Saturday, July 21, 2007

புளிரத்னா விருது

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ மறைமுகமாக இரண்டையும் சொல்லத் திராணியின்றி செயற்படுபவர்களுக்கு அல்லது அடக்கி வாசிப்பவர்களுக்கு வருடம்தோறும் இந்த விருது வருகிற ஆவணி மாதத்திலிருந்து வழங்கப்படவிருக்கிறது.

இதனை பெற்றுக்கொள்பவர் பலவித கருத்தாடல்களிலும் ஈழப்பிரச்சனை சம்பந்தமான வாதங்களை அவதானித்தும் வாசித்தும் வருபவராக இருந்திருக்கவேண்டும்.ஆனால் எந்த காரணம் கொண்டும் தனது ஆதரவு
கருத்தையோ அல்லது எதிர் கருத்தையோ தெரிவித்திருக்ககூடாது.

ஈராக் பாலஸ்தீனம் கொசோவா மற்றும் அன்டார்ட்டிக்கா போன்ற நாட்டு அரசியலில் அதிக ஆர்வம் கொண்டுள்ளவராகவும் அந்த நாட்டு விவாதங்களில் துணிந்து தனது கருத்தைசெப்புபவராகவுமிருந்திருக்கவேண்டும்.

ஈழப்பிரச்சனைக்கு எதிராக கதைப்போருடன் எதிராகவும் ஆதரவாக கதைப்போருடன் ஆதரவாகவும் கதைக்கும் செப்படி வித்தை தெரிந்திருத்தல்
விசேட தகுதியாக கொள்ளப்படும்.

இவர்கள் பேசும்போது அகதி என்ற சொல்லோ விடுதலைபு்புலிகள் என்ற சொல்லோ ராஜீவ் காந்தி என்ற சொல்லோ அல்லது ஆனையிறவு என்றோ
ஒரு காலமும் உச்சரித்திருக்கலாகாது.


இதுவே இந்த வருடத்திற்கான புளிரத்தினா விருதுக்கான நிபந்தனைகள்.வாற வருடம் யுத்த செப்படம்பர் 11 பெப்ரவரி 30 போன்ற அரசியல் காலச்சூழ்நிலையை கருத்திலெடுத்து நிபந்தனைகள் புதுப்பிக்கப்படும்.


உங்களுக்கு இந்த தகுதிகள் இருக்கும் பட்சத்தில் வழமைபோல் பின்னூட்டத்தில் கருத்திடாமல் இரகசியமாக மெயில் இடவும்.

இந்த விருது வழங்கும் வைபவம் மற்றும் மெடல் இரகசியமாகவே வழங்கப்படும் என்பதால்
ஒருவரும் இதை கண்டிக்கமாட்டார்கள் என்பது இதன் அனுகூலங்களில் ஒன்று.


புளிரத்தினா விழா கொமிட்டி
குழம்பு

Read More...

Wednesday, July 18, 2007

எனது புகைப்படம்

எங்கு திரும்பினாலும் புகைப்பட போட்டி பற்றியே பேச்சாகவிருக்கிறது.நானும் ஜோதியில் ஐக்கியம்.நான் அனுப்பவிருக்கும் புகைப்படம்.
கருத்து சொல்லுங்க.

Read More...

Monday, July 16, 2007

ரஜனி கோவணாண்டி மென்ரல்

சில சமயங்களில் பதிவை விட பின்னூட்டங்கள் மிக ஆழமாகவும் நகைச்சுவையுணர்வை கொண்டதாகவும் இருக்கும்.

பலமுறை நினைப்பதுண்டு இவைகளை ஏன் மீள் பதிவாக போட்டு மற்றையோர்க்கும் தெரியப்படுத்தக்கூடாது என.. .இன்று தென்றலின் பதிவில்
எனை கவர்ந்த சிரிப்பு வரச்செய்த பின்னூட்டம் ஒன்று.

ஏற்கனவே இரஜனி பற்றிய கோவணாண்டியின் கட்டுரையை போட்டு தென்றல் செல்வேந்திரன் உட்பட எல்லோரிடமும் அர்ச்சனை வாங்கிக்கொண்டுஇருக்கும் நேரத்தில் பொட்டிக்கடை வந்து ஊட்டிய பின்னூட்டமான

ரஜினி பரபரப்பை விரும்பும் ஒரு மெண்டல் ஏ கே ஏ நடிகன் அவனிடம் ப்ரமாதமான நடிப்பை எதிர்பார்ப்பதே தவறு...நீங்கள் வேறு எதையோ அல்லவா எதிர்பார்க்கரீர்கள்

அதற்கு

தென்றல் said...
வாங்க, Pot"tea" kadai!/ரஜினி பரபரப்பை விரும்பும் ஒரு மெண்டல் ஏ கே ஏ நடிகன்.../

Shh..hh.... கொஞ்சம் மெதுவா பேசுங்க... இதலாம் சத்தமா சொல்லக்கூடாது...

:)

பி.கு 1:-அவங்க பக்கத்திலிருந்து அவர்களை கேட்காமல் அவர்களது பின்னூட்டத்தை உருவி தனியாக பதிவு போடல் காப்புரிமை மற்றும் தனிப்பட்ட நபரது சொந்த கருத்து பாதுகாப்புரிமையை மீறுமா எனத் தெரியவில்லை.

பி.கு2
மாலன் பெயரிலி கவனிக்க..வலைப்பதிவுலகத்தில் யாரோ பின்னூட்டத்தை எனது வலைப்பதிவாக வரலாற்றில் முதன் முதலாக பதிந்துள்ளேன்.
பதிந்த திகதி 15.07.07 கி.பி நேரம்: உஙகளது நாட்டு நேரம். கவனத்தில் எடுக்கவும்.:)

Read More...