Thursday, November 24, 2005

அவுட்டாக விரும்பாத அம்மையார்

ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடி இனி ஆட்டம் முடிந்தது என மற்றவர்கள் எண்ணும்போது புது யுக்தியுடன் சந்திரிகா அம்மையார் மீண்டும் களத்தில் இறங்குகிறார்.மீண்டும்
ஜளாதிபதியாக போட்டியிட முடியாத நிலையில் பண்டா அரசியல் சகாப்தம் முடிவடைகிறது
என அரசியல் ஆய்வாளர்கள் ஆருடம் கூறிக்கொண்டிருக்கையில் புதிய அவதாரத்துடன்
பாராளமன்ற உறுப்பினராக கதிர்காமரின் இடத்திற்கு வர முடிவெடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது.





இவரின் கள இறக்கம் தமிழர்களுக்கு நன்மையோ தீமையோ செய்யபபோவதில்லை.ஆனால்
புதிய ஜனாதிபதி ராஜபக்ஸ விற்கு தமிழர் பிரச்சனையை விட பெரிய தலையிடியாகவிருக்கும் என இப்போதே கட்டியம் கூறலாம்.

சந்திரிகாவை இலேசாக மதிப்பிடமுடியாது.பைத்தியங்கள் வரிசையில் சேர்க்கலாம்.
எப்போது எந்த வசனம் கூறுவார் எப்போது அதை மறுதலிப்பார் என கூறமுடியாது.

சந்திரிகாவின் அரசியல் கூற்றுக்களை அறிந்தோர் இதை ஏற்றுக்கொள்வர்.பல முழு நீள
நகைச்சுவை நாடகங்களை இனி பாராளமன்றத்தில் இனி பார்க்கலாம்.. கேட்கலாம்.

2 comments:

ஈழபாரதி said...

அது ஒரு கனாக்காலம், சந்திரிக்காவின் சாம்ராஜ்ஜியம் அழிகிறது, ஆடும்வரை ஆட்டம் ஆட்டம் முடிந்தால் ஜனாதிபதிமாளிகையை விட்டு ஓட்டம், முன்னேறிபாய்வதேன் அம்மா இப்போ சொல்லாமல் ஓடுவதேன் சும்மா? எத்தனை கொலைகள் கண்டோம் அத்தனையிலும் உங்கள் வெறிகள் கண்டோம்.
ஜனாதிபதி மாளிகையே........
பாராளமண்ற கதிரையே.........
விடை கொடு தாயே.........
சந்திரிக்கா அம்மா.......
ஊட்டுக்கு போறாங்க..........
விடை கொடுதாயே.........

theevu said...

ஈழபாரதி

முன்னேறிபாய்வதேன் அம்மா இப்போ சொல்லாமல் ஓடுவதேன் சும்மா?

:)

-theevu-