Wednesday, February 11, 2009

காங்கிரசுக்கு இனி ஆப்பு! கலைஞர் முதுகெலும்பு ஆப்பு ரேஸன் சக்ஸஸ்!!




ஈழத்தமிழர் பிரச்சனையில் மிக சிக்கலுக்குரியதாகவிருந்த பலராலும் விமர்சிக்கப்பட்ட
கலைஞரின் முதுகெலும்பு பிரச்சனை பல நிபுணத்துவமிக்க டாக்டர் குழுவினால்
ஆப்பு ரேஸன் செய்யப்பட்டு மீண்டும் நாம் எதிர்பார்திருந்த அந்த நாள் கலைஞர் கல்லக்குடி(டால்மியாபுர) போராட்ட வீரியுமுள்ள தமிழன் எமக்கு மீண்டும் கிடைத்துள்ளார்.

நன்றி முதுகெலும்பு நிபுணததுவர்களே

லேபிள்:-யானை தன் பலம் தானறியா

Read More...

Monday, February 02, 2009

முதுகு வலியிலிருந்து அவர் தப்பிக்க




இதற்குமுக்கிய காரணங்களாக திராவிட பரம்பரை அலகு காரணமாக சொல்லப்பட்டாலும் கலிபோர்ணியா பல்கலைகழக இறுதி ஆராய்ச்சி முடிவுகளின் படி இந்தியாவில் தமிழ்நாட்டிலேயே இந்த நோய்காரணிகளை கொண்டோர் அதிகம் பேர் வாழ்வதாக சொல்லப்படுகிறது.

முதலாவது இந்த முதுகு வலியை தவிர்ப்பதற்கு இதன் அடிப்படைக்காரணங்கள் என்னவென்று முதலில் தெரிந்துகொள்ளவேண்டும்.


முக்கிய காரணிகளாக சிலவற்றை பட்டியலிட்டுள்ளோம்.

1.முதுகுவலியால் அவதிப்படும் இன்னொருவர்(பெண்ணாககூட இருக்கலாம்) அடிக்கடி கொடுக்கும் பேதி மருந்தால் வருவது

2.இக்கட்டான சூழ்நிலையில் இருதலைக்கொள்ளி நிலையில் சில பல காரணங்களுக்காக சிலரை தமது கட்சியில் வேண்டா வெறுப்பாக அரவணைக்கவேண்டிய சூழ்நிலை வரும்போது வருவது

3.மக்களுக்கிடையில் ஏதோ காரணத்தால் பிரபலமாகவிருந்து அது தன்னிலை சறுக்குகையில் இறங்குமுகமாக மாறும்போது

4.தன் பலம் தனக்கு தெரியாது டெல்லி குளிரில் வேட்டியுடன் அலைவதால்

5.இந்தா வாறன் இந்தா உடனடியா போறன் என மற்றவர்களால் ஏமாற்றப்படுவதால்

6. அரசியல் கோமாளியாக சரத்பொன்சேகா போன்ற வீர தீர புருசர்களால் பரிகாசம் செய்யப்படுவதால்

7. சிலோனுக்கு வாறீயா என நக்கலாக ராஜபக்ச அழைத்ததால்

5. பதவி எனக்கு சால்வை வேட்டி கோமணம் என அடுக்குமொழி பேசியதால்


இப்படி அல்லது இதை விட மேலும் பல தொலைக்காட்சி குழும காரணங்களால் கூட வரக்கூடும்


இதற்கான ஒரே நிவாரணம் ஈழம் சித்திலெப்பை லேகியம்!.இன்றே வாங்கி உடனடியாக பாவியுங்கள்.

லேகியம் பாவிக்கும்போது கண்டிப்பாக காங்கிரஸ் உறவுமுறை கண்டிப்பாக இருக்குகூடாது.

உடனடி பலன் நிச்சயம்!!

லேபிள்:- முட்டாள் முத்துக்குமாரா ஏன்டா உனக்கு முதுகுவலி வரல்லை? :(

Read More...

Monday, January 26, 2009

தமிழக இந்திய அரசியல்வாதிகளுக்கான இழவுப்பத்திரிகை




அன்புக்குரிய எமது தொப்புள்கொடி உறவுகளின் தலைவர்களே

பல காலம் இம்சைப்பட்டு நோய்வாய்ப்பட்டு உங்களுக்கு பலமுறை சொல்லியனுப்பியும் உங்களை பார்க்க கடைசிவரை பார்த்திருந்து இன்று மீளா தூக்கத்தில் ஆழ்ந்த எம் உடன் பிறப்புக்களின் மரண செய்தியை இந்த இழவுப்பத்திரிகையை வைத்து எம்முறவுகளின் துயரில் பங்கு கொள்ள உரிமையடன் அழைக்கிறோம்.

தாங்களும் தங்கள் சமூகங்களும் முடியுமானால் உடனடியாக எமது துயரில் வந்து பங்கு கொள்ள அழைக்கிறோம்.

உங்களால் இன்னோரென்ன காரணங்களால் வரமுடியாத நிலமையாயின் முதலே சொல்லியனுப்புக.பிப்ரவரி 15 தான் வரமுடியுமாயின் நேரடியாக இடுகாட்டுக்கு வந்து எமது சொந்தங்களை தரிசித்து செல்லவும்.

நேரடியாக எல்லோரையும் தனிப்பட சந்திக்கமுடியாத காரணத்தினால் இந்த பத்திரிகையின் ஒரு நகலை திருமதி சோனியா அம்மையாருக்கும் அனுப்பிவிடுங்கள்.

இதய ஆப்ரேசன் காரணைமாக மருத்துவமனையில் தங்கியிருக்கும் திரு மன்மோகன் சிங்கிற்கு எமது உறவுகளின் இழப்பு தகவலை தயவு செய்து சொல்லவேண்டாம்.அது அவரது உடல் நிலையை மேலும் மோசமாக்ககூடும்.

இப்படிக்கு
தமிழ்ஈழ தேசம்
மற்றும்
இலங்கைதமிழர்

லேபிள்:- தொப்புள்கொடியும் அறுநாக்கொடியும்.

Read More...

Thursday, January 15, 2009

மேனன் இலங்கை சுற்றுலாவில் பார்க்கவேண்டிய இடங்கள்.

"எதற்காக இவ்வளவு பெரிய கட்டிடங்களைக் கட்டினார்கள்?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.

அவர் சுட்டிக்காட்டிய இடத்தில் ஒரு பெரிய குன்று போன்ற தாகபா ஸ்தூபம் நின்றது. புத்தர் பெருமானுடைய திருமேனியின் துகளை அடியில் வைத்து எழுப்பிய ஸ்தூபங்களாதலால் அவை 'தாது கர்ப்பம்' என்று அழைக்கப்பட்டன. தாது கர்ப்பம் என்னும் பெயர்தான் பின்னர் 'தாகபா' ஆயிற்று.

"எதற்காக இவ்வளவு பெரிய கட்டிடங்களைக் கட்டினார்கள்?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.

ஆழ்வார்க்கடியான் சற்று நிதானித்துவிட்டு

"பின்னர் ஒரு காலத்தில் மன்னராட்சி இல்லாத காலத்தில் போர்நிறுத்தம் செய்ய என வருபவர்களை ஈழத்து அரசு இதுபோன்று பழைய காட்சிகளை காட்டி மகிழ்விக்க " என கூறினான்.

மேலும் விபரங்களுக்கு இலங்கை உல்லாச பயணத்துறை

லேபிள்:-பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தல்




Read More...

Wednesday, January 14, 2009

Read More...

Thursday, October 30, 2008

ஐயா சுப்பிரமணிய சுவாமி உங்களுக்கும் ஒருத்தன் சவால் விடுறான்


Fein challenges Dr.Swamy for debate on Sri Lanka Genocide denial

Following Tamil Genocide denial by Dr. Subramanian Swamy in the Press, Bruce Fein, attorney for Tamils Against Genocide (TAG), has challenged Dr. Swamy to a public debate in a format of his choice to defend his position. Dr. Swamy is the co-founder of India's Janata party and a former Indian Union Minister for Commerce Law and Justice.

The challenge has been forwarded to Dr Swamy in fax, and in express mail, and TAG has contacted BBC asking if BBC is interested in hosting the debate if Dr Swamy accepts the challenge. Fein told TamilCanadian that Dr Swamy can contact him, or to TAG's e-mail (TAGdesk@gmail.com) in response to the letter published below.

Fein told TamilCanadian that he awaits Dr Swamy's acceptance of this challenge by contacting him directly, through TAG e-mail (TAGdesk@gmail.com) as in the attached letter or through other private channels that had initiated and publicized this challenge.

Bruce Fein is currently completing a model Indictment document charging Gotabhaya Rajapakse, Lt.Gen.Sarath Fonseka, and Basil Rajapakse for the egragious crime of genocide of Tamils in Sri Lanka, for submission to the U.S. Dept. of Justice.

Fein also said that in a parallel effort to begin in early 2009, two Sri Lankan plaintiffs will bring a civil suits under the U.S Torture Victims Protection Act (TVPA), 106 Stat. 73 (1992), on the same defendants, in the U.S.’s 9th Circuit.

Read More...

Tuesday, October 28, 2008

கொழும்பிலும் மன்னாரிலும் விடுதலைப் புலிகளின் வானூர்திகள் குண்டுத்தாக்குதல்-செய்தி

கொழும்பிலும் மன்னாரிலும் விடுதலைப் புலிகளின் வானூர்திகள் குண்டுத்தாக்குதல்

Read More...

Friday, October 24, 2008

மகாத்மாவை கோட்சே கொலை செய்தமையை கண்டித்து மாபெரும் கண்டன ஊர்வலம்.

January 30, 1948 எமது அகிம்சை வழியில் சுதந்திரத்திற்கு வித்திட்ட மகாத்மா காந்தியை கோட்சே என்னும் கொள்கைவாதி சுட்டு கொன்றான்.இதனை கண்டித்து
மாபெரும் கண்டனப்பேரணி ஒன்று மெரினா பீச் காந்தி சிலையருகே நாளை (2008)நடாத்தப்படவிருக்கிறது.அனைத்து வலைப்பதிவர்களும் கலந்து கொள்வீர்.

லேபிள்:- சீமான் அமீர் கைது, விலாங்குமீன், டால்மியாபுர வீரன் கல்லக்குடி கலைஞர்.

Read More...

Tuesday, October 14, 2008

2 நாளில் கிளிநொச்சி 2 வாரததில் யுத்தநிறுத்தம்!!





ஏதாவது புரிகிறதா?48 மணித்தியாலத்தில் கிளிநொச்சி எனறு சொல்லி 10 நாட்களுக்கு மேலாகிவிட்டது.ஒன்றையும் இலங்கை அரசாங்கம் புடுங்கியதாகத் தெரியவில்லை.

இப்பொழுது 2 வாரங்களுக்குள் இலங்கை யுத்த நிறுத்தம் செய்யவேண்டும் இல்லையேல் என ஒரு தீர்மானம் தமிழக கட்சிகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இப்படி எத்தனையோ பார்த்துட்டோம் .இதை பார்க்கமுடியாதா என்ன?

லேபிள்:-குருவி,காகம்,நரி,புலி

"மீறப்படுவன எவரது உரிமைகள் என்பதும் மீறுவோர் எவர் என்பதுமே மீறப்படுபவை மனித உரிமைகளா என்பதை உலகம் தீர்மானிக்கும்" -பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள்-



Read More...

Monday, October 06, 2008

பதிவர் சந்திப்புக்கு வருக வருக சாரு சாரே!!தந்தி அடிப்போம் வாரீகளா?



புதிதாக ஒருவருக்கு எழுத்துலக சூப்பர் ஸ்டார் பதவி லக்கியால்
வழங்கப்பட்டுள்ளது. சுஜாதாவிற்கு இருந்தபோதும் இறந்தபோதும் கிடைத்த கெளரவம் இன்னொரு எழுத்தாளருக்கு நான் வாழும் நூற்றாண்டில் கிடைக்குமா என்பது சந்தேகமே..

லக்கி சாருவிற்கு வழங்கிய விருது பற்றிய தனது கருத்தை மீளாய்வு செய்தல் வேண்டும்.

நிற்க

இனி முன்கதைச்சுருக்கம்


""லக்கிலுக்""
//

//10:44 AM me: வணக்கம் சார் :-)
10:46 AM Charu: yes tell me
me: இணையத்தில் எழுதும் வலைப்பதிவர்கள் அவ்வப்பொது சந்திக்கிறார்கள்.
இப்போது ஒவ்வொரு சந்திப்பிலும் நீங்கள் தான் ஹாட் டாபிக் :-)
நாளை கூட ஒரு சந்திப்பு சென்னையில் நடக்கிறது.
ஓய்வாக இருந்தால் வாருங்கள்!
10:47 AM http://muralikkannan.blogspot.com/2008/09/4.html - இந்த சுட்டியில் விவரங்கள் இருக்கிறது!//

அன்புடன்
லக்கிலுக்
//




இதற்கு நமது எழுத்தாள சூப்பர் ஸ்டார் என்ன கொல்லுறாரெண்டால்

// ஐயா, எழுத்தாளன் என்றால் உங்கள் வீட்டு வேலைக்காரனா, நீங்கள் கூப்பிட்ட இடத்துக்கு ஓடி வருவதற்கு? அதோடு, இதுதான் ஒரு எழுத்தாளனை ஒரு கூட்டத்துக்கு அழைக்கும் முறையா//



எனவே பதிவுலக மக்களே அடுத்த பதிவர் சந்திப்புக்கு அண்ணனை கட்டாயம் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு ஆட்டோவில் சென்று நேரில் அழையுங்கள்.(வெத்தலை பாக்கு தாம்பாளம் வாழைப்பழம் உபயம் ஸ்பான்ஸர் தமிழ்மணம்)

முடியாதவர்கள் கலைஞரின் மிக சக்தி வாய்ந்த ஆயுதமான தந்தியை கையிலெடுங்கள்

தந்திகள் சாருவை நோக்கி பறக்கட்டும்

தந்திகள் அழைப்பிதழ் பாணியில் அமைந்தால் மிகவும் சிறப்பு

தந்திகள் அனுப்பமுடியாதவர்கள் வழமைபோல வைகோவின் சிறப்பு ஆயுதமான கடிதம் எழுதலை கையாளலாம்.

விருப்பமுள்ளவர்கள் தண்ணீர் அடித்து உண்ணாவிரதமும் இருக்கலாம்.


பதிவர் சந்திப்புக்கு வருக வருக சாருசாரே!!


லேபிள்:-தண்ணீர் காட்டல் தந்தி அடித்தல் எழுத்தாளன் ஞானி வாழ்க

Read More...

Thursday, July 10, 2008

***

நானும் மகர ஜோதியில் ஐக்கியமாகிறேனா என்று பார்க்க ஒருடெஸ்டிங் பதிவு.

லேபிள்:-திருவள்ளுவருக்கும் இதற்கும் சம்பந்தமில்லை

Read More...

Tuesday, June 17, 2008

கட்டிங்கா? ஷேவிங்கா? ஒரு தசாவதாரக்கேள்வி



தொழிலதிபர் தீவாகிய நான் ஏதோ பூவிற்கும் புஷ்பத்திற்கும் போக தமிழ்மணத்தில்
தங்குபவர்களுக்காக ஒரு லாட்ஜூம் டவுசர் கிழிபவர்களுக்காக ஒரு தையல்கடையும் போட்டு தொழில் செய்துவருவது முன்னைய எனது பதிவுகளிலிருந்து தாங்கள் அறிந்ததே.

பருவத்தே பயிர் செய் என்ற முன்னோர் வாக்குக்கிணங்க தேவை கருதி
மோனிக்காலவின்ஸ்கி சுருட்டு படையப்பா சுருட்டு போன்ற வரிசையில்
குசேலர் என்ற பெயரில் சலூன் கடை ஒன்றை ஆரம்பித்துள்ளேன்.

தாங்கள் தங்கள் வலைப்பதிவர் சகிதமாக வந்து சிறப்பிக்குமாறு
வேண்டிக்கொள்கிறேன்.

பி.கு

இங்கு வேலை செய்பவர்கள் அநானியாக வேலை செய்வதால் முடி வெட்டுபவரின் பெயர் கேட்பது தடை செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூரிலிருந்து வருபவர்களுக்கு விசேட சலுகை

இவ்வண்ணம்
தொழிலதிபர் தீவு

”உங்கள் திருப்தியே எங்கள் திருப்பதி”

லேபிள்: தாடிவாலா ரஜனி கமல் ,சினிமா ,புனைவுகள்

Read More...

Thursday, June 12, 2008

தசாவதாரம் -குமுதம் விமர்சனம்!

10 வேடங்களில் கமல் நடிக்க, 70 கோடி செலவில் ஹாலிவுட்டுக்குச் சவால் விடும் வகையில் வந்திருக்கிறது தசாவதாரம். முதல் காட்சியே பிரமிக்க வைக்கிறது. சென்னையிலிருந்து கடலைப் பார்த்திருக்கிறோம். கடலிலிருந்து சென்னையை பார்த்திருக்கிறோமோ? கடலிலிருந்து மேலாகப் பறந்து வந்து கழுகு பார்வையில் சென்னையைப் பார்ப்பது தமிழ் சினிமாவுக்குப் புதுசு. அத்துடன் நிற்காமல் அந்தப் பார்வை அப்படியே கடந்து போய் சோழர்கால சிவ வைஷ்ணவ பிரச்சனையின் நடுவே சென்று நிற்பது அதைவிட புதுசு.

சோழர் காலத்து கோபம் கொண்ட வைணவ இளைஞன்,
அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்,
மனநிலை தவறிய வயது முதிர்ந்த பாட்டி,
ஜப்பானிய கராத்தே மாஸ்டர்,
பஞ்சாபி கஜல் பாடகன்,
நியாயத்திற்காக போராடும் தலித் இளைஞன்,
கத்தி, துப்பக்கியுடன் கொலை வெறியுடன் சுற்றும் அமெரிக்கன்,
எட்டு அடி உயரத்தில் அப்பாவியாய்ப் பேசும் முஸ்லிம் இளைஞன்,
நவீன யுகத்தின் துடிப்பான சயன்டிஸ்ட்,
இழுத்து, இழுத்துத் தமிழ் பேசும் கூர் மூக்கு தெலுங்கு உளவுத்துறை அதிகாரி

- என்று வெவ்வேறு வாசனை உள்ள பாத்திரங்கள். தசாவதாரங்களுக்கும் உலக நாயகன் கமல் கடுமையாய் உழைத்திருப்பது தெரிகிறது. இஸ்லாமும், கிறிஸ்தவமும் அடி பதிக்காத காலத்தில் சிதம்பரத்தில் நடந்த சைவ வைணவ மோதலுடன் படம் ஆரம்பிக்கும்போதே ஒரு பிரமிப்பு தோன்றி விடுகிறது.

கோவிலில் உள்ள ரங்கநாதரின் சிலையைப் பெயர்த்து கடலில் வீச சைவ மன்னன் ஏற்பாடு செய்ய, புயலாக புறப்பட்டு எதிரிகளை துவம்சம் செய்யும் கமலிடம், ஓம் நமசிவாய என்று சொன்னால் உயிர் பிச்சை; இல்லாவிட்டால் சிலையுடன் கட்டிக் கடலில் வீசப்படுவாய், என்று, சோழ மன்னன் எச்சரிக்க, கமலின் குடும்பத்தினரும் சொல்லி விடுங்கள் என்று கண்ணீர் விட, ஓம் என்று க்ம்பீரக் குரலில் கமல் ஆரம்பிக்க, என்ன நடக்குமோ, ஏது ஆகுமோ? என்று சீட்டு நுனிக்கு அனைவரும் வர, நமோ நாராயணாய என்று முடிப்பதாகட்டும், கொக்கி மாட்டி ரத்தம் வழிய தூக்கியபோதும் துதிப்பதாகட்டும், கடலுக்குள் சிலையோடு கட்டப்பட்டு மடிவதாகட்டும்... காட்சியமைப்பும், கமலின் நடிப்பும், ரவிவர்மனின் ஒளிப்பதிவும், தேவிஸ்ரீ பிரசாத்தின் அலாதியான ரீரெக்கார்டிங்கும் நம்மை அந்த காலத்திற்கே அழைத்து சென்று விடுகின்றன. அந்த பிரமிப்பிலிருந்து விடுபட நாட்களாகும்.

வைஷ்ணவ நம்பி கதாபாத்திரத்தை வைத்து தமிழில் ஒரு முழுநீள திரைப்படத்தையே தயாரித்திருக்கலாம். வழக்கமாய் வரலாற்றுப் படங்களில் வைக்கப்படும் கட்அவுட் அரண்மனைகளிருந்து வேறுபட்டு தத்ரூபமாக காட்சிகள் இருப்பதற்கு சபாஷ். ஆனால் பத்தே நிமிடங்களில் அந்தக் காட்சிகள் முடிந்துவிடுவது ஏமாற்றம்.

தமிழகத்தின் அந்தக் கால சம்பவங்களை அடிப்படையாக வைத்து ஆரம்பிக்கும் படம் அடுத்த கட்டத்தில் ஹாலிவுட் ஆக்ஷன் - அட்வென்சர் - சேஸிங் படமாக கைகோர்க்கிறது. பரவினால் ஒரு ஊரையே காலி செய்யும் வைரஸ்ஸை எதிரிகளுக்கு விற்க துணிந்த மேலதிகாரியின் கைகளில் அது கிடைக்காமல் கமல் செய்யும் கலாட்டக்கள்தான் மீதிக் கதை. தமிழகத்தை உருக்குலைத்த சுனாமியையே ஒரு கதாபாத்திரமாகப் பயன்படுத்திக் கொண்டிருப்பது கமலின் கதை சொல்லும் திறன்!

பத்து அவதாரங்களில் தலித் தலைவராக வரும் பூவராகன் கமல் வித்தியாசப் பட்டு நிற்கிறார். குரல் ஏற்ற இறக்கம், விழி அசைவுகள், உடல்மொழி அனைத்திலும் கமலின் நடிப்பு சிரத்தை தெரிகிறது. இந்திய உளவுத்துறை அதிகாரியாக வரும் தெலுங்கர் கமல் சிரிக்க வைக்கிறார். வயதான கிழவியாக வரும் கமல் அவ்வை சண்முகியை நினைவூட்டுகிறார். அர்னால்ட் ஸ்வாஸநேகர் ஸ்டைலில் இருக்கும் வில்லன் கமல் வியப்பூட்டுகிறார்.

அக்ரஹாரத்துப் பெண்ணாக அஸின் அம்சமாய் அல்வாவாய் இருக்கிறார். பயந்த சுபாவமும், துடுக்குத்தனமுமாய் அஸின் நடிப்பில் ஏறத்தாழ குட்டி கமல்!

முகுந்தா பாடலில் ஹிமேஷ் ரேஷ்மியா தமிழராக இனிக்கிறார். மற்ற பாடல்களில் வடக்கத்தியராக அந்நியப்பட்டிருக்கிறார். உலக நாயகனே பாடலில் பத்து அவதாரங்களுக்கும் கமலின் மேக்கப் ரகசியத்தை காட்சிப்படுத்தியிருப்பது டைரக்டர் ரவிக்குமாரின் புத்திசாலித்தனம். படத்தின் உயிர் தொழில்நுட்பம். ஆனால் அந்த தொழில்நுட்பத்தைப் பார்ப்பவர்கள் உணராமல் பயன்படுத்தியிருப்பது கலைஞர்களின் திறமை, சாமர்த்தியம்.

கமல்கள் ஒன்றாக வரும் இடங்கள், சுனாமி, அதிவேக கார் துரத்தல்கள், சோழர்கால காட்சிகள், அமெரிக்க அதிரடிகள் என எல்லாவற்றிலும் தொழில்நுட்பம் நிறைந்திருக்கிறது. இத்தனை தொழில்நுட்பம் பயன்பட்ட ஒரே தமிழ்ப்படம் தசாவதாரமாகத்தான் இருக்கும்.

தரம். உலக நாயகத் தரம். உலகத்தரம்.

- குமுதம் விமர்சன குழு -
முதல் காப்பிபேஸ்ட் தினமலர்
இரண்டாவது தீவு

லேபிள்:- தசாவ தரம்

Read More...

Tuesday, May 06, 2008

காக்கா ஒண்ணு குருவி பார்க்க போகுது!!



உலக திரை உலக விமர்சன வரலாற்றில் முதல் முதலாக ராக்கெட் வேகத்தில் குருவி திரைப்பட விமர்சனம் திரு ரவிசங்கர் அவர்களால் தமிழ்மணத்தில் வெளியிடப்பட்டது.

அதற்கு போய் ஒரு பின்னூட்டம் போடலாமென்று போனால் அங்கு போடாதே இங்கு போடு என்று இன்னொரு இடத்துக்கு கை காட்டினாரு.

தமிழ்மணம் திரையில் காட்ட ஒரு நிலம் பட்டா போட இன்னுரு நிலமா என நினைத்து அட போங்கப்பான்னு பின்னூட்டம் போடாமலே வந்துட்டேன்.

இனி விடயத்திற்கு வருகிறேன்.

எங்களுடய வீட்டில் விஜய் க்கு என்று ஒரு அபிமான கும்பல் இருக்கிறது.அதில் ஒரு பாதி கடந்த ஒரு சில படங்களில் விஜயின் வாள் வெட்டு தலை வெட்டு போன்ற சில அபூர்வ காட்சிகளால் மனம் நொந்து கட்சியிலிருந்து பாதி மனத்துடன் விலகியிருக்கிறது.

இன்னொரு பாதிக்கு (அரை டிக்கட்டுகள்) விஜய் வெட்டினால் என்ன இல்லை
குத்தாட்ட்டம் போட்டாலென்ன சிரித்துகொண்டே பார்ப்பார்கள்.

இந்தமுறை குருவியில் வன்முறைகாட்சிகள் பெரிதாக இருக்காது.டண்டணக்கா
பாட்டு எல்லாம் இருக்கு .எனவே திரை அரங்கில் சென்று பார்ப்பதாக மொத்த குடும்பமே ஒரு முடிவு எடுத்திருந்தோம்

அதில் வைத்தாரய்யா ரவிசங்கர் அய்யா ஒரு ஆப்பு.

அதாவது
நம்ம கதா நாயகரு கத்தி வாள் அப்டின்னு வன்முறையில்லாமல்
இம்முறை கோடரி கொண்டல்லவோ வில்லன்களை தறிக்கிறாராம்..

இதுக்குபிறகும் எப்படி குடும்பத்துடன் சென்று அப்படத்தை பார்ப்பது?

எனவே குருவி பார்க்க போவது canceeeeeel

மன்னிக்க மிஸ்டர் ஐங்கரன்(வினியோகஸ்தர்)

ஆனால் விதி என்ன சொல்லிச்சுது என்றால்

நேற்றுபார்த்த இந்த தளத்திலை ஒரு வித்தியாசமான விமர்சனம் குருவி படத்திற்கு இருந்தது.

அதாவது

'கில்லி' படத்தை அதைவிட சிறப்பாக எடுக்க முடியுமா என்று கேட்டால்... முடியும்... 'குருவி'யை பாருங்கள் என தைரியமாக சொல்லலாம்.

இந்த வரிகளை வசிக்கும்போதே புல்லரிக்குதில்லையா?

எனவே

தங்கமணியை அதெடி இதெடிஅங்கெயெடி இஞ்சையெடி பொன்கொடி பூங்கொடி என்று ஏமாற்றிவிட்டு

நான் மட்டும் தனியாக சென்று குருவி பார்ப்பதென்று முடிவு.

வாழ்த்தி அனுப்புங்கள்.


லேபிள்:-பின்னூட்ட மட்டுறுத்தல் கயமை,காக்கா ,குருவி,திரைவிமர்சனம்

Read More...

Sunday, March 30, 2008

தமிழ்மென்பொருள் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட பாஸ்வேட்கள்.உரிமை கோரவும்.

ஒரு சில கடவுச்சொற்கள் எனது கையில் கிடைத்திருக்கின்றன.தமிழ்மென்பொருள் உபயோகிப்பவர்கள் இதனை உறுதிசெய்க.உரியவர்கள் அடையாளம் கண்டு தமது கடவுச்சொற்களை பெற்றுக்கொள்ளுமாறு கேடடுகொள்ளப்படுகிறார்கள்.

உங்களது கடவுச்சொல் இதில் இல்லாத பட்சத்தில் காலப்போக்கில் கண்டுபிடித்து தருவோம் என உறுதிகூறுகிறோம்.

தமிழ் வளர தமிழ்மென்பொருள் பாவிப்போம்.

தமிழ்மென்பொருள்கடவுச்சொல்999ஐ ஆதரித்து சுவரொட்டிகள் கூடியவிரைவில் வெளியிடப்படும்.


இனி கிடைக்கப்பெற்ற கடவுச்சொற்கள் சில

1 ங்கொய்யாலே

2. டவுஸர்

3. எச்சூஸ்மீ

4. யோனி

5. திண்டுக்கல்

6. இஸ்ரேல்

7. பி.டி.சாமி

8. HINDU

9. தமிழச்சி

10. கருப்பு

Label:-vasantham Ravi

Read More...

Friday, March 28, 2008

தமிழ்மணத்தில் உள்ளவங்க யாரு யாரு கையை தூக்குங்க பிள்ளைங்களா?



யார் யாரெல்லாம் தமிழ்மணத்தில் இருக்கிறார்கள்?யார் யாரெல்லாம் இல்லை என்று வைத்தீஸ்வரன் கோவிலில் ஒரு காண்டம் பார்த்து யாராவது சொன்னால் நன்றியுடையவனாக இருப்பேன்.

இருக்கிறார்களா இல்லையா என்பது கூட தெரியாமல் பின்னூட்டத்திலெல்லாம் போய் புரட்சிக் கவிதை பாட முடியவில்லை.

இல்லை என்பவரின் பதிவுகள் தமிழ்மணத்தில் தெரிகிறது.

ஒரு சிலர் தூக்கப்படவில்லை அவராக விலகிவிட்டார் என்கிறார்கள்?.என்னய்யா நடக்குது?

யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன..நான் தமிழ்மணத்தில் இருக்கிறேனா? இல்லையா என்பதுதான் பிரச்சனை .அதை பரிசோதித்து பார்க்க
வே இந்தப் பதிவு .

label :-testing பதிவு 1 testing பதிவு 2 testing பதிவு 3

Read More...

Friday, March 21, 2008

பிள்ளையள் தமிழிலை கதையுங்கோ

முந்தி காசி எண்டொருத்தர் தமிழ்மணத்தை நடாத்தியவர்.அவற்றை ஆட்சியிலை ஒரு சட்டம் இருந்தது அதாவது தமிழில் எழுதினால்தான் தமிழ்மணத்திலை திரட்டப்படும் என்று..இப்ப கலிகாலம் எல்லாம் மாறிட்டுது.


இந்தப் பதிவை நானும் நானூறு தடவை படித்துப்பார்த்தேன்.

மூளையை கசக்கியதுதான் மிச்சம்.

இவங்களை தமிழ்மணம் எப்படி திரட்டுகிறது?

என்னெல்லாம் பேசுறாங்க..சும்மா விளையாட்டுப்பிள்ளைத்தனமாவெல்லா இருக்கு..

அட எழுதினவந்தா அப்டீன்னா பின்னூட்டினவங்க அது அதை விட புனிதமுங்க..

தமிழச்சி பதிவெல்லாம் இவிங்க படிக்கமாட்டாங்களா?

பிள்ளையள் தமிழிலை கதையுங்கோ..என்ன எழுதினாலும் நாலு பேருக்கு புரியம்படி எழுதுங்க ராசாமாரே.



label:-சூடான இடுகையை தூக்கிய தமிழ் மணத்திற்கு எம் கண்டனத்தை தெரிவிப்போம்.

Read More...

Thursday, March 13, 2008

அட விடுங்கப்பா கவித்தொல்லை தாங்க முடியலே





இவங்க தொல்லை தாங்க முடியாது தூக்கில தொங்கவும் பயமாயிருக்கு.அப்பவும் வந்து கவுத கவுஜ பாடிடுவாங்க..என்ன செய்வது?
முள்ள முள்ளாலதானே எடுக்கணும்.அதான் நானும்
பாடிடலாம் என முடிவு.கவி விளங்காதவர்களுக்கு உண்மைத்தமிழன் சிறுகக்கூறி புரியவைப்பார்.

முந்தியும் ஒரு கவிதை யாதும் ஊரே யாவரும் கேளிர் என எழுதினேன்.அது ஏற்கனவே யாரோ
எனக்கு முந்தி எழுதிப்போட்டார்களாம்.

அதனாலே

இனி புதுக்கவிதை அதாவது புதியகவிதை.

சட்டி சுட்டதடா கை விட்டதடா
கூந்தல் கறுப்பு குங்குமம் சிவப்பு


பி கு இனி யாராவது கவுத மழை பனி அப்டீன்னு ஆரம்பிச்சால் இது போன்று கவிதை
ஆறாய் கொட்டும் என எச்சரிக்கிறேன்.



லேபிள்:-தீதும் நன்றும் பிறர் தர வாரா

Read More...

Wednesday, March 12, 2008

என்னது நல்லதம்பியை அரெஸ்ட் பண்ணிட்டாங்களா?



பொதுவாக இந்தாள் லேசிலை மாட்டுப்படமாட்டார்.எவ்வாறு கைதானார்?யாரும் போட்டுகொடுத்துட்டாங்களோ?செய்தி கேட்டதில் இருந்து மனநிலை குழப்பமாக இருந்தது.யாராக இருக்கும்?செய்தி எவ்வாறு பொலிசிற்கு கசிந்தது?


இந்த சீரியல்கள் பொதுவாக நான் பார்ப்பதில்லை.ஆனால் ராதிகாவை பிடிக்கும் என்பதால் அண்ணாமலையில் ஆரம்பித்து இப்போது அரசிவரை வந்தாயிற்று.

ராதிகாவின் தொடர்களில் அழுகை சற்று குறைவாக இருக்கும்.சற்று விறுவிறுப்பாகவும் நகரும்.அண்ணாமலையும் அப்படித்தான் நகர்ந்தது.

மிக ஆர்வமாக இந்த அரசி தொடர் தினசரி இணையத்தில் பார்ததுக்கொண்டு வந்தேன்.அப்போதுதான் கலைக்கு தலையில் அடிபட்டு கலைக்கு விசர் பிடித்தது.கலைக்கு விசர் பிடிக்க எனக்கு பைத்தியம் பிடிக்காகுறையாகிட்டது.

என்னடா சீரியலிது..என்று பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.

பலகாலத்திற்கு பிறகு அன்று ஒரு நண்பர்வீட்டில் வலுகட்டாயமாக அரசி பார்க்கவேண்டி வந்தது.

அதில் நல்லதம்பியை பொலிஸ் பிடித்துவிட்டதாக ஜிஜே சொல்லுவார்.

அப்போது நண்பனை பார்த்து நான் கேட்ட கேள்வியே இப்பதிவின் தலைப்பு.:)


என்னது நல்லதம்பியை அரெஸ்ட் பண்ணிட்டாங்களா?

கடவுளே இன்னும் என்ன என்னவெல்லாம் நடக்கப்போகுதோ?

கலிகாலம்.

உபரித்தகவல்:- நல்லதம்பியாக நடிப்பவர் பஞ்சுஅருணாசலத்தின் மகனாம்.சின்னத்தம்பியாக நடிப்பவர் இயக்குனர் சமுத்திரகனியாம்.

Lebel :-என்னது காந்தியை சுட்டுட்டாங்களா?

Read More...

Thursday, March 06, 2008

சிவராத்திரி வாழ்த்துக்கள்


முன்னரெல்லாம் சிவராத்திரி என்றால் 4 காலப்பூஜையும் விழித்திருந்து முழித்திருந்து திரைப்படம் பார்ப்போம்.இப்போது 10 மணிவரை முழித்திருந்தாலே அடுத்தநாள் கடினப்பட்டுத்தான் ஆணி பிடுங்க போகவேண்டியிருக்கிறது.அப்படியும் எழும்பாவிட்டால் நித்திரையோ தமிழா என்று இயக்கப்பாடல் வேறு காதுக்குள் மனதுக்குள் பாட ஆரம்பித்துவிடுகிறது.எனவே அந்தப்பயத்திலாவது தூக்கத்தைவிட்டு எழும்பிவிடுவேன்.

எனவே சிவராத்திரியை கொண்டாடுபவர்களுக்கு எனது சிவராத்திரி வாழ்த்துக்கள்.


இனி கொஞ்சம் ஒட்டுப்படை(cut and paste) வேலை(நன்றி தினமலர்)


01. தந்தையும் தாயும் போல் அவன் இருப்பான் : ஒரு தந்தையும் தாயும் அவனுக்கில்லை


சிவராத்திரி தோன்றிய கதை : "சிவம்' என்ற சொல்லுக்கு "சுகம்' என்று பொருள். சிவராத்திரி நாளில் விரதம் அனுஷ்டித்தால் குடும்பத்தில் நன்மை பெருகும். ஆனால் இக்காலத்தில் சிவராத்திரி விரதம் என்பது கேலிக்கூத்தாக மாறிவிட்டது. இரவு நேரத்தில் விழிக்கிறோம் என்ற பெயரில் சினிமா பார்ப்பது, விளையாடுவது போன்ற தகாத செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர். இந்த விரதத்தை முறைப்படி அனுஷ்டிக்க வேண்டும்.


இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுவதற்கு பல்வேறு கதைகள் கூறப்பட்டாலும், உலகம் அழிந்தபோது மீண்டும் உலகை சிருஷ்டிக்க பார்வதிதேவி சிவனை பூஜித்து ஒரு இரவு முழுவதும் இருந்த விரதமே "சிவராத்திரி விரதம்' எனப்படுகிறது.

மற்றொரு கதையின்படி சிவனின் கண்களை பார்வதி தேவி மூடியதாகவும், இதனால் உலகம் இருண்ட நேரத்தை சிவராத்திரியாக அனுஷ்டிப்பதாகவும் கூறுகிறார்கள். மகாபாரதத்திலும் சிவராத்திரி விரதம் பற்றி கூறப்படுகிறது. சாந்தி பர்வத்தில், பீஷ்மர் அம்பு படுக்கையில் படுத்தபடி தர்மத்தைப்பற்றி எடுத்துக்கூறும்போது, சித்ரபானு என்ற மன்னன் அவரிடம் மகாசிவராத்திரி விரதம் பற்றி கூறுகிறான்.


இந்த மன்னனுக்கு பூர்வ ஜென்ம வரலாறுகளை கூறும் நினைவுசக்தி உண்டு. அதன் அடிப்படையில் கடந்த பிறவி ஒன்றில் அவன் இந்த விரதத்தை அனுஷ்டித்ததாக சொல்கிறான். அந்த பிறவியில் அவன் ஒரு வேடனாக இருந்தான். சுச்வரன் என்பது அவனது பெயர். இந்த சொல்லுக்கு "இனிய குரல்' என்பது பொருள். அந்த வேடனின் குரல் மிகவும் இனிமையாக இருக்கும். ஒருமுறை வேட்டைக்கு சென்ற அவனுக்கு விலங்குகள் ஏதும் கிடைக்காததால் ஒரு வில்வமரத்தில் ஏறி அமர்ந்திருந்தான். இரவு நேரமும் வந்துவிட்டது. குடும்பத்தாரின் நினைவு அவனுக்கு வந்தது.

அவர்கள் பட்டினியுடன் காத்துக் கொண்டிருப்பார்கள் என்பதை நினைத்து கண்ணீர் வடித்தான். அன்று முழுவதும் அவன் சாப்பிடாததால் பசியும் தாகமும் வாட்டி எடுத்தது. பொழுது போகவில்லையே என்பதற்காக மரத்தில் இருந்த இலைகளை பறித்து கீழே வீசிக் கொண்டிருந்தான். மறுநாள் காலையில் ஒரு மான் சிக்கியது. அப்போது மற்றொரு வேடன் வந்தான்.

அந்த மானை தனக்கு தரும்படி கேட்டான்.
அவனும் பசியால் இருப்பதை உணர்ந்த வேடன், தன்னிடமிருந்து மான் இறைச்சியின் ஒரு பகுதியை அவனுக்கும் கொடுத்தான்.

பிறகு வீட்டிற்கு சென்று அனைவரும் சமைத்து சாப்பிட்டனர். அந்த வேடனின் இறுதிக்காலம் வந்தது. அவன் பல மிருகங்களைக் கொன்ற பாவங்களை செய்தவன் என்பதால் எமகிங்கிரர்கள் அவனை எமதர்மராஜா முன்பு நிறுத்தினர். ஆயினும் அவன் மரத்தின் மீது அமர்ந்திருந்தநாள் சிவராத்திரி என்பதாலும், அன்று பட்டினி கிடந்ததாலும், தன்னை அறியாமலே இலைகளை கிள்ளிப்போட, அவை மரத்தின்கீழே இருந்த லிங்கத்தின்மீது விழுந்ததாலும் அவனுக்கு சிவபதம் கிடைத்தது. இந்த கதையின்படி பார்த்தால் வில்வ இலை சிவராத்திரியன்று மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

இரவு முழுவதும் சிவாலயத்தில் தங்கியிருந்து வில்வ இலையால் சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். நான்கு ஜாமமும் அவருக்கு நடக்கும் பூஜையை காணவேண்டும். சிவராத்திரி அன்று பகலிலும் இரவிலும் சாப்பிடக்கூடாது. விரதத்தின் முடிவில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால்தான் இந்த விரதம் முழுமையானதாக அமையும்.


ஐவகை சிவராத்திரி : சிவராத்திரி ஐந்து வகையாக பிரிக்கப்பட்டிருக்கிறது. நித்ய சிவராத்திரி: ஒவ்வொரு மாதமும் தேய்பிறை, வளர்பிறை, சதுர்த்தசி திதிகள் நித்திய சிவராத்திரி எனப்படும். இந்த சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிக்க விரும்புபவர்கள் தொடர்ந்து 24 முறை அனுஷ்டிக்க வேண்டும். பெண்கள் தங்களுக்கு வசதிப்படாத நாட்களை கழித்துவிட்டு 24 முறை அனுஷ்டிக்கலாம்.


பட்ச சிவராத்திரி: தை மாதம் தேய்பிறை பிரதமை முதல் 13 நாட்கள் தொடர்ந்து ஒரு நேரம் மட்டும் சாப்பிட்டு 14ம் நாளான சதுர்த்தசி அன்று முழுமையாக சாப்பிடாமல் இருந்து அன்று மாலை சிவன் கோயிலுக்கு சென்று வில்வமாலை சாத்தி வழிபட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.


மாத சிவராத்திரி: ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திதியில் இந்த விரதம் வரும். சித்திரையில் தேய்பிறை அஷ்டமி, வைகாசியில் வளர்பிறை அஷ்டமி, ஆனியில் வளர்பிறை சதுர்த்தி, ஆடியில் தேய் பிறை பஞ்சமி,ஆவணியில்வளர்பிறை அஷ்டமி, புரட்டாசியில் வளர்பிறை திரயோதசி, ஐப்பசியில் வளர்பிறை துவாதசி, கார்த்திகையில் வளர்பிறை சப்தமி, மார்கழியில் வளர்பிறை சதுர்த்தசி, தை மாதம் வளர்பிறை திருதியை, மாசியில் தேய் பிறை சதுர்த்தசி (மகா சிவராத்திரி), பங்குனியில் வளர்பிறை திரிதியை ஆகிய நாட்களில் இந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.


யோக சிவராத்திரி: ஏதாவது ஒரு திங்கட்கிழமையில் பகலிலும் இரவிலும் முழுமையாக அமாவாசை திதி இருந்தால் அது யோக சிவராத்திரி எனப்படும். இது மிக அபூர்வமாகவே வரும்.


மகா சிவராத்திரி: ஒவ்வொரு தெய்வத்திற் கும் ஒவ்வொரு திதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. சிவனுக்கென ஒதுக்கப்பட்டது இறுதி திதியான சதுர்த்தசி. சிவன் அழிக்கும் தெய்வம். எல்லா உயிர்களும் தங்கள் வாழ்வின் இறுதியில் அவரையே அடைகின்றன என்பதால் இந்த இறுதி திதியை அவருக்கு ஒதுக்கினார்கள். அதில் மாசி மாதம் தேய்பிறையில் வரும் சதுர்த்தசி "பெரிய இரவு' என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக இது மகாசிவராத்திரியாக அனுஷ்டிக்கப்படுகிறது.


விழித்திருப்பது ஏன்? :சிவராத்திரி அன்று இரவு முழுவதும் உணவை விலக்கி விழித்திருக்கிறார்கள். உடலுக்கு உணவில்லாமல் இருக்கும் போது அது தானாகவே அடங்கிவிடும். உறக்கத்தை விலக்கினால் உடல் மேலும் வலுவிழந்துபோகும். இத்தகைய சூழ்நிலையே இறைவழிபாட்டுக்கு மிகவும் ஏற்றது. பசியுடனும், துõக்க கலக்கத்துடனும் இறைவனை வணங்கும்போது முழுமையான இறைவன் அருள் கிடைக்கும். தியானம் நிலைக்கும். நினைத்த காரியம் நடக்கும்.


சிவராத்திரியன்று படிக்க வேண்டியது :சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் மிக முக்கியமாக படிக்க வேண்டியது ஞானசம்பந்தரின் கோளறு பதிகமாகும். இது மனதிற்கு தைரியத்தை தரும். எந்த கிரகங்களின் தாக்கம் இருந்தாலும் அதை நீக்கிவிடும். இதைத்தவிர சிவபுராணம், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம், நடராஜ பத்து, தேவாரம், திருவாசகம், லிங்கபுராணம், திருவிளையாடற் புராணம், பெரியபுராணம் ஆகியவற்றை படித்தாலும், கேட்டாலும் மற்ற நாட்களைவிட அதிக பலன் கிடைக்கும்.


அட்டஹாசம் என்றால் என்ன தெரியுமா? : அழகான ஒருவரை பார்த்தால் "அட்டகாசமாய் இருக்கிறாரே' என்று கேலியாக சொல்வது வழக்கம். ஒரு பெண்ணின் வயிறு மூன்றாக மடியும். இதில் இரண்டாம் மடிப்பின் பெயர் "அட்டஹாசம்'. தட்சனின் யாக குண்டத்தில் தாட்சாயணி விழுந்ததும், அவளது உடலுடன் சிவன் நடனமாடினார். அப்போது அம்பிகையின் உடல் 51 இடங்களில் சிதறிவிழுந்தது. அவை சக்தி பீடங்கள் எனப்பட்டன. அந்த பீடங்களில் ஒன்றின் பெயர் அட்டஹாசம். இங்குதான் அம்பிகையினுடைய வயிற்றின் இரண்டாம் பாகம் விழுந்தது. முதல் மடிப்பை "மாருதேச்வரம்' என்றும், மூன்றாம் மடிப்பை "வீரஜம்' என்றும் அழைப்பர்.


பிரார்த்தனை : சிவராத்திரியன்று திரும்பத்திரும்ப இந்த வாசகங்களை சொல்ல வேண்டும்.

* என் இதய தாமரையில் வீற்றிருக்கும் ரத்தினமாகிய சிவனை நான் வணங்குகின்றேன். சிரத்தை, பக்தி ஆகிய நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரான என் துõய மனதால் அவருக்கு அபிஷேகம் செய்கிறேன். சமாதிஎன்னும் நறுமண பூக்களால் நான் அவரை வழிபடுகிறேன். இவையெல்லாம் எதற்காக என்றால், நான் இனி இந்த பூமியில் பிறக்கக்கூடாது என்பதற்காக.

* சிவபெருமானே! நீரே எனது ஆத்மன். என் மனமே பார்வதி. என் பிராணனே உமது சேவகன். என் உடலே உமது வீடு. எனது அன்றாட செயல்களே உமக்கு செலுத்தும் வழிபாடு. என் உறக்கமே சமாதி. என் நடையே உமை சுற்றிவரும் பிரதட்சணம். என் பேச்சே பிரார்த்தனை. இவ்விதமாக நான் எனக்குள் இருக்கும் அத்தனையையும் உம்மிடம் அர்ப்பணிக்கின்றேன்.


விரத முறை : சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பவர்கள் அன்று முழுவதும் சாப்பிடக்கூடாது. உலகத்தின் அமைதி மற்றும் சுபிட்சத்திற்காக சிவாலயங்களில் ஹோமம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். "ஓம் நவசிவாய' என்ற மந்திர ஜபத்தை கோயில்களில் ஜபிக்க வேண்டும். அன்று இரவில் கோயிலில் அனைவரும் ஒன்றுகூடி "சிவாய நம' என்ற நாமத்தை ஜெபிக்க வேண்டும். இரவின் நான்கு ஜாமங்களிலும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து பக்தியுடன் அவரை வழிபட வேண்டும். முதல் ஜாமத்தில் அரிசி, இரண்டாம், மூன்றாம் ஜாமங்களில் கோதுமை, நான்காம் ஜாமத்தில் அரிசி, உளுந்து, பயிறு, தினை ஆகியவற்றை அட்சதையாகசிவலிங்கத்திற்குசமர்ப்பிக்க வேண்டும். முதல் ஜாமத்தில் தாமரை பூக்களாலும், இரண்டாம் ஜாமத்தில் தாமரை மற்றும் வில்வத் தாலும், மூன்றாம் ஜாமத்தில் அருகம் புல்லாலும், நான்காம் ஜாமத்தில் தாழம்பூ, செண்பகம் நீங்கலான மற்ற மணம் கமழும் மலர்களாலும் அர்ச்சனை செய்ய வேண்டும்.

Read More...