Sunday, February 17, 2008

சிறீலங்காவிற்கு கோமணம் வேண்டுமா?கழட்டித்தர நாங்கள் தயார் -இந்தியா





விடியக்காலையில் அதுவும் ஞாயிற்றுக்கிழமை கொஞ்சம் மனப்பிறள்வோ அல்லது மன அழுத்தமோ இல்லாமல் சற்று நிம்மதியாக இருப்போம் என நினைத்து இருந்துவிட்டு கணனியைப்போட்டால் இன்றைய நாளுக்கான தீனி பரலோகத்திலிருந்து செய்தி ருபத்தில் வந்தது.

இனி வழக்கம்போல் விடிந்ததுமாதிரித்தான் !!


நினைப்பது எல்லாம் வலைப்பதிவில் (ஒரு சில காரணங்களுக்காக)எழுத முடியாவிட்டாலும் பெருமூச்சையாவது விடலாம்தானே..அதுதான் இந்தப்பதிவு.


இனி செய்தி



தமிழ்நாட்டின் கூடங்குளத்திலிருந்து மின்சாரத்தை வழங்குகின்றோம்: சிறிலங்காவுக்கு இந்தியா யோசனை
[சனிக்கிழமை, 16 பெப்ரவரி 2008, 06:32 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]
கடும் மின்சார நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ள சிறிலங்காவுக்கு மின்சாரத்தை தமிழ்நாட்டிலிருந்து வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் முன்வந்துள்ளது.

சிறிலங்காவின் மின்சார பிரச்சினைக்கு தீர்வாக தற்பொழுது நிர்மாணிக்கப்பட்டு வரும் மின் விநியோக திட்டங்கள் பூர்த்தியாவதற்கு 2012 ஆம் ஆண்டுவரை காத்திருக்க வேண்டும்.

இந்நிலையில் இந்திய அரசாங்கம் ஓராண்டிற்குள் சிறிலங்காவுக்குத் தேவையான முழுமையான மின்சாரத்தை வழங்க தயாராக இருப்பதாக இந்தியத் தரப்பிலிருந்து சிறிலங்காவுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் கூடங்குளம் அனல் மின்நிலையத்திலிருந்து தனுஷ்கோடி தலைமன்னார் ஊடாக இந்த மின்விநியோக மார்க்கத்தை அமைப்பதற்கு இந்திய மின்சக்தி நிபுணர்கள் திட்டமிட்டுள்ளனர்.

அந்த மின்விநியோக வழியை நிறுவிய பின்னர் மன்னாரில் மின்விநியோகத்திற்கென சிறப்பு விநியோக நிலையத்தை சிறிலங்கா அரசாங்கம் நிர்மாணிக்க வேண்டும்.

இந்த யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டால் ஒரு வருடத்திற்குள் சிறிலங்காவுக்குத் தேவையான அதிகபட்ச மின்சாரத்தை வழங்க முடியும் என்று இந்தியா தெரிவித்துள்ளது.

மின்சக்தி அமைச்சின் நிபுணர்களுடன் இது சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்காக அடுத்த சில நாட்களில் இந்திய மின்சக்தி வல்லுநர்கள் 10 பேர் பொழும்பு செல்கின்றனர்.

சிறிலங்கா அரசாங்க அறிக்கையின் படி மொத்த மக்கள் தொகையில் 75 வீதமானவர்களுக்கு மட்டுமே தற்பொழுது மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தியாவின் யோசனைக்கமைய நாட்டில் மின்சாரம் தேவைப்படும் அனைவருக்கும் மின் விநியோகத்தினை வழங்க முடியும் என்று இந்திய வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.


செய்தி மூலம் புதினம் கொம்



லேபிள்:- ஞாயிற்றுக்கிழமை ரென்சன்.

6 comments:

Anonymous said...

கோமணத்தைக்கொடுத்து விட்டு ஆடையைக்கழட்ட கேடு கெட்ட இந்தியா காத்திருக்கின்றது என்பதை சிங்கள மடையன் புரிந்து கொள்ளவே மாட்டான்...

theevu said...

அனானி

இந்தளவு பொலிட்டிக் இதிலிருக்கா?

சிங்களவனெல்லாம் மோடையானக இருந்த காலம் மலையேறிவிட்டது.

சிங்களவன் குதிரைக்கு புல்லு காட்டுவது போல இந்தியாவிற்கு சீனாவை காட்டியே பிழைத்துக்கொள்வான்.

Anonymous said...

கோமனம் இருக்கரவன் கழட்டி கொடுபான். பூனூல் மட்டு இருக்கர அம்மன ஆன்ண்டி எத கழட்டி கொடுபான்

Anonymous said...

உவையள் கேபிள் இழுத்து முடிய மன்னாரைப் பெடியள் பிடிச்சுப் போடுவாங்கள் எண்டுதான் நினைக்கிறன். சிறிலங்கா இராணுவத்தில அவ்வளவு நம்பிக்கை வைச்சோ இந்தியா உதைச் செய்யுது?

Anonymous said...

தீவு, ஏன் இந்த கொலைவெறி...!!!

theevu said...

//செந்தழல் ரவி said...

தீவு, ஏன் இந்த கொலைவெறி...!!!//

இதுகொலை வெறியல்ல..ஊமைக்கோபம்!!

ஊமைக் கோபம் பார்த்திருக்கிறீா்களா?