Tuesday, July 11, 2006

இலங்கை தமிழர்களுக்கு மூளை இருக்கிறதா?

பதிவர் பாலகுமாரன் ஒரு கேள்வி பதிவு ஒன்று போட்டுள்ளார் .அதற்கு எனது மனப்பதிவு இது.






தமிழ் மரபணுக்களில் வந்த இலங்கைத் தமிழர்களுக்கு மூளை இருக்கிறதா இல்லையா என்பதை அதே அணுக்களில் வந்த தொப்புள்கொடிகள்தான் சொல்லவேண்டும்.

கமல் வெறுமனே முன்னர் நரசிம்மராவுடன் அரசியல் கதைத்ததை விட சுகாசினி விடயத்தில் வாயைத்திறந்து தனது கருத்தையாவது சொல்லியிருக்கலாம்.பேசாமலிருப்பது நடுத்தரவர்க்கத்திற்கு வேணுமானால் இராஜதந்திரமோ அல்லது ஆட்டோ தடுப்பாகவோ இருக்கலாம்.ஆனால் சகல தடுப்புச் சுவர்களையும் கொண்ட மனிதாபித உணர்வுகொண்ட இந்த பிரபலங்கள், மௌனிப்பதுதான் வேடிக்கை இவர்கள் வாயைத்திறக்காமலிருப்பதுதான் பிரச்சனையை பெரிதாக்குகிறது.

நெய்வேலிப்பிரச்சனை கன்னடம் சார் பிரச்சனை என்பதற்காக ரஜனி மௌனமானார் அதனால் பாரதிராஜா போக்கில் உடன்படவில்லை என்று யாவருக்கும் தெரியும் .

நதியிணைப்பு கோடிருபாய் எல்லாம் பழங்கதையாயிற்று.

இரஜனி இரசிகர்கள் நல்லவர்கள் வல்லவாகள் என்பதில் எனக்கும் உடன்பாடே நானும் ஒரு இரஜனி இரசிகனே..

ஈழத்தமிழர்கள் விடயத்தில் இரஜனி என்றுமே வாயைத் திறக்கமாட்டார் என்பது நிதர்சனமான ஒரு உண்மை.

ஆனால் அதற்காக நாம் ஒன்றும் இரஜனி படத்தை ஒன்றும் பார்க்காமல் இருந்தோ பகிஸ்கரித்தோ விடமாட்டோம் என நண்பர் ஒருவர் சொன்னார்.

நான் துரோகி என முத்திரை குத்துவதற்குள் அவர் சொன்னார் இரஜனியின் அடுத்த படம் எல்லோரும் பார்த்து இன்புற அனைத்து இணையத் தளங்களிலும் மிக வேகமான முறையில் தரவிறக்கம் செய்து பார்க்ககூடியவாறு நல்ல தரத்துடன் வெளியிடுவோம் என்றார்.

நான் இராஜேந்தரகுமார் ஸ்ரைலில் ஙே என விழித்தேன்.

8 comments:

Anonymous said...

//நான் துரோகி என முத்திரை குத்துவதற்குள் அவர் சொன்னார் இரஜனியின் அடுத்த படம் எல்லோரும் பார்த்து இன்புற அனைத்து இணையத் தளங்களிலும் மிக வேகமான முறையில் தரவிறக்கம் செய்து பார்க்ககூடியவாறு நல்ல தரத்துடன் வெளியிடுவோம் என்றார்.//

:)))

அப்படி ஓர் இணையத்தளத்தில் போன முறை வந்ததும் இரஜனி ராம்கி குதித்த குதியைப் பார்த்தனீங்களா? பிரபாகரனையெல்லாம் தேவையில்லாமல் இழுத்துப் பிறகு அந்தப் பதிவையே சந்தடியில்லாமல் தூக்கிவிட்டார். இப்ப பெருசாப் பேச வந்திட்டார்.

Anonymous said...

;-)))

Pot"tea" kadai said...

//நான் துரோகி என முத்திரை குத்துவதற்குள் அவர் சொன்னார் இரஜனியின் அடுத்த படம் எல்லோரும் பார்த்து இன்புற அனைத்து இணையத் தளங்களிலும் மிக வேகமான முறையில் தரவிறக்கம் செய்து பார்க்ககூடியவாறு நல்ல தரத்துடன் வெளியிடுவோம் என்றார்//

:-))

//இலங்கை தமிழர்களுக்கு மூளை இருக்கிறதா?//

:-))

ரவி said...

நான்கூட ஒரு பதிவை ரஜினி ராம்கி சொல்லி தூக்கினேன்..அதாவத்ய் ரஜினி - சிவாஜி போட்டோக்கள்..

மற்றபடி - தங்கர் பச்சான் ஒரு பேட்டியில் சொன்னமாதிரி - உணர்வோடு அவர்களும் குரல் கொடுக்கவேண்டும்...

புலிகளுக்கு அல்ல..ஈழத்தமிழர்களுக்கு...

G.Ragavan said...

நடிகர்கள் வந்து காப்பாற்றுவார்கள் என்று நினைக்காத அளவிற்கு இலங்கைத் தமிழர்களுக்கு மூளை இருக்கிறது என்றே நான் நம்புகிறேன்.

நாகை சிவா said...

தீவு,
நீங்களும் தலைப்பை மாற்றுங்கள்.
சார், ஒரு விசயத்தை புரிந்து கொள்ளுங்கள், ரஜினி இந்த விசயத்தில் கருத்து சொல்வதால் எந்த ஒரு முன்னேற்றம் ஏற்பட போவதுதில்லை. இந்திய அரசாங்கம் தான் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

நதி நீர் இணைப்பு திட்டம் தொடக்கப்பட்டு அதற்கு அவர் பணம் தராமல் இருந்தால், நீங்கள் கூறுவதை ஏற்றுக் கொள்ளலாம். அதை வரை அமைதி காணவும்.

சூப்ரிம் கோர்ட் சொல்லியே கர்நாடகம் தண்ணீர் திறந்து விடவில்லை. பாரதிராஜா, ரஜினி சொல்லி தண்ணீர் தர போகின்றார்களா?
ரஜினியும் தான் உண்ணாவிரதம் இருந்தார், சூப்ரிம் கோர்ட் உத்தரவை அமல்படுத்த கூறி, ஏதும் நடந்த்தா.....

Thamil said...

ரஜனி ஒரு கன்னடக்காரன்தானே, அதனால்தான் கன்னடாவுக்கு ஆதரவாக அமைதியாக இருக்கிறார். ரஜனிக்கு சோறு போடுவது தமிழன் அவர் கட்டி குழ்வுவது கன்னத்தானுடன். இப்படியான் வேடதாரிகளை தமிழர்கள் இனம்கண்டுகொள்ளவேண்டும். ரஜனிரசிகர்களுக்கு உண்மையில் மூளை இருந்தால் இனம் கண்டு கொள்வார்கள்.

புதுமை விரும்பி said...

தீவு மன்னியுங்கள். தீவிரமாய் போய்க்கொண்டிருக்கும் வாக்குவாதத்தில் நடுவில் புகுந்து கலாய்ப்பதற்கு. செய்தி இதோ: இப்பொழுது முதலில் ஆடிய மகேந்திரன் தலைமையிலான "ரஜினி ரசிகர்களுக்கு மூளை இருக்கிறதா?" அணி முதல் இன்னிங்க்ஸ்ல் 110 ரன்கள் எடுத்து declare செய்திருக்கின்றனர். அடுத்ததாக வந்த பாலமுருகன் தலைமையிலான "இலங்கை தமிழர்களுக்கு மூளை இருக்கிறதா?" அணியினர் 18 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழக்காமல் இன்னும் விளையாடிக்கொண்டிருக்கின்றனர். இந்த 18 ரன்களில் captain பாலமுருகன் 11 ம் vice captain தீவு 7ம் அடித்த நிலையில் இருக்கின்றனர்.