Friday, May 18, 2007

தமிழ்மணத்திற்கு ஒரு வேண்டுகோள்!

தமிழ்மணம் என்னதான் திரட்டியாக இருந்தாலும் வலைப்பதிவர்கள் இல்லாவிட்டால் இழுத்து பூட்டிவிட்டு போகவேண்டியதுதானே..எனவே வலைப்பதிவர்களின் பதிவை திரட்டுவதுதான் அதனுடைய முழுநோக்கமாக இருக்ககூடாது.

தமிழ்மணம் தான் நினைத்ததைத்தான் செய்யும்.இருப்பதானால் இருங்கள் இல்லெயெனில் விலகிப்போகலாம் என்று சர்வாதிகாரமாகவோ காரமாகவோ சொல்லலாம்.

வலைப்பதிவர்களுக்கு போக்கிடமா இல்லை.ஒன்றில்லாவிட்டால் இன்னொன்று.அதுதான் சந்திக்கு சந்தி இன்னொன்று என்றாயிற்றே..


எனது வேண்டுகோள் என்னவெனில்
பல வலைப்பதிவர்கள் இரவு பகலாக தமிழ்மணமே தஞ்சமென்று இருக்கிறோம்.எனவே சற்று ஆசுவாசமாக இருப்பதற்கு தமிழ்மண நிர்வாகத்தினர் படுப்பதற்கு பாயும் தலையணியும் போர்வையும்
தரவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

நிர்வாகத்தினர் இதனை கவனத்தில் எடுக்கவேண்டும்.

10 comments:

Anonymous said...

காலங்கார்த்தாலே ஆரம்பிச்சுட்டீங்களா உங்க வேலையை

Anonymous said...

அப்படியே, தமிழ்மணம் படிச்சிட்டே உறிஞ்ச ஜூஸும் கொடுக்கச் சொல்லுங்க..

Anonymous said...

ஆமாய்யா, நீங்க கேட்டத கொடுத்தவுடன் அடுத்து பக்கத்தில் படுக்க ஆளும் கேப்பீங்க.....இதெல்லாம் ஓவராத்தெரியல்ல?

Deepa said...

பழத்தை தோலுரிச்சு வாயிலே போட்டா...".. முழுங்கரது யாரு...உங்கப்பனா.? ?."ன்னு ஒருத்தர் கேட்டாரம்... ஒருவேளை இங்கே வந்தாரோ என்னமோ ? ? ?

Anonymous said...

அண்ணனுக்கு ஒரு சோடா குடுங்கடா

theevu said...

//பக்கத்தில் படுக்க ஆளும் கேப்பீங்க.//

எழுத்துப்பிழை

படுக்க இல்லை படிக்க ஆளு கேட்டாலும் ஆச்சரியமில்லை.

கானா பிரபா said...

கால் பிடித்து விடவும் ஆள் வேணும்

theevu said...

//பழத்தை தோலுரிச்சு வாயிலே போட்டா...".. முழுங்கரது யாரு...உங்கப்பனா.? ?."ன்னு ஒருத்தர் கேட்டாரம்... //


தீபா
நல்லவேளை பழத்தை ஞாபகப்படுத்தினீங்க.அதையும் கேட்டுடலாம்.:)

Anonymous said...

அடக்கடவுளே,

நான் பக்கத்தில் படிக்க ஆள் கேட்கவில்லை......உங்களுக்கு புரியல்ல, சரி விடுங்க...நீங்க இவ்வளவு அப்புராணியா இருக்கயில் நான் ஏன் உங்களுக்கு விளக்கி, கெட்டவனாக/ஆக்க வேண்டும்?

theevu said...

//கால் பிடித்து விடவும் ஆள் வேணும் //

ப்ரபா
கால் அமுக்க ஆள் பிடிப்பது ரொம்ப சிரமம்.

கால் வார ஆள் பிடிப்பது என்றால் இலகு.