Wednesday, July 12, 2006

அவர் சொன்னார் இவர் சொன்னார்

பின்னூட்டங்களுக்கு நன்றி சொல்லி ஒவ்வொருமுறையும் நன்றி கூறி பின்னூட்டவரிசையில் முதலிடம் பெற்று அதற்கு என பிரத்தியேகமாக தர்ம அடி வாங்க விருப்பமில்லை. டோன்டு சார் போல உதவி செய்ய எனக்கு மகரகுழைநாதன் துணையுமில்லை.எனவே பின்னூட்டங்களுக்கான மறுமொழித் தனிப்பதிவு..

//இரஜனி ராம்கி குதித்த குதியைப் பார்த்தனீங்களா? பிரபாகரனையெல்லாம் தேவையில்லாமல் இழுத்துப் பிறகு அந்தப் பதிவையே சந்தடியில்லாமல் தூக்கிவிட்டார்//

யாரோ சொன்னாங்க..

நல்லவேளை நான் பார்க்கவில்லை இல்லையெனில் அதற்கு என நான் புதிதாக பதிவு போடவேண்டி வந்திருக்கும்.


செந்தழல் ரவி ...

//நான்கூட ஒரு பதிவை ரஜினி ராம்கி சொல்லி தூக்கினேன்..அதாவத்ய் ரஜினி - சிவாஜி போட்டோக்கள்//

இணையப் பலம் இரஜனி இரசிகர்களுக்கு இன்னமும் புரியாதது வேடிக்கையே..ஒரு செந்தழல் இரவியை தூக்கச்சொன்னால் இன்னொரு வன்தழல் இணையத்தில் போடும் என்பது தெரியாததா? அல்லது
இணையத்தில் சிவாஜி போட்டோக்கள் அதனுடன் வராமல் நின்றுவிட்டதா?.

இதில் வேடிக்கை என்னவென்றால் ஒரு பத்திரிகை .ஸ்பெயினில் உள்ள ஈழத்தமிழர்கள்தான் இந்தப் படங்களை இரகசியமாக எடுத்து வெளியிட்டுள்ளார்கள் என..செய்தி போட்டிருந்தது .படத்தின் தரத்தை ஒப்பிட்டுப்பார்க்கும்போது யாரோ யூனிட்டிலுள்ளவர்களே படத்தை எடுத்ததுபோலல்லவா இருக்கிறது..





G.Ragavan said...
//நடிகர்கள் வந்து காப்பாற்றுவார்கள் என்று நினைக்காத அளவிற்கு இலங்கைத் தமிழர்களுக்கு மூளை இருக்கிறது என்றே நான் நம்புகிறேன்.//

புலம் பெயர் ஈழத்தமிழர்கள் திரைக்கலைஞர்களை காப்பாற்றும்போது அவர்களுக்காக இவர்கள் அணில் போல ஒரு சிறு குரல் கொடுத்தாலே இந்திய மட்டத்தில் அது சற்று கவனிக்கப்படும். பிரச்சனை விரைவில் தீர பல அப்பாவி உயிர்கள் காப்பாற்றப்பட இது போன்ற சில நடவடிக்கைகளும் தேவைப்படுகின்றது.

நாகை சிவா said...

//நதி நீர் இணைப்பு திட்டம் தொடக்கப்பட்டு அதற்கு அவர் பணம் தராமல் இருந்தால், நீங்கள் கூறுவதை ஏற்றுக் கொள்ளலாம். அதை வரை அமைதி காணவும்//

ஆனானப்பட்ட தங்க கரண்டியில் உணவுண்ட பாகவதரிலிருந்து மாடியில் காரோடிய சந்திரபாபு வரையும் கடைசிக்காலத்தில் எப்படியிருந்தார்கள் என்பது வரலாறு சொல்லும்.எது எப்போ எப்படி நடக்கும் என்பதை யாரும் தீர்மானிக்கமுடியாது.நல்லது செய்வதை ஒத்திபோடக்கூடாது.தீயவற்றை ஒத்தி வைக்கலாம்.

எப்போ நதி நீர் இணைத்து எப்போ உதவி செய்து..

காலமாறறம்,, கடவுள்தான் காப்பாற்றவேண்டும் என்று சொல்லச்செய்யும் .அதே காலம்தான் தாலியை தனது மகளுக்கு எடுத்து கொடுங்கள் என்று சொல்லவும் செய்யும்.உஙகளுக்கு தெரியாததா?

//சூப்ரிம் கோர்ட் சொல்லியே கர்நாடகம் தண்ணீர் திறந்து விடவில்லை. பாரதிராஜா, ரஜினி சொல்லி தண்ணீர் தர போகின்றார்களா?//

இதற்கு பதில் பகவத்கீதைதான் . கடமையை செய்....

சுப்ரீம்கோர்ட்டைவிட பலமாக ஒரு மாநில அரசு இருக்குமானால் அதை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும்.


//Thamil said...

ரஜனிரசிகர்களுக்கு உண்மையில் மூளை இருந்தால் இனம் கண்டு கொள்வார்கள்.//

இரஜினி இரசிகர்கள் தமது தலைவரை விட செயலாளிகள்..அதற்கு சுனாமி செயற்பாடுகள் ஒரு உதாரணம்.அதை நாம் மறந்துவிடலாகாது.

புதுமை விரும்பி said...

//தீவு மன்னியுங்கள். தீவிரமாய் போய்க்கொண்டிருக்கும் வாக்குவாதத்தில் நடுவில் புகுந்து கலாய்ப்பதற்கு. செய்தி இதோ: இப்பொழுது முதலில் ஆடிய மகேந்திரன் தலைமையிலான "ரஜினி ரசிகர்களுக்கு மூளை இருக்கிறதா?" அணி முதல் இன்னிங்க்ஸ்ல் 110 ரன்கள் எடுத்து declare செய்திருக்கின்றனர். அடுத்ததாக வந்த பாலமுருகன் தலைமையிலான "இலங்கை தமிழர்களுக்கு மூளை இருக்கிறதா?" அணியினர் 18 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழக்காமல் இன்னும் விளையாடிக்கொண்டிருக்கின்றனர். இந்த 18 ரன்களில் captain பாலமுருகன் 11 ம் vice captain தீவு 7ம் அடித்த நிலையில் இருக்கின்றனர்.//

வாங்க சார் ..நானே எப்படா அவுட்டாவேன் என தவம் இருக்கையில் நீங்கள் வேறு..:)

பி.கு
நேரம் எடுத்து பின்னூட்டம் வழங்கிய அத்தனை சக பதிவர்களுக்கும் நன்றி கூறி உங்கள் பதிவுகளும் என்னை எழுதத் தூண்டும் பட்சத்தில் நேரமில்லையே என்று போகாமல் பின்னூட்டம் இடுவேன் என்று கூறிக்கொள்கிறேன்.நன்றி.

இலங்கை தமிழர்களுக்கு மூளை இருக்கிறதா? என்ற பதிவின் பின்னூட்டங்கள் இவை

Read More...

Tuesday, July 11, 2006

இலங்கை தமிழர்களுக்கு மூளை இருக்கிறதா?

பதிவர் பாலகுமாரன் ஒரு கேள்வி பதிவு ஒன்று போட்டுள்ளார் .அதற்கு எனது மனப்பதிவு இது.






தமிழ் மரபணுக்களில் வந்த இலங்கைத் தமிழர்களுக்கு மூளை இருக்கிறதா இல்லையா என்பதை அதே அணுக்களில் வந்த தொப்புள்கொடிகள்தான் சொல்லவேண்டும்.

கமல் வெறுமனே முன்னர் நரசிம்மராவுடன் அரசியல் கதைத்ததை விட சுகாசினி விடயத்தில் வாயைத்திறந்து தனது கருத்தையாவது சொல்லியிருக்கலாம்.பேசாமலிருப்பது நடுத்தரவர்க்கத்திற்கு வேணுமானால் இராஜதந்திரமோ அல்லது ஆட்டோ தடுப்பாகவோ இருக்கலாம்.ஆனால் சகல தடுப்புச் சுவர்களையும் கொண்ட மனிதாபித உணர்வுகொண்ட இந்த பிரபலங்கள், மௌனிப்பதுதான் வேடிக்கை இவர்கள் வாயைத்திறக்காமலிருப்பதுதான் பிரச்சனையை பெரிதாக்குகிறது.

நெய்வேலிப்பிரச்சனை கன்னடம் சார் பிரச்சனை என்பதற்காக ரஜனி மௌனமானார் அதனால் பாரதிராஜா போக்கில் உடன்படவில்லை என்று யாவருக்கும் தெரியும் .

நதியிணைப்பு கோடிருபாய் எல்லாம் பழங்கதையாயிற்று.

இரஜனி இரசிகர்கள் நல்லவர்கள் வல்லவாகள் என்பதில் எனக்கும் உடன்பாடே நானும் ஒரு இரஜனி இரசிகனே..

ஈழத்தமிழர்கள் விடயத்தில் இரஜனி என்றுமே வாயைத் திறக்கமாட்டார் என்பது நிதர்சனமான ஒரு உண்மை.

ஆனால் அதற்காக நாம் ஒன்றும் இரஜனி படத்தை ஒன்றும் பார்க்காமல் இருந்தோ பகிஸ்கரித்தோ விடமாட்டோம் என நண்பர் ஒருவர் சொன்னார்.

நான் துரோகி என முத்திரை குத்துவதற்குள் அவர் சொன்னார் இரஜனியின் அடுத்த படம் எல்லோரும் பார்த்து இன்புற அனைத்து இணையத் தளங்களிலும் மிக வேகமான முறையில் தரவிறக்கம் செய்து பார்க்ககூடியவாறு நல்ல தரத்துடன் வெளியிடுவோம் என்றார்.

நான் இராஜேந்தரகுமார் ஸ்ரைலில் ஙே என விழித்தேன்.

Read More...