Wednesday, August 31, 2005

ஒழுக்கமற்றவர் இறைவன்

ஒழுக்கமற்றவர் இறைவனானால் என்றதொரு பதிவு யாழிலிருந்து வெளிவந்துள்ளது.எப்படி இப்படி ஒரு சிந்தனை வலைப்பதிவாளருக்கு எழுந்தது?அதுவும் யாழிலிருந்து..அந்தளவிற்கு அங்கு எல்லாரும் சிந்தனை மழுங்கியா இருக்கிறார்கள்? அல்லது வலைப்பதிவின் பின்னூட்டத்தை கூட்டிவலைப்பதிவை விளம்பரம் செய்ய இப்படி ஒரு உத்தியா?..
என்னவோ மற்றவனுக்கு "பேப்பட்டம் "கட்டாதீர்கள்.

Read More...

Tuesday, August 30, 2005

தங்கருக்கு சனி மாற்றம் நல்லதல்ல..


சிலருக்கு வாயில் சனி தேவையான நேரம் வந்து அமர்ந்துவிடுகிறது.தங்கபச்சான் அந்த இரகம்.
என்னவோ சொல்ல நினைத்து என்னவோ சொல்லி எல்லோரிடமும் வாங்கி கட்டுகிறார்.லொஜிக்காக நினைத்துப்பார்த்தால் கூடதங்கர் அப்படி பேசியிருக்கமாட்டார்.அப்படி பேசியிருந்தாலும்கூட அந்த அர்த்தத்தில் பேசியிருக்கமாட்டார்.

யார் பேசியிருந்தாலும் ஒரு திரைப்படத்துறையில் இருப்பவர் அதுவும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கலைஞன் அப்படி அர்த்தத்தில் பேசியிருக்க வாய்ப்பு குறைவு.

மொத்தத்தில் தங்கருக்கு சனி மாற்றம் நல்லதல்ல..

Read More...