Saturday, November 19, 2005

அண்ணா அமெரிக்கா வாங்கோ

என்னடா இன்னும் சத்தத்தை காணவில்லையே என்று பார்த்தேன்.முந்தி யாழ்ப்பாணத்தில் அமெரிக்கா நூலகம் எண்டு 3ம் குறுக்குத்தெருவில் இடம் ஒதுக்கி தந்ததுபோல் கிளிநொச்சியிலும் ஒரு இடம் தந்தால் சில வேளை
சும்மா இருப்பியளோ தெரியாது..


அறிக்கை-

US condemns Tigers for "interference" in Sri Lankan democratic process

WASHINGTON (AFP) - The United States has condemned what it called interference by Sri Lanka's Tamil Tiger rebels in the island's democratic process, saying the rebels intimidated voters in just concluded presidential elections.


Congratulating Prime Minister Mahinda Rajapakse on his victory in the polls Thursday, the State Department said the United States "regrets that Tamil voters in the northern and eastern parts of the island did not vote in significant numbers due to a clear campaign of intimidation by the Liberation Tigers of Tamil Eelam (LTTE)."

As a result, "a significant portion of Sri Lanka's people were deprived of the opportunity to make their views known," department spokesman Adam Ereli said.

"The United States condemns this LTTE interference in the democratic process," he said.

Washington regards the Tamil Tigers as terrorists.

Ereli also said that the United States looked forward to working with President Rajapakse as he confronted "many significant and immediate challenges."

They include the need to strengthen a ceasefire agreement and bring renewed vigor to the peace process "so that progress may be made towards a negotiated solution that meets the aspirations of all Sri Lankans," he said.

"We remain committed to maintaining the historically close ties between our two countries," Ereli said.

Rajapakse, a socialist, received 4.88 million votes in the ballot, beating former prime minister Ranil Wickremesinghe who polled 4.69 million votes, final results from the elections commissioner showed.

Peace talks between Colombo and the Tigers have been deadlocked since April 2003 and Sri Lanka is under pressure from the international community to revive the talks in order to qualify for billions of dollars in aid to rebuild tsunami-ravaged coastlines.

Both sides have agreed to abide by a truce that went into effect in 2002 despite accusation of violations from both.

More than 60,000 people were killed between 1972 and 2002, when the truce went into effect.

Two former Norwegian peace brokers said Friday that Rajapakse's victory could lead to deeper divisions and a rocky period in the country.

http://news.yahoo.com/s/afp/20051119/
wl_sthasia_afp/ussrilankapolitics;_
ylt=AmZZjj3sAYVYz5Hy6L_HTbwBxg8F;_ylu
=X3oDMTBjMHVqMTQ4BHNlYwN5bnN1YmNhdA
--

Read More...

Friday, November 18, 2005

Island of Blood 2

பிரபாகரனின் இடத்தில் பெரியதொரு இராஜநாகத்தைக் கண்டேன். கொத்துவதற்கு ஆயத்தமாக அது காணப்பட்டது.

முதல் பகுதி

இந்தியப் படையினருக்கே இந்த அச்சுறுத்தலை பிரபாகரன் விடுத்திருந்தார்.


அவர் விடுத்த செய்தி தெளிவானது. அதாவது, தமிழர்களின் பாதுகாப்பை இந்தியர்கள் உறுதிப்படுத்தாவிடின் புலிகள் மோதலுக்கு திரும்பி வந்துவிடுவார்கள் என்பதே அந்தச் செய்தியாகும்.

விடுதலைப்புலி உறுப்பினர் ஒவ்வொருவரினதும் மரணத்திற்கும், காயத்திற்கும் அவர் பழிவாங்குவார் என்பதே அவரின் செய்தியாகும்.





Anita Pratap




Island of Blood

இந்திய பெண் பத்திரிகையாளர் அனிதா ப்ரதாப்பின் நூலிலிருந்து



அனிதா பிரதாப்பின் இரத்தத்தீவு-20

இலங்கை - இந்திய உடன்படிக்கை வரலாற்றில் குருதி தோய்ந்த அத்தியாயம்
வந்த நோக்கம் எதுவும் நிறைவேறாமல் திரும்பிச் சென்ற அமைதிகாக்கும் படை நாங்கள் இருந்த பெரிய அறையில் நிசப்தம் நிலவியது.

பிரபாகரனின் சீற்றவொலியைத் தவிர வேறொரு சத்தமும் கேட்கவில்லை.
நான் கூச்சலிடவேண்டிய அவசர நிலைக்குத் தள்ளப்பட்டேன். பிரபாகரனின் இடத்தில் பெரியதொரு இராஜநாகத்தைக் கண்டேன். கொத்துவதற்கு ஆயத்தமாக அது காணப்பட்டது.

எனக்கு திகிலூட்டும் விடயங்களில் ஒன்று பாம்பைப் பார்ப்பதாகும். இதுவொரு நினைத்துப் பார்க்கமுடியாத பயம். ஸ்தம்பிதமடைய வைக்கும் பீதி. பாம்புகள் தீங்கற்றவையெனவும் அவற்றைத் தாக்காவிடின் அவை தாக்கமாட்டாது எனவும் சூபினும்,எனது நண்பர்களும் அடிக்கடி கூறுவார்கள். ஆனால், பாம்பைக் கண்டால் அலமலத்துப் போவது வழக்கம். அவை தீங்கு விளைவிப்பவை என்ற ஆழமாக வேரூன்றிய நம்பிக்கையில் நான் ஊறியிருந்தேன்.

எனது சிறிய கண் இமைகளும், சற்றுக் கூர்மையாகப் பார்க்கும் பார்வையும் நான் முற்பிறப்பில் பாம்பாக இருந்திருக்கவேண்டுமென என் சிறிய வயதில் சிலர் என்னிடம் கூறியிருந்தார்கள். எனக்குச் சிறிய கண் இமைகள் இருந்தால் பிரபாகரனுக்கு அது இல்லையெனக் கூறலாம். அப்படிப் பார்த்தால் அவர் முற்பிறப்பில் பாம்பாக இருந்திருக்கலாம்.
இந்த வாழ்விலும் பாம்பு போன்றே பார்ப்பதற்குத் தோன்றினார். உப்பிய தலை, அசைவற்ற தன்மை, கூர்மையான கண்கள் பாம்பைப் போன்று இருந்தன. அவரின் கருமையான முகத்தில் கண்கள் கோபமாக விழித்தன. மிகவும் கீழ் ஸ்தாயில் அபாயகரமான ஒலியை எழுப்பினார்.

பாயவிருந்த பாம்பு போய்விட்டது.

என்னைக் கட்டுப்படுத்துவதற்கு முழுச்சக்தியையும் பயன்படுத்த வேண்டியிருந்தது. நான் வாய்விட்டு வார்த்தைகளை வெளிவிட்டபோது பிரபாகரன் ஆறுதலாக மிக சாவகாசமாகக் காணப்பட்டார். அவரின் கண்கள், மூக்கு, வாய் யாவுமே சாதாரணமான நிலைக்கு வந்தன. நாற்காலியில் சாய்ந்திருந்த அவர் வழமை போன்று மென்மையாகப் பேச ஆரம்பித்தார்.

உடன்படிக்கை முறிவடையும் என்பதை அத்தருணத்தில் நான் உணர்ந்து கொண்டேன்.

ஒரு மாதத்திற்குப் பின்னர் புலிகளின் சினைப்பர் தாக்குதலையடுத்து இந்தியத் துருப்புகள் மேலதிகமாக யாழ்ப்பாணத்தில் இறக்கப்பட்ட சமயம் நான் பிரபாகரனைச் சந்தித்தேன்.

துயரந்தோய்ந்த அந்தத் தேசத்தின் வரலாற்றில் அதுவொரு குருதி தோய்ந்த அத்தியாயமாகும்.

அந்த யுத்தம் ஆயிரக்கணக்கானோரை பலி கொண்டது. பலரை அங்கவீனமாக்கியது, மண்ணை அழித்தது, இந்தியாவின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தியது.

புலிகளை நிலை குலையச் செய்தது. பீதி, வன்செயல் நெருக்கடிக்குள் தமிழரை மேலும் தள்ளியது.

ஆனால், உயிர் தப்பினார். முன்னரை விட மிகவும் வலிமை பெற்றவராக மாற்றம் பெற்றார்.

ஆயினும், மிகவும் மறைவான இடத்தில் வாழ வேண்டி ஏற்பட்டது. அவருக்குரிய தூர நோக்கம், தந்திரோபாய திட்டம் தீட்டுதல் என்பவற்றால் பிரமாண்டமானதும், இரகசியமானதுமான யுத்த அமைப்பொன்றைக் கட்டியெழுப்ப முடிந்தது.

நிலத்தின் கீழ் பல தளங்களைக் கொண்ட பதுங்கு குழிகளை அமைத்தார். பாரிய தாங்கிகளை அமைத்து எரிபொருளை சேமித்தார். மெதுவாகவும், திடமானதாகவும் பாரிய போர் முயற்சிக்கான திட்டங்களை வகுத்தார்.

சகல தேவைகளையும் இறக்குமதி செய்யப்படும் புலிகளின் சீருடை உட்பட மிகக் கவனமாக ஆயத்தப்படுத்த முடிந்தது.

இலங்கையை விட்டு இந்தியத் துருப்புகள் வெளியேறிய பின்பே திரும்பவும் பிரபாகரனை சந்திக்கும் முயற்சியில் நான் வெற்றி காண நேர்ந்தது. 1987-1990 காலப்பகுதியில் இந்திய சமாதானப் படையினருடன் அவர் போரிட்டுக் கொண்டிருந்த தருணத்தில் அவருடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தேன். ஒரு தடவை அவரைச் சந்திக்க முடியாமல் போனது.

கடைசி இந்தியப் படைவீரனும் சென்ற பின் அவர் தனது முதல் பேட்டியை எனக்குத் தந்தார்.

இலங்கை அமைச்சரவை உறுப்பினரான ரஞ்சன் விஜயரட்ண மற்றும் சில இந்தியர்களுடன் திருகோணமலை கடற்கரையில் நானும் ஒருத்தியாக நின்று இரண்டாயிரம் வீரர்களைக் கொண்ட கடைசி இந்தியப் படையணி புறப்பட்டுச் சென்றதைக் கண்டேன்.

அதுவொரு துக்ககரமானதும், சங்கடத்துக்குரியதுமாகும். அவர்கள் புறப்பட்டு இலங்கைக்கு வந்து சேர்ந்ததற்கு முற்றிலும் முரண்பட்ட நிகழ்வு அது.

அவர்கள் இலங்கைக்கு வந்த போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் வரிசையாக நின்று அவர்களை வாழ்த்தி மாலை சூட்டினர். 1500 இந்தியப் படையினர் இறந்தும் பலர் முடமாக்கப்பட்டும் தெரிவிக்கப்பட்ட எந்தவொரு நோக்கமும் நிறைவேற்றப்படாமலும் தீவில் அமைதியை ஏற்படுத்துவதற்குப் பதிலாக குருதி தோய்ந்த அத்தியாயத்தை உருவாக்கியும் இலங்கையில் இந்தியா மேற்கொண்ட தலையீடு பாரியதொரு தவறான நடவடிக்கையாகும்.


இந்திய சமாதானப் படை இலங்கையை விட்டு வெளியேறுவதற்கு முதல்நாள் இந்திய மேஜர் ஜெனரல் ஒருவர் வரலாற்றியலாளர் 'பார்பரா துச்மானின்" நூலின் பிரதியொன்றைப் பற்றிக் குறிப்பிட்டார். 'த மார்ச் ஒவ்ஃபோலி: ட்ரம்ட்ரோய் ரு வியட்நாம்" (வுhந ஆயசஉh ழக குழடடல: குசழஅ வுசழல வழ ஏநைவயெஅ) என்ற நூல் அது. அதில் நாம் இலங்கையையும் சேர்த்துக் கொள்ளமுடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

துறைமுகத்தில் நான் அமர்ந்திருந்து, பார்வையிலிருந்து இந்தியப் படையினர் சென்ற படகு மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தேன். கடந்த காலம் நான் அக்கறை கொள்ளும் கால எல்லையை விட்டு விலகியது. எதிர்காலத்தை நோக்கி நடந்தேன்.

பிரபாகரனைச் சந்திக்க வேண்டியிருந்தது. மூன்று நாட்களுக்குப் பின் அதாவது 26 மார்ச் 1990 இல் அவரைச் சந்திக்க முடிந்தது.

நான் அவரை 24ஆம் திகதி சந்திக்கவேண்டிய நிலையில் இருந்தேன். ஏனெனில் 26இல் கொழும்புக்கு திரும்பிச் சென்று அந்த வாரப்பதிப்பிற்கு எனது செய்தியை அனுப்பவேண்டியிருந்தது.

ஆனால், என்னை 26ஆம் திகதி தான் சந்திக்க முடியுமென பிரபாகரனால் தெரிவிக்கப்பட்டது. அதற்கு முன்னர் சந்திக்குமாறு அவரைத் தூண்ட முடியவில்லை. இறுதியாக அவர் எனது பிரச்சினையை விளங்கிக் கொண்டார்.

அதாவது இந்தியப் படையினர் இறுதியாக இலங்கையிலிருந்து வாபஸ் பெற்றமை தொடர்பான எனது கட்டுரையுடன் அவரது பேட்டி இடம்பெறவேண்டியிருந்தது. பேட்டியும் ஒருவாரம் கழித்து பிரசுரிப்பது சிறப்பானதாகத் தோன்றவில்லை. பின்னர் 25ஆம் திகதி நள்ளிரவில் என்னைச் சந்திப்பதற்கு அவர் சம்மதித்தார்.

அது உசிதமென்றால் பகலில் கொழும்புக்குப் பயணத்தை மேற்கொண்டு இரவு கொழும்பை அடையமுடியும். அது நடந்தால் காலக்கெடுவுக்குள் எனது கட்டுரை, பேட்டியை நான் அனுப்பிவிடமுடியும்.

இருபத்தாறாம் இலக்கம் பிரபாகரனுக்கு குறிப்பிடத்தக்க முக்கியமானதொன்று. அவர் நவம்பர் 26ஆம் திகதி பிறந்தவர். இருபத்தாறும் அதனுடன் எந்த இலக்கத்தையாவது கூட்ட எட்டு வருமாயின் அது தமக்கு அதிர்ர்;டமற்றது என்று அவர் கண்டுள்ளார்.

மாதத்தில் வரும் 26ஆம் திகதிகளில் எந்தவொரு யுத்த நடவடிக்கையும் அவர் நடத்துவதில்லை. அந்த நாளில் போர் நடவடிக்கைகளைத் தவிர்த்து வேறு கருமத்தில் ஈடுபடுவதற்கே அவர் முன்னுரிமை கொடுப்பார். பேட்டி கொடுப்பது போன்ற காரியங்களில் ஈடுபடுவார். மற்றைய நாட்களை இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக திட்டமிடுவதிலும் நிறைவேற்றுவதிலுமே செலவிடுவார்.

அவருடைய பிறந்ததினம், வருகின்ற வாரம் இறந்த விடுதலைப் புலிகளை கௌரவிக்கும் மாவீரர் வாரமாக அனுர்;டிக்கப்படுகிறது.

நானும் 'ரைம்" சஞ்சிகையின் புகைப்படப்பிடிப்பாளர் ரொபேர்ட் நிக்கலஸ் பேர்க்கும் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து வன்னிக் காட்டுக்குள் புலி உறுப்பினர்களால் அழைத்துச் செல்லப்பட்டோம்.

'பொப்" என்று நாம் அவரை அழைப்போம். என்னுடன் சேர்ந்து பணியாற்றியவர்களில் அவர் மிகவும் மதிநுட்பம் வாய்ந்தவரும், திடசிந்தை கொண்டவருமான புகைப்படப்பிடிப்பாளராவார். சிறந்த நிருபர்கள் போன்றே அவருக்கு செய்திகள் பற்றி நன்கு தெரியும். அவரின் கண்களைப் போலவே மூளையும் கூர்மையாக இருந்தது.

எம்முடன் புலிகளின் பேச்சாளர் அன்ரன் பாலசிங்கமும், சிரேர்;ட உறுப்பினர் திலீப் யோகியும் உடன் பயணம் செய்தனர். நாம் எதிர்காலம் குறித்து கலந்துரையாடினோம். பிரபாகரன் சமாதானமாக வருவதற்கு உகந்த நேரம் எனவும், தீர்வுப்பொதி தனிநாடு இல்லாமல் சுயாட்சி, பாதுகாப்பைத் தருவதாக நான் குறிப்பிட்டேன்.


தனித்துவமான சூழ்நிலைகளால் உருவான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பமாக அது காணப்பட்டது. வரலாற்று ரீதியான பகைவர்களான விடுதலைப் புலிகளும், ஜனாதிபதி பிரேமதாசவின் இலங்கை அரசாங்கமும் தமது பொது எதிரியான இந்திய சமாதானப் படையினரை வெளியேற்றுவதற்காக ஐக்கியப்பட்டனர்.

இந்தியர்களை வெளியேற்றுவது இருசாராரைப் பொறுத்தவரையும் தம்மை நிலைநிறுத்திக் கொள்வதற்கான தேவையாக இருந்தது.

அதனால், இருசாராரும் இரகசியமான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்தியர்களுடன் மோதலில் ஈடுபடுவதற்காக புலிகளுக்கு பிரேமதாஸ ஆயுதங்கள், தளபாடங்களை வழங்கினார்.

இந்தியப் படையினர் வெளியேறியதால் ஏற்பட்ட வெற்றிடங்கள் துரிதமாக புலிகளால் நிரப்பப்பட்டன.
தனது இராணுவத்தை முகாம்களுக்குள்ளேயே பிரேமதாஸ தொடர்ந்து முடக்கிவைத்தார். இது ஈழத்தை பிரபாகரனிடம் பிரேமதாஸ சரணடையச் செய்ததாகவே காணப்பட்டது. இதைவிட வேறெதனை அதிகமாக அவர் கேட்கக்கூடும்?

அதிகாலை 2 மணியளவில் அடர்ந்த காட்டிற்குள் இருந்த பாதுகாப்பான இல்லத்தை நாம் அடைந்தோம்.

வானிலிருந்து நாம் கால்களை நீட்டி வெளியேற சில நிமிடங்கள் எடுத்தன. யுத்த சீருடை அணிந்திருந்தவாறு விறாந்தையில் எமக்காக பிரபாகரன் காத்திருந்தார்.

தொடரும்..

Read More...

Thursday, November 17, 2005

இனி என்ன ஓய்வு ஜனாதிபதி அய்யா?



சந்திரிகா அம்மையாரால் தமிழினம் பல வரலாற்று சாதனைகளை படைத்தது..உங்களால் தமிழினத்திற்கு அதி சீக்கிரம் தமிழீழம் கிடைக்கட்டும்.

Read More...

பொதுமக்கள் அடித்துக்கொன்றனர்

பிள்ளையார் எறும்பைக்கூட கொன்றால் பாவம் என கூறி வளர்த்தெடுக்கப்பட்ட யாழ் சமூகம் மாறிய மாற்றம்..

செய்தியின் கடுமை கருதி இங்கே மறுபிரசுரம் செய்யவில்லை.உதயனில் பார்த்து அறிக.பொன்பரப்பியில் தமிழரசன் கொல்லப்பட்ட சம்பவம் கூட ஞாபகத்திற்கு வருகிறது.

சிங்களவனுக்கு வெற்றி .வேறென்னத்தை சொல்வது..:(

Read More...

Wednesday, November 16, 2005

செவியின்பம் 2

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனின் பேச்சு

முதல் பகுதி

இரண்டாம் பகுதி



நன்றி http://www.worldtamilnews.com/

Read More...

Sunday, November 13, 2005

நான் புறக்கணிக்க மாட்டேன்

//நடிகை சுகாசினி மணிரத்தினம், நடிகை குஸ்பு ஆகியோரது திரைப்படங்களை வெளிநாடுகளில் புறக்கணிக்க வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தமிழ்த் திரைப்பட விநியோகத்தர்களும் தமிழ்த் திரைப்பட ரசிகர்களும் முடிவு செய்துள்ளனர்.//

திடீரென ஒரு அறிக்கை யார் இவர்கள்?

யார் தலைவர் யார் செயலாளர்? சும்மா அறிக்கை விட்டால் போதுமா?

சுகாசினி படத்தை பகிஸ்கரிப்போம் என்பதை விட்டு தில்லு இருந்தால் நெய்வேலி போராட்டத்தை மழுங்கச்செய்த ரஜனியின் அடுத்த சிவாஜி படத்தை திரையிடாமல் செய்யுங்கள்.அதை விட்டு செத்த பாம்பு அடிக்காதீர்கள்.




கீழே அறிக்கை
http://www.puthinam.com


சுகாசினி மணிரத்னம் திரைப்படங்களை வெளிநாடுகளில் புறக்கணிக்க முடிவு!!
[திங்கட்கிழமை, 14 நவம்பர் 2005, 04:39 ஈழம்] [ஐரோப்பிய நிருபர்]

தமிழர் பண்பாட்டிற்கும், தமிழர்களுக்கும் எதிராக கருத்துகளைக் கூறி வரும் நடிகை சுகாசினி மணிரத்தினம், நடிகை குஸ்பு ஆகியோரது திரைப்படங்களை வெளிநாடுகளில் புறக்கணிக்க வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தமிழ்த் திரைப்பட விநியோகத்தர்களும் தமிழ்த் திரைப்பட ரசிகர்களும் முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக ஐரோப்பிய வட-அமெரிக்க தமிழ்த் திரை ரசிகர்கள் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்ப் பெண்களின் கற்புப் பற்றி தவறாக கருத்துக் கூறிய நடிகை குஸ்புவிற்கு எதிராக தமிழ்நாட்டில் பெண்கள் அமைப்புக்கள் மற்றும் சமூக அமைப்புக்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குஸ்புவிற்கு எதிராக நீதிமன்றங்களில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. நீதிமன்றிற்குச் சமூகமளிக்கத் தவறியதற்காக நீதிமன்றங்கள் குஸ்புவிற்கு பிடியாணை பிறப்பித்துள்ளது.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் குஸ்பு தெரிவித்த கருத்துத் தவறானது என தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில், தமிழர்கள் பற்றிய இழிவான கருத்தொன்றை தமிழரல்லாத சுகாசினி மணிரத்தினம் வெளியிட்டுள்ளார்.
தமிழ்ப் பெண்கள் திருமணம் செய்வதற்கு முன்பே கற்பிழந்து போகிறார்கள் என்று குஸ்பு சொன்ன கருத்தைப் பற்றி எதுவுமே தெரிவிக்காத சுகாசினி, குஸ்புவைக் கண்டிப்பதற்குத் தமிழர்களுக்கு என்ன கொம்பு முளைத்திருக்கிறாதா? என்று தமிழர்களை மிகவும் அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார்.
குஸ்புவைக் கண்டித்ததற்காக தமிழர்கள் வெட்கித் தலை குனிய வேண்டும் என்றும் தன்னிடம் தமிழர்கள் இப்படிக் கேட்டிருந்தால் அவர்களைத் தான் கிழித்திருப்பேன் என்றும் சுகாசினி கூறியுள்ளார்.
இதற்கான கண்டனங்கள் சுகாசினியை நோக்கி தமிழகமெங்கும் எழும்ப ஆரம்பித்துள்ளது. சுகாசினி உறுப்பினராக உள்ள தென்னிந்திய நடிகர் சங்கமும் இதனைக் கண்டித்துள்ளது. தன் மீது நடவடிக்கை எடுக்க நினைத்தால் நடப்பதே வேறு என தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தை சுகாசினி மிரட்டியுள்ளார்.
தமிழர்களை அடிமைகளாக நினைக்கும் மனப்பாண்மையில் காட்டுமிராண்டித் தனத்தோடு நடந்து கொண்டிருக்கும் சுகாசினி மணிரத்தினத்திற்கு எதிராக தமிழறிஞர்கள் மற்றும் தமிழக ஊடக உலகம் என்பனவும் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளன.
திரை உலகிலும் சுகாசினிக்கு எதிரான கண்டனங்கள் வலுப்பெற ஆரம்பித்துள்ளன. இது குறித்துக் கருத்துத் தெரிவித்த மூத்த நடிகையான மனோராமா,"முதல்வர் ஜெயலலிதாவே கண்டனம் தெரிவித்த ஒருவிடயத்தில் சுகாசினி இவ்வாறு நடந்து கொண்டது தவறு" எனத் தெரிவித்துள்ளார். வேறு பல நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்களும் இதனை முற்றாகக் கண்டித்துள்ளனர்.
ஆறரைக் கோடி தமிழகத் தமிழர்களையும் அவமதிக்கும் விதமாக தமிழர்களுக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது? என கேள்வியெழுப்பியுள்ள சுகாசினிக்கு எதிராகத் தமிழகத் தமிழர்களின் போராட்டத்திற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா வாழ் தமிழர்களும் ஆதரவுக் கரம் கொடுக்கிறோம்.
முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட சில அரசியல் தலைவர்களும், தமிழின உணர்வாளர்களும் கண்டித்த குஸ்புவின் கருத்துப் பரிமாற்றத்தை நியாயப்படுத்துவதற்காக, தமிழர்களிற்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது என தமிழரல்லாத மனப்பான்மையுடன் பேசியுள்ள சுகாசினி, தமிழகத் தமிழ் அமைப்புக்கள் வேண்டுகோள் விடுப்பதற்கு அமைய, அனைத்துத் தமிழர்களிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டுமெனவும்,
இல்லாவிட்டால் இனிவரும் காலங்களில் மணிரத்தினத்தினதோ அல்லது சுகாசினியினதோ, திரைப்படங்கள் ஐரோப்பாக் கண்டம், அவுஸ்திரேலியாக் கண்டம், அமெரிக்கக் கண்டம், மற்றும் சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங்களில் திரையிட முடியாதபடி போராடுவோம்.
இது குறித்து மேற்குலக நாடுகளில் திரைப்பட விநியோகங்களில் ஈடுபட்டுள்ள தமிழர்கள் தங்களுக்குள் தொடர்பு கொண்டு அவர்களின் ஆதரவைத் திரட்டும் முதற்கட்ட நடவடிக்கையை இப்போது மேற்கொண்டு வருகிறோம். இதற்கு தாங்களும் பரிபூரண ஆதரவு தருவதாக இதுவரை நாம் தொடர்பு கொண்ட விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத் திரை அரங்கங்களில் திரைப்படங்கள் காண்பிக்கப்படுவதால் மட்டுமே தமிழ்த் திரை உலகத்தில் கோடிக்கணக்கான ரூபாய்கள் கொட்டிவிடுவதில்லை. வெளிநாடுகளில் வாழ்கிற தமிழர்களின் ஆதரவினால்தான் தமிழகத் திரை உலகம் கோடிகளில் புரள்கிறது என்ற உண்மையை தமிழ்த் திரையுலகினர் நன்கறிந்தவர்கள்.
ஏனவே, தமிழ்த் திரை உலகை நம்பிப் பிழைப்பவர்கள் தொடர்ந்தும் தமிழர்களது பண்பாட்டிற்கு எதிராகவும், தமிழர்களை அவமதிக்கும் வகையிலும் கருத்துகளைத் தெரிவிப்பது உண்ட வீட்டுக்கு இண்டகம் செய்கிற பச்சைத் துரோகமாகும். இது தொடர இனியும் அனுமதிக்க முடியாது.
இதுவரை காலம் இந்தத் துரோகச் செயல்களை சகித்துக் கொண்ட தாய்த் தமிழகத் தமிழர்கள் இப்போது வீதிகளில் துடைப்பங்களோடும், செருப்புகளோடும், தீப்பந்தங்களோடும் இறங்கி வந்துள்ளனர். தமிழர்களின் தன்மான உணர்ச்சியை நாம் வரவேற்கிறோம்.
இப் பிரச்சினையின் தார்ப்பரியத்தை உணர்ந்து மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்காதவரை, இத்தகைய கருத்துக் கூறுவோர், தமிழ்ப் படங்களுக்கு தமிழில் பெயரிட மறுப்போர் வெளிநாடுகளில் படப்பிடிப்புக்கு வந்தாலோ, தமிழகத்தின் எதிர்ப்பையொத்த எதிர்ப்புக்கு இங்கேயும் முகம் கொடுக்க நேரிடும் என்று பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More...