Monday, September 19, 2005

குருபார்வை

குரு பெயர்ச்சி வந்தாலும் வந்தது.பத்திரிகைகள் பலனைப்போட்டுகுழப்பி விட்டன.ஒரு இராசிக்கு இரு பெரும் பிரபல பத்திரிகைகள் எழுதியஇராசி பலன் கீழ்வருமாறு.

உதாரணம் விருச்சிகராசி

தினத்தந்தியின் பலன் பணம் கொட்டும் என்கிறது.

தினமணிப்பலன்பிச்சைக்காரன் ஆவாய் என்கிறது..

தினத்தந்தி:-
குரு பகவான் இப்போது பனிரெண்டாம் இடத்தில் சஞ்சரித்துப் பார்வை பலத்தால் பல வழிகளிலும் பணம் வந்து பையை நிரப்பும் விதத்தில் வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கப் போகிறார். மன்னவன் பனிரெண்டில் சஞ்சரிக்கும் பொழுது மங்கல ஓசையும் இல்லத்தில் கேட்கும். மழலையின் ஓசையும் இடையறாது ஒலிக்கும். தங்கமும், வெள்ளியும் தானே வந்து சேரும். தைரிய மும், தன்னம்பிக்கையும் கூடும். உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு உலகத்தாரே ஆச்சரியப்படுவர்! குருப்பெயர்ச்சிக்கு முன்னதாகவே குருவை வழிபட்டு கூடுதலான நன்மையைக் காணுங்கள்.

தினமணி:-
கடந்த வருடம் முழுவதும் லாபத்திலிருந்து விருச்சிக ராசி அன்பர்களுக்கு நன்மைகளையே வழங்கிக் கொண்டிருந்த குரு பகவான், தற்போது விரய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் உங்களுக்கு சங்கடங்களும், தடைகளும் ஏற்படும். சேமிப்பெல்லாம் கரைந்துவிடும் சாத்தியக்கூறு உண்டு. சம்பாத்தியத்திலும் தடை ஏற்படலாம். பொருளாதார நிலை மிகவும் மந்தமாக இருக்கும். கடன்பாக்கி வசூலாகாது. கேட்ட இடத்தில் கடனுதவியும் கிடைக்காது. அரசாங்க உதவி, உற்றார் உறவினர்களின் உதவி ஏதும் தற்போது இருக்காது. எனவே சிக்கனம் மிகவும் அவசியம். வாங்கிய கடன்களையே சரிவர திருப்பிக் கொடுக்க முடியாமல் அவமானத்திற்கும் மனச்சங்கடத்திற்கும் ஆளாகாமல் இருக்கும் பொருட்டு, மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும். சுபகாரியங்களையும் தள்ளிப்போடுங்கள்.

மொத்தத்தில் கோள் என் செய்யும் நாளென் செய்யும் என்று ஆறுதலடையவேண்டியதுதான்.


2 comments:

Anonymous said...

http://sampiraani.blogspot.com/2005/09/blog-post_18.html

Anonymous said...

மொத்தத்தில் நீங்கள் ஒரு விருச்சிகராசிக்காரர் என்று தெரிந்து கொள்ளமுடிகிறது. உதாரணத்துக்கு விருச்சிக ராசியை எடுத்துச் சொல்லிருக்கிறீர்கள். இன்னும் மற்ற மற்ற ராசிகளை உற்று நோக்கினால் தான் புரியும். குழப்பங்கள் இன்னும் அதிகமாகும்.