Saturday, November 05, 2005

இடறல்

தலைவர் பிரபாவின் பிறந்த நாளன்று பிறக்கும் சிசுக்களுக்கு வங்கிக்கணக்கு

திருமலை அரசியல்துறையினர் ஏற்பாடு

எதிர்வரும் 26ஆம் திகதி தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் 51ஆவது பிறந்ததினமாகும். இதனையொட்டி திருகோணமலையில் அன்றைய தினம் பிறக் கும் குழந்தைகளுக்கு வங்கிக் கணக்குகள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன. விடு தலைப் புலிகளின் திருகோணமலை அரசியல்துறையினர் இத்தகவலைத் தெரி வித்தனர்.
தேசியத் தலைவரின் பிறந்த தினமான நவம்பர் 26ஆம் திகதி திருகோண மலையில் பிறக்கும் குழந்தைகளுக்கு நிலையான வைப்புக்கணக்குகளும் நினை வுப் பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.
அன்றைய நாளில் பிறக்கும் சிசுக்களின் விவரங்களை திருமலை மாவட்ட வைத்தியசாலையிலும், பிரதி மாகாண சுகாதாரப் பணிப்பாளரிடமும் உறுதிப்படுத் துமாறும் பெற்றோர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தகவல்.http://www.uthayan.com

தீவின் கருத்து :-இது போட்டிக்கு திருவிழா செய்யும் கலாச்சாரமாக மாறாவிட்டால் சரி.:(

0 comments: