Monday, December 10, 2007

பட்டறை போதுமப்பூ

தமிழ்மணம் பார்க்க தொடங்கியதிலிருந்து அவனவன் இப்பொழுதெல்லாம் வலியம் குளுசையுடன்தான் காலத்தை கழிக்கிறான்.



காலத்தால காலக்கடன் முடிக்கிறமோ இல்லையோ கம்பூட்டர் மட்டும் போட்டுவிடுகிறோம்.



அதில் இந்த புளொக் சங்கதி மட்டும் படுக்கபோகும் வரைக்கும் கிடந்து ஊடாடுகிறது



ஆணி பிடுங்கப்போனால் அங்கும் இதுதான்.அங்கும் பிடுங்குவது இதுதான்



செம்பும் பொன்னும் ஒக்கன நோககிய நாவுக்கரசன் போல் ஆணியும்

முதல் போணியும் வலைப்பதிவாயிற்று.





பதிவில் எதைப் படிப்பது எதை விடுவது என்று முழி பிதுங்குகிறது.



இப்பொழுது எல்லாம் லாட்டிரி சீட்டு சுவீப் ரிக்கெற் விழுவது போலத்தான்



பதிவர்களின் பதிவை தெரிந்து படிப்பது.



அதைவிட புனிதமான இலட்சணங்களில் ஒன்று அதை படித்துவிட்டு பின்னூட்டுவது.



அதிர்ஷ்டம் இருப்பவர்களின் பதிவுதான் அடிக்கடி பார்க்கப்படுகிறது.



அதுவும் இல்லாவிடில் குயுக்தியாக தலைப்பை பதிவுக்கு சம்மந்தமில்லாமல்

வைத்து எழுதவேண்டியுள்ளது.





இந்த திறத்தில்





இத்தனையாயிரம் போட்டிகளுக்கு மத்தியில்



வலைப்பதிவு பட்டறை அமைத்து வா ராசா வா பதிவு எழுது என அழைப்பு

வேறை



முந்தி எல்லாம் 4 பேர்தான் எழுதிக்கொண்டிருப்பார்கள் விரிவாகப் படித்து

அவருக்கு நானும் எனக்கு அவருமாக பின்னுர்ட்டிக்கொண்டிருந்தோம்



எல்லாமே இந்த வலைப்பதிவை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் புண்ணியவான்களாலே போயே போச்சு.



சாம்பூ இலவச காலெண்டர் பேனை மற்றும் இத்யாதி முடிந்தால் தமிழில் நம்பர் வண் குங்குமமும் கலர் ரீவியம் வலை பதிந்தால் கொடுப்பார்கள போலே..



சென்னை பட்டறையிலே டப்பாவில் சாதம் கொடுத்தார்களாம்





இந்தமுறை தலைவாழை இலைபோட்டு புதுவையில் சாதம் படைத்திருக்கிறார்கள்.



என்ன கொடுமை இது..



இப்படி பதிவர்களை மடக்கி லாரியில் கொண்டுவந்து

வலைப்பதிவில் இறக்கினால் என்னைப்போன்ற பதிவர்களை யார் படிப்பார்கள்?





இப்பொழுதுதான் சென்னை முடிந்து அருகிலுள்ள புதுவையில் கால் பதித்துள்ளார்களாம் .இப்படியே விட்டால் உலக தமிழ் வலைப்பதிவர் மகாநாடும் நடாத்தி காட்டிவிடுவார்கள்.



எனவே தன் மானமிக்க தனது பதிவையே மற(்)வர்கள் எல்லோரும்
படிக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த பட்டறை போட்டு மற்றையோரையும் அழைத்துவரும் செயலுக்கு கண்டனத்தை தெரிவிக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.





லேபிள்:- பொட்டிகடை, இகழ்ச்சிப்புகழ்ச்சி, கோல்கொண்டா ஒயின், வஞ்சகப்புகழ்ச்சி, காசிஅண்ணனுக்கு நன்றி, புரவலர்களுக்கு நன்றி, மற்றும் பொன்னவைககோ கோட்சூட்டை மட்டும் கவனித்த தம்பிகளுக்கும்.வினையூக்கி,தல மிஸ்ஸிங் ஏன்? மற்றும்
தமிழ்வெளி பொலிட்டிக


தவிக்க விட்டுட்டியே ராசா..

Read More...

Monday, December 03, 2007

நான் நித்திரையாகிப்போனேன்




டொக்டரை பார்க்கவேண்டும் பார்க்கவேண்டும் என்று நினைப்பு ஏதோ காரணங்களால் எப்போதும் தள்ளியே போய்க்கொண்டிருந்தது.

நேற்று எப்படியும் எல்லா அலுவல்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு பார்ப்பது என முடிவெடுத்தேன்.

டாக்டர் விஜய் நடித்த அழகியதமிழ்மகன் படம் இணையத் தியேட்டரில் ஆசுவாசமாக இருந்து பார்த்தேன்.

நான் சாதாரணமாக விஜயின் ஓகே ஓகே டாக்கடர் விஜயின் படங்கள் விரும்பிப் பார்ப்பேன்.அடிதடி குத்துவெட்டு குத்தாட்டம் வடிவேலு அப்படி இப்படி என்று ஒரு களிப்பூட்டும் படமாக இருக்கும்.

இது என்னடாவெண்டால் ..என்னத்தை சொல்ல எல்லாரும்தான் இதைப் பற்றி எழுதிவிட்டார்களே..

ஒருவனுக்கு தனக்கு இதுதான் சரிவரும் எனத் தெரியவேண்டும்.

அதைவிட்டுவிட்டு தல யின் படத்திலை பாதி
காலின் படத்திலை பாதி என்று ஒரே சொதப்பல்.

அண்ணா பழையபடி வாளோ அருவாவோ தூக்குங்கண்ணா..


யாருப்பா இப்ப அந்த அருவா வைச்சிருக்கிறது..முந்தி பாண்டியன் கொண்டுதிரிந்தார்.பிறகு நெப்போலியன் இப்போ யாரிடம் அருவா?

வேலுவிடமா பொல்லாதவனிடமா?

சரி இனி முக்கியமான விடயத்திற்கு வருகிறேன்.

படம் பார்த்த அரைவாசியில் படம் பார்த்தபடியே தூங்கிவிட்டேன்.அரைவாசி படம் பார்த்து அதைப்பற்றி விமர்சனம் எழுதும் ஆள் நானாகத்தானிருப்பேன்.

படத்தில் விஜயுடன் ஜோடியாக வருவது அசின் இல்லையாம் அது ஸ்ரேயாவாம் இன்று காலை நண்பன் ஒருவன்
கூறியது.

அப்போ அது அசின் இல்லையா?

Read More...

Monday, November 12, 2007

சோதனைக்கு புலிகள் தேவை(தமிழ்ப்புலிகள்)




பிரபல வல்லரசு நாடொன்றின் அரசியல் ஆய்வுப்பணியின் ஆய்வு நிமித்தமாக சோதனைக்கு புலிகள் தேவைப்படுகிறார்கள்


அதுவும் வேட்டி கட்டிய தமிழக தமிழ்ப்புலிகள்


பின்வரும் தகமைகளை நீங்கள் கொண்டிருந்தால் உடனடியாக விண்ணப்பிக்கவும்.


ஆயுட்கால அரசியல் வாழ்வு சேமப்பத்திரம் இறுதியில் கையளிக்கப்படும்.


தகுதி கல்வி நிலை:-


ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விரிவுரையாளராக இருப்பது விரும்பத்தக்கது.


அந்த தகுதி இல்லையாயினும் ஏதாவது ஒரு

பத்திரிகையை தமிழில் அரசியல் நையாண்டி என்று சொல்லி நடாத்தி கொண்டிருப்பவராக இருத்தல் வேண்டும்.


அல்லது முன்னாள் வாராந்தப்பத்திரிகை ஆசிரியராகவாவது இருந்திருத்தல் வேண்டும்.


இந்த தகைமைகள் எதுவுமே இல்லாத பட்சத்தில் காங்கிரஸ் கடசியில் தொண்டராகவோ அல்லது தலைவராகவோ இருக்கவேண்டும்.


யாவும் பொருந்தாத பட்சத்தில் ஆதித்தமிழர் கோட்டா முறையில் பரிந்துரை செய்யப்பட்ட விதிவிலக்காக இந்திய பிரதமருக்கோ அல்லது இந்தியப்பிரதமரை நிர்ணயிக்கும் அம்மையாருக்கோ பதிலை எதிர்பார்க்காமல்

ஈழத்தமிழருக்கு இந்தியா ஆயுத உதவி செய்யாதே என கடிதமாவது எழுதியிருக்கவேண்டும். (கவிதைகள் இங்கு கணக்கில் எடுத்துகொள்ளப்படமாட்டா)


லங்கா ரத்னா பட்டம் பெற்றிருந்தால் தேர்வு இல்லாமல் தெரிவு செய்யப்படுவீர்கள்.


கல்லக்குடி போராட்டத்தில் கதாநாயகனாக நீங்கள் கலந்துகொண்டிருந்தால்

அதை மறந்துவிட்டிருத்தல் வேண்டும்.



உங்கள் விண்ணப்பத்திற்கான முடிவு திகதி


தமிழீழ பிரகடனத்திற்கு முன்னர்



விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய முகவரி


தீவு தமிழ்மணம்.டொட் காம்


முகவரி அடிக்கடி மாறும் விண்ணப்பதாரர்கள் கவனத்திலெடுக்கவும்.



லேபிள்:- டால்மியாபுரம் வைகோ கலைஞர் சுப்பிரமணியசுவாமி துக்ளக் காங்கிரஸ்








Read More...

காங்கிரஸுக்கு சாபமிட்டவர் யார்?ஒரு திடுக் தகவல்!

பாரம்பரியமிக்க காங்கிரஸுக்கு என்ன ஆயிற்று.தெலுஙுகு பட காட்சிகள் போல கத்தியால் குத்து சரமாரியாக வெட்டு .ஓட ஒட விர்ட்டு போன்று பல சரமாரியான காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றது.

மூத்த பதிவர் ஒருவரின் கருத்துபடி காங்கிரசுக்கு எதிர்கட்சியினர் சூனியம் வைத்துவிட்டார்கள் என்றார்.

இன்னொரு மூத்தபதிவர்(இவர் ஏற்கனவே அன்டார்டிகாவில் பின்குயீன் நடக்கும் என்ற யாகவா முனிவரின் விதியை நிரூபித்தவர்.) இதுபற்றி கருத்து தெரிவிக்கையில் இது காங்கிரஸார் அவர்களுக்கு தாங்களே சொந்த செலவில் வைத்த சூனியம் என பட ஆதாரத்துடன் காண்பித்தார்.

இதோ அந்த படம்.


காங்கிரஸார் தமக்குதானே சூனியம் செய்யும் படம்


ஆனால் எனது தோழியொருவரை இது பற்றி கருத்து கேட்டபோது சூனியம் போன்றவற்றை மறுத்து இது காங்கிரஸுக்கு யாரொ ஒருவர் சாபமிட்டிருக்கிரார் போலிருக்கிற்து.அதுதான்
இப்படி தொடர்ச்சியாக சம்பவங்கள் நடைபெறுகின்றன என்றார்.

தோழர் மாசிலாவிடம் ஒரு கேள்வி நீங்கள் எதாவது காமராஜர் வளர்த்தெடுத்த காங்கிரஸின் இன்றைய நிலை கண்டு சாபமிட்டீர்களா??:)


லேபிள்:-வாழப்பாடி மூப்பனார் காங்கிரஸ் ஈழத்தமிழர்



தமிழுக்கு தீவின் அஞ்சலி


Read More...

Sunday, October 28, 2007

இவிகள நான் ஏன் கக் பண்ணினேன்?



இட்லியார் தமிழச்சி வலைப்பதிவுகளை கக் பண்ணியது ஏன்?


இருவரும் வேறுவேறு குறூப்
ஒருவரு பூணூலு
மற்றவரு பாம்ப விட்டுடு பூணூல அடி என்பவர் கட்சி.

ஆனால் ரெண்டு பேருக்கும் ஒரே நாளில் ஆப்பு.


இங்கதான் கக்கன்(இது காங்கிரஸ் கக்கன் அல்ல) நிக்கிறான்.

நம்ம மக்கள்ஸ் தெளிவு அம்பேல்.


ஆனால் இவிகள நான் ஏன் கக் பண்ணினேன்? அப்டீன்னு அவன் கக்கன் வந்து சொல்லவா போறான்?


இந்த இடத்திலைதான் தீவு தெளிவாயிருந்தான்.

ரெண்டுபேருமே கூத்து பட்டறைக்கோஷ்டி நன்னாவே நாடகம் போடுறாங்க
என்று இந்த நிமிஷம் வரையும் நெனைச்சிருந்தான் அந்த மெயில் வரும் வரை


இதுதான் தீவுக்கு மிரட்டி வந்த அந்த மெயில்


திருவாளர் தீவு சாரே

நாளை உமது தளம் எனது ஆட்சியின் கீழ் வரப்போகிறது.

என்ன பண்ணனுமோ பண்ணிக்க.

இட்லியாருக்கும் தமிழச்சிக்கும் நடந்ததை வலையுலகமே அறியும்.
டீடெல்ஸ் அவங்களையே கேட்டுக்க

அந்த லிஸ்டில் அடுத்தது நீ.


வலைப்பதிவில் சீரியஸ் என்று சொல்லி மொக்கை போடுபவர்களே
எனது இலக்கு.


முடிந்தால் உனது தளத்தை காப்பாற்றி கொள்.


ஆர்குட் ஆர்பாட்



என்ன செய்ய நண்பர்களே?..


எனது மின்னஞ்சல் பாதுகாபபுக்கான எந்த சீக்ரட் கேள்வியை மாற்றி வைக்க?
அவன் எல்லாவற்றையும் மாற்றுவானாமே..

இதுவரை எனது பதிவில் அதிக பின்னூட்டங்களை இட்டது யார் என்ற எனது சீக்ரட் கேள்விக்கு நான்தான் என ஆன்சர் போட்டுள்ளேன்.

ஒருவேளை அதையும் கண்டுபிடித்துவிடுவானோ?

யார் என்ன செய்தாலும் தளத்தை விட்டு ஓடிப்போவதில்லை என முடிவு செய்துள்ளேன்

திரும்ப காக் பண்ணி எனது தளத்தை மீட்டெடுப்பேன்

எனது தளத்தை நான் திரும்ப மீட்டெடுத்தேன் என எவ்வாறு என்னை மீண்டும் அடையாளம் காண்பீர்கள்?

அவனா நானா எப்படி கண்டுபிடிப்பது?

இப்பொழுதே சில அடையாளங்களை முன்னெச்சரிக்கையாக கூறுகிறேன்.



எனது மவுஸ் படத்தில் நாமம் பொட்டுக்கு பதிலாக பூனை படம் போட்டிருக்கும்

துக்ளக் படத்திற்கு பதிலாக பக் பக் என பயத்துடன் அடிக்கும் ஒரு இதயத்தின் படம் போட்டிருப்பேன்


ஒரு வீடியோ பதிவு போட்டு எழுதி வாசிப்பேன்

அடிக்கடி காணாமல் போய்விட்டதாக எனது வக்கீல் மூலமாக அறிக்கை விடுவேன்.அதே நேரம் எனது தளத்திலும் பதிவு ஒட்டுவேன்


இவை தவிர எனது பின்னூட்டத்தை தமிழ்ப்பித்தன் தூக்கினால் கண்டிப்பாக அது நான்தான்


எனவே வலை மக்கள் தெளிவாக இருக்கவும்


போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்.




மீண்டு வருவேன்.

லேபிள்-கக் ,விடுதலைப்புலிகள் ,அவதுரு, ஆர்குட் ,இஸ்குட் ,அபிஷேகம்


நைவேத்யம் ,பூஜை, மாசிலா காக்க







தீவு
"எதுக்கும் பயப்படமாட்டான்

காலிருக்கும்வரை"

Read More...

Friday, October 26, 2007

முதலாவது அணி ஓடுபாதையை அடைந்த போது, இரண்டாவது அணி "வீ பகுதி" யை நோக்கி நகரத்தொடங்கியது




அனுராதபுரம் வான் படைத்தளத்தை விடுதலைப் புலிகள் தாக்கியது எப்படி? "டெய்லி மிரர்"

அனுராதபுரம் வான் படைத்தளத்தை கடந்த திங்கட்கிழமை அதிகாலை தமிழீழ விடுதலைப் புலிகள் எவ்வாறு தாக்கி அழித்தனர் என்பது தொடர்பாக கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளேடான டெய்லி மிரரில் அதன் பாதுகாப்பு ஆய்வாளர் சுனில் ஜெயசிறீ தெரிவித்துள்ளார்.
அதன் முக்கிய பகுதிகள் வருமாறு:

கிழக்கு மாகாணத்தை விடுவித்து விட்டோம், விடுதலைப் புலிகளின் ஆயுதக்கப்பல்களை அழித்து விட்டோம், விடுதலைப் புலிகளை வன்னிக்குள் முடக்கி விட்டோம், வடக்கு - கிழக்கிற்கு வெளியில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை நிறுத்தி விட்டோம் என்ற சிறிலங்கா அரசின் பிரச்சாரங்களை 21 கரும்புலிகளும், இரட்டை இயந்திரங்களை கொண்ட இரு வானூர்திகளும் ஒரு இரவினில் மாற்றி விட்டன.

மிகவும் பாதுகாப்பான அனுராதபுரம் வான் படைத்தளத்தின் மீது கடந்த திங்கட்கிழமை அதிகாலை மிகவும் அதிர்ச்சிகரமான தாக்குதலை விடுதலைப் புலிகள் நடத்தியிருந்தனர். கொமோண்டோத் தாக்குதல் பாணியில் நடத்தப்பட்ட இத்தாக்குதல் அரசை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.

வான் படைத்தளத்தை 7 மணிநேரம் விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததுடன், தளத்தில் இருந்த 80 விழுக்காடு வான் கலங்களையும் அழித்துள்ளனர். இதில் பல மில்லியன் டொலர்கள் பெறுமதியான பீச்கிராஃப் கண்காணிப்பு வானூர்தியும் அடங்கும்.

வட களமுனையில் அனுராதபுர தளமே பிரதான பங்கை ஆற்றி வந்தது. அனுராதபுரம் நகரில் இருந்து 4 கி.மீ தொலைவில் நுவரேவேவா குளத்திற்கு அருகில் வான்தளம் அமைந்துள்ளது. வட போர்முனையின் வழங்கல்களில் இத்தளம் பிரதான பங்கை வகித்து வருகின்றது. சிறிலங்காவில் உள்ள மிகவும் பலப்படுத்தப்பட்ட தளங்களில் இதுவும் ஒன்று.

சிறிலங்கா வான் படையின் பிரதான பயிற்சி கல்லூரி அங்கு அமைந்துள்ளது. 9 ஆவது தாக்குதல் உலங்குவானூர்தி பிரிவு (ஸ்குவாட்றன்), 6 ஆவது உலங்குவானூர்தி பிரிவு, 1 ஆவது பயிற்சி வானூர்திப் பிரிவு, 7 ஆவது உலங்குவானூர்திப் பிரிவு, 11 ஆவது ஆளில்லாத உளவு வானூர்திப்பிரிவு என்பவற்றின் தளமும் அதுவாகும்.

ஆளில்லாத உளவு வானூர்தி, பீச்கிராஃப் எனப்படும் கண்காணிப்பு வானூர்தி போன்றவற்றில் உள்ள நவீன புகைப்பட மற்றும் இலத்திரனியல் சாதனங்களின் உதவியுடன் புலனாய்வுத் தகவல்கள் சேகரிக்கப்படுவதனால் இத்தளம் வான் படை மற்றும் கடற்படையினருக்கான புலனாய்வுத் தகவல்களை வழங்கும் மையமாக செயற்பட்டு வந்தது.

புதிய உத்திகளை உடைய பயிற்சிகளை வழங்கும் பொருட்டு இத்தளத்திற்கு சீனா, பாகிஸ்தான், இஸ்ரேல் போன்ற நாடுகளில் இருந்து பயிற்சியாளர்கள் வந்து செல்வது வழக்கம்.

"கஜபா சுப்பர் குறஸ் - 2007" எனப்படும் விழா தாக்குதலுக்கு முன்னைய இரவு நடைபெற்றது. சாலியபுர விளையாட்டுத் திடலில் நடைபெற்ற இந்த விழாவில் படைத்துறையில் உள்ள பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர். சாலியபுர இராணுவ முகாம் அனுராதபுரம் வான் படைத்தளத்திற்கு அண்மையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தளத்தில் இருந்த பெரும்பாலான படையினர் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் மிகவும் பிரபலமான இசை நிகழ்ச்சியை கண்டு களித்துக் கொண்டிருந்தனர். ஏனையோர் அதனை கேட்டுக்கொண்டிருந்தனர். இக் கவனக்குறைவுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, விடுதலைப் புலிகளின் புலனாய்வு தலைவர் பொட்டு அம்மானினால் அனுப்பப்பட்ட விடுதலைப் புலிகளின் சிறப்பு அணியினர் முகாமிற்கு அருகில் உள்ள தென்னந்தோப்பில் தங்கியிருந்தனர்.

அவர்கள் கிளிநொச்சியில் இருந்து கிடைக்கும் உத்தரவுக்காக காத்திருந்தனர். ஆனால் முகாமின் செயற்பாடுகள் அமைதியாகவே இருந்தன.

இந்த அணியினர் ரி-56 ரக துப்பாக்கிகள், கைக்குண்டுகள், இலகுரக டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள், பொதுநோக்கு இயந்திரத் துப்பாக்கிகள், இலகுரக இயந்திரத் துப்பாக்கிகள், 7 செய்மதி தொலைபேசிகள், கத்திகள் என்பவற்றை வைத்திருந்தனர். இந்த அணியில் பெரும்பாலானவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களாக இருந்ததுடன், 3 பெண் புலிகளும் இருந்தனர்.

விடுதலைப் புலிகளின் அணி அனுராதபுரம் - நெலுங்குளம் வீதியைக் கடந்த பின்னர் தளத்தின் வடக்குப் பகுதியினூடாக உள்நுழைந்துள்ளது. அதிகாலை 2:30 மணியளவில் விடுதலைப் புலிகள் தளத்திற்கு வெளியில் இருந்த முதலாவது முட்கம்பி வேலியை வெட்டி தளத்தின் வெளிப்பகுதிக்குள் நுழைந்தனர். இதற்கு அடுத்த நிலையில் சில அடி தூரத்தில் மற்றுமொரு கம்பி வேலி சமாந்தரமாக போடப்பட்டிருந்தது.

இந்த இரு வேலிகளுக்கும் இடையில் மின்சார வேலி ஒன்று சிறிதாக அமைக்கப்பட்டிருந்த போதும் அதற்கு மின் இணைப்பு வழங்கப்பட்டிருக்கவில்லை. எனவே விடுதலைப் புலிகள் இலகுவாக உள்நுளைய அது அனுகூலமாக இருந்தது. தற்போதைய முக்கிய கேள்விகள் என்ன எனில், இந்த பாதுகாப்பு குறைபாடுகள் எவ்வாறு ஏற்பட்டன? யார் இதற்கு பொறுப்பு? இது சில நோக்கங்களோடு செய்யப்பட்டதா? என்பவை தான்.

விடுதலைப் புலிகளின் அணி உள்நுழைந்ததும், வானூர்தி ஓடுபாதைக்கும் வேலிக்கும் இடையில் புதைக்கப்பட்டிருந்த ஒலிகளை எழுப்பும் கண்ணிவெடிகளை அகற்றியுள்ளனர். அருகில் இருந்த பதுங்குகுழிகளுக்கு குறுக்காக இக் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன. ஆனால் பாதையின் இருபுறமும் மிதிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன.

விடுதலைப் புலிகள் மிகவும் நேர்த்தியாக சத்த வெடிகளை அகற்றியதுடன், முதலாவது பதுங்குகுழிகளின் பின்புறம் உள்ள அணைகளை அடைந்திருந்தனர். அந்தப் பதுங்குகுழிகளில் வான்படையினர் பணியில் இருந்தனர். பதுங்குகுழிகளை அடைந்ததும் அவர்களில் ஒரு பிரிவினர் பதுங்குகுழியின் ஒரு முனையை அடைந்து வானூர்தி ஓடுபாதையை நோக்கி சத்தமின்றி ஊர்ந்து செல்ல தொடங்கினர்.

இரண்டாவது குழுவினர் பதுங்குகுழியின் மற்றய முனையை அடைந்து இரு பதுங்குகுழிகளுக்கும் இடையில் உள்ள இடைவெளியினூடாக நகரத் தொடங்கினர். எனினும் 3 விடுதலைப் புலிகள் பதுங்குகுழியின் பின்புறம் நிலையெடுத்து இருந்தனர்.

நகர்ந்து செல்லும் விடுதலைப் புலிகளை வான் படையினர் கண்டு தாக்கினால் வான் படையினரைத் தாக்குவதே அவர்களின் திட்டம். இதில் ஆச்சரியம் என்னவெனில் பதுங்குகுழியில் இருந்த வான் படையினர் எவரும் நகர்ந்து சென்ற விடுதலைப் புலிகளை அவதானிக்கவில்லை. தற்போதைய விசாரணைகளில் அவர்கள் நன்றாக உறங்கிக்கொண்டிருந்ததாக நம்பப்படுகின்றது.

முதலாவது அணியில் 14 விடுதலைப் புலிகள் இருந்தனர். அவர்களின் பணி உலங்குவானூர்திகளின் தரிப்பிடங்களை அடைந்ததும் பதுங்குகுழிகளை அழிப்பதுவே.

இரண்டாவது அணி வானூர்திகளின் தரிப்பிடங்களை அடைந்து அவற்றை அழிப்பதற்கு காத்திருந்தது.

முதலாவது அணி ஓடுபாதையை அடைந்த போது, இரண்டாவது அணி "வீ பகுதி" யை நோக்கி நகரத்தொடங்கியது.

அங்கு தான் எம்ஐ-24, எம்ஐ-17 உலங்குவானூர்திகள் நிறுத்தப்பட்டிருந்தன.

இரு அணிகளும் ஓடுபாதையை அடைந்ததும் பதுங்குகுழிக்குப் பின்னால் இருந்து 3 விடுதலைப் புலிகளும் பதுங்குகுழியை நோக்கி சரமாரியாக சுடத்தொடங்கினர். பதுங்குகுழிக்குள் இருந்த படையினரை கொன்ற பின்னர் அவர்களும் தமது அணிகளுடன் இணைந்து கொண்டனர்.

அப்போது நேரம் அதிகாலை 3:20 மணி.

துப்பாக்கிச் சத்தங்களைத் தொடர்ந்து தளம் தாக்குதலுக்கு உட்படுவதை அறிந்த படையினர் முகாமை முழுமையான உசார் நிலைக்கு கொண்டுவந்தனர்.

தாக்குதல் தொடங்கியதும் வானூர்தி ஓடுபாதையில் இருந்த முதல் நிலை பதுங்குகுழிகளை விடுதலைப் புலிகள் தாக்கி அழித்து விட்டனர். எனவே வானூர்தி கட்டுப்பாட்டுக் கோபுரத்திற்கு அண்மையாக இருந்து வானூர்தி மற்றும் உலங்குவானூர்திகளுக்கு எந்த பாதுகாப்பும் இருக்கவில்லை.

கோபுரத்திற்கு அருகில் 12.7 மி.மீ வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கி நிலை இருந்தது. சில நிமிடம் நடைபெற்ற கடும் தாக்குதலுக்கு பின்னர் அதனைக் கைப்பற்றிய விடுதலைப் புலிகள் தளத்தின் தொலைத்தொடர்பு, ராடார், வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கி நிலைகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.

இதற்கு முன்னர் அவர்கள் வான் பாதுகாப்பு பொறுப்பதிகாரியான பிளைட் லெப். றுவான் விஜரட்ன உள்ளிட்ட பல வான் படையினரை சுட்டுக்கொன்றனர்.

விஜயரட்ன கட்டுப்பாட்டுக் கோபுரத்திற்கு அருகில் வீழ்ந்து கிடந்தார். அவர் தனது துப்பாக்கி நிலையை அடைய முற்பட்ட போது வயிற்றில் சுடப்பட்டார். பின்னர் அதிக இரத்தப் போக்கினால் அவர் மரணமடைந்தார்.

இதனிடையே வவுனியா மற்றும் கட்டுநாயக்க வான் படைத்தளங்களில் உள்ள ராடாரில் வவுனியாவை நோக்கி இரு பொருட்கள் செல்வது அவதானிக்கப்பட்டது. அது விடுதலைப் புலிகளின் வானூர்திகள்தான் என உறுதிப்படுத்தப்பட்டதும் வவுனியா, அனுராதபுரம், கொழும்பு பகுதிகளின் மின்சாரம் நிறுத்தப்பட்டது. அதிகாலை 4:10 மணியளவில் அந்த இரு வானூர்திகளும் வவுனியாவுக்கு மேலாக அனுராதபுரம் நோக்கிச் சென்றன.

வவுனியாவில் இருந்து அனுராதபுரம் வரையிலும் வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கிகள் இயங்கிய போதும் வானூர்தி அனுராதபுரம் தளத்தை அடைந்து 3 குண்டுகளை வீசின. அவற்றில் ஒரு குண்டு உலங்குவானூர்திகளின் தரிப்பிடத்திற்கு அருகிலும், இரண்டாவது குண்டு சாலியபுர இராணுவ முகாமிற்கு அருகிலும், மற்றைய குண்டு விவசாயப் பண்ணையிலும் வீழ்ந்தன. பண்ணையில் வீழ்ந்த குண்டினால் அங்கு நின்ற 12 எருமை மாடுகள் உயிரிழந்தன.

கொழும்பில் வான் படைத்தளபதி றொசான் குணதிலக்கவும், நடவடிக்கை பணியகப் பணிப்பாளர் ஏயர் கொமோடோர் கர்சா அபயவிக்கிரமாவும் வான் படைத் தலைமையகத்தின் நடவடிக்கை அறையில் இருந்தனர்.

விடுதலைப் புலிகளின் வானூர்திகள் அவதானிக்கப்பட்டதும் அவற்றைத் தாக்கும் படி வவுனியா வான் படைத்தளத்திற்கு தகவல் அனுப்பப்பட்டது.

ஸ்குவாட்றன் லீடர் அமிலா மொகொரி, பைலட் அதிகாரி ஏ.பி.எம் டி சில்வா ஆகியோர் இரு துப்பாக்கிதாரிகளுடன் பெல்-212 ரக உலங்குவானூர்தியில் புறப்பட்டனர்.

விடுதலைப் புலிகளின் வானூர்திகளைத் தாக்குவதே அவர்களின் பிரதான நோக்கம். பெல்-212 ரக உலங்குவானூர்தி அனுராதபுரம் நோக்கிச் சென்ற போது விடுதலைப் புலிகளின் வானூர்திகள் அனுராதபுரம் வான் பிதேசத்தில் பிரவேசித்து விட்டன.

அப்போது வவுனியா மற்றும் அனுராதபுரம் படைத்தளங்களின் படையினருக்கும் விடுதலைப் புலிகளின் வானூர்திகளை சுட்டு வீழ்த்துமாறு உத்தரவுகள் வழங்கப்பட்டன. ஆனால் அதிகாலை 4:30 மணியளவில் அனுராதபுரத்தில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள டொரமடலாவப் பகுதியில் பெல்-212 ரக உலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்கியது.

பெல்-212 ரக உலங்குவானூர்தி தரையில் இருந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் தான் சிக்கியுள்ளதாக பின்னர் அறியப்பட்டுள்ளது.

படையினர் அதனை விடுதலைப் புலிகளின் வானூர்தி என தவறாக எண்ணியுள்ளனர். உலங்குவானூர்தி தாக்கப்பட்டதும் வவுனியா வான் படைத்தளத்திற்கு அது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது பின்னர் தெரியவந்துள்ளது.

ஆனால் விடுதலைப் புலிகளின் வானூர்திகள் இரண்டும் வவுனியாவினூடாக சென்று ராடார் திரையில் இருந்து மறைந்து விட்டன.

தரையில் வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கியை கைப்பற்றிய விடுதலைப் புலிகள் வானூர்திகளின் தரிப்பிடங்களை நோக்கி தாக்குதலை நடத்தினர். அப்பகுதியில் இருந்த வான் படையினர் மீதும் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருந்தனர்.

விடுதலைப் புலிகளின் 6 பேர் இரு பதுங்குகுழிகளை கைப்பற்றி படையினர் மீது தாக்குதல்களை நடத்த, ஏனையவர்கள் வானூர்திகளை ஒவ்வொன்றாக அழித்தனர். இதன் போது தளத்தின் இரண்டாவது பெரிய தீயணைப்பு நிலையத்தையும் அவர்கள் தாக்கியழித்தனர்.

கடும் சமர் நடைபெற்றுக்கொண்டிருந்த போது அனுராதபுரம் தளத்தின் தளபதி குறூப் கப்டன் பிரியந்த குணசிங்க வவுனியாவில் நிலைகொண்டிருந்த சிறப்புப் படையின் தளபதியான மேஜர் ஜெனரல் உபால் எதிரிசிங்காவை தொடர்புகொண்டு உடனடியாக சிறப்புப் படையினரை அனுப்பும் படி கேட்டுக்கொண்டார்.

இதனிடையே அருகில் இருந்த கஜபா படைப்பிரிவின் படையினரும் உதவிக்கு விரைந்திருந்தனர். அப்போது சில விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர். எனினும் சமர் தொடர்ந்தது.

பீச்கிராஃப், சில உலங்குவானூர்திகள் ஆகியவற்றை அழிப்பதில் விடுதலைப் புலிகள் வெற்றி கண்டுவிட்டனர். நிலைமையை கட்டுப்படுத்த முடியவில்லை.

காலை 7:00 மணியளவில் மேஜர் சந்திமால் பீரீஸ், கப்டன் கோசலா முனசிங்க தலமையில் விரைந்த சிறப்புப் படையினர் தாக்குதலில் ஈடுபட்டனர். பின்னர் 11:00 மணியளவில் மோதல்கள் முடிவுக்கு வந்தன.

21 விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டனர். அவர்களில் 6 பேர் குண்டை வெடிக்க வைத்திருந்தனர்.

செய்மதி தொலைபேசி ஊடாக முற்பல் 10:30 மணிவரையிலும் விடுதலைப் புலிகள் கிளிநொச்சி தலைமையுடன் தொடர்புகளை பேணி வந்திருந்தனர். அவர்கள் இரண்டு தமிழீழக் கொடிகளையும் கொண்டு வந்திருந்தனர்.

இத்தாக்குதலில் 4 அதிகாரிகள் உட்பட 13 வான் படையினரும், இராணுவத் தரப்பைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டிருந்தார்.

எம்ஐ-24 - 02

எம்ஐ-17 - 01

கே-8 - 01

பிரி-6 - 01

செஸ்னா-150 - 01

பீச்கிராஃப் - 01

பெல்-212 - 01

ஆளில்லாத வானூர்திகள் - 02

என 8 வான்கலங்கள் முற்றாக அழிக்கப்பட்டிருந்தன.

பிரி-6 - 03

கே-8 - 01

செஸ்னா வானூர்திகள் - 01

உள்ளிட்ட மேலும் 10 வானூர்திகள் சேதமடைந்தன.

தாக்குதல் நடைபெற்ற சில மணிநேரங்களில் விடுதலைப் புலிகள் அதற்கு உரிமை கோரியிருந்தனர்.

அவர்கள் தாக்குதலில் பங்கேற்ற விடுதலைப் புலிகளின் பெயர்களையும் பதவிகளையும் வெளியிட்டிருந்தனர்.

தாக்குதலுக்கு தலைமை தாங்கியவர் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

விடுதலைப் புலிகளின் பகுதிகள் மீதான வான் தாக்குதல்கள் மற்றும் விநியோக கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்கு பதிலடியாகவே அவர்கள் இத்தாக்குதலை நடத்தியிருந்தனர்.

இத்தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்புச் சபையை மகிந்த கூட்டியிருந்தார். அதில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்ட படைத் தளபதிகள் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

எனினும் இராணுவத் தளபதியும், கடற்படைத் தளபதியும் நாட்டில் இருக்கவில்லை. வான் படைத்தளபதியையும் அவரது படையினரையும் கடுமையாக சாடிய மகிந்த, கோத்தபாயாவை உடனடியாக அனுராதபுரம் செல்லுமாறும் பணித்திருந்தார்.

அன்று மாலை காவல்துறை மா அதிபர், வான் படைத்தளபதி ஆகியோருடன் அனுராதபுரம் சென்றிருந்த கோத்தபாய ராஜபக்ச தளத்தின் அழிவுகளை பார்வையிட்டதுடன் தளத்தின் பொறுப்பையும் இராணுவத்திடம் ஒப்படைத்திருந்தார். பின்னர் இது தொடர்பாக இராணுவத் தளபதிக்கு தொலைபேசியில் தெரிவிக்கப்பட்டது.

அனுராதபுரம் பகுதிக்கான கட்டளைத் தளபதியாக பனாங்கொடவில் அமைந்துள்ள 11 ஆவது படையணியின் கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரல் சனத் கருணாரட்ன மகிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்டார்.

தளமானது அவசரமான நிலைமைகளை எதிர்கொள்ளும் தன்மையில் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. முகாமை பாதுகாப்பதற்கான எந்தப் பயிற்சிகளும், ஒத்திகைகளும் மேற்கொள்ளப்படவும் இல்லை. தாக்குதல் நடைபெற்ற சமயம் காவலில் இருந்த வான் படையினருக்கு அவசர நிலைமைகளை எதிர்கொள்ளும் பயிற்சிகளும் வழங்கப்படிருக்கவில்லை.

முகாம் வெளிப்பகுதியில் வேலிகளை கொண்டிருக்கவில்லை என்பதும் முக்கியமானது. அங்கு பொதுமக்களின் நடமாட்டம் சுதந்திரமாக இருந்தது. தளத்தின் புலனாய்வு பிரிவும் தரம் வாய்ந்தது அல்ல.

இராணுவத்தின் அண்மைய தாக்குதல்கள் விடுதலைப் புலிகளின் பலத்தை சிதைத்து விடவில்லை. இத்தாக்குதல் தமிழ் மக்களினதும் விடுதலைப் புலிகளினதும் உளவுரனை அதிகரிக்கும் என்பது உண்மை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி பதினம் மற்றும் டெய்லிமிறர்

மேலும் தொடர்புடைய சுட்டி்- நிர்வாணமாகும் சிங்கள பேரினவாதம் ... ஹிந்து ராம் தலையங்கம்எழுதுவாரா

Read More...

Thursday, October 25, 2007

மாபெரும் கண்டனக்கூட்டம்-வீக்கென்ட் பதிவு

தீவு அவர்களின் பின்னூட்டத்தை தமிழ்ப்பித்தன் தூக்கியதை ஆதரித்து நாளை சனிக்கிழமை தமிழ்மண களரி அரங்கில் வலைப்பதிவர்களால் மாபெரும் கண்டனக்கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்படுகிறது.

பிரபல புரட்சிப்பேச்சாளரும் பல மாநாடுகள் கண்டவருமான புரட்சித்தலைவி(பாதுகாப்பு மற்றும் விழாக்குழுவினரின் பயம் காரணமாக பெயர் போடவில்லை) தனது மாநாட்டு அனுபவங்களை இந்தக்கூட்டத்தில் விளக்குவார்

மதியம் 2 மணிக்கு ஆரம்பமாகும் இந்தக்கூட்டம் உண்மைத்தமிழனின் சிற்றுரையுடன் வாழ்த்துதலடன் ஆரம்பிக்கும்
மதியம் 2 மணிக்கு ஆரம்பமாகி சிற்றுரை 6 மணிக்கு முடிந்தவுடன் நமது சிறப்பு மதம் கொள் சூடாமணி லக்கிலுக் அவர்கள் அர்த்தமுள்ள இந்துமதம் பற்றி உரையாற்றுவார்.

அவர் பேசும்பொழுது விடயத்திற்கு சம்பந்தமில்லாது மொக்கைப்பதிவு என்றால் என்ன என்று பார்வையாளர் அவரை கேட்டு அவரை ரீ போடும் அனுபவத்தை சொல்லவைக்கவேண்டாம் என்று முன்கூட்டியே அறிவித்துக்கொள்கிறோம்.

அவரைத் தொடர்ந்து கொரியாவிலிருந்து விசேட ரயிலில் வரும் எமது சிறப்புபேச்சாளர் செந்தழல் ரவி அவர்கள் "கொலவெறி
தணிந்ததேன் " என்ற தலைப்பில் அல்லது ஆயாவின் பாஸிஸம் என்ற தலைப்பில் உரைகொல்வார்.எனினும் (நாய்க்கடி,கொசுக்கடி ,கிருமிக்கடி மற்றும் இன்னோரென்ன கடிக்களிலிருந்து அவர் தப்பிவரும் பட்சத்திலேயே இவை சாத்தியமாகும்)


விழாவின் முடிவில் சிறப்பு கலைநிகழ்ச்சியாக "என் அண்ணன்" படத்தில் எம்ஜிஆர் அவர்கள் "ஜலக்கு ஜலக்கு சிங்காரி" என்ற பாடலுக்கு டப்பாங்குத்து ஆடி மகிழ்விக்க மூத்த பதிவர் டோண்டு அவர்கள் முன்வந்துள்ளார்.

கூட்ட நிறைவில் பதிவர்களின் தேசியகீதமாக ஒய்யாலே ரிப்பீட்டேய் என்ற பாடல் பாடுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

கூட்டத்தின் இடையே அடிக்கடி எழும்பி கடற்கரைப்பக்கம் தம் அடிக்கசெல்பவர்களுக்காக விசேட பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.கில்லி இதனை மற்றவர்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிப்பார்.

இக்கண்டனக்கூட்டத்தை சிறப்பாக நடாத்த ஒரு சில பணிகள் பொறுப்பானவர்களிடம் பகிர்ந்து கொடுக்கப்பட்டுள்ளது.

இந்து பத்திரிகையிலிருந்து வரும் நிருபரை வரவேற்று கவனிக்கும் பொறுப்பு பெயரிலியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஓசையமைப்பு சவுண்ட் மேடை விட்ஜர் அலங்கரிப்பு போன்றவை படுத்துக்கொண்டே வலைபதிந்து வெற்றிபெறும் ஓசை செல்லா கவனிப்பார்.

புகைப்படம் எடுத்து இந்த கண்டனக்கூட்டத்தை வரலாறுப்படுத்தும் முயற்சிக்கு உதவ பிரபல விருது பெற்ற புகைப்படபிடிப்பாளர் பொன்ஸ் அவர்களை விழா நிர்வாகத்தினர் தெரிவுசெய்துள்ளார்கள்.

வீடியோ யுரியூப் வேலைகள் சின்னக்குட்டியரும் தாக சாந்தியினை பெட்டிகடையாரும் கள நிலவரங்களை பாப்பராஸி பத்திரிகையாளர் கொழுவியும் கவனித்துக்கொள்வர்.

இந்தக்கூட்டம் சம்பந்மாக இதுவரை வெளிவராத பேட்டிகள் கொடுக்கப்படாத செவ்விகள் பதியப்படாத பதிவுகள் யாவற்றையும் தொகுத்து கூட்ட முடிவில் கொழுவி அவர்கள் தனது பதிவில் போடுவார்.

இணையப்பொறுக்கிகள் ஒருங்கமைப்பு குளவி

கூட்டம் முடிந்தபின்னும் மக்கள் கலைந்து செல்லாவிடின் தண்ணீர் மற்றும் புகை அடிக்கப்படும் என ஏமாறாதீர்கள்.

அதற்குப்பதிலாக இரண்டு விசேட பேச்சாளர்கள் தமிழில் உங்களுக்கு பின் நவீனத்துவம் பற்றியோ அல்லது புலிப்பாஸிஸம் பற்றியோ பேருரை உரையாற்றி கூட்டத்தை நிறைவு செய்வார்கள்.


பி.கு யாராவது தனது பெயரை போட்டதை ஆட்சேபிக்கும் பட்சத்தில் காலில் வீழ்ந்து கண்ணீர் மல்கி மன்னிப்பு கேட்பேன் என்பதை இத்தால் உறுதிப்படுத்துகிறேன்.ஓம் மாசிலா துணை


கழுத்துக்கு மேலே ஆணி வந்தால் சாண் என்ன முழம் என்ன

லேபிள்:- வக்கீல், தலீத் மா நாடு,கனிமொழி

Read More...

Wednesday, October 24, 2007

பாத்திரமறிந்து பின்னுட்டமிடு

தமிழ்ப்பித்தனின் பதிவொன்றுக்கு நான் பின்னூட்டமிட அந்தாள் குழம்பி
பின்னூட்டத்தை தூக்கிட்டாரு.

என்ன சோதனையடா சாமி.

ஒரு தொழில்நுட்ப பதிவுக்கு போட்ட பின்னூட்டத்தை ஏன் தூக்குவான்?

நான் என்ன கலைஞர் பதவி விலகவேண்டுமென்றா,
அல்லது ராமர் கற்பில் சீதையை விட சிறந்தவர் எனவா
அல்லது

தலித்திய மாநாட்டு பதிவு ஏன் போடவில்லை என்றா கேட்டேன்?

அதில் அப்படி என்ன விதண்டாவாதம் நான் செய்திருக்கிறேன்?ஒரு ஸ்மைலி போட மறந்ததைதவிர..

கேட்டால் வடமராட்சி பனங்கொட்டை என்று சொல்லுங்கோ ஒரு முசுப்பாத்தி விட்டால் விளங்குதில்லையே..



லேபிள்:-மொக்கை,மண்ணாங்கட்டி,பனங்கொட்டை,வாலிபப்பசங்க,அசின்

Read More...

Friday, October 19, 2007

ஆகவே கனம் கோர்ட்டார் அவர்களே

ஆகவே கனம் கோர்ட்டார் அவர்களே

ஈபிகோ ஈபிள் ரவர் சட்டப்படி தமிழச்சிக்கு வேறு தண்டனை வழங்காமல் தோழர் செல்லாவின் பதிவில் ஒருநாள் முழுக்க நின்று விவாதங்களை கருத்துக்களை கேட்டு ஈழம் பற்றி தெளிந்து பதிலளிக்குமாறு
அவரை தண்டித்து உய்விக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


இத்துடன் தமிழச்சிக்கு கொழுவியின் பதிவில் ஈழநாதன் வழங்கிய நற்சான்றிதழ் பத்திரம் இணைக்கப்பட்டுள்ளது.
எதிர்தரப்பு வக்கீல் :- மாசிலா

லேபிள்:- நிர்மாணம் மகளிர் மாநாடு ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

Read More...

வீக்கெண்ட் சிண்டு


வாத்தியார் இஞ்சை இவரை கவனியுங்கோ சிகரட் குடிக்கிறார்.எங்கடை மருமோன் எண்டதுக்காக விடாதேங்கோ.

பிறகு சுவிங்கம் தூக்கிஎறிஞ்சு பிடிக்கிற ஆக்களெல்லாம் பழையபடி ஆரம்பிச்சுடுவினம்.

அவரும் டாகுத்தர் நீங்களும் டாக்குத்தர் என்று ஒரே இனமாயிடாதேங்கோ

லேபிள்:- பாமக,பசுமைப்புரட்சி,காடுவெட்டி,சாயிமீரா(படஉதவி),டாக்டர் விஜய்

Read More...

Thursday, October 18, 2007

NO WOMAN NO CRY

பெண்கள் மாநாடு நடாத்தி முடித்திருக்கிறியள் சந்தோஸம்.ஏதாவது வகையில் தமிழ் பெண்கள் தம்மை இயக்கிகொண்டிருப்பது நல்லதுதான்.





தமிழச்சி அந்தமாதிரி செயல் வீராங்கனை எல்லாருடைய புகைப்படங்களையும் இணையத்தில் இட்டிருந்தா(இப்படி இணையத்தில் அவர்களுடைய புகைப்படம் போடுவதற்கு அவர்கள் அனுமதித்துள்ளார்களா?ஏனெனில் பல தொண்டரடிப்பொடியாளர்கள் இதை தப்பாக பயன்படுத்தலாம்)





சரி அதை விடுவோம்.





மேடம் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம ஒரு அறிக்கை விட்டிருக்கிறா.அதில் வி.புலிகளை விமர்சித்துள்ளா.





தப்பில்லை.





தவறாயின் நானும் கூட்டுசேர்ந்து விமர்சிப்பேன்.





இதுபற்றி பெரியார் சபேஸன் தனது பதிவில் கூறியுள்ளார்.அவரது கண்ணுக்கு படாத ஒரு விமர்சனத்தையும் அம்மையார் முன்வைத்துள்ளார்.





இது ஒன்று போதும்





இது விமர்சனமா அல்லது ஏதாவது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியா என நிருபிக்க..








அம்மையார் தனது கட்டுரையில் இவ்வாறு சொல்கிறார்.








1980ம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் சிங்களப்பேரினவாத அரசின் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறை ஒட்டு மொத்தமான தமிழ்ச்சமூகத்தையுமே அரசுக்கு எதிராகத்திருப்பியது. ஆரம்பத்தில் இலங்கை இராணுவம் தமிழ்ப்பெண்களுக்குச் செய்த பாலியல் வன்முறைகள் தமிழ்ப் பெண் தற்கொலைதாரிகளையுண்டாக்கப் புலிகளுக்கு உதவியது.



ணவரைத்தவிர வேறு எவனும் தொட்டால் பெண்னின் உடம்பு மாசுபட்டது, புனிதமற்றது, அழிக்கப்படவேண்டியது என்ற கருத்து தமிழ்க்கலாச்சாரத்துடன் பின்னிப்பிணைந்திருக்கிறது. அதன் அடிப்படையில் இந்திய சமாதானப்படையினரால் பாலியல் கொடுமைக்குள்ளான பல தமிழ்ப்பெண்கள் தற்கொலை செய்யத் தூண்டுப்பட்டார்கள்.


இப்படி எழுதுவது கடவுளுக்கே அடுக்காது அம்மணி!



அப்படியே கொழுவியின் வீடியோ பதிவையும் பாரக்கவும்.இவை படம் அல்ல நிஜம்.


-ஆணாதிக்க தீவு -




லேபிள் மகளிர்மாநாடு பெண்போராளிகள் விடுதலைப்புலிகள்.


பிகு தலைப்புக்கும் கட்டுரைக்கும் சம்பந்தமில்லை அது ஒரு பொப் மார்லியின் பாடல்.

Read More...

Wednesday, October 17, 2007

யோ..யோ..யோ..யோய்யயயோ பொப்மார்லி



ஃப்பல்லோ சோல்ஐர்...பாடல்தான் கேட்ட மாத்திரத்தே மிக அதிகமாக என்னைப் பாதித்தது. அப்பாடல் எப்போதும் இலங்கைத் தோட்டத் தொழிலாளரை நினைவுறச் செய்தது. 'ஊரான ஊர் இழந்தேன் ஒத்தப்பனை தோப்பிழந்தேன்..', 'அட்டைக்கடியும் அரிய வழிநடையும்...', நாங்கள் உழைக்கவும் சாகவும் மட்டுமே...', என்னும் அம்மக்களின் சோகச் சொற்தெறிப்புகளின பாரத்தை பொப் மார்லியிடம் பெறலானேன்.

இலக்கியவாதியும் முன்னாள் ஈரோஸ் போராளியுமான் கிபி அரவிந்தன் அவர்களால் எழுதப்பட்ட இந்த கட்டுரை அப்பால் தமிழ் இணையத்தளத்திலிருந்து.. நன்றி


பொப்மார்லி பற்றி என்னால்(கறுத்தான்) எழுதப்பட்ட இக்கட்டுரை மெளனம்-2(ஓக.செப்.ஒக்.1993) இதழில் வெளிவந்தது. பொப்மார்லியின அறுபதாவது நினைவு நாளை பகிர்ந்து கொள்ளும் வகையில் மீளவும் இக்கட்டுரை சிறு திருத்தங்களுடன் பிரசுரமாகின்றது.


'நீதிக்கும் நியாயத்திற்குமாய் எவனொருவன் குரலெழுப்புகின்றானோ அவன் WAILERS'


பொப்மார்லியின் அறிமுகம் கிடைத்து பத்தாண்டுகளாகின்றது. அவ்வேளை அவன் இறந்து இரண்டு வருடமாகி இருந்தது. 1983ல் உச்சநிலையை அடைந்த இலங்கைத்தீவின் துயரங்கள் வெளிநாடுகளில் இருந்த இளைஞர் பலரை தாயகம் நோக்கித் திருப்பி இருந்தது. அவர்களில் ஒருவனாக கபிலன் கூடவே பொப்மார்லியுடன் வந்து சேர்ந்தான்.


ஒலிநாடாவில் பொப்மார்லியின் குரல்கேட்ட முதல் தருணத்திலேயே அவனது உயிர்த்திருத்தலின் சாத்தியத்தை உணரலானேன். குரலில், இசையில் இழைந்தோடிய அழுகையும் விம்மலும் இசைக்கருவிகளின் சுண்டியிழுக்கும் அதிர்வும் எனன்னுள் கிளர்ச்சியூட்டின. அந்த கிளர்ச்சி துன்புறுத்தலின் இன்பத்தால் நான் துடித்தேன். கேட்டவைகள் விம்மல் வெடிப்புகள், உயிர் வதையின் வீச்சுகள்.

ஃப்பல்லோ சோல்ஐர்...பாடல்தான் கேட்ட மாத்திரத்தே மிக அதிகமாக என்னைப் பாதித்தது. அப்பாடல் எப்போதும் இலங்கைத் தோட்டத் தொழிலாளரை நினைவுறச் செய்தது. 'ஊரான ஊர் இழந்தேன் ஒத்தப்பனை தோப்பிழந்தேன்..', 'அட்டைக்கடியும் அரிய வழிநடையும்...', நாங்கள் உழைக்கவும் சாகவும் மட்டுமே...', என்னும் அம்மக்களின் சோகச் சொற்தெறிப்புகளின பாரத்தை பொப் மார்லியிடம் பெறலானேன். அவனது அப்பாடலின் இடை நிரவலாக சேர்ந்திசைக்கப்படும் யோ..யோ..யோ..யோய்யயயோ.. எனும் பல்குரலோசை தேயிலை போர்த்திருக்கும் மலைக்குன்றுகளிடையேயான ஓலமாய் என்னை வதைத்தது. தாயகத்தின் புறச்சூழல் தந்த நெருக்குவாரத்தில் அந்த ஒலி நாடாவும் கைதவறிப்போனது.

1991ல் ஐரோப்பாவிற்கு அகதியாய் வந்தடைந்து அலைந்தபோதுதான் மீளவும் அந்த இறவாத பொப்பார்லியை தரிசித்தேன். இப்போது அவன் மிக இளமையாய், துள்ளலாய், எங்கெங்கும் வியாபி்த்தவனாய் உயிர்த்துடிப்புடன் இருந்தான். ஆச்சரியமாய் இருந்தது.

ஐரோப்பிய தொலைக்காட்சி ஒளிபரப்பின் இசை அலைவரிசைகளில் தேர்வு பெறும் முதல பத்து பாடல்களில் படதடவைகள் பொப்மார்லியும் இருக்கின்றான். மெத்ரோவினுள், மெத்ரோ நடைபாதைகளுள், பலர்கூடும் பரந்த வெளிகளில், துள்ளும் இளைஞர்களின் சேர்க்கையில், காணும் இடந்தோறும் அவனைத்தரிசிக்கின்றேன். அவனது வாழ்க்கை விவரணத்தொகுப்பான Time Will Tell படத்தை திரையில் பார்க்கையில் பல ஐன்னல்கள் என்னுள் திறந்து மூடின. இசைக்காற்றில் அறைந்து அதிர்ந்தன. கண்களை மூடிய மோனநிலையிலேயே பெரும்பாலும் அவன் பாடுகின்றான். அளவுக்கதிமாக அலட்டிக்கொள்ளாத உடல் அசைவுகள், துள்ளல்கள். இசைச் சேர்க்கைகளில் பாடல்கள்தான் எப்போதும் முன்மொழிவுகளாகின்றன. றேகே இசையின் சிறப்பம்சமே பாடல்கள்தான். றேகே இசையின் அரசன் என்றே பொப்மார்லி வர்ணிக்கப்படுகின்றான். குறியீடாக கொள்ளப்படுகின்றான். அவன் பாடகன் மட்டுமல்ல, பாடலாசிரியன், மெட்டமைப்பவன், இசைக்கருவிகளை கையாளபவன், இசைஞன், கலைஞன்.

கரீபியன் கடலில் உள்ள தீவுக்கூட்டங்களில் ஒன்றான யமேக்கா தீவுதான் றேகே இசையின் உற்பத்தி இடமும், றேகே இசையரசன் பொப்மார்லியின் பிறந்த இடமுமாகும். வடஅமெரிக்காவிற்கும் தென்அமெரிக்காவிற்கும் இடையே அத்திலாந்திக்மாகடல் உட்குழிந்த பகுதியே கரீபியன் கடல். இக்கடலிடை எழும் புயற்காற்றுத்தான் ஹரிகேன் எனப் பெயரிட்டு அழைக்கப்படுகின்றது. இப்புயற்காற்றில் அணையாமல் இருக்கக வடிவமைத்து தயாரிக்கப்பட்டதுதான் ஹரிகேன் லாம்ப்.

அதுவே நம்மிடை அரிக்கன் லாம்பென புழக்கத்தில் உள்ளது. இக்கடலில் காணப்படும் தீவுக்கூட்டங்களே மேற்கு இந்தியத் தீவுகளாகும். இத்தீவுகளில் ஒன்றில்தான் இநதியாவுக்க கடல்வழி தேடிப் புறப்பட்ட கிறிஸ்தோபர் கொலம்பஸ் வந்திறங்கினான். அத்தீவுக் கூட்டத்திடை அளவில் மூன்றாவது பெரிய தீவு யமேக்கா. இதன் பூர்வீக் மக்கள் அரவாக்கள். அமெரிக்க பூர்வீக மக்களினங்களில் ஒரு வகையினர். 1494ல் கொலம்பஸ் இத்தீவுக் கூட்டஙகளிடை வந்திறங்கியதன் பின் ஸ்பெயின் நாட்டின் கொலணியான யமேக்கா,1855ம் ஆண்டில் இருந்து பிரித்தானியாவின் கைக்கு மாறியது. கரும்பினை பெருந்தோட்ட பயிர்ச்செய்கையாகவும் தொழிற்துறை உற்பத்தியாகவும் மேற்கெர்ணட பிரித்தானியா அவற்றில் உழைக்க ஆபிரிக்க மக்களை, கறுப்பர்களை, அடிமைகளாகவும் கூலிகளாகவும் பிடித்து வந்தனர். இந்த அடிமைகளின் சோகம், கோபம், ஏக்கம்... இவைதான் றேகே இசை.

'NO WOMAN NO CRY' 'வேண்டாம் பெண்களே அழவேண்டாம்...' எனும் பொப்மார்லியின் புகழ்பெற்ற பாடலினை கேட்கும் போதெல்லாம் என் காதில் பாரதியின் குரல்தான்.

'விம்மிவிம்மி விம்மி விம்மியழுங்குரல்
கேட்டிருப்பாய் காற்றே! துன்பக்
கேணியிலே எங்கள் பெண்கள் அழுத சொல்
மீட்டும் உரையாயோ?அவர்
விம்மியழவும் திறங்கெட்டு போயினர்..'
(கரும்புத்தோட்டத்திலே)


எனும் சோகச் சொற்களால் நெஞ்சம் துன்புறுமே, எழுத்துதரும் துன்பமே தாங்க முடியாதபோது நரம்பு சுண்டும் இசையில் குழைந்துவரும் குரலில் 'NO WOMAN NO CRY' அப்பப்பா... ஆம் அவன் பாடல்கள் துயரப்பட்டவர்களுக்கானது.

யமேக்கா தீவின் தலைநகரான கிங்ஸ்ரனில் தெருமுனைப்பாடகனாக பாடித்திரிந்த ஏழை பொப்மார்லி, தன் இசை அறிவினால், பாட்டுக்கட்டும் ஆற்றலினால், அதன் வீச்சினால் றேகே இசையின் உற்பத்தி இடமாய் யமேக்காவை குறிக்கச் செய்ததுடன், உலகின் கவனத்தையும் யமேக்கா மீது குவியச் செய்தான் பெருமை சேர்த்தான் என்கிறது யமேக்காவின் வரலாற்றுக் குறிப்பு.

06-02-1945ம் ஆண்டில் பிறந்த பொப்மார்லி பாடல் எழுதவும், பாடவும் வல்லமை கொண்டிருந்த தன் தாயிடமிருந்தே இசையை கற்றுக் கொண்டதாகவும், கிட்டார் இசைக்கருவியை தானே பயின்றதாகவும், புகழ்பெற்ற பின்னர் பத்திரிகையாளரின் கேள்வியொன்றின் போது பதிலளித்துள்ளான். பொப்மார்லி தன் இளவயது வாழ்க்கைபற்றி 'CONCRETE JUNGLE' என்னும் பாடலில் இப்படிப் பாடுகின்றான்....

இன்றுள்ளதைப்போல் எனது நாட்களில்
சூரியன் எப்பொதும் ஒளிர்ந்ததில்லை.
உயரத்தே மஞ்சள் நிலா
விளையாட வெளிவந்ததில்லை
நான் சொல்கிறேன்
என் வாழ்வின் ஒளியை
இருள் மூடி இருந்தது.
எனது நாட்கள் இரவினுள்தான்
நகர்ந்தது.
அன்பை அமைதியை
எங்கே நான்
கண்டடையலாம்..
எவரும் எனக்கு
சொல்லவில்லை
சுற்றிலும் எங்கேனும்
இருக்ககூடுமென
கொங்கிறீற் வனத்தைக் காட்டினர்..

இப்படித் தன்வாழ்க்கையை, தன்சுற்றத்தை, தன்கவலையையே எப்பொழுதும் தன் பாடலில் பதிவுசெய்தான். தன் நண்பர்களுடன் தொடங்கிய இசைக்குழுவிற்கு 'WAILERS' என்றே பெயரிட்டான். இந்தச் சொல்லை விவிலியத்தில் (Bible) இருந்தே தான் பெற்றதாய் கூறுகிறான். 'WAIL' என்பது அழுகை, புலம்பல் என்பதைக் குறிக்கும். தனது இசைக்குழுவிற்கு 'அழுகைக் குரலாளர்' எனப்பெயரிட்டதன் பொருத்தத்தை அவனது பாடல்களை கேட்பவர்களால் புரிந்து கொள்ள முடியும். ஒருமுறை அவன் கூறினான்

'நீதிக்கும் நியாயத்திற்குமாய் எவனொருவன் குரலெழுப்புகின்றானோ அவன் 'WAILERS' என்றான். அவனது பாடல்களில் யமேக்கா அடிமை மக்களின் துயரம் வெளிப்பட்ட போதும் அவை உலகெங்குமான துயரங்களுடன் அடையாளங்காணப்பட்டதும், ஒன்றித்ததும் தற்செயலானதல்ல. ஒரு எழுத்தாளர் அவனை 'மூன்றாம் உலகின் பாடல் குரலோன்' எனச் சிறப்பித்துள்ளார்.

அவனது பாடல்களில் தொன்மை தொன்மம் பற்றியதான உள்ளடக்கங்களுடன் விவிலியத்தின் பழைய ஏற்பாடு கூறும் கருதுகோள்களும் விரவிக்கிடப்பதைக் காணலாம். அத்துடன் ஃகார்வேயிசம் என்னும் சிந்தனைத் தாக்கத்தாலும் தத்துவத்தினாலும் பொப்மார்லி கவரப்பட்டிருந்தான். ஃகார்வேயிசத்தின் மூலவரான மார்குஸ் மொசய் ஃகார்வே (MARGUS MOSIAH GARVEY), அடிமைப்பட்ட கறுப்பின மக்களின் மீட்பராக மதிக்கப்படுபவர்.

யமேக்காவின் தேசியவீரராக அரசால் ஏற்கப்பட்டவர். யமேக்காவின் கல்விப்பாடவிதானத்தில் அவரது போதனைகள் சேர்க்கப்பட்டு பாடசாலைகளில் கற்பிக்கப்படுகின்றது. யமேக்காவில் 1887ல் பிறந்த ஃகார்வே 'ஆபிரிக்காவுக்கு திரும்புதல்' ஆபிரிக்கா ஆபிரிக்கருக்கே' என்னும் கோட்பாட்டையும் அதற்கான இயக்கத்தையும் நடாத்தி வந்தார். இருண்ட கண்டமென்று பெயரிட்டு அந்த ஆபிரிக்ககண்டம் முழுவதையுமே ஐரோப்பா அடிமைப்படுத்தியிருந்த முதலாம் உலகப் போரின் பின்னான காலகட்டத்தில் ஃகார்வேயின் இம்முழக்கங்கள் முக்கியமானவையாக கருதப்படுகின்றன. அவருடைய சிந்தனைகளும் செயற்பாடுகளும் புரட்சிகரமானது துணிச்சல் மிக்கது என வரலாற்றாசிரியர்கள் மதிப்பிடுகின்றனர்.

'நாம் அணிசேர்வோம். மற்ற மனிதர்களை வெறுப்பதற்காய் அல்ல. நம்மைநாமே உயர்த்திககொள்ள, நமக்கு மறுக்கப்பட்ட மனிதத்துவத்தை வற்புறுத்த. நாம் தயாரிததுள்ள வேலைத்தி்ட்டம் நியாயமானது என்று நம்புவோம். நாம் பிரகனடம் செய்வோம், ஆபிரிக்கா விடுதலை பெற, இயந்திர ஆலைகள் கொண்ட பெரு முதலாளிகளின் அடிமைப்படுத்தலில் இருந்து நீக்ரோ இனம் முழுமையும் விடுதலைபெற, நாம் சமரசம் செய்யத் தேவையில்லை.

நாம் அணிசேர்வேம்...'என்னும் முழங்கினார் ஃகார்வே. இந்த முழக்ங்களை பரப்புரை செய்தவண்ணம் மேற்கு இந்தியத் தீவுகள், மத்திய - தென் அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா ஆகிய பகுதிகள் எங்கும் பயணம் செய்தார். கறுப்பின மக்களை அணிசேர்க்க உழைத்தார். 1919ம் ஆண்டில் இருபது இலட்சம் உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பொன்றை நிறுவி அதன் முதல் கிளையை அமெரிக்காவில் செயல்பட வைத்தார். உலக நீக்ரோ மேம்பாட்டு கூட்டமைப்பு(U.N.I.A) என்பது அவரது இயக்கததின் பெயராகும். அடிமைகளாய் பிடித்துவரப்பட்டிருந்த மக்களை மீளவும் தாயகமான ஆபிரிக்காவிற்கு அழைத்துச் செல்வதற்கான கப்பல் நிறுவனம் ஒன்றினையும் நிறுவினார்.

ஆனால் அமெரிக்க அரசானது ஃகார்வேயின் மேல் வரிஏய்ப்பு எனற காரணத்தைக்காட்டி வழக்கு தொடுத்து அவரை நாட்டை விட்டு வெளியேற்றியது.

பின்னாளில் பொப்மார்லி தனது 'SO MUCH THINGS TO SAY' என்னும் பாடலில் இப்படிப்பாடினான்...

'நிறையவே உள்ளது சொல்வதற்கு
மறப்பதற்கு எனக்கு வேறு வழியில்லை..
அவர்கள் யேசுக்கிறிஸ்துவை
சிலுவையில் அறைந்தார்கள்.
நான் மறக்க வேறு வழி ஏதுமில்லை.
அவர்கள் மார்குஸ் ஃகார்வேயை
அரிசிக்காய் விற்றார்கள்.
ஆதலால் எந்த வழியுமிலலை நீ மறக்க
நீ யாராய் இருக்கலாம்
இந்தப் போராட்டத்தில் நீ எந்தப்பக்கம்....'


ஃகார்வே விதைத்த தொன்மங்களே பொப்மார்லியின் பாடல்களின் அடிநாதமாகும்.

1930ம் ஆண்டில் எதியோப்பியாவின் மன்னராக 'கெய்லி செலாசி'(Haile Selassie) முடிசூடியபோது மார்குஸ் ஃகார்வே ' கறுப்பு அரசன் முடிசூடுகின்றான். கறுப்பரின் இராச்சியம் எழுகின்றது. அவன் கடவுளின் பிரதிநிதி.விவிலியம் கூறும் அரசுரிமையின் தொடர்...' என்றெல்லாம் முன்மொழிந்து வரவேற்றிருந்தார். யமேக்கா மக்களும், பொப்மார்லியும் இக்கருத்துக்கும் கனவுக்கும் ஆட்பட்டிருந்தனர். 1940ம் ஆண்டிலேயே ஃகார்வே இறந்த போதிலும், 1960ம் ஆண்டு யமேக்காவின் அரசியல் சூழ்நிலை ஃகார்வேயின் சிந்தனைக்கும், கோட்பாடுகளுக்கும் புத்துயிரளித்தன. 1962ம் ஆண்டில் யமேக்கா கொலணித்துவத்தில் இருந்து விடுதலை பெற்றதாய் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் பொருளாதார சீர்குலைவுக்கு நாடு உள்ளாகி இருந்தது. வேலையில்லாத் திண்டாட்டம் முன்னெப்போதையும் விட அதிகரித்திருந்தது. இவ்வேளையில்தான் யமேக்கா தீவுக்கு அருகாமையான வட அமெரிக்காவில் அமெரிக்க கறுப்பர்களின் குடியுரிமை இயக்கம் உச்சம் பெறறிருந்தது. இவை யமேக்கா இளைஞர்களை றேகே இசையின்பாலும், றேகே இசைக்கலைஞர்களான 'றஸ்தபாரியன்'பாலும் ஈர்ப்புறச் செய்தன.


இந்த'றஸ்தபாரியன்' இயக்கம் (RASTARI MOUVMENT) எதியோப்பிய மன்னனாக 1930ல் கெய்லி செலாசி முடிசூடியபோதே தோற்றம் பெற்றது. ஃகார்வேயி்ன் கருதுகோள்களை அடிப்படையாகக் கொண்டது. அடிப்படையில் இவர்கள் கலகக்காரர்களாகவே அடையாளப்படுத்தப்பட்டனர். மதங்களை இவர்கள் நிராகரித்தார்கள். குறிப்பாக கத்தோலிக்க, கிறிஸ்தவ மதங்களை அடியோடு வெறுத்தார்கள். தங்களின் அடிமைநிலை இம்மதங்களாலும், மதம் பரப்பும் பாதிரிகளாலும் ஏற்பட்டதென நம்பினர். விவிலியம் கூறும் ஆதிவரலாறான பாபிலோன், கடவுளால் வாக்களிக்கப்பட்ட பூமி(எதியோப்பியா), இவையே அவர்களின் நம்பிக்கையாக இருந்தன.

'தாங்கள் போதிக்கும் எந்த சமயத்தையும் கேள்விக்கு இடமில்லாமல் பரிசுத்தமாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று கோருபவர்களுக்கு எதிராக அடக்குமுறைக்கு உள்ளான மக்கள் கிளர்ந்தெழுகின்றனர். அவ்வேளைகளில் அவர்கள் வேறு ஒரு கடவுளை, மதத்தை நாடுபவர்களாகவே இருப்பதை சரித்திரம் சான்று பகர்கின்றது. இதேபோல்தான் கிறிஸ்தவத்திற்கெதிராக கிளர்ந்தெழுந்த மக்கள் றஸ்தபாரியம் என்பதனை மாற்றான மதமாக கொண்டார்கள். இதனை ஆனமீக விலங்குகளில் இருந்து விடுதலைக்காக போராடும் மதம் என்று கருதினார்கள்.' என்கிறார் ரீற்றா பொறாஸ் என்னும் கட்டுரையாளர்.

றஸ்தபாரியன்கள் தமக்கான வாழ்க்கை நெறிமுறை ஒன்றையும் கடைப்பிடித்தனர். தலைமுடியை வாராமல், வளர்ந்ததை முறுக்கி, தொளதொள ஆடையுடன் அவர்கள் காணப்பட்டனர். அவர்கள் கஞ்சா புகைத்தார்கள். சாப்பாட்டு முறையிலும் சில கட்டுப்பாடுகளை கைக்கொண்டனர். அதாவது உணவில் பன்றி இறைச்சியை தவிர்த்தார்கள். தங்கள் நிறமாக சிவப்பு,மஞ்சள்,பச்சை, எனக்கொண்டு அதனையே கொடியாக்கினர்.


பொப்மார்லியும் தன்னை றஸதபாரியன் என்றே அடையாளப்படுத்தினான். ஒரு தடவை பொப்மார்லி கூறினான் 'றஸ்தபாரி வெறும் திடீர் கலாச்சாரமல்ல. அது இயல்பான உண்மை'. 'நான் எப்போதும் றஸ்தபாரிதான்'. 'என்னிடத்தே மதம் இல்லை. நான் இயல்பானவன். இயற்கையானவன். நியாயங்களுக்கானவன். நான் றஸ்தபாரியன்'.

தனது புகழ்பெற்ற பாடல்களில் ஒன்றான 'GET UP STAND UP' பாடலில் இப்படிப் பாடுகிறான்...

' மிக அதிகமான மக்கள் நினைக்கிறார்கள்
கடவுள் கட்டாயம் வானத்திருந்து வருவாரென்று
எல்லாவற்றையும் பொறுப்பேற்பாரென்று
இதுவே அவர்களின் உயர் எண்ணங்கள்
ஆனால் நீ அறிவாயா வாழ்வின் பெறுமானங்களை
நீ கட்டாயம் உன் பூமியை உற்றுப்பார்
இப்போ நீ ஒளியை உண்மையை உணர்வாய்
நீ எழு. நிமிர்ந்து நில்.
உன் உரிமைகளுக்காக எழுந்து செல்..'


அவன் நிகழ்கால உண்மைகளை நிலைமைகளையே பாடினான்.




1980ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பொப்மார்லி ஜிம்பாவே நாட்டின் அழைப்பின் பேரில் அங்கு சென்றிருந்தான். கொலணித்துவத்திற்கு எதிரான போராட்டத்திலும், சிறுபான்மையினரா நிறவெறி வெள்ளையரின் ஆட்சிக்கெதிரான போராட்டத்திலும் வெற்றிபெற்ற ஜிம்பாவேயின் வெற்றி விழாவில் பொப்மார்லி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டான். சிறப்பிக்க்கப்பட்டான். இதனை தன் இசைவாழ்வின் பெருமிதமிக்க நிகழ்ச்சியாகவே பொப்மார்லி கருதினான். கறுப்பரின் எழுச்சியை காணமுடிந்ததே என்றும் மகிழ்ந்தான். ஜிம்பாவே பற்றிய அவனது பாடல் இன்றும் அந்நாட்டின் தேசியகீதம் போல் இசைக்கப்படுகின்றது. இதோ அந்தப் பாடல்..

'கையினில் கையாய் கருவி ஏந்தி
இச்சிறுபோரில் நாம் பொருதிடுவோம்
ஏனெனில் அதுவே ஒரேயொரு வழி
இச்சிறு எதிர்ப்பை மீறி நாம் எழுவோம்
சகோதரனே நீயே சரியானவன்
நீயே உரித்தானவன்
நாம் சண்டையை தொடவோம்
எம் உரித்துக்காய் போரிடுவோம்
பிரித்தாளும் ஆட்சித் தந்திரம்
ஒவ்வொரு மனிதனின் நெஞ்சிலும்
தனியே கண்ணீரை உகுக்கின்றது.
நெஞ்சத் துடிப்பும் அங்கே கேட்கின்றது.
ஆதலால் நாம் கண்டடைவோம்
யார் உண்மையான புரட்சிக்காரன்
நான் விரும்பவிலலை
தந்திரங்களினல் எனது மக்கள்
ஆயுதக்கூலிகளாவதை...'

ஜிம்பாவே வெற்றிநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மகிழ்வில் இருந்து மீள்வதற்கு முன் பொப்மார்லி சுகவீனமுற்றான். கரீபியன் தீவுகளிலும், தென் அமெரிக்காவிலும் பிரபல்யம் பெற்றதானSOCEAR என்னும் உதைபந்தாட்டத்தில் விருப்பம் கொண்டவன் பொப்மார்லி. 1980ம் ஆண்டு செப்படம்பர் மாத ஒரு காலைப்பொழுதில் தன் உடற்பயிற்சிக்காய் உதைபந்தை விளையாடிக் கொண்டிருந்த போது சுகவீனமுற்றான். எப்போதும் கஞ்சா புகைப்பதில் மூழ்கியவனான பொப்மார்லி கஞ்சா தேசத்தை குணப்படுத்தும் மருந்து, பழம் உண்பதைப் போன்றது.

சிந்தனைத் தெளிவிற்கும் உடல் நலத்திற்கும் ஏற்றது.' என்று அழுத்தத்துடன் கூறிவந்தவன். றஸ்தபாரியன்களும் 'கஞ்சா பொதுமை உணர்வை தருகின்றது' என்ற நம்பிக்கையை கொண்டிருந்தவர்கள். ஆனால் மருத்துவர்கள் கஞ்சாதான் பொப்மார்லியின் சாவுக்கு காரணமென கூறுகின்றனர். றொபேர்ட் நெஸ்டா மார்லி என்று முழுப்பெயர் கொண்ட, மக்களின் உணர்வுகளை கவலைகளை பாடலாய் மாற்றிய இசைச் கலைஞன் பொப்மார்லி 1981ம் ஆண்டு மே மாதம் 11ம் திகதி த்ன முப்பத்தாறாவது வயதில் இறந்து போனான்.

அவனது இறுதிநாள் ஊர்வல நிகழ்ச்சி பற்றி எழுதிய பத்திரிகையாளர் ஒருவர் 'கற்களாலான சீனபெருமதிற் சுவர்போல் மக்கள் தலைகள் திரண்டு கிடந்தன. அவனுக்கு அஞ்சலி செலுத்தும் வரிசை மூன்று நாட்களின் பின்னாலும் முடிவுறாது இருந்தது.' எனக் குறிப்பிடுகின்றார்.

ஹரிக்கேன் புயலென பொப்மார்லி றேகே இசையுடன் எழுந்தான். அப்புயலிடை அவன தூவிய விதைகள் துயரமுறும் மக்களிடமெல்லாம் சென்ற தங்கியுள்ளது. அவனது சக்தி உமிழும் இசையை, பாடல்களை முறியடிக்க எத்தனையோ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவற்றையெல்லாம் அவன் மீறியவனாய்...

'ஆம் என் நண்பனே
அவர்களுக்கு சொல்
நாங்கள் மிகவும் சுதந்திரமானோமென
என்னை அடக்க எச்சட்டத்தாலும் முடியாது
எந்தச் சக்தியும் என்னை கட்டுப்படுத்தாது...'


காற்றில் மிதக்கின்றது அவன் பாடல் சுதந்திரமாக.

பி.கு: 1993ல் இக்கட்டுரை எழுதுவதற்கு சில நூல்கள், கட்டுரைகள், ஒலி ஒளி நாடாக்கள் பயன்பட்டன. அவை எவை என்பதை தற்போது என்னால் குறிபபிட முடியாதிருக்கின்றது. குறைகள் இருந்தால் சுட்டுங்கள். கருத்துக்களை எழுதுங்கள்.

கிபி அரவிந்தன்.அப்பால்தமிழ்

Read More...

Sunday, October 14, 2007

சாமி அடிச்சாரோ செண்பகப்பூ கையாலே..

முதல் முதல் சாமி பத்மப்பிரியாக்கு அடித்தது என்று கேள்விப்பட்டவுடன் ஏதோ
தெய்வக்குத்தமாக்கும் அதுதான் சாமி அடித்தது என புரிந்துகொண்டேன்.

பின்னர் நடிகைக்கு டைரக்டர் அடித்துவிட்டாராம் என்றார்கள்.அந்தம்மா கௌரவம் படத்தில் நடித்தபோதே தெரியும். வயதானவங்க ஏன் அடி வாஙுறாங்க
என்றால் இது வேறயாம்.இது சேரன் பட பத்மப்பிரியாவாம்.

அட விஷயத்துக்கு வாய்யா..ஒகே ஒகே

சாமி சொல்லியிருக்கார் .

இந்தம்மாவிர்கு அழ தெரியவில்லை அதுதான் இப்படி
ஆயிற்றறு .

மற்றும்படி நான் வல்லவன் எனக்கும் குடும்பம் இருக்கு
அப்ப்டீன்னு சொல்லி இருக்காரு.

அதை விட அந்த அம்மா ஒரு படி மேலெ போய் நான் பெண்ணியவாதி இல்லை அதனால் வேறு போராட்டம் இல்லைன்னு
சொல்லியிருக்கிறாரு.

அதன் அர்த்தம் புரியவில்லை.

சரி எப்படியிருப்பினும் ஒருவரை பலவீனமானவரை அடிப்பது என்பது ஏற்றுக்கொள்ளமுடியாது.

இது சம்பந்தமாக நானும் எனது கண்டிப்பை தெரியப்படுத்தவெண்டும்.

பல வலைப்பதிவர்களும் இதுபற்றி காட்டமாக தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

அதிலும் செல்லாவின் இழுத்துவைத்து அறுப்பேன் என்ற வதிவும்.கொழுவியின் விடியோ கண்டனப்பதிவும் பாராட்டத்தக்கது.


எனது வினா என்னவென்றால் ஒருவரை அழ வைக்க அடிக்கதான் வேண்டுமா?

வேறுவழிகள் இல்லையா?

ஒருவரை அழவைப்பதற்கு அடிக்காமலே

அ. அவரை விஜயகாந்தின் படம் ஒன்றை எழுந்து போகவிடாமல் உட்காரவைத்து முழுமையாக பார்க்கவிடலாம்.

ஆ. பெயரிலியின் அபத்தவாதம் வலைப்பதிவைபார்த்து அவரினதும் அதில் எழுதியுள்ள அமீபா என்பவரினதும் பின்னூட்டத்தையும் தமிழில் மொழிபெயர்க்க விடலாம்.

இ.த்மிழச்சிக்கு போட்டியாக கழகம் ஆரம்பிக்கவிடலாம்.

ஈ. வலைப்பட்டறையில் நன்னடத்தை பற்றி பேச விடலாம்

உ. தமிழ்மணத்தில் புதிதாக பதிய விடலாம்

ஊ. அப்பளம் சுடுவது எப்படி என்று தொழில்நுட்ப பதிவை வாசிக்கவிடலாம்.

சரியான் விடையை கூறூவோருக்கு ஒரு சிறிய வெள்ளைபந்து தரப்படும்.அதை காட்டி சரவணா ஸ்டோர்ஸில் உங்களுக்குரிய கிறைண்டறை
பெறுக்கொள்ளலாம்.

Read More...

Friday, October 12, 2007

எனது வாடிக்கையாளர்களுக்கு,

நாளையும் நாளை மறுதினமும் விடுமுறைதினத்தை ஒட்டி எனது மொக்கன் கடை பூட்டப்பட்டிருக்கம்.அவசரத்தேவைகளுக்கு மொக்கறாசு கொரியன் ஸ்ரோர்ஸில் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளலாம்.

நான் திங்கள் திரும்ப வருவதற்கிடையில் ஆயிரத்திஒராவது அய்ரோப்பிய கடலைக்கடை என ஏதாவது புதிதாக ஒன்றை ஆரம்பித்துவிடாதீர்கள்.எனக்கும் அழைப்பு வைத்து ஆரம்பிக்கலாம்.

அதுவரையில் வலையில் தோழர் ஞானி எழுதும் கட்டுரையை படித்து பேசாப்பொருளை பேசுவோமாக.

ஆமென்.

லேபில்-சொந்த செலவில் சூனியம் அல்லது யானை தன் தலையில் மண் அள்ளிப்பொடுதல்.

Read More...

Thursday, October 11, 2007

லக்கி லுக்க -ஒரு கொண்டையியல் பதிவு!

கொண்டையிலே தாழம்பூவாம் உள்ளே இருப்பது ஈரும்பேனாம் என்று ஒரு சங்கப்பாடல்(:)) கூறுகிறது.அந்த காலத்திலேயே கவிஞர்கள் இந்த கொண்டை நுண்ணரசியல் பற்றி நிறையவே புரிந்து வைத்துள்ளார்கள்.

திரெளபதியின் கொண்டை பிரச்சனையால்தான் மகாபாரதமே ஆரம்பித்தது.

ஆகவே சரித்திரத்தில் அன்றும் இன்றும் கொண்டைக்கு முக்கியத்துவம் இருந்துவருகிறது.

அதனைவிட இணையத்தில் அதனைவிட வலைப்பதிவில் கொண்டையியல் ஒரு முக்கிய சப்ஜெக்ற்.

இது ஒரு கட்டாய பாடம் .இது பாஸ் பண்ணினால்தான் பரீட்சையிலேயே பாஸ்.

இதுபற்றி விகடனில் மதன் ஏதும் எழுதினால் சிறப்பு.


இந்தக்கொண்டை சமாச்சாரத்தை வலைப்பதிவிலே பேமசாக்கினது நம்ம லக்கி லுக்கண்ணை. வடிவேலு சமாசாரத்தை ஐபி சமாசாரத்தோடு ஒப்பிட்டு
அதை பிரபலமாக்கியவர்.

ஆனால்

இந்தக்கொண்டை இருக்கே இது பலபேரை ஏமாற்றும்.

இதுதான் கொண்டை என்று இருக்கும்போது அங்கே திருப்பதி ஸ்டைலில் ஒன்றுமே இருக்காது.

கொண்டை இருக்கென்று சந்தோஸப்படும்போது அது வேறு விதமான
டிசைன் கொண்டையாகவிருக்கும்.

கல்யாணத்திற்கென்று ஒரு கொண்டை பூப்புனிதத்திற்கு ஒன்று பிறந்தநாளுக்கென்று இன்னொன்று..என பில்ம் காட்டிக்கொண்டே இருப்பார்கள்.ஓ இதுதானா சூட்சமம் என்று
கண்டுபிடிக்கும்போது பின்னி பின்னலிடுவார்கள்.

எதை எப்ப போடுவார்கள் எப்ப கழட்டுவார்கள் என்று யாரும் முன்கூட்டியே கட்டியம் கூறிவிடமுடியாது.

எனக்கு தெரிந்தது புரிந்தது குதிரைவால் கொண்டை மட்டுமே..
மற்றையவற்றிற்கு பெயர்தெரியாது.


நான் பார்த்த
ஒரு சில கொண்டைகளை காட்சிக்கு வைத்துள்ளேன்.

உங்களுக்கு மட்டுமா கொண்டை போடத்தெரியும்? பார்த்து மகிழவும்.


கொண்டை மறைக்கும் காட்சி


கொண்டை அதிகாரம்.



பாதிக்கொண்டை



கொண்டை காட்டி


கொண்டையை மறைக்கும் யாழ்ப்பாணி


இது வேறு


முரளிமனோகர் கொண்டை












ஈழத்தில் சிங்களவர்களில் இப்படி நாட்டாமைகள் மற்றும் ஊருக்கு பெரியவர்கள் கொண்டைபோட்டு தம்மை

வெளிகாட்டிக்கொள்வார்களாம்.இவர்களின் தலையில் கொண்டையில் சீப்பு போன்ற ஒன்று இருக்கும்.

வெள்ளைக்காரன் இந்த சீப்பை பார்த்துதான் chief என்று சொன்னானோ தெரியாது.:)

மேலதிக பழைய படங்களை பார்க்க இங்கே பின்னூட்டிவிட்டு செல்லவும்

Read More...

தமிழ்மணம் உதவிசெய்யவேண்டும்.

சரி வெட்கம் பார்த்தால் சுற்றமில்லை.எனவே கேட்டுவிடுவது என முடிவெடுத்துள்ளேன்

கனம் தமிழ்மணம் நிர்வாகத்திற்கு

உங்களது சேவை மிகப்பெரிய சேவை.இந்திய வரலாற்றிலேயே கொரியா தொடங்கி குற்றாலம் வரைக்கும் உங்கள் ஆட்சிதான் நீண்டுகிடக்கிறது.
இது தமிழுக்கு கிடைத்த தனிப்பெருமை.

இப்பொழுது எனது தாழ்மையான விண்ணப்பமென்னவெனில் தமிழ்மண முகப்பு பக்கத்தில் பலவிதமாக
கூரை போட்டு ஒவ்வொருத்தருக்கும் பல இடங்கள் ஒதுக்கியுள்ளீர்கள்.
காலத்துக்கு காலம் நிலமைக்கு ஏற்ப சண்டித்தனம் செய்வோரை(இடுகைகள்) பின்னுக்கு தூக்கியும் வயது முதிந்ந்தோரை(பரண்) முன்னுக்குமாக இடுகிறீர்கள்.


காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்ற திராவிட பழமொழிக்கேற்ப தமிழனது திரவியம் தேடும் வணிகப்புத்தி முந்து முந்து என்கிறது.

எனவே

அதே போல ஏதாவது ஒரு கூரையிலுள்ள ஒரு இடத்தை காலி பண்ணி எனக்கு கொடுத்தீர்களானால் நான் அதில் ஒரு டெய்லர் கடை போட்டு தமிழ்மணத்தில் அடிக்கடி கிழிக்கப்படும் டவுஸர்களை தைத்து வணிகம் செய்வேன்.

உதவுவீர்களா?


லேபிள் :-மதன்,டெய்லர்,ஆதித்த கரிகாலன் டவுசர்

Read More...

Wednesday, October 10, 2007

மதன மாளிகையில் மந்திர மாலைகளாம்





சட்டைக்குள் பூணூல் நெளியுது புலி பாயுது எல்லாம் எனக்கு புரிவதில்லை.நான் ஒரு விட்டேத்தி. பொதுப்புத்தியும் இல்லை சொந்தப்புத்தியும் இல்லை.

மதன் தமிழனுக்கு வரலாற்று ஆவணங்கள் காணாது எனும்போது ஏற்றுக்கொள்ளலாம் போல் தோன்றியது.

இலங்கையும் சரி இந்தியாவிலும் சரி கோவிலைத்தவிர நம் தமிழ்மன்னர்கள் பற்றிய வாழ்ந்த எந்த
அரண்மனைகளோ அல்லது அந்தப்புரங்களையோ காணவில்லை.

போர்த்துக்கீசன் இடித்தானோ அல்லது எட்டப்பன் அவனை சாட்டி இடித்தானோ தெரியாது.

ஆனால் கோவில்கள் மட்டும் வானுயர்ந்து இன்னும் நிற்கிறது.

இதை மட்டும் வெள்ளையனும் மிஷனரிகளும் எப்படி விட்டு வைத்தார்கள்???

யாழ்ப்பாணத்தில் அந்த கோவில்களைக்கூட வெள்ளையன் மிச்சம் வைக்கவில்லை.

வாழையிலையில் சாப்பிடக்கூட தடையிருந்துதான் சுவாமி ஞானப்பிரகாசர் தமிழகத்திற்கு ஓடினார் என வரலாறு கூறுகிறது.

//"சிதம்பரத்திலேயுள்ள ஞானப்பிரகாசமெனும் தீர்த்தக்குளத்தை வெட்டினாரும் இம்மகானே. யாழ்ப்பாணத்தவராற் சிதம்பரத்தின்கண்ணே கட்டுவிக்கப்பெற்ற மடங்களெல்லாம், இத்திருக்குளத்தின் வடகரை கீழ்க்கரைகளிலேயுள்ளன. தெப்போற்சவ முதலிய சில உற்சவங்களுக்கு சிதம்பராலயத்துச் சுவாமிகள் எழுந்தருளுவது இத் திருக்குளத்துக்கே. இக் குளத்துப் படிக்கட்டுகள் கிலமடைந்துவிட்டமையால் அவற்றைப் புதுப்பிக்க இப்போது யாழ்ப்பாணிகளே பண உதவி செய்து வருகின்றனர்.[இந்துசாதனம்]" (யாழ்ப்பாண வைபவ கெளமுதி, 1918, க.வேலுப்பிள்ளை, பக். 153)//

எது எப்படியிருப்பினும்

கலைமகளில் ஒருமுறை காஞ்சிப்பெரியவர் கூறியது ஞாபகம் வருகிறது.
தமிழகத்தின் வரலாறு கோவில் கல்வெட்டுகளிலும் இன்னமும் கண்டுபிடிக்கப்படாத கோயில்களின் மூலமும் அறியலாம் என கூறியிருந்தார்.

அதுதான் உண்மை என நினைக்கிறேன்.

எம்மவர் ஆவணங்களை சேர்ப்பதில் பாதுகாப்பதில் அவ்வளவு அக்கறைப்படுவதில்லை.தாத்தா யானை வைத்திருந்திருந்தால் அதில் எனக்கு என்ன பயன் என்பதுபோல்..

மதன் வந்தார்கள் வென்றார்கள் எழுதும்போது தான் டெல்லிக்கே போனதில்லை என்று சொன்னதாக ஞாபகம்.

போகாமலே எழுதுமளவிற்கு அவருக்கு அத்தனை ஆவணங்களும் குறிப்புகளாக கிடைத்திருக்கிறது.

அப்படி குறிப்புகளை வைத்து தமிழக வரலாறை எழுதமுடியுமா?

அதில்தான் அவருக்கு பயம் ஏற்பட்டு இந்த பிரச்சனைக்குரிய ஸ்டேட்மன்டை விட்டுள்ளார் என நினைக்கிறேன்.

அவர் சிரமம் அவருக்கு..

ஆனால் பொன்னியின் செல்வன் நாவலை எழுதுவதற்காக கல்கி இலங்கை யாழ்ப்பாணம் வந்தது மதனுக்கு தெரியுமா? கல்கி தொண்டமானாறு திக்கம் கடற்கரைக்கு விஜயம் செய்து பார்வையிட்டிருந்தார்.

கல்கியின் இலங்கை விஜயம் பற்றிய நூலில் இந்தக்குறிப்பு உள்ளது.

இலங்கை வராமலே அந்த நாவலை கல்கி எழுதியிருக்கமுடியும்.ஆனால் ஆத்மார்த்தமாக எழுதுவதற்கு அவருக்கு அந்த பயணம் பயன்பட்டிருக்கலாம் என எண்ணுகிறேன்.

மதனுக்கு சரியான பதிலை திரு கலைக்கோவன் தனது வரலாறு கொம்மில் கொடுத்துள்ளார்.மதன் இவர்களைப்போன்றவர்களை ஈகோ இல்லாமல் அணுகினால்
தமிழகத்திற்கு யாரோ சொன்னதுபோல் எல்லா தளத்திற்கும் செல்லக்கூடிய ஒரு வரலாற்று நூல் கிடைக்கும்.


மதன் பற்றி வரலாறு கொம்


உண்மைகள் சுடும் - மதனுக்கும் நண்பர்களுக்கும் விளக்கம்

இரா. கலைக்கோவன்


அன்பிற்கினிய நண்பர்களுக்கு,

திரு. வெ.இறையன்புவின் கேள்விக்குத் திரு. மதன் ஆனந்த விகடன் 07.03.2007 இதழில் தந்திருந்த மறுமொழியைப் படித்து உளம் வருந்தியவர்களுள் நானும் ஒருவன். 'தென்தமிழ்நாட்டுக் குடைவரைகள்' எனும் நூல் தயாரிப்புப் பணியில் முழுமையாக ஆழ்ந்திருந்தமையால் என்னால் உடன் கருத்துரைக்கக் கூடவில்லை. வரலாறு மின்னிதழ் ஆசிரியர்களுள் ஒருவரான திரு. ச.கமலக்கண்ணன் திரு. மதனுக்கு எழுதிய வெளிப்படையான மடலும் அந்த மடலுக்குத் திரு. மதன் 25.04.2007 ஆனந்த விகடனில் தந்திருந்த மறுமொழியும் படித்தேன். திரு. மதனின் முதல்மொழி, மறுமொழி இவற்றையும் திரு. ச.கமலக்கண்ணனின் வெளிப்படையான மடலையும் படித்து உலகளாவிய நண்பர்களான நீங்கள் தெரிவித்திருந்த கருத்துக்களைப் பார்க்கும் வாய்ப்பும் கிட்டியது.

திரு. மதனுக்குத் தமிழர் வரலாறு குறித்த உண்மைகளை எழுதவேண்டும் என்று கருதிய நிலையில், இந்த வாய்ப்பு மாற்றத்தைத் தந்தது. திரு. மதனுக்குத் தனிப்பட எழுதுவதைவிட, அவர் கருத்துக்களை நண்பர்கள் மன்றில் ஆய்வது பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது. அதனால்தான், திரு. மதனின் இரண்டு மறுமொழிகளையும் படித்து வரலாறு மின்னிதழுடன் தொடர்புகொண்ட அனைவரையும் நண்பர்களாய் விளித்து இந்த மடலைத் தொடங்கியுள்ளேன்.

திரு. ச.கமலக்கண்ணனின் மறுமொழியை, 'உணர்ச்சிப் பெருக்கில் தம்மைத் தாக்கிய' மடலாகவே திரு. மதன் பார்த்திருப்பது துன்பம் தருகிறது. அந்த மடலில், கல்வெட்டுகளைக் கொண்டு ஓர் அரச மரபினர் (பழுவேட்டரையர்) தொடர்பான வரலாறு உருவாக்கப்பட்டிருப்பதையும் சங்க இலக்கியப் பாடல்கள் தமிழரின் வாழ்வியல் சுட்டும் உண்மையையும் திரு. ச.கமலக்கண்ணன் வெளிப்படுத்தியிருந்தார். 'எந்த ஆதாரங்களை வைத்துக்கொண்டு நாம் வரலாற்றை எழுதமுடியும்?' என்று திரு. மதன் கேட்டிருந்த கேள்விக்குத்தான் திரு. கமலக்கண்ணன் தாம் நன்கறிந்த இந்த இரண்டு சான்றுகளைத் தந்திருந்தார். இது போல பல சான்றுகள் உள்ளன. திரு. மதனுக்கு மட்டுமல்லாது, தமிழறிந்த அனைத்து நண்பர்களுக்கும் இவை தெரியவேண்டும் என்பதற்காகவே இந்த மடல் தொடர்கிறது. இது உணர்ச்சிப் பெருக்கில் உருவாகும் மடல் அன்று. உண்மைகளை உலகத் தமிழர்கள் முன் நிறுத்த மேற்கொள்ளப்படும் ஓர் எளிய முயற்சி.

07.03.2007 ஆனந்த விகடன் இதழில் திரு. வெ. இறையன்பு, 'சோழப் பேரரசு' பற்றிய ஆதாரபூர்வ நூல் எழுதுமாறு திரு. மதனைக் கேட்டிருக்கிறார். 'சோழப் பேரரசு' பற்றித் தமிழில் திரு. வை. சதாசிவ பண்டாரத்தாரும் முனைவர். மா. இராசமாணிக்கனாரும் ஆங்கிலத்தில் திரு. நீலகண்ட சாஸ்திரியாரும் அருமையான ஆதாரபூர்வமான நூல்களை ஏற்கனவே எழுதியுள்ளனர். திரு. சாஸ்திரியாரின் நூல் தமிழிலும் வெளிவந்துள்ளது. திரு. கே.கே.பிள்ளை, 'தமிழக வரலாறும் பண்பாடும்' என்ற நூலில் சோழர்களைப் பற்றி மிக விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் வரலாற்று வல்லுநர்க் குழு, 'சோழப் பெருவேந்தர் காலம்' என்ற தலைப்பில் இரண்டு தொகுதிகள் வெளியிட்டுள்ளது.

சோழர்கால வருவாய் அமைப்புப் பற்றித் திரு. ப.சண்முகமும் சோழர்கால நில உடைமை பற்றித் திரு. கரோஷிமாவும் சோழர்கால வருவாய்ப் பிரிவுகள் பற்றித் திரு. எ.சுப்பராயலுவும் சோழர்கால வணிகம் பற்றித் திரு.கனகலதா முகுந்தும் சோழர்காலப் பொருளாதாரம் பற்றித் திரு. அப்பாதுரையும் சோழர்காலப் படிமங்கள் பற்றி முனைவர் இரா.நாகசாமியும் சோழர்கால நீர்ப்பாசனம் பற்றித் திரு. சீனிவாசனும் சோழர்கால ஆடற்கலை பற்றி இரா.கலைக்கோவனும் சோழர்காலக் கோயில் பொருளியல் பற்றித் திரு. மெ.து.இராசுகுமாரும் சோழர்காலக் குடியேற்றங்கள், சோழர்காலக் கட்டடக்கலை, சோழர்காலச் சிற்பக்கலை பற்றி முனைவர் மு.நளினியும் இந்து மகா சமுத்திரத்தில் நிகழ்ந்த வணிக நடவடிக்கைகள் குறித்துப் பல அறிஞர்களும் (டெய்ஷோ பல்கலைக்கழகம்) மிக விரிவான நூல்களை, ஆய்வேடுகளைப் படைத்துள்ளனர்.

சோழப்பேரரசு குறித்து இருநூற்றுக்கும் மேற்பட்ட தரமான ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை வெளியிட்டுள்ள 'அருண்மொழி' என்ற நூல் சோழப் பேரரசின் பல பரிமாணங்கள் குறித்த இருபதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளைக் கொண்டுள்ளது. தமிழகக் கடல்சார் வரலாறு, தமிழகத் துறைமுகங்கள், The Political Structure of Early and Medieval South India, Peasent State and Society in Medieval South India என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் சோழப் பேரரசு குறித்தும் சோழச் சமுதாயம் குறித்தும் எத்தனை எத்தனை நூல்கள் உள்ளன.

திரு. வெ.இறையன்பு இவை பற்றி அறியாதவர் அல்லர். ஆய்வாளர்களுக்காகவும் வரலாற்று நோக்கர்களுக்காகவும் எழுதப்பட்ட இந்நூல்களை அனைத்துத் தள மக்களும் படித்து மகிழ்தல் இயலாது எனக் கருதியே, 'வந்தார்கள் வென்றார்கள்' அமைப்பில், சோழப் பேரரசு குறித்து யாவரும் படித்து மகிழக்கூடிய, அனைத்துத் தள மக்களையும் சென்று சேரக்கூடிய ஒரு நூலைத் திரு. மதன் எழுதவேண்டும் என அவர் வேண்டுகோள் வைத்தார். எதனையும் எளிமைப்படுத்திச் சுவைபட வழங்கவல்ல திரு. மதனின் ஆற்றலில் திரு. இறையன்புவிற்கு இருக்கும் நம்பிக்கையை இந்த வேண்டுகோள் காட்டுவதாகக் கொள்ளலாம்.

இந்த வேண்டுகோளைத் திரு. மதன் எதிர்கொண்டவிதம்தான் சிக்கலை உண்டாக்கிவிட்டது. 'எந்த ஆதாரங்களை வைத்துக்கொண்டு நாம் நம் வரலாற்றை எழுதமுடியும்?' என்று திரு. வெ. இறையன்புவிற்கு எதிராகக் கேள்வி வைத்ததைவிட, தமிழ்நாட்டின் புகழ்பெற்ற வரலாற்றறிஞர்களை, கல்வெட்டறிஞர்களை அவர் தொடர்புகொண்டு, ஆதாரங்கள் பற்றிக் கேட்டுத் தெளிந்திருக்கலாம். 'நான் தமிழ் ஆய்வாளனும் அல்ல; தொல்பொருள் ஆராய்ச்சியாளனும் அல்ல' என்று தம்முடைய 25.04.2007 மறுமொழியில் ஒப்புக்கொண்டிருப்பவர், முதல் மொழியைத் தரும் முன்னரே இவற்றை உணர்ந்து, உரியவர்களைக் கலந்து மறுமொழி அளித்திருந்தால், திரு. மதனின் மீது நாம் வைத்திருந்த நம்பிக்கையும் மதிப்பும் கூடியிருக்கும். தெரியாத துறைகளைப் பற்றி மறுமொழி அளிக்கும்போது எச்சரிக்கை தேவை. எந்த ஒரு மனிதனும் எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்க முடியாது. தெரியாமல் இருப்பது குற்றமும் அன்று. ஆனால், தெரியாத நிலையில், 'தெரியாது' என்பதுதான் மறுமொழியாக இருக்கவேண்டுமே தவிர, எல்லாம் தெரிந்தது போல எழுதுதலும் மொழிதலும் சான்றாண்மையன்று.

இனி, திரு. மதனின் இரண்டு மறுமொழிகளையும் விரிவாகவே பார்க்கலாம். இவை, 'வரலாறு' பற்றி அறிந்துகொள்ளவும் அநுபவித்துத் துய்க்கவும் நம்மவர்க்குப் பெரிதும் உதவும். 07.03.2007 இதழில், 'தமிழ் மன்னர்களைப் பற்றிப் பாடல்களும் கல்வெட்டுகளும்தான் மிஞ்சியிருக்கின்றன. கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய பாடல்கள் அனேகமாக எதுவும் தற்போது இல்லை' என்று திரு. மதன் எழுதியுள்ளார். இந்த இரு கூற்றுகளுமே பிழையானவை. தமிழ் மன்னர்களைப் படம்பிடிக்க அவர்கள் விட்டுச் சென்ற கோயில்கள் உள்ளன. பாடல்களும் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் எப்படி முதன்மையான வரலாற்றுச் சான்றுகளாகக் கருதப்படுகின்றனவோ அது போலவே கோயில்களும் வரலாற்றுச் சான்றுகளாகவே விளங்குவதை யாரே மறுக்க முடியும்?

ஒரு கோயில், அதை உருவாக்கிய மன்னனின் ஆளுமை, திறன், இயல்புகள், அக்கால மக்களின் கலைநோக்கு, கலைஞர்களின் சிந்தனை வளம், சமுதாயச் சார்புகள் எனப் பலவும் சொல்லுவதாக காஞ்சிபுரம் இராஜசிம்மேசுவரம், மாமல்லபுரத்துக் கடற்கரைக் கோயில், தஞ்சாவூர் இராஜராஜீசுவரம், கங்கைகொண்ட சோழபுரத்துச் சோழீசுவரம் கொண்டு தெளியலாம். ஒரு கோயில் இவ்வளவு செய்திகளை வெளியிடமுடியுமா என்று கருதுவார் தஞ்சாவூர் இராஜராஜீசுவரம் பற்றி வெளியாகியிருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளைப் படிக்கவேண்டும். திரு. பி.வெங்கட்ராமனின், 'இராஜராஜேசுவரம்', மு.நளினியின், 'இராஜராஜீசுவரம் புதிய உண்மைகள்', இரா.கலைக்கோவனின், 'கோயில்களை நோக்கி . . .' இவை சிறந்த எடுத்துக்காட்டுகளாய் அமையும்.

திரு. சுந்தர் பரத்வாஜின் கொடையால் சுவாமிமலைக்கு அருகிலுள்ள வலஞ்சுழிக் கோயில் ஒரு நூலாக வடிவம் எடுத்திருப்பதை நண்பர்கள் அறியவேண்டும். ஏறத்தாழ 300க்கும் மேற்பட்ட சோழ நாட்டு ஊர்கள் இந்நூலால் வரலாற்று வெளிச்சத்திற்கு வந்துள்ளன. சேத்ரபாலர் பற்றிய சிந்தனை வளர்ச்சியை இந்நூல் ஆராய்ந்துள்ளது. அப்பர் காலத்திலிருந்து வளர்ந்து பரந்த ஒரு கோயில் சமுதாயத்தை எப்படி அணைத்திருந்தது என்பதை 'வலஞ்சுழி வாணர்' படித்தவர்கள் அறியமுடியும்.

கோயில்களினும் சிறந்த வரலாற்றுக் களங்கள் இல்லை. இக்கோயில்களில் உள்ள சிற்பங்கள், ஓவியங்கள், கட்டடக்கலைக் கூறுகள் இவை அவ்வக்கால வாழ்வியல் பின்னணிகளை மிக அருமையாக எடுத்துவைக்கின்றன. கோயில் பூதவரிகளில் (சுவரும் கூரையும் இணையும் பகுதியில் உள்ள பூதங்களின் சிற்பத்தொகுதி) பல்துறை வரலாற்றுத் தரவுகள் புதைந்து கிடப்பதை அநுபவித்தவர்கள் மட்டுமே உணரமுடியும். தமிழர்கள் தங்கள் வரலாற்றை எழுதியும் பாடியும் செதுக்கியும் வைத்துள்ளார்கள். தெரிந்து கொள்வதும் தேர்ந்து கொள்வதும் நம் திறமை.

'கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய பாடல்கள் அநேகமாக எதுவும் தற்போது இல்லை' என்று திரு. மதன் தம்முடைய முதல் மறுமொழியில் குறிப்பிட்டுள்ளமை முற்றிலும் பிழை. உலகம் போற்றும் கல்வெட்டு மேதையான திரு. ஐராவதம் மகாதேவன் தம்முடைய, 'Early Tamil Epigraphy' என்ற நூலில் சங்கத் தமிழ் மன்னர்களைக் குறிக்கும் தமிழ்க் கல்வெட்டுகளின் பாடங்களையும் காலத்தையும் குறிப்பிட்டுள்ளார். மாங்குளத்தில் படியெடுக்கப்பட்டிருக்கும் அக்கல்வெட்டுகள் பாண்டியன் நெடுஞ்செழியனின் பெயரைத் தருகின்றன. அவற்றின் காலம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு. பாண்டியர்களைப் பெயர் சுட்டிக் குறிப்பிடும் காசுகளும் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றுள் சில கி.மு. இரண்டாம் நூற்றாண்டின. தினமலர் ஆசிரியர் திரு. இரா. கிருஷ்ணமூர்த்தி அவை பற்றி நூல் எழுதியுள்ளார். அசோகரின் கிர்னார் கல்வெட்டு, கி.மு. மூன்றாம் நூற்றாண்டளவில் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருந்த மன்னர் மரபுகளாகச் சோழர்களையும் பாண்டியர்களையும் சத்யபுத்திரர்களையும் குறிப்பிடுகிறது. இந்தக் கல்வெட்டுகள் குறிப்பிடும் மன்னர்களைப் பற்றிய பாடல்கள் சங்க இலக்கியங்களில் விரவிக் கிடக்கின்றன. உண்மைகள் இப்படியிருக்க, 'கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய பாடல்கள் அநேகமாக எதுவும் தற்போது இல்லை' என்று திரு. மதன் எழுதுவது எந்த வகையில் நியாயம்?

சிறந்த தமிழறிஞர்களான மு.வரதராசனார், மா.இராசமாணிக்கனார், வ.சுப.மாணிக்கனார், தமிழண்ணல் இவர்கள் தங்களுடைய தமிழ்மொழி இலக்கிய வரலாறு பற்றிய நூல்களிலும் கால ஆராய்ச்சி பற்றி நூல்களிலும் சங்க காலத்தைக் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரையென வரையறுத்துள்ளனர். அண்மையில் கிடைத்துள்ள பல்வேறு அகழாய்வுச் சான்றுகளின் அடிப்படையில் தொல்லியல் அறிஞர் கா.இராஜன், சங்ககாலம் கி.மு. நான்காம் நூற்றாண்டுவரை கொண்டு செல்லத்தக்கது என்று மிகத் தெளிவாக அறிவித்துள்ளார் (தொல்லியல் நோக்கில் சங்க காலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு).

திரு. சு.இராசவேலு, திரு. கோ. திருமூர்த்தி இருவரும் எழுதியுள்ள, 'தமிழ்நாட்டுத் தொல்லியல் அகழாய்வுகள்' தமிழ்நாட்டில் நிகழ்ந்த 98 அகழாய்வுகளின் முடிவுகளைத் தெரிவிக்கின்றன. இந்நூலில், 'இந்தியாவில் தமிழ்நாட்டு அகழாய்வுகளில்தான் மட்பாண்டங்களில் இத்தகைய எழுத்துப் பொறிப்புகள் பெருமளவில் கிடைத்துள்ளன. இது தமிழகத்தில் அசோகருக்கு முற்பட்ட காலத்திலேயே தமிழக மக்கள் எழுத்தறிவு பெற்று விளங்கி இருந்தனர் என்ற உண்மையை' விளக்குகிறது என்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். இக்கருத்தை வலியுறுத்தி, 'சங்க காலத்தில் அறிவொளி இயக்கம்' என்று திரு. ஐராவதம் மகாதேவன் ஒரு கட்டுரையை எழுதி வெளியிட்டுள்ளார்.

'தமிழனிடமிருந்துதான் எழுத்துமுறை இந்தியாவில் பரவிற்று' எனும் உண்மையைக் கண்டுபிடிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக உறுதிப்படுத்துக் கொண்டிருக்கும் இந்த நல்லோரையில், 'கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய பாடல்கள் அநேகமாக எதுவும் தற்போது இல்லை' என்னும் தவறான கருத்தொன்றைப் பொதுமக்கள் பலரும் படிக்கும் ஓர் இதழில் திரு. மதன் எழுதலாமா? தாம் ஒரு தமிழ் ஆய்வாளர் அல்லர் என்ற உண்மையை இந்தக் கருத்தை எழுதும் முன் அவர் உணர்ந்திருக்க வேண்டாமா?

பேராசிரியர்கள் திரு. இரா. இளங்குமரன், திரு. தமிழண்ணல், திரு. பொன். கோதண்டராமன், திரு. க.ப.அறவாணன், திரு. க.நெடுஞ்செழியன், திரு. சிற்பி பாலசுப்பிரமணியன், திரு. இ.சுந்தரமூர்த்தி எனப் பல தமிழறிஞர்கள் இன்றும் நம்மிடையே தமிழ் பற்றித் தகுந்தன கூறக் காத்திருக்கும்போது, அவர்கள் அநுபவத்தை, அறிவைப் பயன்படுத்திக் கொள்ளாமல், ஒரு பிழையான தகவலை மக்களுடன் பகிர்ந்துகொள்வது, 'வந்தார்கள் வென்றார்கள்' போன்றதொரு நூலை எழுதிய திரு. மதனுக்குப் பொருந்துமா என்பதை உலகளாவிய தமிழ் நண்பர்களான நீங்கள்தான் முடிவுசெய்யவேண்டும்.

திரு. மதன் 07.03.2007 ஆனந்த விகடனில், 'புலவர்களுக்குத் தமிழ் மன்னர்கள் நிறைய மதுவும் பொற்காசுகளும் தந்தது உண்மை. விளைவு . . . உணர்ச்சி வசப்பட்ட புலவர்கள் அதீதமான கற்பனை செய்து மன்னர்களைப் பாராட்டிப் பாடல்களை எழுதிக் குவித்தார்கள்' என்று கூறிக் கரிகாலனின் வடபுலப் படையெடுப்பைப் பற்றிச் சிலப்பதிகாரம் தரும் தரவுகளை எடுத்துக்காட்டாக முன்வைத்து, பாடல் மிகையாகப் புகழ்வதாகக் கூறி, 'உண்மையில் கரிகாலன், தெலுங்குப் பகுதிகளை (ஆந்திரம்) தாண்டிப் போனதில்லை' என்று கருத்துரைத்துள்ளார்.

'யாதும் ஊரே யாவரும் கேளிர்', 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்றெல்லாம் இன்றளவும் உலகம் ஒப்பும் உயரிய கருத்துக்களை விதைத்துச் சென்ற தமிழ்ப் புலவர்களை இதைவிடக் கீழ்மையாக யாரும் மதிப்பீடு செய்ய முடியாது. மதுவுக்கும் பொற்காசுகளுக்கும் உணர்ச்சி வயப்பட்டுப் புலமையை விற்றவர்களா தமிழ்ப்புலவர்கள்? சங்க இலக்கியங்களான தொகை நூல்களிலும் பத்துப்பாட்டிலும் மன்னர்களைப் பாடியவர்கள் உணர்ச்சி வயப்பட்டவர்களா? அதீதக் கற்பனையாளர்களா? திருமுருகாற்றுப்படை தவிர்த்த ஆற்றுப்படை நூல்கள் அனைத்தும் மன்னர்களைப் பற்றியவைதான். இந்த அற்புதமான வரலாற்றுக் களஞ்சியங்கள் புலவர்களின் அதீதக் கற்பனைகளா? ஆற்றுப்படை நூல்களை ஆழமாக ஆராய்ந்து, அவற்றில் சொல்லப்பட்டிருக்கும் தரவுகளையெல்லாம் கள ஆய்வுகள் மூலம் உண்மை எனக் கண்டறிந்து பேராசிரியர் மா.இராசமாணிக்கனார் எழுதிச் சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கும் பத்துப்பாட்டு ஆராய்ச்சியை திரு. மதன் ஒருமுறையாவது படிக்கவேண்டும். அப்போதுதான் பத்துப்பாட்டு இலக்கியங்களைப் பாடிய புலவர்கள் எத்தகு வரலாற்று உணர்வுடன் அவற்றைப் படைத்திருக்கிறார்கள் என்பதை உணரமுடியும்.

புறநானூற்றில் உள்ள நானூறு பாடல்களும் புலவர்கள் மன்னர்களைப் போற்றிப் பாடியவைதான். இவை மது மயக்கத்தில் உணர்ச்சி வயப்பட்ட புலவர்களின் அதீத கற்பனைகளா? பங்காளிகளான சோழ மன்னர்களுக்குள் நிகழவிருந்த போரைத் தவிர்க்க முயன்ற புலவர், அதியமானின் தூதுவராகச் சென்ற அவ்வையார், பேகனுடன் அவன் துணைவி கண்ணகியை இணைத்து வைக்க முயன்ற புலவர் இவர்கள் எல்லாம் பொன்னுக்கும் மதுவுக்கும் கீழ்ப்பட்டா இத்தகு அரிய பணிகளைச் செய்தனர்?

திரு. மதன் கூறும் கரிகாலனின் வடபுலப் படையெடுப்பை எடுத்துக்கொள்வோம். இந்தச் செய்தி சிலப்பதிகாரத்தில் இந்திரவிழவூரெடுத்த காதையில் கூறப்படுகிறது. இதை ஏன் மிகை என்று கொள்ளவேண்டும்? இது மிகை என்றால், அதே சிலப்பதிகாரம் கூறும் சேரன் செங்குட்டுவனின் வடபுலப் படையெடுப்பும் அன்றோ மிகையாகிவிடும்?

இந்த இரு நிகழ்ச்சிகளையும் பாடிய துறவி இளங்கோவடிகளுக்கு மதுவும் பொற்காசுகளும் தந்து அதீதக் கற்பனையில் எழுதச் செய்தவர் யார்? சிலப்பதிகாரத்தை மேலோட்டமாகப் படித்தவர்கள்கூட எத்தகைய அரியதொரு வரலாற்று ஆவணம் அந்த இலக்கியம் என்பதை அறிவார்கள். அந்த இலக்கியத்தில் சொல்லப்பட்டிருக்கும் செய்திகள்கூட மிகை, அதீதக் கற்பனை என்றால், தமிழ்நாட்டு வரலாறே 'மிகை'தான்.

சங்க அரசர்களுள் வடபுலப் படையெடுப்பை நிகழ்த்திய ஆற்றலாளர்களாய்க் குறிக்கப்படுபவர்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன், கரிகால்சோழன் இவர்கள் மூவர்தான். இது அதீத கற்பனையென்றால், ஏன் இந்தக் கற்பனைப் பெருமைகளை மற்ற மன்னர்களுக்குப் புலவர்கள் தரவில்லை? அவர்களும் தாங்கள் பாடிய மன்னர்களிடம் மதுகுடித்துப் பொற்காசுகள் பெற்று உணர்ச்சி வயப்பட்டவர்கள்தானே? பதிற்றுப்பத்தின் பிற சேர வேந்தர்கள் ஏன் வடபுலம் ஏகவில்லை? சோழன் நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, இளஞ்சேட்சென்னி, பாண்டியப் பெருவேந்தர்கள் நெடுஞ்செழியன், முதுகுடுமிப் பெருவழுதி, அறிவுடைநம்பி இவர்கள் எல்லாமும் வடபுலம் போயிருக்கலாமே? இவர்களைப் பாடிய புலவர்களும், திரு. மதனின் கூற்றுப்படி, பாவம், மதுகுடித்துப் பொற்காசுகளைப் பெற்றவர்கள்தானே?

'உண்மையில் கரிகாலன் தெலுங்குப் பகுதிகளைத் தாண்டிப் போனதில்லை' என்கிறார் திரு. மதன். அப்படியே வைத்துக் கொள்வோம். இளங்கோ மது மயக்கத்தில் பொற்காசுகளை முடிந்துகொண்டு உணர்ச்சிவயப்பட்டு உளறிய உளறலாகவே கரிகாலனின் வடபுலப் படையெடுப்பைக் கருத்திக்கொள்வோம். கரிகாலன் தெலுங்குப் பகுதிகளுக்குப் போனமைக்கு என்ன சான்று உள்ளது? கரிகாலன் தெலுங்குப் பகுதிகளைப் போராடி வென்றாரா? எந்த மன்னரிடமிருந்து அப்பகுதிகளை வென்றார்? எவ்வளவு காலம் அங்கு இருந்தார்? இதற்கெல்லாம் அம்மன்னரது கல்வெட்டுகளோ, செப்பேடோ அல்லது வேறேதேனும் சான்றுகளோ உள்ளனவா? அச்சான்றுகளில் ஒன்றையேனும் திரு. மதன் தரமுடியுமா? 'உண்மையில்' என்று உறுதியாகச் சொல்லும் திரு. மதன், இந்த உண்மைக்குப் பின் நிற்கும் கரிகாலனின் ஆந்திரப் படையெடுப்புப் பற்றி ஆதாரங்களோடு எழுதினால் நாம் எவ்வளவு தெளிவுபெற முடியும்!!

ஒரு தமிழ் மன்னன் தமிழ்நாடு தாண்டிப் படையெடுப்பதோ பிற பகுதிகளை வெல்வதோ இயலாத செயலன்று. நூற்றுக்கணக்கில் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் இலக்கியங்களும் கோயில்களும் சான்றுகளாய் நின்று தமிழ் மன்னர்களின் அயலகப் படையெடுப்புகளையும் வெற்றிகளையும் உறுதிப்படுத்துகின்றன.

பாதாமியில் முதலாம் நரசிம்மவர்மரின் கல்வெட்டு இல்லையென்றால் அவருடைய வாதாபிப் படையெடுப்பைக்கூட அதீதக் கற்பனையாக்கி விடுவார்கள் நம்முடைய நண்பர்கள். முதலாம் இராஜேந்திரனைக் குறிப்பிடும் ஹொட்டூர்க் கல்வெட்டு இல்லையென்றால் இராஜேந்திரனின் இரட்டைபாடிப் படையெடுப்பும் கற்பனையாகிவிடும். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மன்னன் (முதலாம் நரசிம்மவர்மன்) இலங்கைக்கும் வாதாபிக்கும் படையெடுக்க முடியுமென்றால், கி.முவின் இறுதியிலோ கி.பியின் தொடக்கத்திலோ வாழ்ந்த தமிழ் மன்னர்கள் ஏன் இலங்கைக்கும் வடபுலத்திற்கும் படை நடத்தியிருக்கக்கூடாது? இலங்கை வரலாறு பேசும் மகாவம்சம் கி.மு முதல் நூற்றாண்டில் தமிழரசர் போரை இலங்கைச் சந்தித்ததாகக் கூறுவது இங்கு நினைக்கத்தக்கது.

ஒரு தரவை அதீதக் 'கற்பனை' என்று தீர்மானிக்கும் முன் அத்தரவு இடம்பெற்றுள்ள மூலத்தின் உண்மைத் தன்மையை ஆராயவேண்டும். சிலப்பதிகாரம் தமிழ்நாட்டின் தவப்பேறாய் விளைந்த இலக்கியம். படைக்கப்பட்ட காலத்தின் மக்கள் வாழ்க்கை பேசும் இலக்கியம். 'இலக்கியம்' என்றால் அங்குக் கற்பனைதான் தாண்டவமாடும் என்ற சிந்தனையோடு எல்லா இலக்கியங்களையும் அணுகுதல் முறையாகாது. இந்தத் தவறான போக்கால்தான் இன்றளவும் சங்க இலக்கியங்கள் வரலாற்றாசிரியர்களின் நிறைவான பார்வையைப் பெறாமல் உள்ளன.

ஒரு தரவை ஒரு வரலாற்றாசிரியன் சொல்வதற்கும் ஓர் இலக்கிய ஆசிரியன் சொல்வதற்கும் வேறுபாடுகள் இருக்கும். அந்த வேறுபாடுதான் இலக்கியத்தை 'இலக்கியமாக' அடையாளப்படுத்துகிறது. மெலிதான கற்பனைப் பூச்சுகள் வரலாற்றின் மேல் படியும்போது அது இலக்கியமாகிறது. சில இலக்கியங்களில் தேவைக்கேற்ப கற்பனை இடம்பெறவில்லை என்பது இலக்கிய நுகர்ச்சியுடைய அனைவரும் அறிந்த உண்மையாகும்.

ஓர் இலக்கியம் சொல்வதை ஓர் எழுத்தாளர் எடுத்தாளும்போது அது எப்படியெல்லாம் மாறக்கூடும் என்பதற்குத் திரு. மதன் தம்முடைய இரண்டாம் மொழிவின் வழிச் சான்றாகிறார். 'பொருநராற்றுப் படையில் ஒரு புலவர், தங்கக் கோப்பையில் தொடர்ந்து ஒயின் அருந்தியதால் பெருமகிழ்ச்சி ஏற்பட்டாலும் கூடவே என் கை, கால்கள் நடுங்கி உடல் தள்ளாட ஆரம்பித்தது என்கிறார்' என்று திரு. மதன் 25.04.2007 ஆனந்த விகடன் மொழிவில் கூறியுள்ளார். அவர் சொல்லும் இந்தச் செய்தி பொருநராற்றுப்படையில் எப்படி இடம்பெற்றுள்ளது என்பதைப் பார்ப்போம்.

'போக்கில் பொலங்கலம நிறையப் பல்கால்
வாக்குபு தரத்தர வருத்தம் வீட
ஆர வுண்டு பேரஞர் போக்கிச்
செறுக்கொடு நின்ற காலை மற்றவன்
திருக்கிளர் கோயில் ஒரு சிறைத் தங்கித்
தவஞ்செய் மாக்கள் தம்முடம் பிடாஅ
ததன்பயம் எய்திய வளவை மான
ஆறுசெல் வருத்தம் அகல நீக்கி
அனந்தர நடுக்கம் அல்ல தியாவதும்
மனங்கவல் பின்றி மாழாந் தெழுந்து'

'பொன்வட்டில் நிறையுமாறு வார்த்துத் தந்தபோதெல்லாம் வழிநடை வருத்தம் போகும்படி நிறையப் பருகி, மன்னன் அரண்மனையில் உறங்குதற்கேற்ற இடத்தில் இருந்து, தவம் செய்தவர், தம்முடைய இப்பிறவி உடலுடனேயே அத்வைதத்தின் பயனைப் பெற்றாற் போன்று, வழிநடை தந்த வருத்தத்தை என்னிடமிருந்து அறவே நீக்கிய கள்ளின் களிப்பால் உண்டான மெய்நடுக்கம் அன்றி, மனக்கவலை காரணமான மெய் நடுக்கம் இன்றி நன்கு துயில்கொண்டான்' என்கிறார் புலவர்.

நெடுந்தொலைவு நடந்து வந்த துன்பம் தீரத் தரப்பட்ட பானத்தைத் தரத்தரப் பருகிய பொருநன் களைப்பும் கவலையும் நீங்கிக் களிப்படைவதாய் பாடல் அடிகள் சொல்கின்றன. பாடலில், தரப்பட்ட பானம், 'இன்னது' என்ற சுட்டல்கூட இல்லை. உரையாசிரியர்கள்தான் 'கள்' தரப்பட்டதாகப் பொருள் கொண்டுள்ளனர். கள் தருவதும், பெறுவதும் திரு. மதன் குறிப்பிட்டிருப்பது போல, சங்க காலத்தில், 'மிகச் சாதாரணமான விருந்தோம்பல்'. அப்படியிருக்க, மது குடித்த புலவர்கள் உணர்ச்சி வயப்பட இடமேது?

கரிகாலன் அரண்மனையில் வரவேற்பாளர்களால் களைப்புத் தீரத் தரப்பட்ட பானத்தை அருந்திய பொருநன், தன் வழிநடைக் களைப்பு அகன்றதாகவும் மகிழ்வு ஏற்பட்டதாகவும் கூறுகிறாரே தவிர உணர்ச்சி வயப்பட்டு அதீத கற்பனைகள் எவற்றிலும் ஆழவில்லை என்பதற்கு பொருநர் ஆற்றுப்படையே சான்று.

கரிகாலனைப் பற்றிய அருமையான தரவுகளைப் பொருநர் ஆற்றுப்படையும் பட்டினப்பாலையும் சிலப்பதிகாரமும் தரும்போது நமக்கென்ன குறை? அவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் அனைத்து வரலாற்றறிஞர்களும் கரிகாலனின் வரலாற்றை எழுதியுள்ளனர். நிலைமை இப்படியிருக்க, ஒரு வெண்பாவும் பழமொழியும் வழங்கு கதையும் கூறும் தகவல்களை மட்டும் முன்வைத்துக் கரிகாலன் வரலாற்றிற்குச் சான்றுகளே இல்லாதது போல ஒரு தோற்றத்தை ஏன் ஏற்படுத்தவேண்டும்? இவற்றைக் கரிகாலனின் வரலாற்றை எழுதியுள்ள வரலாற்றாசிரியர்கள் அனைவரும் குறிப்பிட்டுள்ளனர்.

எது வரலாற்றுச் சான்று, எது கற்பனை என்பதை வரலாற்றாசிரியர்களால் அறியமுடியும். அப்படி அறிந்திருப்பதனால்தான் சங்க கால வரலாறு தமிழ்நாட்டரசால் இரண்டு பகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது. சங்க காலச் சோழர்கள் பற்றி மிக விரிவான அளவில் திரு. இராசமாணிக்கனாரும் திரு. நீலகண்ட சாஸ்திரியாரும் எழுத முடிந்துள்ளது.

கண்முன் இருக்கும் ஆயிரக்கணக்கான சான்றுகளைக் கண்ணெடுத்தும் பாராமல், 'எந்த ஆதாரங்களை வைத்துக்கொண்டு நாம் நம் வரலாற்றை எழுதமுடியும்?' என்றும் 'தமிழ் மன்னர்களைப் பற்றிய வரலாற்றுத் தகவல்கள் கி.பி. 600 வரை நம்மிடையே இல்லை' என்றும் துணிவுடன் கூறும் திரு. மதனைப் பார்த்து நம்மால் ஆழ வருந்த மட்டுமே முடிகிறது.

தமிழ் மன்னர்களைப் பற்றிய வரலாற்றுத் தகவல்கள் கி.பி. 600 வரை நம்மிடையே இல்லை என்றால், கி.பி. 600 வரை தமிழனுக்கு வரலாறே இல்லை என்று பொருளா? அப்படியானால் சங்க இலக்கியங்கள் அனைத்தும் மதுவுக்கும் பொற்காசுகளுக்கும் உணர்ச்சி வயப்பட்ட புலவர்களின் அதீத கற்பனைகளா? கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கி.பி.ஆறாம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்தவை எனத் திரு. ஐராவதம் மகாதவன் தொகுத்து வெளியிட்டிருக்கும் 89 தமிழ் பிராமி கல்வெட்டுகளும் 21 முற்கால வட்டெழுத்துக் கல்வெட்டுகளும் விதந்துரைக்கும் வரலாற்றுத் தகவல்கள் பொய்யுரைகளா? இவற்றின் அடிப்படையில் ஐம்பது பக்க அளவில் தமிழ்நாட்டு வரலாற்றைத் திரு. மகாதேவன் அதே நூலில் எழுதியுள்ளாரே, அதுவும் உணர்ச்சி வயப்பட்ட கற்பனையா?

கி.பி. 250ல் இருந்து கி.பி 600 வரையிலான காலகட்டத்தில் வெளியிடப்பட்டதாகக் கல்வெட்டறிஞர்களால் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் பதினைந்திற்கும் மேற்பட்ட செப்பேடுகள் வழங்கும் வரலாற்றுத் தரவுகள் எல்லாமே பொய்யுரைகளா? கோச்செங்கட்சோழன் கற்பனையில் உதித்தவரா? அப்படியானால் அவரைப் பற்றிப் பாடியிருக்கும் பொய்கையார், அப்பர், சம்பந்தர், சுந்தரர் இவர்களெல்லாம் பொய்யர்களா? கோச்செங்கட்சோழனை முன்னோனாகக் குறிப்பிடும் சோழக் குடிவழி இடம்பெற்றுள்ள செப்பேடுகளெல்லாம் பொய் வெளீயீடுகளா? கோச்செங்கனான் எழுப்பியனவாய் இன்றளவும் வழிபாட்டில் உள்ள மாடக்கோயில்கள் என்னாவது?

சங்க காலச் சேர, சோழ, பாண்டிய அரசர்கள் வெளியிட்ட நூற்றுக்கணக்கான காசுகளைப் பெற்று அறிஞர் திரு. இரா.கிருஷ்ணமூர்த்தி, அளக்குடி திரு. ஆறுமுக சீதாராமன் இவர்கள் ஒளிப்படங்களோடு அமைந்த எண்ணற்ற ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளனர். இருபதுக்கும் மேற்பட்ட தரமான, ஆய்வு நோக்குடைய சங்ககாலக் காசியல் நூல்கள் வெளிவந்துள்ளன. தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை, தமிழ்நாட்டு அருங்காட்சியகத் துறை இவற்றிடமும் நடுவண் அரசின் தொல்லியல் துறையிடமும் பழங்காசுகள் உள்ளன. இவை தவிர, தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் நாணய சேகரிப்பாளர்கள் எண்ணற்றோர் சங்க காலக் காசுகளைப் பெற்றுப் பாதுகாத்து வருவதோடு கண்காட்சிகளையும் நடத்தி வருகின்றனர். இந்தக் காசுகளெல்லாம் வரலாற்றுத் தகவல்கள் அல்லாமல் வேறென்னவாக இருக்கமுடியும்?

'கி.பி. 300லிருந்து கி.பி 600 வரை தமிழ்நாட்டில் என்ன நடந்தது என்கிற தகவலே இல்லை. இதை ஒரே வார்த்தையில் களப்பிரர் ஆட்சி என்று புத்தகங்கள் சொல்லிவிட்டு அதோடு நிறுத்திக் கொள்கின்றன' என்று 25.04.2007 ஆனந்த விகடனில் திரு. மதன் குறிப்பிட்டிருக்கிறார். இப்படி ஒரே வார்த்தையில் மூன்று நூற்றாண்டு வரலாற்றை மூடிமறைத்திருக்கும் அந்த வரலாற்றுப் புத்தகங்களையும் அவற்றின் ஆசிரியர்தம் பெயர்களையும் திரு. மதன் வெளியிட்டால், தமிழ்நாட்டு வரலாற்றை அறிய மறுக்கும் நூலாசிரியர்களை நாமும் அடையாளம் காணுவதோடு உண்மை வரலாற்றை அவர்கள் உணருமாறு செய்யலாம்.

திரு. எம். அருணாசலம், சென்னைப் பல்கலைக் கழகத் தாளிகையில், 'பாண்டிய நாட்டில் களப்பிரர்கள்' என்ற தலைப்பில் ஆழமான ஆய்வுக் கட்டுரை ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். இது பின்னாளில் நூலாகவும் வந்துள்ளது. திரு. கே.கே.பிள்ளை தம்முடைய, 'தமிழக வரலாறும் பண்பாடும்' என்னும் நூலில் இக்காலகட்ட வரலாற்றைப் பல பக்கங்களில் எழுதியுள்ளார். திருச்சிராப்பள்ளி சீதாலட்சுமி இராமசாமி கல்லூரியின் வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியை கோ.வேணிதேவி தம்முடைய முனைவர் பட்ட ஆய்வாக கி.பி. 300க்கும் கி.பி.600க்கும் இடைப்பட்ட தமிழ்நாட்டு வரலாற்றையே எடுத்துக்கொண்டு, அரசியல், சமுதாயம், பண்பாடு எனும் மூன்று பெரும் தலைப்புகளின் கீழ் 300 பக்கங்களுக்கும் அதிக அளவிலான ஆய்வேட்டை வழங்கி முனைவர் பட்டம் பெற்றுள்ளார். களப்பிரர்களை அடையாளப்படுத்தும் கல்வெட்டுகளைப் பற்றி இந்திய கல்வெட்டாய்வுக் கழகத்தின் ஆய்வுத் தொகுப்பொன்றில் இரண்டு கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட வரலாற்று நூல்களை மேலோட்டமாகப் படித்துவிட்டு, நாளும் பொழுதும் நூற்றுக்கணக்கான ஆய்வாளர்கள் காடு, மேடு பாராமல் தங்கள் உயிரைப் பணயம் வைத்துக் கண்டறிந்து வெளிப்படுத்தியிருக்கும் ஆயிரக்கணக்கான கல்வெட்டுகளையும் அகழ்வாய்வுப் பொருட்களையும் அமைப்புகளையும் காசுகளையும் அறிந்து கொள்ளாமலே, அவை வெளிப்படுத்தியிருக்கும் வரலாற்றுத் தரவுகளைத் தெரிந்துகொள்ளாமல், தமிழ்நாட்டு வரலாற்றைப் பற்றிக் கருத்துரைப்பது எந்த வகையில் நியாயம்?

திரு. வெ.இறையன்புவின் கேள்வியையும் திரு. ஆர்.ஜெ.மாயவநாதனின் கேள்வியையும் திரு. மதன் மிக மேலோட்டமாகவே அணுகியிருப்பதை, அவருடைய இரண்டாம் மொழிவிலிள்ள பிழையான சுட்டல்கள் தெளிவாக்குகின்றன.

1. திருவாலங்காடு, கரந்தைச் செப்பேடுகள் இவை இரண்டும் முதலாம் இராஜேந்திர சோழனால் வழங்கப்பட்டவை. திரு. மதன் குறித்திருப்பது போல இராஜராஜசோழனால் அன்று.

2. பெரிய கோயிலில் (தஞ்சாவூர் இராஜராஜீசுவரம்) இதுநாள் வரையிலும் திரு. மதன் சுட்டியிருப்பது போலச் சோழர் காலச் செப்பேடுகள் ஏதும் கிடைத்தில.

3. இக்கோயிலில் இருந்து படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகளையே திரு. மதன் செப்பேடுகளாகக் கருதி எழுதியிருக்கிறார் என்றால், இவற்றில், 'கோயில் பொருளாதாரம் நிதி நிலைமை பற்றி மட்டுமே நுணுக்கமான தகவல்கள் உண்டு' என அவர் தெரிவித்திருக்கும் கருத்து பிழையானது.

4. தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்தில் இருந்து படியெடுக்கப்பட்ட பல கல்வெட்டுகளுள் ஒன்றான தளிச்சேரிக் கல்வெட்டு பற்றி மட்டும் 67 பக்கங்களில் ஓர் ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டு நூலாகவும் வந்துள்ளது. இக்கட்டுரை முதலாம் இராஜராஜர் காலத்தில் தமிழ்நாட்டில் இருந்த 102 தளிச்சேரிகளைச் சுட்டுவதுடன் நானூறு ஆடல் பெண்களின் பெயர்களையும் அவர்தம் வாழ்க்கை வசதிகளையும் தெரிவிக்கிறது. அத்துடன், இக்கோயிலில் பணியாற்றிய 36 வகையான தொழில் பிரிவுகளைச் சேர்ந்த 217 தொழிலாளர்களைப் பற்றியும் அக்காலத்திலிருந்த இசைக்கருவிகள், கலைஞர், தொழிலர் ஊதியம், அவர்கள் தொழில் குறித்த நடைமுறைச் சட்டங்கள் பற்றியும் பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறது. சோழர் காலத்தில் இருந்த 63 ஊர்களின் பெயர்களும் 49 கோயில்களின் பெயர்களும் இக்கல்வெட்டால் அறியப்படுகின்றன. ஒரு கல்வெட்டே இவ்வளவு வரலாற்றுத் தரவுகளைத் தரமுடியும் என்றால், தமிழ்நாட்டில் உள்ள 50,000க்கும் மேற்பட்ட தமிழக கல்வெட்டுகள் எத்தகு வரலாற்றை இந்த மண்ணின் மைந்தர்களுக்கு வழங்க முடியும் என்பதை நினைத்துப் பாருங்கள்!

தமிழ்நாட்டு வரலாறு, திரு. மதன் உட்படப் பலரும் நினைப்பது போல சான்றுகளில்லாமல் தவிக்கவில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆய்வாளர்களும் பல வெளிநாடுகளைச் சேர்ந்த ஆர்வமும் அறிவாற்றலும் மிக்க ஆய்வாளர்களும் தங்கள் உழைப்பாலும் உயர் சிந்தனைகளாலும் தமிழ்நாட்டு வரலாற்றைத் தகுதிசான்ற ஆதாரங்களின் அடிப்படையில் உருவாக்கித் தந்திருப்பதுடன், அதற்கெனவே தொடர்ந்து உழைத்துக்கொண்டும் இருக்கிறார்கள். அந்த உழைப்பையும் உண்மைத் தன்மையையும், தமிழராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் அறியவேண்டும், மதிக்கவேண்டும், போற்றவேண்டும். நமக்காகவும் எதிர்வரும் தலைமுறைகளுக்காகவும் எத்தனையோ துன்பங்களுக்கிடையில் வரலாற்றைத் தேடித் தொகுக்கும் அந்த இனிய உள்ளங்களை, தமிழனுக்கு வரலாறே இல்லை என்று சொல்லி எள்ளி நகையாடுவதும் புண்படுத்துவதும் அருள்கூர்ந்து இனி வேண்டாம்.

உண்மைகளை உண்மைகளாகப் பாருங்கள். சார்தல் வேண்டாம். காய்தல், உவத்தல் வேண்டாம். யார் எழுதுகிறார்கள் என்பதினும் என்ன எழுதுகிறார்கள் என்பதைப் பார்த்து உண்மைகளைத் தேடுங்கள். வரலாறு எங்கோ இல்லை! இல்லாமலும் இல்லை! அது நம்மைச் சூழ நம்மிடமே உள்ளது. அதனால்தான் அதன் அடையாளம்கூட நமக்குத் தெரியாமல் போகிறது.

அன்புடன்,
இரா.கலைக்கோவன்


நன்றி.வரலாறு.கொம்

Read More...

ஆதித்தகரிகாலனை கொன்றது யார்?





இதோ உங்களுக்காக ஒரு தகவல். நீங்கள்அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் படித்திருக்கிறீர்களா?

படித்திருந்தால் நான் மேலே சொல்லப் போவது உங்களுக்கு நன்றாக புரியும்.

இல்லையென்றாலும் பரவாயில்லை.

இத்தகவல் சுவாரசியமாகவே இருக்கும். இன்றைக்குச் சுமார் ஆயிரத்து நாற்பது வருடங்களுக்கு முன்னால் சுந்தர சோழன் என்ற மன்னன் ஆட்சி புரிந்து கொண்டிருந்தான்.

அவருக்கு மூன்று குழந்தைகள். மூத்தவன் ஆதித்த கரிகாலன், அவன் பட்டத்து இளவரசன்.
அவனுடைய தங்கை குந்தவை, இளையவன் அருமொழி. ஆதித்தகரிகாலன் பாண்டியர்களுக்கு எதிரான போரில் ஈடுபட்டு, வீரபாண்டியன் தலையைக்கொய்து அவனைக் கொன்று விடுகிறான்.

பிறகு சதிகாரர்கள் சிலர் ஆதித்தகரிகாலனைச் சூழ்ச்சியால் கொன்றுவிடுகிறார்கள்.

சுந்தரசோழரின் ஆட்சிக்குப்பிறகு, அவரின் பெரிய தந்தையின் மகனான உத்தம சோழன் ஆட்சிக்கு வருகிறான்.
அதற்கு பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு, ஆதித்த கரிகாலனின் தம்பி அருமொழி, இராஜராஜசோழன் என்ற பெயரில் அரியணையில் அமர்கிறான்.

அதாங்க தஞ்சாவூர் பெரிய கோயிலான இராஜராஜீசுவரம் கோயிலைக் கட்டிய இராஜராஜ சோழன்தான்.

இராஜராஜனின் 2ம் ஆட்சியாண்டில், ஆதித்த கரிகாலனைக் கொலை செய்த துரோகிகளான ரவிதாஸன், சோமன் சாம்பவன் மற்றும் சிலர், அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது கதையல்ல நிஜம்.

காட்டுமன்னார்கோயில் என்று இன்று வழங்கப்படும் உடையார்குடி என்ற இடத்தில் உள்ள கோயிலின் பின் சுவரில் இந்த விஷயம் பொறிக்கப்பட்டிருக்கிறது.

இதில் கவனிக்கவேண்டிய விஷயங்கள் பல உள்ளன.

ஆதித்த கரிகாலன் கொலையுண்ட பிறகு உத்தம சோழனின் ஆட்சி வருகிறது.

அப்பொழுதெல்லாம் கொலையுண்டவர்கள் பிடிபடாமல், 16 வருடங்கள் கழித்து, இராஜராஜன் ஆட்சிக்கு வந்த பிறகுதான் தண்டிக்கப்படுகிறார்கள்.

அதனால், உத்தம சோழனுக்கும் இந்தச் சதியில் பங்கிருக்கலாம் என்ற சந்தேகம் வருகிறது.

கல்வெட்டில் துரோகிகள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கொலை செய்தவர்கள் பாண்டியர்களோ இல்லை சேரர்களோ என்றால் எதிரிகள் என்று தானே வர வேண்டும்? துரோகிகள் என்று யாரைக் குறிப்பிடுவார்கள்?

கூடவேஇருந்து குழி பறிப்பவர்களைத்தானே? இரவிதாஸனும், அவன் கூட்டாளிகளும் சோழ நாட்டிலேயே மிக உயர்ந்த பதவிகளில் இருந்தவர்கள் தான். பொன்னியின் செல்வனில் கல்கி இரவிதாஸன் கூட்டாளிகளை "பாண்டிய ஆபத்துதவிகள்" என்று குறிப்பிட்டது கற்பனை என்றாலும், அப்படிப்பட்ட பெயருடன் இருந்தவர்கள் சோழ நாட்டில் இருந்ததும், அவர்கள் ஆதித்தனைக் கொலை செய்ததும் உண்மை செய்திகளே.

கல்கிக்கும் வரலாற்றிலும், கல்வெட்டுகளிலும் ஆர்வம் இல்லாதிருந்தால், பொன்னியின் செல்வன் போன்றதொரு காவியம் இன்று நமக்குக் கிடைத்திருக்குமா?


வரவணையான் பதிவு பார்த்தபின் அந்தப்பதிவில் உள்ள கரிகாலசோழன் பற்றிய ஆவல் அதிகமாகி
இணையத்தில் தேடியபோது வரலாறு.கொம்மில் மா. இலாவண்யா வால் எழுதப்பட்டதை பகிர்கிறேன்.

Read More...

Tuesday, October 09, 2007

செல்லாவிற்கு திருப்பூர் பனியன் வழங்கும் திட்டம்.

இனமானத் தாரகை தமிழச்சியை தாக்கிய டவுசர்களுக்கு செல்லாவின் வீடியோ கண்டனப் படம்!


post signature






அண்மையில் துருத்தி தமிழச்சி (சொல்லடை அறிமுகம் கொழுவி)பாதுகாப்பு கழகம் சார்பில் பேன் செல்லா வழங்கிய (பேன் சொல்லடை அறிமுகம் பெயரிலி) ஓளிநாடாவில் வலைப்பட்டறை செயல்வீரர் ஒசை செல்லா அவர்கள் பாதிக்குமேல் ஆடையில்லாமல் நின்றது வலைப்பதிவர்களை மிகப் பாதித்தது.

எனவே வலைப்பதிவர் சார்பில் அவருக்கு திருப்பூர் பனியன் வழங்கும் திட்டமொன்றை மேற்கொள்ளுவதாக இருக்கிறோம்.

எனவே என்னைப்போன்ற கலகக் கண்மணிகள் இதனை என்னுடன் சேர்ந்து முன்னெடுத்து செல்லவேண்டும்.

அதனுடன் கொசுறாக.

அவருக்கு கராட்டி பயில கராட்டி பயிலுமிடத்தில் சண்டை செய்யாவிடினும் காட்டா வாவது ஒழுங்காக பழக வசதி செய்து கொடுக்கப்படும்.அதிலும் விசேடமாக

காராட்டியோ காட்டோவோ செய்யும்போது காலை சரியாக நிலத்தில் உறுதி எடுத்து நிற்கும்நிலை.

முஸ்டியை எவ்வாறு மடிப்பது

நெஞ்சுக்குநேரே எவ்வாறு விறைப்பாக பஞ்சு் பண்ணுவது

வாழைவெட்டுக்கும் கராட்டிவெட்டுக்கும் உள்ள வித்தியாசத்தை காண்பிப்பது

போன்ற துறைகளில் பிரத்தியேகபயிற்சிக்கும் ஒழுங்கு பண்ணப்படும்.

அதனைவிட தனித்து நேராக நிற்கும்போது காரில் சாயாமல் கார் துணையில்லாமல் எவ்வாறு
நிற்பது என தண்டு வட பயிற்சியும் அளிக்கப்படும்.






இடையிடையே ரென்சனாகாமல் இருக்க ரவிசங்கர் லேகியமும் வழங்கப்படும்.


இன்னமும் 24 மணித்தியாலத்திற்குள் ஓசையவர்கள் பனியன் போடாவிட்டால் எமது தோழர்கள் பனியன் வழங்கும் போராட்டத்தில் குதிக்கவிருக்கிறார்கள்.

எனவே உங்கள் வீட்டு கூரையை பிரித்து
தோழர்கள் குதிக்க வசதி செய்ய கேட்டுகொள்ளப்பபடுகிறீர்கள்


அடுத்தமுறை நடைபெறவிருக்கும் வலைப்பதிவர் பட்டறையில் வலைப்பதிவர் முன்னேற்றம்
என்ற நிகழ்ச்சிநிரலில் பனியன் வழங்குதல் பற்றி ஒரு சிறு குறிப்பு ஒன்றை 45 நிமிடத்திற்கு மேற்பட வழங்க நீங்கள் வழி வகை செய்து தரவேண்டும்.


லேபிள்:- பெரியார் திருப்பூர் பட்டறை கராத்தே பொப்மார்லி கஞ்சா

Read More...

Monday, October 08, 2007

வலைஞர் செந்தமிழார் ஓய்வு பெறவேண்டும்-

கொடுமை கொடுமை என கொரியாக்கு ஓடினா கிருமி கலைச்சு கலைச்சு கடிச்சுதாம்.

அந்த பழமொழி போல நமது மொக்க தலைவர் வலைஞர் செந்தழலார் பெங்களூரில் மோட்டார் சைக்கிள் போராட்டத்தில் காலில் நாய் கடித்து விழுப்புண்பெற்றதோடு மட்டுமல்ல அதனுடன் சளைக்காமல் கொரியாவிற்கும் சென்று அங்கும் கொரிய ம(க்)கள் மனம் கொள்ளை கொண்டு அங்கு வலைவரித்த ஆதிக்க கிருமிகளுடன் போராடி வென்றுமிருக்கிறார்.

திராவிடர்கள் மகிழவேண்டிய ஒரு செய்திதான்

எனினும்

செந்தழலார் உடல்நலன் முதுகு, முள்ளந்தண்டு நலனை கருத்தில் கொண்டு அவர் கும்மி, கரகாட்டம், காவடி போன்ற பதிவுகளை தவிர்த்து வலைப்பதிவிலிருந்த ஓய்வு பெறவேண்டும் என அன்பாக கேட்டுக்கொ(ல்)ள்கிறேன்.


அவர் அண்மையில் பாத்றூம் போக முக்கிய காரணமாகவிருந்த புகைப்படம் ஒன்றினை நான் தற்செயலாக பார்க்க நேர்ந்தது. அதிலிருந்து அவரைப்பற்றிய
பதிவு ஒன்றை போடுவது என்று முடிவு செய்திருந்தேன்.

மாவீரன் செந்தழலாரை ஓய்வு பெறு என சொல்ல நீ யார் எனக் கேட்கும் ,பின்னூட்டமிடும் நண்பர்களுக்கு ஒரு வார்த்தை..

புலி கொன்று புலிப்பல்லை சொந்தமாக்கிய புலியேறு செந்தழலாரும்(தகவல் லக்கிலுக் பதிவு)
ஆயாவின் பொருள் காணாமல்போனதற்காக புலிகளை சந்தேகித்து வீரப்பதிவுபோட்ட வீரசோழன் செந்தழலாரும்

போலிக்கே ஆப்பு வைத்த செந்தழலாரும்

வந்தோரை வாழவைக்கும் தமிழகத்திலிருந்து விருந்தோம்பலுக்கு சிறப்பாக நீ வா நான் என் வீட்டு இளநீர் தருகிறேன் என பதிவர் வெற்றிக்கு அழைப்பு விடுத்த செந்தழாலாழனுமாகிய

மறத்தமிழனை

ஓய்வு பெறு என்கிறேன். ஏன்?

என் சட்டைக்குள் பூணூலா ஒளிந்திருக்கிறது?

அல்லது ஏதாவது நீள ஆழ வகுப்பா எடுக்கிறேன்?

ஏன்?

என்னை மிகவும் யோசிக்க சிந்திக்க வைத்த அவரது பாத்றூம் போக முக்கிய காரணமாகவிருந்த புகைப்படம்

இந்தப்படம்

இந்தப்படத்தை உங்களுக்கும் பார்வைக்கு வைக்கிறேன்.

இதனை உன்னிப்பாக கவனித்தீர்களானால்

துப்பாக்கி பிடிக்கும் கைகள் நடுங்குவதை காண்பீர்கள்.

நடுங்கும் கரங்களுக்கு ஓய்வு தேவை.

உங்கள் வீட்டில் இப்படி ஒருவர் நடுங்கும் கைகளுடன் துப்பாக்கி பிடிக்க விடுவீர்களா?

அண்மையில் 1954 ல் எம்ஜிஆர் கை நடுங்க பிடித்தாரே..அப்போது எங்கே போனீர்கள் என பதிவுகள் போடவேண்டாம்.

எத்தனை பேர் நலமில்லாது மூளை கலக்கத்துடன் (உதாரணம் தீவு)பதிவுபோடுகிறார்கள். அவர்களை ஓய்வுபெறு என நீ ஏன் கேட்கவில்லை என கலககண்மணிகள் சீறி பதிவு போடாதீர்கள்.

தீவு தாங்காது.

எனவே வலைஞர் செந்தழலார் சிறிது காலமாவது நிம்மதியாக ஓய்வு பெறுங்கள்.

சுவர் இருந்தால்தான் சித்திரம்.

இனி அந்த சிறப்புமிகு பகைப்படம்.

இதனை உன்னிப்பாக கவனித்தீர்களானால் துப்பாக்கி பிடிக்கும் கைகள் நடுங்குவதை காண்பீர்கள்.






லேபிள்:- கலைஞர் ஞானி விகடன் ஆயா புலி கொரியா

Read More...