Thursday, September 29, 2005

அண்ணை சொல்வதுதான் நடக்கும்

முடிவாக எமது தடுப்புக்காவலை அகற்றி, அவரை தமிழீழம் அனுப்புவதற்கு உடன் ஒழுங்கு செய்வதாக உறுதி அளித்தார் ரஜீவ்.





திரு பாலசிங்கத்தின் விடுதலை நூலிலிருந்து....


1987ம் ஆண்டு ஜீலை மாதம் 29ம் திகதி இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. பாரதப் பிரதமர் ரஜீவ்காந்தியும் இலங்கை அரச அதிபர் ஜே.ஆர் ஜெயவர்த்தனாவும் கொழும்பில் நிகழ்ந்த விசேட வைபவ மொன்றின்போது இவ்வுடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

இந்த ஒப்பந்தம் கைச்சாத்திட்ட தினத்திற்கு முதல்நாள். அதாவது 1987ம் ஆண்டு ஜீலை மாதம் 28ம் திகதி புதுடில்லியில் இந்தியப் பிரதமர் ரஜீவ்காந்திக்கும், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் மத்தியில் ஒரு இரகசிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

கைச்சாத்து இடப்படாத அந்த இரகசிய உடன்பாடு பற்றி அனேகருக்குத் தெரியாது. அக் காலகட்டங்களில் ரஜீவின் நிர்வாக ஆட்சிபீடம் மூடி மறைந்த உண்கைகளில் இதுவும் ஒன்று ரஜீவ்-பிரபா உடன்பாட்டில் சம்பந்தப்பட்டவர்களில் நானும் ஒருவன் என்பதால் அந்த வரலாற்று நிகழ்வை இங்கு பதிவு செய்வது முக்கியமெனக்கருதுகிறேன்.

தலைவர் பிரபாகரனும், நானும் யோகியும், திலீபனும் புதுடில்லிக்கு அழைத்து வரப்பட்டு அசோக்கா விடுதியில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டது பற்றியும், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை எம் மீது திணித்து விட எடுக்கப்பட்ட முயற்சிகள் பற்றியும் முந்திய கட்டுரையில் விபரித்தேன்.

தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் விடுதலைப்புலிகளுக்கு சார்பான நிலை எடுத்துக்கொண்டதால் இந்திய அரசுக்கு சங்கடமான நிலை எழுந்தது. கொழும்பு சென்று ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு முன்பாக எப்படியாவது விடுதலைப் புலிகளை வழிக்கு கொண்டுவர வேண்டும் என ரஜீவ்காந்தி விரும்பினார்.

அவருக்கு ஒரேயொரு மார்க்கம்தான் தென்பட்டது. புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை நேரடியாகச் சந்தித்து, ஒப்பந்தம் பற்றி அவரது கருத்துக்களை கேட்டறிந்து, அவருடன் ஒரு இணக்கப்பாட்டிற்கு வருவதுதான் சாலச்சிறந்த வழி என ரஜீவ்காந்தி முடிவு எடுத்தார்.

1987ம் ஆண்டு ஜீலை மாதம் 28ம் திகதி நள்ளிரவு. அசோக்கா விடுதியில் ஆழ்ந்த தூக்கத்திலிருந்த என்னையும் பிரபாகரனையும் அவசர அவசரமாக எழுப்பினார்கள் இந்தியப்புலனாய்வு அதிகாரிகள். பிரதமர் ரஜீவ்காந்தி மிகவும் அவசரமாக எம்மைச்சந்திக்க விரும்புவதாகவும் உடனே புறப்படுமாறும் பணித்தார்கள்.

ஆயுதம் தரித்த கரும் ப10னைகளின் வாகன அணி பின் தொடர பிரதமமந்தியிரியின் இருப்பிடத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டோம். வீட்டு வாசலில் எமக்காக காத்து நின்றார் பிரதமர். ரஜீவ் காந்தியுடன் உள்ளக புலனாய்வுத் துறையின் அதிபர் திரு.எம்.கே.நாராயணனும் நின்று கொண்டிருந்தார்.

புன்முறுவல் ப10த்தபடி மனமுவந்து எம்மை வரவேற்ற பிரதமர், பிரபாகரனைப்பார்த்து 'உங்களைப் பற்றி நிறையக்கேள்ளிப்பட்டிருக்கிறேன். உங்களை நேரில் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார். அங்கு தமிழக அமைச்சர் பண்டுருட்டி இராமச்சந்திரனும் எமக்காக காத்து நிற்றார். கலந்துரையாடல் உடனேயே ஆரம்பித்தது. 'இந்த ஒப்பந்தம் குறித்து நீங்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக அறிந்தேன். ஒப்பந்தத்தில் உள்ள குறைபாடுகள் பற்றி விபரமாக கூறுவீர்களா? என்று கேட்டார் ரஜீவ்காந்தி. எமது கருத்துக்களை விபரமாக விளக்கும்படி பிரபாகரன் என்னைப் பணித்தார். ஒப்பந்தத்திலுள்ள குறைபாடுகளை ஒவ்வொன்றாக விளக்கினேன்.

இனப்பிரச்சினையைப் பொறுத்த வரை தமிழரின் உரிமை மிக முக்கியமானது. இலங்கையில் வட,கிழக்கு மாகாணங்களைக் கொண்ட நிலப்பரப்பில் தமிழர்களும், தமிழ் பேசும் முஸ்லிம் மக்களும் வரலாற்று hPதியாக வாழ்ந்து வருகின்றார்கள். இந்த நிலம் அவர்களது சொந்த நிலம். அவர்களது தாய்நிலம். இந்த தாயக நிலத்தைப் பிரிக்கும் எந்தத் திட்டத்தையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. வட-கிழக்கு மாகாணங்களைக் கொண்ட நிலப்பரப்பு தமிழ் பேசும் மக்களின் தாயகமாக இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டபோதும், இந்த தாயக நிலத்தின் பிரதேச ஒருமைப்பாட்டை கருத்து வாக்கெடுப்பிற்கு விடுவது என்ற தீர்மானத்தை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. இது தமிழர் தாயகத்தை கூறுபோட வழிவகுக்கும் என்று விளக்கினேன்.

அடுத்ததாக, மாகாண சபைக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரபரவலாக்கம் வரையறுக்கப்பட்டது என்றும் அது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை ப10ர்த்தி செய்யவில்லை என்பதையும் விளக்கினேன்.

எல்லாவற்றிற்கும் மேலாக, வட-கிழக்கு மாகாண சபை கலைத்துவிடும் அதிகாரம் இலங்கையின் அரச அதிபர் ஜெயவர்த்தனாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இவர் ஒரு சிங்கள இனவெறியர். தமிழ் மக்களுக்கு விரோதமானவர். இவர் தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவாரென நாம் நம்பவில்லை என்று கூறினார் பிரபாகரன்.

அடுத்ததாக ஆயுதக் கையளிப்பு பற்றிய விடயத்தை எடுத்துக் கொண்டோம். ஒப்பந்தம் கைச்சாத்தாகிய 72 மணிநேரத்திற்குள் ஆயுதங்களை ஒப்படைக்குமாறு கூறுவது அநீதியானது. எத்தனையோ ஆண்டுகளாக இரத்தம் சிந்திப் போராடிப் பெற்ற ஆயுதங்களை நான்கு நாட்களுக்குள், அதுவும் தமிழரின் தேசியப்பிரச்சினைக்கு இறுதித்தீர்வு கிட்டுவதற்கு முன்பாக கையளிக்கும் படி வற்புறுத்துவது எவ்வகையிலும் நியாயமாகாது என்றார் பிரபாகரன். நாம் சொல்வதையெல்லாம் ஆர்வமாகவும், பொறுமையாகவும் கேட்டபடி குறிப்பு எடுத்துக்கொண்டிருந்தார் ரஜீவ்காந்தி.

நாம் எமது நிலைப்பாட்டைக் கூறி முடித்ததும் ரஜீவ்காந்தி சொன்னார். 'உங்களின் மக்களின் பிரச்சினைக்கு ஒரு நீதியான தீர்;வு காண வேண்டும் என்பதில் எனது அரசாங்கம் கடும் முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த விடயத்தில் உங்களது ஒத்துழைப்பு எமக்கு அவசியம். நீங்கள் சொல்வது போல இந்த ஒப்பந்தத்தில் குறைபாடுகள் இருக்கத்தான் செய்கிறது. இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட மாகாணசபைத் திட்டம் ஒரு தற்காலிக ஒழுங்கு தான். அதிலுள்ள குறைபாடுகளை பின்பு நான் ஜெயவர்த்தனவுடன் பேசி நிவர்த்தி செய்ய முயற்சிப்பேன். தமிழர் தாயகம் பற்றி நீங்கள் எழுப்பிய ஆட்சேபனையை நான் கவனத்தில் எடுத்துள்ளேன். இது பற்றி நான் ஜெயவர்தனவுடன் பேசுவேன். கருத்து வாக்கெடுப்பு நடத்தாமல் அதனை ஒத்திவைக்குமாறு சொல்லுவேன்.

எதற்கும் நீங்கள் இந்திய அரசை நம்பவேண்டும்.

தழிழரின் நலன் மீது தான் நாம் அக்கறை கொண்டு செயல்படுகின்றோம். எனவே உங்களது ஆதரவு எமக்குத்தேவை. தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுத்து, அவர்களது பாதுகாப்பை இந்த ஒப்பந்தம் உறுதிப்படுத்தும். ஒப்பந்தத்தை நீங்கள் ஆதரித்தால் எமது கையைப்பலப்படுத்துவதாக அமையும்" என்றார்.

இந்தியப் பிரதமர் கூறியவற்றை தமிழில் மொழிபெயர்த்து பிரபாகரனுக்கு விளக்கமளித்தார் அமைச்சர் பண்டுருட்டி. 'இந்த ஒப்பந்தம் தமிழ் மக்களின் நலனைப் பேணவில்லை. மாறாக, தழிழ் மக்களின் நலனைப் பாதிக்கிறது. ஆகவே, இந்த உடன்படிக்கையை நாம் ஏற்றுக் கொள்ளமுடியாது." என்றும் அழுத்தம் திருத்தமாகச் சொன்னர் பிரபாகரன்.

ரஜீவ்காந்திக்கு நிலமை புரிந்தது. பிரபாகரன் தனது நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கிறார் என்பதையும் அவர் உணர்ந்து கொண்டார். விடுதலைப் புலிகளுடன் முரண்பட்டு காரியத்தைக் கெடுக்க அவர் விரும்பவில்லை. ஆகவே, தனது அணுகுமுறையைத் திடீரென மாற்றிக் கொண்டார்

;;;'உங்கள் நிலைப்பாடு எனக்குப்புரிகிறது நீங்கள் எடுத்த முடிவையோ, கொள்கையையோ மாற்றச்சொல்லி நான் கேட்கவில்லை. நீங்கள் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை. ஆனால் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருத்தால் போதும்." என்றார்
ரஜீவ்காந்தி.

பார்த்திர்களா?: பிரதமமந்திரியே உங்களது வழிக்கு வந்து விட்டார். ஒப்பந்தத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டாம். அது உங்கள் நிலைப்பாடு அதை நீங்கள் ஏற்கத் தேவையில்லை ஆனால் அதற்குத் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டாம் என்று மட்டும் பிரதமர் கேட்கிறார். இந்தச்சிறிய ஒத்துழைப்பையாவது நீங்கள் இந்தி அரசுக்காக செய்யலாம் அல்லவா?" என்று ரஜீவிற்காக வக்காலத்து வாங்கினார் பண்டுருட்டியார்.

இந்தச் சந்திப்பில் அவர் எதற்காக அழைக்கப்பட்டார் என்பது இப்பொழுது புலனாகியது. ரஜீவ் கொடுத்த விளக்கமும் அதற்குப் பண்டுருட்டியார் அளித்த வியாக்கியானமும் பிரபாகரனுக்கும் எனக்கும் திருப்தியை அளிக்கவில்லை. 'ஒரு விடயத்தை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அதனை நாம் எதிர்க்கின்றோம் என்றுதானே அர்த்தம்" என்று எனது காதோடு குசுகுசுத்தார் பிரபாகரன்.

ஏற்றுக்கொள்ளாததற்கும் எதிர்ப்புத் தெரிவிப்பதற்கும் இடையில் வேறுபாடு காட்டி எம்மைத் திருப்திபடுத்த முடியாது என்பதை ரஜீவ் உணர்ந்து கொண்டார் அதனால் பிரச்சினையை வேறு திசைக்கு எடுத்துச் சென்றார்.



'உங்களது இயக்கத்திற்கும், பொதுவாக தமிழ் மக்களுக்கும் ஜெயவர்த்தனாவில் நம்பிக்கையில்லை என்பது எமக்கும் தெரியும். எமக்கும் அவர் மீது நம்பிக்கையில்லைதான். என்றாலும் அவர் மீது கடும் அழுத்தம் பிரயோகித்து இந்த ஒப்பந்தத்தைச் செய்திருக்கின்றோம். மாகாண சபைத்திட்டத்தில் குறைபாடுகள் இருந்தாலும், பின்பு பேச்சுக்களை நடத்தி தமிழரின் சுயாட்சி அதிகாரங்களைக் கூட்டலாம் அல்லவா? அத்தோடு இந்த மாகாணசபைத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவது சாத்தியமல்ல. அதற்கு காலம் தேவை. அதற்கு முன்னராக, வட-கிழக்கில் ஒரு இடைக்கால அரசை நிறுவலாம். அதில் உங்களது அமைப்பிற்கு பிரதான பங்கு வழங்கலாம். இந்த இடைக்கால அரசு சம்பந்தமாக நான் உங்களுடன் ஒரு இரகசிய உடன்பாடு செய்து கொள்ளவும் ஆயத்தமாக இருக்கிறேன்." என்றார் ராஜீவ்காந்தி.


இந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிடவேண்டாம். தமிழர் தாயகத்தில் புலிகளின் நிர்வாக ஆட்சியை நிறுவுவதற்கு இது அருமையான சந்தர்ப்பம். இந்தியப் பிரதமருடன் ஒரு இரகசிய உடன்பாடு. இந்த யோசனையை நிராகரிக்க வேண்டாம். இந்திய-இலங்கை ஒப்பந்தம் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டாம். அதற்கு முன்னராக ரஜீவ் -பிரபா ஒப்பந்தம் வரப்போகிறது. இதனைப் பகிரங்கப்படுத்தத்தேவையில்லை. இரகசியமாகவே வைத்துக்கொள்ளலாம்." என்றார் அமைச்சர் பண்டுருட்டி.

இதெல்லாம் முன்கூட்டியே ஒத்திகை செய்யப்பட்ட நாடகம் போல எமக்குத் தோன்றியது. பிரபாகரனுக்கு எதிலுமே நம்பிக்கையில்லை. எதிலும் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் பண்டுருட்டி மிகவும் ஆர்வத்துடன் ரஜீவ்-பிரபா ஒப்பந்தத்திற்கு ஒரு வடிவம் கொடுக்க முயன்று கொண்டிருந்தார்.


வட-கிழக்கில் ஒரு இடைக்கால நிர்வாக ஆட்சி நிறுவப்பட்டு. அதில் விடுதலைப்புலிகளுக்கு பெரும்பான்மை பிரதிநிதித்துவம் வழங்கப்படுமென முடிவெடுக்கப்பட்டது. ஈழத்திலுள்ள எல்லாப் போராளி அமைப்புக்கும் இடைக்கால ஆட்சியில் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டுமென ரஜீவ் கேட்டுக்கொண்டார்.

பிரபா அதற்கு இணங்கவில்லை. இறுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும், ஈரோஸ் அமைப்புக்கும் மட்டும் குறைந்த அளவில் பிரதிநிதித்துவம் வழங்குவதென இணக்கம் காணப்பட்டது. இடைக்கால நிர்வாக ஆட்சியின் கட்டமைப்பு, அதிகாரம், செயற்பாடு பற்றி வாக்குறுதி அளித்தார். தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றம் நிறுத்தப்பட வேண்டுமென்றும், சிங்கள அரசாங்கம் புதிதாக காவல் நிலைகளைத் திறக்க கூடாதென்றும் பிரபாகரன் கேட்டுக் கொண்டார். அதற்கு ரஜீவ்காந்தி இணக்கம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் பொதுமக்களிடமிருந்து கட்டாய வரி வசூலிப்பு செய்வதாக ஜெயவர்த்தனா அரசு புலிகள் மீது குற்றம் சுமத்துகிறது. வரி வசூலிப்பை நிறுத்தமுடியாதா எனக்கேட்டார் ரஜீவ்காந்தி. அந்த வரிப்பணம் எமது இயக்கத்தின் நிர்வாகச் செலவுக்கே பயன்படுத்தப்படுகிறது. அந்தத்தொகையை இந்திய அரசு தருவதானால் வரி அறவிடுவதை நிறுத்தலாம் என்றார் பிரபாகரன். மாதாந்தம் எவ்வளவு தொகைப்பணத்தை வரியாகப் பெறுகிறீர்கள் என ராஜீவ் கேட்க, இலங்கை நாணயப்படி ஒருகோடி ரூபா வரை திரட்டுகின்றோம் என்றார் பிரபா. 'அப்படியானால் இந்திய நாணப்படி ஜம்பது லட்சம் ரூபா வரை வரும். அந்தப் பணத்தை நான் கொடுக்கிறேன்" என்றார் ரஜீவ்.


இறுதியாக ஆயுதக் கையளிப்பு விவகாரம் எழுந்தது. 'ஆயுதங்கள் முழுவதையும் கையளிக்குமாறு நாம் கேட்கவில்லை. நல்லெண்ண சமிக்ஞையாக சிறுதொகை ஆயுதங்களைக் கையளித்தால் போதும், பொதுமக்களுக்கும் போராளிகளுக்கும் பாதுகாப்பாக இந்திய அமைதிப்படை வட-கிழக்கில் செயற்படும். சிங்கள ஆயுதப்படைகளுடன் போர்நிறுத்தம் தொடர்ந்தும் இருக்கும்.

இந்த சூழ்நிலையில் உங்களுக்கு பேராயுதங்கள் தேவைப்படாது அல்லவா? என்றார் இந்தியப் பிரதமர். பிரபாகரன் பதிலளிக்கவில்லை. ஆழமாக சிந்தித்தபடி இருந்தார். திடீரெனக் குறுக்கிட்டார் பண்டுருட்டியார். 'எதற்காக யோசிக் வேண்டும். இந்தியா கொடுத்த ஆயுதங்களில் பழைய, பாவிக்க முடியாத துருப்பிடித்த ஆயுதங்கள் சிலவற்றை கொடுத்தால் போச்சு" என்றார். 'இந்தியா கொடுத்த ஆயுதங்கள் எல்லாம் அப்படித்தான்" என்று பிரபாகரன் கிண்டலாக பதிலளித்தார். பிரபா, 'பரவாயில்லையே, அதில் சிலவற்றைக் கொடுங்கள்.

இந்திய அரசு புதிதாக ஆயுதங்களை தரும் அல்லவா?" என்றார் அமைச்சர் பண்டுருட்டியார். தான் கூறியதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ரஜீவிடம் சொன்னார். அதை ஆமோதிப்பதுபோல பிரதமரும் தலையசைத்தார்.

அப்பொழுது அதிகாலை இரண்டு மணியிருக்கும். அன்று காலை ஒன்பது மணியளவில் புதுடில்லியிலிருந்து கொழும்பு புறப்பட இருந்தார் ரஜீவ்காந்தி. பிற்பகல் மூன்று மணிக்கு இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தாக இருந்தது.






புலிகளின் தலைவர் பிரபாவுடன் ஏதோ ஒரு சுமுகமான இணக்கப்பாட்டிற்கு வந்ததுபோல மகிழ்ச்சியுடன் காணப்பட்டார் ரஜீவ். பிரபாகரனுக்கு மனதில் மகிழ்ச்சி இல்லை. அவரது முகத்தில் அது தெளிவாகத் தெரிந்தது.



ஏதோ பெரிய சாதனை செய்து விட்டது போன்று பண்டுருட்டியார் திருப்தியுடன் தென்பட்டார். தூக்கமின்மையால் எல்லோருமே சோர்ந்து போயிருந்தோம். கூட்டம் முடியும் கட்டத்திற்கு வந்துவிட்டது. அப்பொழுது நான் அமைச்சர் பண்டுருட்டியிடம் கேட்டேன், 'ரஜீவ் -பிரபா இரகசிய ஒப்பந்தம் என பல விடயங்களை கதைத்தோம். பிரதம மந்திரியும் பல வாக்குறுதிகளைத் தந்திருந்தார். இதை எல்லாம் சுருக்கமாக எழுத்தில் இட்டு. அவரிடமிருந்து கைச்சாத்து பெற்றால் என்ன? என்றேன்.


பண்டுருட்டியார் சிறிது நேரம் யோசித்தார். 'இந்த இரகசிய உடன்பாட்டில் சர்ச்சைக்குரிய பல விடயங்கள் இருக்கின்றன அல்லவா? பண விவகாரம் இருக்கிறது. ஆயுதக் கையளிப்புப் பிரச்சினை இருக்கிறது. இதெல்லாம் அம்பலத்திற்கு வந்தால் இந்தியாவிலும் இலங்கையிலும் பெரும் அரசியற் சூறாவளியே ஏற்படும். உங்களுக்கு பிரதமரில் நம்பிக்கையில்லை? இது ஒரு புநவெடநஅநn யுபசநநஅநவெ. இரு பெரும் மனிதர்களின் எழுதப்படாத ஒப்பந்தமாக இருக்கட்டுமே? என்றார் அமைச்சர். ரஜீவ்காந்திக்கும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொன்னார்.


;'நீங்கள் எதற்கும் கவலை கொள்ளத்தேவையில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நான் நிறைவேற்றுவேன். அமைச்சர் சொல்வது போன்று இது ஒரு எழுதப்படாத புநவெடநஅநn யுபசநநஅநவெ ஆக இருக்கட்டும்." என்றார் ரஜீவ்காந்தி. இறுதிக் கட்டத்தில் நான் அவருடன் முரண்பட விரும்பவில்லை. முடிவாக எமது தடுப்புக்காவலை அகற்றி, அவரை தமிழீழம் அனுப்புவதற்கு உடன் ஒழுங்கு செய்வதாக உறுதி அளித்தார் ரஜீவ்.


ரஜீவ் காந்தியின் இல்லத்திலிருந்து அசோக்கா விடுதிக்கு நாம் போய்ச்சேர அதிகாலை மூன்று மணியாகி விட்டது. 'அண்ணா, இருந்து பாருங்கோ. இந்த இரகசிய ஒப்பந்தம் வாக்குறுதிகளும் என்றுமே நிறைவேறப்போவதில்லை. இதெல்லாம் ஒரு ஏமாற்று வித்தை என்று விரக்தியோடு கூறிவிட்டு தனது அறைக்குள் நுழைந்தார் பிரபாகரன்.


எனது அறைக்குள் சென்றபோது, விழித்தபடி காத்திருந்த திலீபன் விடியும் வரை என்னைத் தூங்கவிடவில்லை. ரஜீவ்-பிரபா சந்திப்பு பற்றியும், இருவருக்கும் மத்தியில் செய்து கொள்ளப்பட்ட இரகசிய ஒப்பந்தம் பற்றியும் விபரமாக திலீபனுக்குச் சொன்னேன். மிகவும் ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்தான். 'அண்ணன் என்ன சொல்கிறார்" என்று கேட்டான். 'பிரபாவுக்கு திருப்தி இல்லை. நிறைவேறப்போவதில்லை என்று உறுதியாகச் சொல்கிறார் என்றேன்.


ஆழமாக சிந்தித்தபடியிருந்த திலீபன் 'அண்ணை சொல்வதுதான் நடக்கும்" என்றான்.

உண்மையில் அப்படியேதான் நடந்தது. ரஜீவ்-பிரபா இரகசிய ஒப்பந்தம் நிறைவேற்றப்படவில்லை. இடைக்கால நிர்வாகக் அரசும் உருவாக்கப்படவில்லை.

தலைவர் பிரபாகரனுக்கு கொடுத்த வாக்குறுதிகளை இந்தியப் பிரதமர் ரஜீவ்காந்தி நிறைவேற்றவில்லை என்பதை உணர்ந்த திலீபன் ஆத்திரமடைந்தான். இந்திய அரசு செய்த வரலாற்றுத்தவறை உலகிற்கு அம்பலப்படுத்தும் நோக்கத்தோடு சாகும்வரை உண்ணாவிரப் போராட்டத்தைத் தொடங்கினான். இறுதியில் தனது உயிரை அர்ப்பணித்து உலகிற்கு உணர்த்தினான். எழுதப்படாத ரஜீவ்-பிரபா ஒப்பந்தம் பூகம்பமாக வெடித்தது. தமிழீழத்தில் ஒரு பேரெழுச்சியை உண்டு பண்ணியது.

திரு பாலசிங்கத்தின் விடுதலை நூலிலிருந்து....


திரட்டியது தீவு.

Read More...

Tuesday, September 27, 2005

Island of Blood

பிரபாகரனை நான் சந்தித்தமை வழமையான வன்னிக்காடு, பாதுகாப்பு இல்லங்களில் இடம்பெற்ற சந்திப்புக்களை விட முரண்பட்டதாக இருந்தது.





Anita Pratap






1987 இல் புதுடில்லியிலுள்ள ஐந்து நட்சத்திர அசோகா ஹோட்டலில் பிரபாகரனை நான் சந்தித்தமை வழமையான வன்னிக்காடு, பாதுகாப்பு இல்லங்களில் இடம்பெற்ற சந்திப்புக்களை விட முரண்பட்டதாக இருந்தது.

பிரதமர் ராஜீவ் காந்திக்கும் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுக்கும் இடையில் இலங்கை-இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தான வாரத்தில் அச்சந்திப்பு இடம்பெற்றது. இந்த ஒப்பந்தமே இலங்கைத் தீவின் தமிழ்ப் பகுதிகளுக்கு இந்தியப் படையினர் செல்வதற்கு வழிவகுத்தது. அத்தருணம் பிரபாகரனுக்கு மிக மோசமானதும், இம்சையானதுமான காலப் பகுதியாகும். அவர் இந்தியாவின் கைதியாக இருந்தார்.

ஐந்து நட்சத்திர வசதியுடன் கூடிய ஹோட்டலில் இருந்தாலும் இந்தியத் துருப்புக்களின் காவலுக்கு மத்தியில் வீட்டுக் காவலிலேயே வைக்கப்பட்டிருந்தார்.

பாதுகாப்பின்றி அவர் வெளியே செல்ல முடியாது.

அவருக்கு வரும் தொலைபேசி அழைப்புகள் யாவும் அவதானிக்கப்பட்டன.

அவருடன் அரசாங்க அதிகாரிகள் மட்டுமே பேசுவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

கொழும்பிலிருந்து இந்திய இராஜதந்திரிகள் புதுடில்லிக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்துமாறு பிரபாகரனைத் தூண்டியிருந்தனர். யாழ்ப்பாணத்திலிருந்து ஹெலிகொப்டரிலேயே பிரபாகரன் அழைத்துச் செல்லப்பட்டார்.

ஹோட்டலுக்குச் சென்ற பின்பே, தான் தடுத்துவைக்கப்பட்டுள்ளதை அவர் விளங்கிக் கொண்டார்.

அசோகா ஹோட்டலில் தான் பெற்ற அனுபவம் இந்தியாவுடனான தனது பகைமையுணர்வை இறுக்கமடையச் செய்தது என்று பல காலத்திற்குப் பின்பு என்னிடம் அவர் கூறியுள்ளார்.


தான் தந்திரமான முறையில் உதவியின்றி இருந்ததாகக் கருதிய அவர், இந்தியர்களின் கருணையை இனிமேல் ஒருபோதும் நாடிச் செல்வதை அனுமதிக்கக்கூடாது என்று பிரதிக்ஞை எடுத்திருந்தார்.


இந்திய இராஜதந்திரிகள் தம்மை ஒரு சிறு குழந்தையைப் போன்று நடத்தியவிதம் குறித்து அவர் முரண்பாடு கொண்டிருந்தார். நாட்டுப் ப+சணிக்காய், ஏழை ஒன்றுவிட்ட சகோதரன் போன்று அவரை நடத்தினர்.

தங்கள் எண்ணத்திற்கேற்ப நடத்த முயன்றனர். அவர் ஒரு குழுவின் தலைவரென்ற உண்மையை ஏற்றுக்கொண்டு அவர்கள் மரியாதை செலுத்தவில்லையெனவும் அவர் கூறினார்.

அச்சமயம், பங்க@ரில்'இந்தியா ருடே" யில் நான் பணியாற்றிக் கொண்டிருந்தேன். பிரபாகரனிடம் பேட்டி எடுப்பதற்காக புதுடில்லிக்குச் சென்றேன்.


டில்லிப் பயணத்திற்காக விமானத்தில் ஏறுவதற்கு முன்னமே கடுமையான பாதுகாப்பிற்கு மத்தியில் பிரபாகரனை எப்படியாவது சந்தித்து விடவேண்டும் என்பது தொடர்பாக என் மனதில் திட்டமொன்றைத் தீட்டியிருந்தேன். செய்தி சேகரிக்கச் செல்லும் போது ஒரு போதுமே கொண்டு செல்லாதவற்றை பொதியில் கட்டினேன். அவை பட்டுச்சேலைகள்.

அச்சமயம் புதுடில்லியில் பெரிய அமர்க்களமாக இருந்தது.

ராஜீவ்காந்தி ஒரு வெற்றிகரமான திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார்.

இலங்கையுடன் சமாதான உடன்படிக்கை மேற்கொள்ளும் திட்டத்தை உருவாக்கியிருந்தார். பிரபாகரனும், அதற்கு இணங்கியிருந்தார். உருப்பெருப்பிக்கப்பட்ட செய்திகள் காற்றில் பறந்தன.

ராஜீவ் புதிய நட்சத்திரமாக ஜொலித்தார்.

ஆனால், அவரை விமர்சிப்போர் போபர்ஸ் பீரங்கியிலும் பார்க்க உரத்துக் குரல் எழுப்பினர்.
ஆயினும் அந்த முழக்கத்தை இந்த வெற்றி சத்தமிழக்க வைத்துவிட்டது. சுவீடனிடமிருந்து போபர்ஸ் பீரங்கிகள் கொள்வனவு செய்தமை தொடர்பான மோசடிகள் குறித்து இச்சம்பவம் நடந்த சில மாதங்களுக்கு முன்பே பத்திரிகைகளில் பெரிதாக வெளிவந்தன. பீரங்கிக் கொள்வனவு பேரப் பேச்சில் 50 மில்லியன் டொலர்களை ராஜீவ் பெற்றுக் கொண்டதாகக் குற்றச்சாட்டுகள் வெளியாகியிருந்தன.

இந்த அவதூறு ராஜீவின் செல்வாக்கைப் பெரிதும் பாதித்தது. இந்தச் 'சமாதான குண்டு"டன் போபர்ஸ் மோசடிக் குற்றச்சாட்டு மழுங்கடிக்கப்பட்டுவிடும் என்று ராஜீவின் உதவியாளர்கள் கணிப்பீடு செய்தனர்.

இலங்கையின் இனப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருவதன் மூலம் ராஜீவுக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்பது பற்றிய நோக்கங்களை அவரின் ஆலோசகர்கள் சிந்திக் கசியவிட்டனர்.

பிரபாகரன் ஹோட்டலின் ஐந்தாம் மாடியில் வைக்கப்பட்டிருந்தார்.

நானும் ஐந்தாம் மாடியில் மற்றொரு பகுதியில் தங்கினேன். அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் அசோகா ஹோட்டல் மிகப் பிரமாண்டமானது. பெரிய நீண்ட தாழ்வாரங்களைக் கொண்டது. முதல்நாள் பிரபாகரனைச் சந்திக்க நான் முயற்சிக்கவில்லை. நான் ஒரு பட்டுச்சேலையை அணிந்தேன். பிளாஸ்ரிக் குப்பைக் கூடையை எடுத்து வைத்துக்கொண்டு ஹோட்டல் பணியாள் போன்று பாசாங்கு செய்து கொண்டு ஐந்தாம் மாடி தாழ்வாரமூடாக நடந்து சென்றேன்.

ஹோட்டலின் ஒரு பகுதி நுழைவாசலில் இரு காவலர்கள் நின்றனர். அப்பகுதியில் தான் பிரபாகரன் இருக்கிறார் என்பதைத் தெளிவாக விளங்கிக் கொண்டேன்.

அதனால், அந்த மார்க்கமாகச் சென்றேன். காவலர்கள் என்னைத் தடுத்து நிறுத்த முயன்றனர். புன்முறுவலுடன் பராமரிப்பு பணிப்பிரிவிலிருந்து வந்திருப்பதாகச் சொன்னேன். என்னை உள்ளே செல்ல அனுமதித்தனர்.


அந்தச் சந்தர்ப்பத்தில் நான் வேவு பார்க்கும் வேலையை மட்டும் செய்தேன். அதாவது பிரபாகரன் தங்கியிருந்த அறை எங்கிருக்கிறது? பாதுகாப்பு என்ன மாதிரி என்பதையே நோட்டம் விட்டேன். பின்னர் தாழ்வாரத்திற்கு வந்து வலது பக்கமாகச் சென்றேன். இந்தத் தாழ்வாரத்தை அண்டியிருந்த முதலாவது அறையில் சீருடையின்றி பல காவலர்கள் இருந்தனர். அதுதான் பிரபாகரனின் அறை என்பதில் சந்தேகம் இருக்கவில்லை. எனது நடையை மெதுவாக்காமல் சென்றுவிட்டேன்.


பின்னர் தாழ்வாரத்தை அண்டியிருந்த அறைகள் மூடப்பட்டு இருக்கின்றனவா? இல்லையா? என்பதைச் சோதனை செய்வது போலப் பாசாங்கு செய்து கொண்டு வந்தேன். அது எனது அன்றாட வேலையென்று காட்டிக்கொள்ளும் விதத்தில் பாசாங்கு காட்டினேன். ஹோட்டல் பணிப்பெண்கள் போன்று திறம்பட நான் நடித்தேன். அங்கிருந்த காவலர்களின் பார்வை என் பின்பக்கத்தைத் துளைத்துக்கொண்டு செல்லும் என்பது எனக்குத் தெரிந்திருந்தது.

சாதுர்யத்துக்கு அதிர்ர்;டக்காற்று அடித்தது.


ஒரு அறையின் கதவு இலேசாகத் திறந்திருந்தது. தட்டிவிட்டு சில செக்கன்கள் காத்திருந்தேன். பின் தள்ளிக்கொண்டு நம்பிக்கையுடன் உள்ளே சென்றேன். அந்த அறை வெறுமையாக இருந்தது. சுற்றுமுற்றும் பார்த்தேன். சிறிய ப+ச்சாடியில் வாடிய ப+ விழுந்து கிடந்தது. அதனை எடுத்துக் கொண்டேன்.

கண்காணித்துக் கொண்டிருக்கும் காவலர்கள் நான் எனது கடமையைச் செய்கிறேன் என்று நினைப்பதற்காக இதனைச் செய்தேன். பின்னர் காவலர்களைக் கடந்து சென்றேன்.
அவர்களைப் பார்த்து மிகச் சாந்தமாகப் புன்முறுவல் ப+த்தவாறு சென்றேன். ஏனெனில் பின்னர் அவர்கள் என்னை அடையாளம் கண்டுகொள்ள வேண்டுமென்ற நோக்கத்துடனே அவ்வாறு செய்தேன்.

மறுதினமும் முதல்நாள் மேற்கொண்ட நடைமுறையையே பின்பற்றினேன். புருவங்களை உயர்த்திப் பார்க்காமலேயே வாசலில் நின்ற இரு காவலர்களும் நான் உள்ளே செல்ல அனுமதித்தனர். ஹோட்டல் பணிப்பெண்ணென என்னையும் அடையாளம் கண்டுகொண்டனர்.

ஆனால், இத்தடவை வலது பக்கம் சென்று பிரபாகரனின் அறைக்கதவைத் தட்டினேன். வெளியில் காவலுக்கு நின்ற பொலிஸார் சற்றுச் சோம்பலாக என்னைப் பார்த்தனர்.

கதவைத் திறந்தவர் திலீபன்.

பிரபாகரனின் நம்பிக்கையான உதவியாளர்களில் ஒருவர். சென்னையில் அடிக்கடி அவரைச் சந்தித்துள்ளேன். 25 வயது நிரம்பிய அவர் மிக மென்மையாகப் பேசுபவர். சாந்தமான சுபாவம் கொண்டவர். அவரின் பேச்சிலும், போக்கிலும் கல்வி வாசனை வீசும்.

சில மாதங்களுக்குப் பின்பு யாழ்ப்பாணத்தில் சாகும் வரை உண்ணாவிரதமிருந்து திலீபன் இறந்துவிட்டார். சயனைட் அருந்தி இறக்காமல் காந்தியவழியில் மரணித்த சில விடுதலைப்புலி உறுப்பினர்களில் இவரும் ஒருவர்.


திலீபன் என்னை அடையாளம் கண்டுகொள்ள நீண்ட கணப்பொழுது எடுத்தது. எனது உத்தியோக வாழ்வில் என்னைப் பலர் சேலை அணிந்து பார்த்ததில்லை. அவர்களைப் போன்ற ஒருவராகவே திலீபனும் இருந்தார். துப்புரவுபடுத்த வந்திருப்பதாகப் பொலிஸாருக்குக் கேட்கும்படியாக உரத்துக் கூறியபடி அவருக்கு (திலீபனுக்கு) கண்ஜாடை காட்டினேன். அவர் பின்னுக்கு நகர்ந்தார்.

. முதலில் என்னைக் கண்டவுடன் பிரபாகரன் அதிர்ச்சியடைந்தார். பின்னர் திலீபன் மற்றும் அங்கிருந்தோரைப் போலவே பெரிதாக புன்முறுவல் ப+த்தார்.

நான் உடனடியாக வெளியே போகவேண்டுமெனவும் வெளியிலுள்ள பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுவிடக்கூடாது என்றும் நான் அவரிடம் கூறினேன்.

பின்னர் புகைப்படப்பிடிப்பாளருடன் பேட்டிக்காக திரும்பி வருவேன் என்று அவருக்குக் கூறிவிட்டு பாவிக்கப்படாத இரு ஆர்;ட்ரேக்களை எடுத்துக்கொண்டு திரும்பிச் சென்றேன்.


அன்றைய தினமே 'இன்டியா டூடே"யின் பிரபல புகைப்படப்பிடிப்பாளர் பிரமோத் புர்;கர்ணாவுடன் பேட்டியெடுக்கச் சென்றேன். குண்டுவெடிப்பு, படுகொலை நடந்த இடங்களுக்கு முதலாவதாகச் செல்லும் பத்திரிகையாளராக நான் இருந்தால் புர்;கர்ணா முதல் ஆளாக அந்த இடத்தில் நிற்கும் புகைப்படப்பிடிப்பாளராகும்.

பிரபாகரன் தங்கியிருந்த அறைக்கதவை நாம் அடைந்தபோது காவலர்கள் எம்மைத் தடுத்து நிறுத்தினர். அவர்கள் முன்னர் இருந்த காவலர்கள் அல்ல. கடமை நேரம் மாறிவந்த காவலர்கள் அவர்கள். பிரபாகரன் எம்மை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக அவர்களுக்குக் கூறினேன். எனது பெயர், எங்கிருந்து வருகிறேன் என்ற விபரங்களைத் தடுத்து நிறுத்திய காவலர் கேட்டார். எனது பெயர் அனிதா பிரதாப். நான் எங்கிருந்து வருகிறேன் என்பது அவருக்கு (பிரபாகரனுக்கு) தெரியும். நான் துரிதமாகத் திரும்பிப் போகவேண்டும். ஆதலால் விரைவாக அனுமதியுங்கள் என்று அதிகாரத்தொனியில் கூறினேன்.


1980களில் பெண் பத்திரிகையாளர்கள் பொதுவாக வெளியாரினால் அடையாளம் கண்டுகொள்ளப்படாத காலகட்டம் அது.

அதிலும் மோதல் நடைபெறும் இடங்கள், இந்த மாதிரியான பகுதிகளில் பெண் பத்திரிகையாளர்கள் செல்வது இல்லை. இதனால், நான் ஒரு பத்திரிகையாளரென காவலர்கள் சிறிதும் சந்தேகிக்கவில்லை. இதனாலேயே தடை செய்யப்பட்ட பல இடங்களில் நான் நுழைந்து விடக்கூடியதாக இருந்தது. எனது குறிப்பேட்டில் ஒரு கடதாசி துண்டைக் கிழித்து எனது பெயரை அதில் எழுதி காவலரிடம் கொடுத்தேன். அவர் அதனை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றார்.


பிரபாகரனின் தொனியிலிருந்து நான் ப+ரணமாக மாறுபட்டிருந்தேன். ராஜீவ்காந்தியின் அலுவலகத்திலிருந்து வெளிக்கிளம்பிய நம்பிக்கையின் செல்வாக்கு பல்வேறு விதத்தில் எம்மை ஆட்கொண்டிருந்தது. ஆனால், பிரபாகரன் நம்பிக்கையிழந்தவராகவே காணப்பட்டார்.
இலங்கை-இந்திய உடன்படிக்கை பிரச்சினைக்குத் தீர்வைக் கொண்டுவரும் என்று அவர் சிந்தித்திருக்கவில்லை.

தமிழ்ப் பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட அனுப்பப்படவுள்ள இந்தியப்படையினர் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்காவிடின் நான் அவர்களுடன் போராட வேண்டியிருக்கும் என்று பிரபாகரன் கூறினார்.

அபாயமணி என் செவிகளில் கிணுகிணுக்க ஆரம்பித்தது.

உடன்படிக்கை தமிழ் மக்களின் பிரச்சினைக்கான முடிவல்ல. அதுவொரு அத்தியாயம். இலங்கையில் ஒரு தீர்வொன்று எட்டப்படப் போகிறது என்று நீங்கள் நினைக்கும் ஒவ்வொரு தடவையும் அந்தச் சிந்தனை தவறு என்பது நிரூபணமாகி விடுகிறது.

நிலைமை மேலும் மோசமடைந்து விடுகிறது. இது அந்நாட்டின் சாபக்கேடாக உள்ளது. நீண்ட சுரங்கப் பாதையின் முடிவில் வெளிச்சம் தெரிவது போல் தோன்றினாலும் அது பயணித்துக் கொண்டிருக்கும் ரயிலின் முன்பக்க வெளிச்சம் போன்றுதான் உள்ளது.

பிரபாகரன் பேசியபோது அவரின் முகபாவத்தை அவதானித்தபோது அவர் இந்தியர்களுடன் போரிடுவாரென்பது குறித்து எனக்கு சந்தேகமில்லாலே இருந்தது.

அவர் ஒரு போதும் வெற்று வேட்டான அச்சுறுத்தலை விடுபவரல்ல. நான் அலுவலகத்துக்குத் திரும்பிச் சென்று பேட்டியைத் தயாரித்தேன்,
'உடன்படிக்கை" உறுதியான சமாதானத்தைக் கொண்டு வரப்போவதில்லை என்ற பிரபாகரனின் நம்பிக்கையீனமான முன்கூட்டித் தெரிவித்த கருத்தையே பேட்டியின் இறுதியில் குறிப்பிட்டு அதனைப் ப+ர்த்தி செய்தேன்.



மூன்று மாதத்திற்குள்ளேயே அந்த உடன்படிக்கை முடிவுக்கு வந்தது. உடன்படிக்கை முறிவடைவதற்கு ஒரு மாத காலத்திற்கு முன்பாக யாழ்ப்பாணத்தில் பிரபாகரனை நான் சந்தித்தேன்.


அந்தப் பேட்டி நேரம் முழுவதும் தனது சிறுத்தைக் குட்டியான சீதாவை வருடியவாறு பிரபாகரன் இருந்தார். அது மேசையின் மீது படுத்துக் கிடந்தது. அதுவொரு கவர்ந்திழுக்கக்கூடிய சிறுத்தைக்குட்டி. சில மாதங்களுக்குப் பின்னர் அது இறந்து விட்டது. அதனை இந்தியப் படையினர் கொன்று விட்டனர்.


கிட்டத்தட்ட பிரபாகரனை இந்தியப் படையினர் பிடித்து விடக்கூடிய தருணமாக அது இருந்தது. பிரபாகரனின் மறைவிடத்தைத் தாங்கள் சூழ்ந்துக் கொண்டிருந்ததாக இந்தியப்படையினர் தெரிவித்திருந்தனர். ஆனால், அதற்கு சில கணங்கள் முன்பாக பிரபாகரன் சமாளித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டார்.


அவர் துரிதமாகச் சென்றதால் அவரின் செல்லப்பிராணியை விட்டுச் செல்ல நேரிட்டது.

அதனைப் புகைப்படங்கள் எடுத்து இந்தியர்கள் தாங்கள் உண்மையாகவே பிரபாகரனை நெருங்கிவிட்டதாக நிரூபிப்பதற்கு இறந்துகிடந்த சிறுத்தையைக் காட்டினார்கள்.


1987 இல் பிரபாகரனை நான் பேட்டி கண்டபோது குறிப்பிடத்தக்க முக்கியமான மாற்றம் அந்தக் கெரில்லாத் தலைவர் உடல் ரீதியாக அடைந்திருந்த மாற்றமாகும்.

ஆஜானுபாகுவான தோற்றம், அடர்த்தியான கத்தரித்த தலை மயிர் என்பவற்றுடன் அவர் காணப்பட்டார்.


பேட்டியின் போது மிக சாவகாசமாக காணப்பட்டார். பேட்டி மணிக்கணக்கில் நீடித்தது. நான் ஆங்கில மொழியில் கேள்வி கேட்டேன். அக்கேள்விகள் தமிழில் மொழி பெயர்க்கப்படும். அவர் அதற்குத் தமிழில் பதிலளிப்பார். எனக்கு தமிழ்மொழி விளங்கும். ஆயினும், அவர் கூறுவதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து சொல்லுமாறு கேட்டுக் கொண்டேன். ஏனெனில், நான் புரிந்து கொண்டவை மிகச்சரியானதாக இருக்கவேண்டும் என்பதை நிச்சயப்படுத்திக் கொள்வதற்காகவே அவ்வாறு கேட்டுக் கொண்டேன். இது நேரமெடுக்கும் விவகாரமாகும்.


ஆனாலும், எப்போதுமே பிரபாகரன் பொறுமையைக் கடைப்பிடித்தார்.


பேட்டி அரைவாசியில் சென்று கொண்டிருந்த சமயம் பிரபாகரனின் திருகோணமலைப் பகுதி தளபதி அங்கு வந்தார். சிறிய கண்களுடன் வேறுபட்ட தோற்றத்துடன் காணப்பட்ட அவரைப் பார்த்தால் இரை தேடும் புலியைப் போன்று காணப்பட்டார்.

ஏதோவொன்று நடத்திருக்க வேண்டும். பிரபாகரனின் காதுக்குள் தமிழில் குசுகுசுத்தார்.
காதுகொடுத்துக் கேட்க முயற்சித்தேன். ஆனால், அவர் என்ன கூறினார் என்பதை என்னால் கிரகித்துக் கொள்ளமுடியவில்லை. ஆனால், அவர் ஒரு கவலையான செய்தியைத்தான் கூறினார் என்பது நிச்சயமாகத் தெரிந்தது.


ஒருவருடைய முகம் சடுதியாக மாறுதலடைவதை நான் ஒருபோதும் கண்டதில்லை. புலேந்திரன் கூறுவதைப் பிரபாகரன் செவிமடுக்க ஆரம்பித்த போதும் அவருடைய முகம் மாற்றமடையாமல் இருந்தது. தான் கொண்டுவந்த செய்தியை விபரமாக புலேந்திரன் தொடர்ந்து கூறியபோது, பிரபாகரனின் முகம் மாறுதலடைய ஆரம்பித்தது.

அவர் கூறிமுடிக்க சுமார் 5 நிமிடங்கள் எடுத்தன.

பிரபாகரனின் முகத்தில் இருண்டு சோக ரேகைகள் படிந்தன.
அவரின் கண்ணிமைகள் சிலிர்த்து கரிப்படைந்தது.
அறுபது பாகை கோணத்தில் புருவங்கள் உயர்ந்தன. கண்கள் இகழ்ச்சியாகச் சரிந்தன. வாய் இறுகமூடியது. குழம்பிப் போன தன்மை தெரிந்தது. அவர் சற்றுக் கருமையான நிறமுடையவர். ஆனால், பச்சோந்தி போன்று மாறுபட்ட தோற்றத்தில் என் கண்பார்வைக்குத் தென்பட்டார். முகம் இறுகிக் கருமையாகியது. கிட்டத்தட்ட அவரின் தலைமயிரையொத்த நிறமாகத் தென்பட்டார்.

எனக்கு மயிர் கூச்சல் ஏற்பட்டதை உணர்ந்தேன்.

முழுமையான மாற்றத்தை அவரில் அவதானித்தேன். இடி இடிப்பதற்கு முன்னராக காணப்படும் மேக மூட்டம் போன்று அவர் காணப்பட்டார்.
ஆனால், அவர் எதனையும் வெளிப்படுத்தவில்லை. உணர்ச்சியை வெளிக்காட்டாதவராக அமர்ந்தார். மென்மையாகப் பேசினார். அவரின் உதடுகளிலிருந்து தப்பியோடிய வார்த்தைகள் சீறொலியாக எழுந்தன.


எனது ஒரு பையன் காயமடைந்தால் அவர்களில் பத்துப் பேரைக் கொல்வேன் என்று அவர்களுக்குச் சொல்லுங்கள். எனது ஆட்கள் மீண்டும் தாக்கப்பட்டால் நாம் ஆயுதங்களை மீண்டும் எடுக்க நேரிடும் என்று அவர் கூறினார்.

கிழக்குப் பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் சில தமிழ்ப் பொதுமக்களும், புலி உறுப்பினர்களும் காயமடைந்திருந்தனர்.

இந்தியப் படையினருக்கே இந்த அச்சுறுத்தலை பிரபாகரன் விடுத்திருந்தார்.


அவர் விடுத்த செய்தி தெளிவானது. அதாவது, தமிழர்களின் பாதுகாப்பை இந்தியர்கள் உறுதிப்படுத்தாவிடின் புலிகள் மோதலுக்கு திரும்பி வந்துவிடுவார்கள் என்பதே அந்தச் செய்தியாகும்.

விடுதலைப்புலி உறுப்பினர் ஒவ்வொருவரினதும் மரணத்திற்கும், காயத்திற்கும் அவர் பழிவாங்குவார் என்பதே அவரின் செய்தியாகும்.

தொடரும்..

Read More...

Monday, September 26, 2005

திலீபன் ஆற்றிய உரை.1987

தமிழ் மக்கள் எழுச்சியை மழுங்கடிக்கவே காலாகாலமாக சமாதான ஒப்பந்தம் ஏற்படுத்தப்படுகிறது.தமிழ் மக்கள விழிப்பாக இருக்கவேண்டும்.1987 ம் ஆண்டு கோட்டை முன்றலில் நடாந்த மறியல் போராட்டத்தில் திலீபன் ஆற்றிய உரை..

Read More...