Sunday, June 10, 2007

ஒப்பாரி

குற்றுயிரும் குலையுயிருமாக

மனிதாபிமானம் தெருக்களில்..


கடந்தும் ஏறியும்


துப்பியும் மிதித்தும்


மனிதர்களும் விலங்குகளும்


ஏன் நாட்களும் அவர்களை


கடந்து சென்றன.


மனிதாபிமானம் இறந்துவிட்டிருந்தவேளை பார்த்து

தேவதூதர்கள் விழித்தார்கள்.


நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்

நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்

நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம்.


ஒப்பாரிக் குரல்கள்

இப்போது எட்டுத்திக்கிலிருந்தும் ஒலிக்கின்றன.

-theevu-10.06.07

0 comments: