் அரச அதிபர் ஜெயவர்த்தனாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இவர் ஒரு சிங்கள இனவெறியர். தமிழ் மக்களுக்கு விரோதமானவர். இவர் தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவாரென நாம் நம்பவில்லை என்று கூறினார் பிரபாகரன்.

அடுத்ததாக ஆயுதக் கையளிப்பு பற்றிய விடயத்தை எடுத்துக் கொண்டோம். ஒப்பந்தம் கைச்சாத்தாகிய 72 மணிநேரத்திற்குள் ஆயுதங்களை ஒப்படைக்குமாறு கூறுவது அநீதியானது. எத்தனையோ ஆண்டுகளாக இரத்தம் சிந்திப் போராடிப் பெற்ற ஆயுதங்களை நான்கு நாட்களுக்குள், அதுவும் தமிழரின் தேசியப்பிரச்சினைக்கு இறுதித்தீர்வு கிட்டுவதற்கு முன்பாக கையளிக்கும் படி வற்புறுத்துவது எவ்வகையிலும் நியாயமாகாது என்றார் பிரபாகரன். நாம் சொல்வதையெல்லாம் ஆர்வமாகவும், பொறுமையாகவும் கேட்டபடி குறிப்பு எடுத்துக்கொண்டிருந்தார் ரஜீவ்காந்தி.

நாம் எமது நிலைப்பாட்டைக் கூறி முடித்ததும் ரஜீவ்காந்தி சொன்னார். 'உங்களின் மக்களின் பிரச்சினைக்கு ஒரு நீதியான தீர்;வு காண வேண்டும் என்பதில் எனது அரசாங்கம் கடும் முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த விடயத்தில் உங்களது ஒத்துழைப்பு எமக்கு அவசியம். நீங்கள் சொல்வது போல இந்த ஒப்பந்தத்தில் குறைபாடுகள் இருக்கத்தான் செய்கிறது. இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட மாகாணசபைத் திட்டம் ஒரு தற்காலிக ஒழுங்கு தான். அதிலுள்ள குறைபாடுகளை பின்பு நான் ஜெயவர்த்தனவுடன் பேசி நிவர்த்தி செய்ய முயற்சிப்பேன். தமிழர் தாயகம் பற்றி நீங்கள் எழுப்பிய ஆட்சேபனையை நான் கவனத்தில் எடுத்துள்ளேன். இது பற்றி நான் ஜெயவர்தனவுடன் பேசுவேன். கருத்து வாக்கெடுப்பு நடத்தாமல் அதனை ஒத்திவைக்குமாறு சொல்லுவேன்.

எதற்கும் நீங்கள் இந்திய அரசை நம்பவேண்டும்.

தழிழரின் நலன் மீது தான் நாம் அக்கறை கொண்டு செயல்படுகின்றோம். எனவே உங்களது ஆதரவு எமக்குத்தேவை. தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுத்து, அவர்களது பாதுகாப்பை இந்த ஒப்பந்தம் உறுதிப்படுத்தும். ஒப்பந்தத்தை நீங்கள் ஆதரித்தால் எமது கையைப்பலப்படுத்துவதாக அமையும்" என்றார்.

இந்தியப் பிரதமர் கூறியவற்றை தமிழில் மொழிபெயர்த்து பிரபாகரனுக்கு விளக்கமளித்தார் அமைச்சர் பண்டுருட்டி. 'இந்த ஒப்பந்தம் தமிழ் மக்களின் நலனைப் பேணவில்லை. மாறாக, தழிழ் மக்களின் நலனைப் பாதிக்கிறது. ஆகவே, இந்த உடன்படிக்கையை நாம் ஏற்றுக் கொள்ளமுடியாது." என்றும் அழுத்தம் திருத்தமாகச் சொன்னர் பிரபாகரன்.

ரஜீவ்காந்திக்கு நிலமை புரிந்தது. பிரபாகரன் தனது நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கிறார் என்பதையும் அவர் உணர்ந்து கொண்டார். விடுதலைப் புலிகளுடன் முரண்பட்டு காரியத்தைக் கெடுக்க அவர் விரும்பவில்லை. ஆகவே, தனது அணுகுமுறையைத் திடீரென மாற்றிக் கொண்டார்

;;;'உங்கள் நிலைப்பாடு எனக்குப்புரிகிறது நீங்கள் எடுத்த முடிவையோ, கொள்கையையோ மாற்றச்சொல்லி நான் கேட்கவில்லை. நீங்கள் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை. ஆனால் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருத்தால் போதும்." என்றார்
ரஜீவ்காந்தி.

பார்த்திர்களா?: பிரதமமந்திரியே உங்களது வழிக்கு வந்து விட்டார். ஒப்பந்தத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டாம். அது உங்கள் நிலைப்பாடு அதை நீங்கள் ஏற்கத் தேவையில்லை ஆனால் அதற்குத் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டாம் என்று மட்டும் பிரதமர் கேட்கிறார். இந்தச்சிறிய ஒத்துழைப்பையாவது நீங்கள் இந்தி அரசுக்காக செய்யலாம் அல்லவா?" என்று ரஜீவிற்காக வக்காலத்து வாங்கினார் பண்டுருட்டியார்.

இந்தச் சந்திப்பில் அவர் எதற்காக அழைக்கப்பட்டார் என்பது இப்பொழுது புலனாகியது. ரஜீவ் கொடுத்த விளக்கமும் அதற்குப் பண்டுருட்டியார் அளித்த வியாக்கியானமும் பிரபாகரனுக்கும் எனக்கும் திருப்தியை அளிக்கவில்லை. 'ஒரு விடயத்தை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அதனை நாம் எதிர்க்கின்றோம் என்றுதானே அர்த்தம்" என்று எனது காதோடு குசுகுசுத்தார் பிரபாகரன்.

ஏற்றுக்கொள்ளாததற்கும் எதிர்ப்புத் தெரிவிப்பதற்கும் இடையில் வேறுபாடு காட்டி எம்மைத் திருப்திபடுத்த முடியாது என்பதை ரஜீவ் உணர்ந்து கொண்டார் அதனால் பிரச்சினையை வேறு திசைக்கு எடுத்துச் சென்றார்.



'உங்களது இயக்கத்திற்கும், பொதுவாக தமிழ் மக்களுக்கும் ஜெயவர்த்தனாவில் நம்பிக்கையில்லை என்பது எமக்கும் தெரியும். எமக்கும் அவர் மீது நம்பிக்கையில்லைதான். என்றாலும் அவர் மீது கடும் அழுத்தம் பிரயோகித்து இந்த ஒப்பந்தத்தைச் செய்திருக்கின்றோம். மாகாண சபைத்திட்டத்தில் குறைபாடுகள் இருந்தாலும், பின்பு பேச்சுக்களை நடத்தி தமிழரின் சுயாட்சி அதிகாரங்களைக் கூட்டலாம் அல்லவா? அத்தோடு இந்த மாகாணசபைத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவது சாத்தியமல்ல. அதற்கு காலம் தேவை. அதற்கு முன்னராக, வட-கிழக்கில் ஒரு இடைக்கால அரசை நிறுவலாம். அதில் உங்களது அமைப்பிற்கு பிரதான பங்கு வழங்கலாம். இந்த இடைக்கால அரசு சம்பந்தமாக நான் உங்களுடன் ஒரு இரகசிய உடன்பாடு செய்து கொள்ளவும் ஆயத்தமாக இருக்கிறேன்." என்றார் ராஜீவ்காந்தி.


இந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிடவேண்டாம். தமிழர் தாயகத்தில் புலிகளின் நிர்வாக ஆட்சியை நிறுவுவதற்கு இது அருமையான சந்தர்ப்பம். இந்தியப் பிரதமருடன் ஒரு இரகசிய உடன்பாடு. இந்த யோசனையை நிராகரிக்க வேண்டாம். இந்திய-இலங்கை ஒப்பந்தம் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டாம். அதற்கு முன்னராக ரஜீவ் -பிரபா ஒப்பந்தம் வரப்போகிறது. இதனைப் பகிரங்கப்படுத்தத்தேவையில்லை. இரகசியமாகவே வைத்துக்கொள்ளலாம்." என்றார் அமைச்சர் பண்டுருட்டி.

இதெல்லாம் முன்கூட்டியே ஒத்திகை செய்யப்பட்ட நாடகம் போல எமக்குத் தோன்றியது. பிரபாகரனுக்கு எதிலுமே நம்பிக்கையில்லை. எதிலும் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் பண்டுருட்டி மிகவும் ஆர்வத்துடன் ரஜீவ்-பிரபா ஒப்பந்தத்திற்கு ஒரு வடிவம் கொடுக்க முயன்று கொண்டிருந்தார்.


வட-கிழக்கில் ஒரு இடைக்கால நிர்வாக ஆட்சி நிறுவப்பட்டு. அதில் விடுதலைப்புலிகளுக்கு பெரும்பான்மை பிரதிநிதித்துவம் வழங்கப்படுமென முடிவெடுக்கப்பட்டது. ஈழத்திலுள்ள எல்லாப் போராளி அமைப்புக்கும் இடைக்கால ஆட்சியில் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டுமென ரஜீவ் கேட்டுக்கொண்டார்.

பிரபா அதற்கு இணங்கவில்லை. இறுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும், ஈரோஸ் அமைப்புக்கும் மட்டும் குறைந்த அளவில் பிரதிநிதித்துவம் வழங்குவதென இணக்கம் காணப்பட்டது. இடைக்கால நிர்வாக ஆட்சியின் கட்டமைப்பு, அதிகாரம், செயற்பாடு பற்றி வாக்குறுதி அளித்தார். தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றம் நிறுத்தப்பட வேண்டுமென்றும், சிங்கள அரசாங்கம் புதிதாக காவல் நிலைகளைத் திறக்க கூடாதென்றும் பிரபாகரன் கேட்டுக் கொண்டார். அதற்கு ரஜீவ்காந்தி இணக்கம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் பொதுமக்களிடமிருந்து கட்டாய வரி வசூலிப்பு செய்வதாக ஜெயவர்த்தனா அரசு புலிகள் மீது குற்றம் சுமத்துகிறது. வரி வசூலிப்பை நிறுத்தமுடியாதா எனக்கேட்டார் ரஜீவ்காந்தி. அந்த வரிப்பணம் எமது இயக்கத்தின் நிர்வாகச் செலவுக்கே பயன்படுத்தப்படுகிறது. அந்தத்தொகையை இந்திய அரசு தருவதானால் வரி அறவிடுவதை நிறுத்தலாம் என்றார் பிரபாகரன். மாதாந்தம் எவ்வளவு தொகைப்பணத்தை வரியாகப் பெறுகிறீர்கள் என ராஜீவ் கேட்க, இலங்கை நாணயப்படி ஒருகோடி ரூபா வரை திரட்டுகின்றோம் என்றார் பிரபா. 'அப்படியானால் இந்திய நாணப்படி ஜம்பது லட்சம் ரூபா வரை வரும். அந்தப் பணத்தை நான் கொடுக்கிறேன்" என்றார் ரஜீவ்.


இறுதியாக ஆயுதக் கையளிப்பு விவகாரம் எழுந்தது. 'ஆயுதங்கள் முழுவதையும் கையளிக்குமாறு நாம் கேட்கவில்லை. நல்லெண்ண சமிக்ஞையாக சிறுதொகை ஆயுதங்களைக் கையளித்தால் போதும், பொதுமக்களுக்கும் போராளிகளுக்கும் பாதுகாப்பாக இந்திய அமைதிப்படை வட-கிழக்கில் செயற்படும். சிங்கள ஆயுதப்படைகளுடன் போர்நிறுத்தம் தொடர்ந்தும் இருக்கும்.

இந்த சூழ்நிலையில் உங்களுக்கு பேராயுதங்கள் தேவைப்படாது அல்லவா? என்றார் இந்தியப் பிரதமர். பிரபாகரன் பதிலளிக்கவில்லை. ஆழமாக சிந்தித்தபடி இருந்தார். திடீரெனக் குறுக்கிட்டார் பண்டுருட்டியார். 'எதற்காக யோசிக் வேண்டும். இந்தியா கொடுத்த ஆயுதங்களில் பழைய, பாவிக்க முடியாத துருப்பிடித்த ஆயுதங்கள் சிலவற்றை கொடுத்தால் போச்சு" என்றார். 'இந்தியா கொடுத்த ஆயுதங்கள் எல்லாம் அப்படித்தான்" என்று பிரபாகரன் கிண்டலாக பதிலளித்தார். பிரபா, 'பரவாயில்லையே, அதில் சிலவற்றைக் கொடுங்கள்.

இந்திய அரசு புதிதாக ஆயுதங்களை தரும் அல்லவா?" என்றார் அமைச்சர் பண்டுருட்டியார். தான் கூறியதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ரஜீவிடம் சொன்னார். அதை ஆமோதிப்பதுபோல பிரதமரும் தலையசைத்தார்.

அப்பொழுது அதிகாலை இரண்டு மணியிருக்கும். அன்று காலை ஒன்பது மணியளவில் புதுடில்லியிலிருந்து கொழும்பு புறப்பட இருந்தார் ரஜீவ்காந்தி. பிற்பகல் மூன்று மணிக்கு இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தாக இருந்தது.






புலிகளின் தலைவர் பிரபாவுடன் ஏதோ ஒரு சுமுகமான இணக்கப்பாட்டிற்கு வந்ததுபோல மகிழ்ச்சியுடன் காணப்பட்டார் ரஜீவ். பிரபாகரனுக்கு மனதில் மகிழ்ச்சி இல்லை. அவரது முகத்தில் அது தெளிவாகத் தெரிந்தது.



ஏதோ பெரிய சாதனை செய்து விட்டது போன்று பண்டுருட்டியார் திருப்தியுடன் தென்பட்டார். தூக்கமின்மையால் எல்லோருமே சோர்ந்து போயிருந்தோம். கூட்டம் முடியும் கட்டத்திற்கு வந்துவிட்டது. அப்பொழுது நான் அமைச்சர் பண்டுருட்டியிடம் கேட்டேன், 'ரஜீவ் -பிரபா இரகசிய ஒப்பந்தம் என பல விடயங்களை கதைத்தோம். பிரதம மந்திரியும் பல வாக்குறுதிகளைத் தந்திருந்தார். இதை எல்லாம் சுருக்கமாக எழுத்தில் இட்டு. அவரிடமிருந்து கைச்சாத்து பெற்றால் என்ன? என்றேன்.


பண்டுருட்டியார் சிறிது நேரம் யோசித்தார். 'இந்த இரகசிய உடன்பாட்டில் சர்ச்சைக்குரிய பல விடயங்கள் இருக்கின்றன அல்லவா? பண விவகாரம் இருக்கிறது. ஆயுதக் கையளிப்புப் பிரச்சினை இருக்கிறது. இதெல்லாம் அம்பலத்திற்கு வந்தால் இந்தியாவிலும் இலங்கையிலும் பெரும் அரசியற் சூறாவளியே ஏற்படும். உங்களுக்கு பிரதமரில் நம்பிக்கையில்லை? இது ஒரு புநவெடநஅநn யுபசநநஅநவெ. இரு பெரும் மனிதர்களின் எழுதப்படாத ஒப்பந்தமாக இருக்கட்டுமே? என்றார் அமைச்சர். ரஜீவ்காந்திக்கும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொன்னார்.


;'நீங்கள் எதற்கும் கவலை கொள்ளத்தேவையில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நான் நிறைவேற்றுவேன். அமைச்சர் சொல்வது போன்று இது ஒரு எழுதப்படாத புநவெடநஅநn யுபசநநஅநவெ ஆக இருக்கட்டும்." என்றார் ரஜீவ்காந்தி. இறுதிக் கட்டத்தில் நான் அவருடன் முரண்பட விரும்பவில்லை. முடிவாக எமது தடுப்புக்காவலை அகற்றி, அவரை தமிழீழம் அனுப்புவதற்கு உடன் ஒழுங்கு செய்வதாக உறுதி அளித்தார் ரஜீவ்.


ரஜீவ் காந்தியின் இல்லத்திலிருந்து அசோக்கா விடுதிக்கு நாம் போய்ச்சேர அதிகாலை மூன்று மணியாகி விட்டது. 'அண்ணா, இருந்து பாருங்கோ. இந்த இரகசிய ஒப்பந்தம் வாக்குறுதிகளும் என்றுமே நிறைவேறப்போவதில்லை. இதெல்லாம் ஒரு ஏமாற்று வித்தை என்று விரக்தியோடு கூறிவிட்டு தனது அறைக்குள் நுழைந்தார் பிரபாகரன்.


எனது அறைக்குள் சென்றபோது, விழித்தபடி காத்திருந்த திலீபன் விடியும் வரை என்னைத் தூங்கவிடவில்லை. ரஜீவ்-பிரபா சந்திப்பு பற்றியும், இருவருக்கும் மத்தியில் செய்து கொள்ளப்பட்ட இரகசிய ஒப்பந்தம் பற்றியும் விபரமாக திலீபனுக்குச் சொன்னேன். மிகவும் ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்தான். 'அண்ணன் என்ன சொல்கிறார்" என்று கேட்டான். 'பிரபாவுக்கு திருப்தி இல்லை. நிறைவேறப்போவதில்லை என்று உறுதியாகச் சொல்கிறார் என்றேன்.


ஆழமாக சிந்தித்தபடியிருந்த திலீபன் 'அண்ணை சொல்வதுதான் நடக்கும்" என்றான்.

உண்மையில் அப்படியேதான் நடந்தது. ரஜீவ்-பிரபா இரகசிய ஒப்பந்தம் நிறைவேற்றப்படவில்லை. இடைக்கால நிர்வாகக் அரசும் உருவாக்கப்படவில்லை.

தலைவர் பிரபாகரனுக்கு கொடுத்த வாக்குறுதிகளை இந்தியப் பிரதமர் ரஜீவ்காந்தி நிறைவேற்றவில்லை என்பதை உணர்ந்த திலீபன் ஆத்திரமடைந்தான். இந்திய அரசு செய்த வரலாற்றுத்தவறை உலகிற்கு அம்பலப்படுத்தும் நோக்கத்தோடு சாகும்வரை உண்ணாவிரப் போராட்டத்தைத் தொடங்கினான். இறுதியில் தனது உயிரை அர்ப்பணித்து உலகிற்கு உணர்த்தினான். எழுதப்படாத ரஜீவ்-பிரபா ஒப்பந்தம் பூகம்பமாக வெடித்தது. தமிழீழத்தில் ஒரு பேரெழுச்சியை உண்டு பண்ணியது.

திரு பாலசிங்கத்தின் விடுதலை நூலிலிருந்து....


திரட்டியது தீவு.

3 comments:

வசந்தன்(Vasanthan) said...

பதிவுக்கு நன்றி.
முடிந்தால் இன்னும் பல முக்கிய பகுதிகளை இடவும். பலருக்கு இது உதவக்கூடும். பலதகவல்கள் நிறையப்பேருக்குப் புதியதாகவே இருக்கும்.

Anonymous said...

ஜெயவர்த்தனே, பிரபாகரன் என்ற இரண்டு துருவங்களுக்கும் இடையே ஒற்றுமை ஏற்படுத்தும் முயற்சியாகவே ராஜீவ் காந்தி செயல்பட்டதாகத் தெரிகிறது. அவர் கொடுத்த வாக்குறுதிகள் கடைபிடிக்காமல் இருந்ததற்கு, இந்தப் பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு நிகழ்ந்த நிகழ்வுகள் காரணமாக இருந்திருக்குமே தவிர, ஏமாற்றும் எண்ணம் ராஜீவ் காந்திக்கு இருந்ததாகத் தெரியவில்லை.

அவர் மீது இருந்த மதிப்பு இந்தப் பதிவால் இன்னும் அதிகமானது.

பதிவிற்கு நன்றி.

Anonymous said...

நன்றி வசந்தன் மற்றும் சரவ்..

//ஏமாற்றும் எண்ணம் ராஜீவ் காந்திக்கு இருந்ததாகத் தெரியவில்லை.//

இந்த கட்டுரை யார் செய்தது சரி அல்லது பிழை என்பதை விட இப்படியும் நடந்திருக்கிறது என்பதை காட்டவே இங்கு இட்டுள்ளேன்.

நன்றி