Sunday, June 10, 2007

அடுத்த படம் ரெடி

செய்தி இதுதான்.

புலிகள் திட்டம் எதிரொலி : அகதி முகாம்களில் பலத்த பாதுகாப்பு
ராமேஸ்வரம் (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 10 ஜூன் 2007
தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் இருந்து தங்கள் அமைப்பில் ஆட்களைச் சேர்க்க விடுதலைப் புலிகள் திட்டமிட்டிருப்பதையடுத்து, அனைத்து முகாம்களிலும் பாதுகாப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கையில் ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே தீவிர மோதல் நடந்து வருகிறது. இதில், விடுதலைப் புலிகள் தரப்புப் படையில் ஆட்கள் குறைந்த வண்ணம் உள்ளனர் என்பதால், தமிழக முகாம்களில் உள்ளவர்களை அணுக திட்டமிடப்பட்டிருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிட்டியுள்ளது.

இந்நிலையில், உளவுத்துறை விடுத்த எச்சரிக்கையை அடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து அகதிகள் முகாம்களிலும் பாதுகாப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


இதனிடையே, மொத்தம் 105 முகாம்கள் தமிழகத்தில் உள்ளன என்பதும், கடந்த ஜனவரி 12-ம் தேதியில் இருந்து இலங்கையில் இருந்து வந்த அகதிகளின் எண்ணிக்கை 19,200 என்பதும் குறிப்பிடத்தக்கது.


(மூலம் - வெப்துனியா-yahoo tamil)

2 comments:

Anonymous said...

இவனுங்க காமெடி க்கு அளவே இல்லாம போயிடுச்சு.

Anonymous said...

http://thamilar.blogspot.com/

the web poll(UNGALUDAIYAA AATHARAVU YAARUKKU) shows he is one the second leader after karunanithi at the moment. It's really surprsing me. Will see how is get on