Thursday, February 21, 2008

பாலமுருகனின் ‘சோளகர் தொட்டி’ நாவலைப்படித்ததால் ஏற்பட்ட பதட்டம் அது




தீரா நதி - அ.மார்க்ஸ்
சில மாதங்களுக்கு முன் ஒரு காலை நேரத்தில் நண்பரும் எழுத்தாளருமான வெளி ரங்கராஜனிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. சற்றே பதட்டம் நிறைந்த குரலில் அவர் பேசினார். பாலமுருகனின் ‘சோளகர் தொட்டி’ நாவலைப்படித்ததால் ஏற்பட்ட பதட்டம் அது. அந்நாவல் குறித்த ஒரு விரிவான அறிமுகக் கூட்டம் ஒன்றை சென்னையில் நடத்த வேண்டும் என்றார். சமூக அநீதிகளைக் கண்டு கலங்குவதோடு, ஒரு எழுத்தாளன் என்கிற பொறுப்பில், அவற்றிற்கெதிராக ஏதேனும் செய்ய வேண்டும் எனத் துடிப்பவர் ரங்கராஜன். அண்டை மாநிலங்களில் உள்ள அளவு இங்கே நமது எழுத்தாளர்களுக்குச் சமூகப் பொறுப்பு இல்லாதது குறித்த கரிசனம் நிறைந்தவர் அவர்.

வீரப்பன் வேட்டை என்கிற பெயரில் தமிழக _ கர்நாடக அதிரடிப் படையினர் வீரப்பன் நடமாட்டமிருந்த வனப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மீது அவிழ்த்துவிட்ட வன்கொடுமைகளைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டது ‘சோளகர் தொட்டி’. பாலமுருகன் ஒரு எழுத்தாளர் என்பதைக் காட்டிலும் ஒரு மனித உரிமை போராளியாகவுமிருந்ததே அப்படி ஒரு நாவல் தமிழில் உருப்பெற்றதற்கான காரணம். ஏனெனில், நமது எழுத்தாளர்கள் பலருக்கும் இங்கு நடைபெறும் இத்தகைய மீறல்கள் பற்றிய அறிதல் குறைவு. காவல்துறை, நீதிமன்றம், விசாரணை ஆணையங்கள், அரசு ஆகியன பற்றி ஒரு வகை விவீபீபீறீமீ நீறீணீss விமீஸீtணீறீவீtஹ் தான் நம் எழுத்தாளர்களிடம் உண்டு. தாங்கள் நடத்துகிற பத்திரிகைகளில் தலையங்கம் எழுதுவதற்காக அவ்வப்போது ஆவேசப்படுவதோடு சரி.

1993_ல் வீரப்பன் கும்பல் நடத்திய ஒரு தாக்குதலில் ஐந்து தமிழக போலீசார் உட்பட 22 பேர் கொல்லப்பட்டதற்குப் பின்னரே இங்கு தேடுதல் வேட்டை தீவிரமாகியது. தமிழ்நாடு _ கர்நாடக அரசுகள் இணைந்து கூட்டுச் சிறப்பு அதிரடிப்படை ஒன்றும் உருவாக்கப்பட்டது. நமது ஊடகங்களால் எதற்கும் துணிந்த மாவீரராகவும் கே.பி.எஸ்.கில், ஜுவியன் ரிபெரோ ‘ரேஞ்சிலான’ ‘சூப்பர் போலீசாகவும்’ சித்திரிக்கப்படும் வால்டர் தேவாரம் இந்தக் கூட்டு அதிரடிப்படையின் தலைவர். போலி மோதல்களில் நக்சலைட்டுகள் பலரைச் சுட்டுக் கொன்றது இவரது முந்தைய சாகசங்களில் முக்கியமானது. மிடுக்கான தோற்றம், முறுக்கிவிடப்பட்ட, வீரப்பனைக் காட்டிலும் விடைத்து நிற்கக்கூடிய மீசை ஆகியவற்றுடன் தனது பிம்பத்தைக் கட்டமைத்துக் கொள்வதில் கில்லாடி இவர். வீரப்பன் வேட்டையன்றில் அடிபட்டு மருத்துவமனையிலிருந்த இவரைப் பேட்டி கண்டு எழுதப்பட்ட ஆனந்த விகடன் கட்டுரை ஒன்று நினைவுக்கு வருகிறது. மீசையைச் சிரைத்துவிட்டு படுக்கையில் கிடந்த அவரைப் புகைப்படக்காரர் படம் எடுக்க முன்வந்தவுடன், சடக்கென எழுந்து கைப்பையில் வைத்திருந்த மீசையை எடுத்து ஒட்டிக் கொண்டு அவர் போஸ் கொடுத்தது அந்தக் கட்டுரையில் பதிவாகியிருந்த ஒரு செய்தி.

வீரப்பனுக்கு ஆதரவளிக்கிறார்கள் என்ற பெயரில் வனப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியினரும், வீரப்பன் சாதியைச் சேர்ந்த ஏழை எளியவர்களும் அதிரடிப் படையினரால் சொல்லொணாத் துன்பங்களுக்கும் கடுஞ் சித்திரவதைகளுக்கும் ஆளாக்கப்பட்டனர். சித்திரவதைக்கெனவே ‘‘ஒர்க்ஷாப்‘’’ என்றொரு கூடத்தை அமைத்திருந்தார் தேவாரம். அம்மணமாக்கி விசாரணை செய்வது, உடலுறுப்புகளில் மின்சாரம் பாய்ச்சுவது, பெண்களாயின் அவர்களின் கணவர், பெற்றோர், சகோதரர் முன்னரே பாலியல் வன்முறைக்குள்ளாக்கி வன்புணர்ச்சி செய்வது, கடைசியாய்ச் சுட்டுக் கொன்று உடல்களை ஆற்றில் வீசி எறிவது... முதலிய காரியங்களுக்காகவே நிறுவப்பட்டது அந்த ‘ஒர்க்ஷாப்’. கொல்லப்பட்டவர்களை ஆற்றில் வீசி எறிவதற்கெனவே கைது செய்து பலகாலம் வைக்கப்பட்டிருந்த ஒருவர் நேரடியாகத் தனது அனுபவத்தை பொது, நிகழ்வொன்றில் வெளிப்படுத்தியதை நான் கேட்டுள்ளேன். மதுரையிலுள்ள ‘மக்கள் கண்காணிப்பகம்’ இவற்றை ஆவணப்படுத்தியுள்ளது.

அதிரடிப்படையினருக்கு விசாரணை செய்யும் உரிமை கிடையாது. கைது செய்து, அருகிலுள்ள காவல்நிலையத்தில் ஒப்படைப்பது மட்டுமே அவர்களுக்கு இடப்பட்ட பணி. இருந்தும் விசாரணை உரிமையைக் கையில் எடுத்துக் கொண்டார் தேவாரம். விசாரணையின் பெயரால் வேறு பல உரிமைகளும் அதிரடிப் படையினருக்குக் கைவசமாகியது.

இந்தக் கொடுமைகளெல்லாம் நடைபெறத் தொடங்கி சில ஆண்டுகளுக்குப் பின்னரே மனித உரிமை அமைப்புகளின் கவனத்திற்கு இவை வந்தன. அவர்களின் தீவிரமான முயற்சிகளின் விளைவாக, 1999 ஜூன் 28 அன்று தேசிய மனித உரிமை ஆணையம், ஒரு விசாரணை ஆணையத்தை நியமித்தது. ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.ஜே. சதாசிவம் தலைவர்; முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர் சி.வி.நரசிம்மன் உறுப்பினர். உடனடியாக இதற்குக் காரணமாக இருந்த சிவில் உரிமை அமைப்புகளின் மீது காழ்ப்பைக் கக்கத் தொடங்கியது காவல்துறை.

‘‘சுளையாக ஈட்டுத்தொகை கிடைக்கும் எனச் சொல்லி ஏழைப் பழங்குடியினரை எங்களுக்கு எதிராகத் தூண்டி விடுகின்றனர்’’ என தேவாரம் பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்தார் (‘தி வீக், மார்ச் 19, 2000). விசாரணை ஆணையத்தைச் செயல்பட விடாமல் நீதிமன்றத் தடையன்றையும் (மார்ச், 2000) பெற்றனர். இரண்டாண்டுகட்குப் பின் தடை நீக்கப்பட்டு பிப்ரவரி 2002_ல் மறுபடி பணி தொடங்கியது. 2003 இறுதியில் ஆணையம் தனது அறிக்கையையும் பரிந்துரைகளையும் அரசுக்கு அளித்த பின்னும் அடுத்த இரண்டாண்டுகள் வரை அது வெளியிடப்படவில்லை. மாநில அரசுகளிடமிருந்து பதில்கள் வரவில்லை என சதாசிவ ஆணையம், கூறியது. ஓராண்டுக்குப் பின் ‘ஒரிஜினல் காப்பி’யைத் தொலைத்துவிட்டோம். அதனால்தான் பதிலளிக்கவில்லை என கர்நாடக அரசு காரணம் சொல்லியது. மீண்டும் மனித உரிமை அமைப்புகள் அளித்த அழுத்தங்களின் காரணமாக 2005_ல் அந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்த அறிக்கை குறித்து ஜோர்டான் ஃபிளெட்சரும் சுப்ரதிபிதா சர்காரும் எழுதிய நல்ல கட்டுரை ஒன்று வெளி வந்துள்ளது (ணிறிகீ, நவ. 17, 2007) வெளி ரங்கராஜன் அதைப் படிக்க நேர்ந்திருந்தால், அதிர்ச்சியில் மயக்கமடைந்தே விழுந்திருப்பார்.

பலரும் சட்டவிரோதமாகக் காவலில் வைக்கப்பட்டிருந்ததையும், சுமார் 38 பேர் வரை ‘காணாமலடிக்கப்பட்டிருப்பதையும், ‘ஒரேஒரு பெண்’ மட்டும் வன்புணர்ச்சி செய்யப்பட்டிருப்பதையும், பலர் சித்திரவதை செய்யப்பட்டிருப்பதையும் ஏற்றுக் கொண்டு, இதற்காக 89 பேருக்கு 2.8 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என ஆணையம் ஆணையிட்டுள்ளதை அறியும்போது, மனித உரிமை அமைப்புகளின் முயற்சிகள் குறித்து நாம் மகிழ்ச்சியடையக் கூடும். ஆனால் பாதிப்பிற்குள்ளானவர்களின் சாட்சியங்கள் அனைத்தையும் இரக்கமின்றிப் புறக்கணித்து, வன்கொடுமைகளுக்குக் காரணமான கொடூரர்களைச் சட்டத்தின் பிடியிலிருந்து நழுவவிட்டிருப்பதை அறியும் போதுதான், ஒருவர் நமது ஜனநாயகத்திலும், அரசியல் சட்டத்தின் ஆட்சி என்கிற கருத்தாக்கத்திலும் நம்பிக்கை இழக்கக்கூடும்.

நமது நீதிபதிகளின் ‘‘உள்நோக்கங்களை’’ விமர்சிப்பதற்குச் சட்டத்தில் இடமில்லை. அப்படிச் செய்வது நீதிமன்ற அவமதிப்பிற்குரிய குற்றம். உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தன் மகனுக்காக பதவிக் காலத்தில் ஊழல் புரிந்தார் என ஒரு இதழ் ஆதாரபூர்வமாக எழுதினால், தண்டனை பத்திரிகை ஆசிரியருத்தான். திண்ணியத்தில் தாழ்த்தப்பட்டவர்களின் வாயில் மலத்தைத் திணித்த ஆதிக்க சாதியினரை விடுதலை செய்த நீதிபதி, அதே சாதியைச் சேர்ந்தவர் என்பதை நான் இங்கே சுட்டிக் காட்டினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு ஆளாக நேரிடும். அபரிமிதமான அதிகாரத்துடன் ஆட்டம் போட்ட அதிரடிப்படையினரும், கிட்டத்தட்ட கிராமமே பிணைக் கைதியாக இருக்க நேர்ந்த சூழலில், சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான எந்த சட்ட வழி முறைகளும் இல்லாத நமது நாட்டில் இந்த எளிய மக்களைத் தைரியமூட்டி, செலவுசெய்து அழைத்து வந்து, ஆணையத்தில் முன் நிறுத்தி சாட்சியங்கள் சொல்ல வைப்பது எத்தனை பெரிய விஷயம். வன்புணர்ச்சி முதலான வழக்குகளில் அறைக்குள்ளேயே விசாரணை நடத்த வேண்டும் என்கிற உச்சநீதிமன்ற ஆணையையும் புறக்கணித்து விட்டு, யார் தம்மைக் கொடுமைப்படுத்தினரோ அந்த அதிகாரிகளின் கண் முன்னே சாட்சியங்களைச் சொல்ல வைத்தது சதாசிவ ஆணையம். சில ‘டெக்னிக்கல்’ காரணங்களைச் சொல்லி சில கொடூரமான சட்ட மீறல்கள் குறித்த சாட்சியங்களைப் பதிவு செய்யவும் மறுத்தது.

பாதிக்கப்பட்டவர்களை நம்பிக்கைக்குரியவர்களாகக் கருத மறுத்தார் கற்றறிந்த நீதிபதி சதாசிவம். காரணம்? ‘‘வீரப்பன் தேடுதல் வேட்டையில் மேற்கொள்ளப்பட்ட கடும் போலீஸ் நடவடிக்கைகள் என்பன பழங்குடியிலும் மத்தியிலும் காவல்துறையினர் மத்தியிலும் பரஸ்பரம் விரோதத்தையும், கோபத்தையும், வெறுப்பையும், நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தியிருக்கும். எனவே ஒவ்வொருவரும் மிகைப்படுத்திப் பேசுவது இச்சமயத்தில் இயற்கைதான்’’ எனப் பாதிப்புக்குக் காரணமானவர்களையும், பாதிக்கப்பட்டவர்களையும் ஒரே தட்டில் வைத்து நீதி பேசியது சதாசிவ ஆணையம்.

ஆக, பாதிக்கப்பட்டவர்கள், அவர்கள் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பதாலேயே சந்தேகத்திற்குரியவர்களாகின்றனர். அவர்களின் கூற்றுக்கள் நம்ப முடியாதவையாகிவிடுகின்றன. பெரிய அணைகள் கட்டுவதற்கு, அல்லது சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைப்பதற்கு விவசாயிகளிடமிருந்தும் பழங்குடியினரிடமிருந்தும் நிலங்களைப் பறிக்கும்போது, அவர்களின் கருத்துக்களைக் கேட்க வேண்டுமென்பது சிவில் உரிமைப் பேரொளிகளின் வாதம். அங்கும் இந்திய அரசு இப்படித்தான் சொல்கிறது: ‘‘பாதிக்கப்பட்டவர்களிடம் கேட்டால் அவர்கள் எதிர்மறையாகத்தானே சொல்வார்கள். தேசிய நலன் என்கிற அடிப்படையிலிருந்துதான் பார்க்க வேண்டுமே ஒழிய எல்லோரிடமும் கருத்துக் கேட்டுக்கொண்டிருந்தால் திட்டம் மேலே நகராது.’’ ‘‘(பார்க்க : ராமஸ்வாமி அய்யர், ணிறிகீ, ஜூலை 28, 2007).

பாதிக்கப்படுபவர்கள் ஏழைகள். பொய்யையும் புரட்டையும் சொல்லி, மிகைப்படுத்திப் பேசி அதிக இழப்பீடு பெற முயற்சிப்பார்கள் என்பதே நமது அதிகாரவர்க்கத்தின் கருத்து. நீதி வழங்கும் நிலையிலுள்ளவர்களின் கருத்தும் கூட அதுவாகவே உள்ளது தான் நமது சூழலின் அபத்தம், இல்லை ஆபத்து. பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்களை சதாசிவம் ஆணையர் நிராகரித்த போதெல்லாம் சுட்டிக்காட்டப்பட்ட நியாயம் அவற்றிற்கு எதிரான வலுவான காரணங்களை காவல்துறை வைத்துள்ளது என்பதல்ல; மாறாக பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்கள் நம்பற்குரியவையாக இல்லை என்பதே. பதினெட்டு வயது எதிரி, தான் 10 பேர் கொண்ட போலீஸ் கும்பலால் வண்புணர்ச்சி செய்யப்பட்டதைச் சொன்னபோது, அவளின் கணவனின் சாட்சியத்தில் அது இடம் பெறவில்லை என நிராகரித்தது சதாசிவம் ஆணையம். அதிரடிப்படை அதிகாரி ஒருவரால் தான் வன்புணர்ச்சி செய்யப்பட்டு, அதனால் கருவுற்றுப் பின் கருக்கலைப்பு செய்ததை லட்சுமி என்ற பெண் கூறியபோது, இந்த விஷயத்தை யாரிடமும் அவள் சொன்னதில்லை என்பதாலும், தனக்கு கருச்சிதைவு செய்த மருத்துவரின் பெயரைச் சொல்ல முடியாததாலும், அவளது சாட்சியத்தை நம்ப முடியாது என்று நிராகரித்தது ஆணையம்.

பெரியதண்டம் தங்கம்மாவை (40) கொளத்தூரில் வைத்துக் கைது செய்து இழுத்துச் சென்றது அதிரடிப்படை. தனது நெற்றியில் துப்பாக்கியை வைத்து மிரட்டி, அம்மணமாக்கி, அவதூறு செய்து, இடையிடையே ‘விசாரணை’ செய்து கொண்டே மூன்று நாட்கள் அறையில் வைத்துத் திரும்பத் திரும்ப வால்டர் தேவாரம் தன்னை வன்புணர்ச்சி செய்ததாக தங்கம்மா அளித்த சாட்சியத்தை நிராகரிப்பதற்கு ஆணையம் சொன்ன காரணம் அதிர்ச்சியளிக்கக் கூடியது. தன்னை வன்புணர்ச்சி செய்தது ‘‘தேவாரம்’’ என்று சொல்லாமல், அங்கே எல்லோரும் குறிப்பிடுகிறது போல ‘‘பெரிய அய்யா’’ எனச் சாட்சியத்தில் சொல்லிவிட்டாராம் தங்கம்மா. சதாசிவத்தால் இதை எப்படி ஏற்க முடியும்? தவிரவும் ‘பெரிய அய்யா’ என்ற பெயரில் அங்கே இன்னொரு அதிகாரி வேறு அதிரடிப்படையில் உள்ளாரே. தங்கம்மா சாட்சியம் சொல்லும்போது மிகவும் தைரியமாகப் பேசியுள்ளாள். எனவே அவரை யாரும் மிரட்டி மௌனமாக்கியிருக்க முடியாது. எனவே இப்போது சொல்பவற்றை நம்புவதற்கில்லை எனத் தீர்ப்புரைத்தது சதாசிவ ஆணையம். நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். வீரப்ப சாதனைக்காக அதிரடிப்படையினருக்கு பதவி உயர்வும் பலகோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளும் பரிசளிக்கப்பட்டதே, அப்போது தேவாரத்திற்கு வழங்கப்பட்ட வீட்டு மனையின் மதிப்பு மட்டும் சுமார் 1 கோடி என ஒரு இதழ் பதிவு செய்திருந்தது.

இப்படி நிறையச் சொல்லலாம். கர்நாடக அதிரடிப்படைத் தலைவர் சங்கர் பித்ரி தன்னை இழுத்து வந்து துப்பாக்கி முனையில் மிரட்டினார் என ஒரு சாட்சி சொன்னபோது, ‘‘இதையெல்லாம் அவரே செய்ய வேண்டுமா, கீழேயுள்ள ஒரு அதிகாரியை அனுப்பிச் செய்திருக்க முடியாதா?’’ என்று கேட்டார் நீதிபதி. ‘‘ஒர்க்ஷாப்’’ என்று அதிரடிப்படையால் செல்லமாக அழைக்கப்பட்ட சித்திரவதை முகாமின் கூரையில் கொக்கி எதுவும் இல்லை என்பதால், கயிற்றில் தொங்க வைத்துச் சித்திரவதை செய்வதாகச் சொன்ன எல்லோரது சாட்சியத்தையும் நிராகரித்தது ஆணையம். நாடக பாணியில் மிகைப்படுத்தச் சொல்லி சாட்சிகள் அனுதாபம் தேட முயல்வதாக ‘கமென்ட்’ வேறு.

சித்திரவதையின்போது விலா எலும்பு முறிந்து போனதாக ஒருவர் கூறியபோது, எக்ஸ்_ரே வைக்கப்படவில்லை என அக்கூற்று ஏற்கப்படவில்லை. காதுமடல்களில் மின்சாரம் பாய்ச்சியதால் மனநிலை பாதிக்கப்பட்டு தற்கொலைக்கு முயன்ற கோவிந்தம்மாளின் சாட்சியம் உரிய மருத்துவச் சான்றிதழ் இல்லை எனக் காரணம் காட்டிப் புறக்கணிக்கப்பட்டது.

சதாசிவ ஆணையம் மட்டுமல்ல நமது உயர்/உச்ச நீதிமன்றங்களும் கூட எளிய மக்களின் கருத்துக்களுக்குச் செவி சாய்ப்பதில்லை. தீண்டாமைக் கொடுமைகளுக்கெதிரான ஒரே பாதுகாப்பாக உள்ள ‘‘வன்கொடுமைச் சட்டத்தின்’’ படி தொடுக்கப்பட்ட வழக்குகளில் எவ்வாறெல்லாம் தாழ்த்தப்பட்டவர்களின் கூற்றுகளும், குற்றச்சாட்டுகளும் புறக்கணிக்கப்பட்டு, தீண்டாமைக் குற்றம் புரிந்த உயர் சாதியினர் நமது நீதிமன்றங்களால் விடுவிக்கப்படுகின்றனர் என்கிற விவரங்கள் இதைக் காட்டிலும் அதிர்ச்சியளிக்கக் கூடியவை (பார்க்க : ரமேஷ் சுக்லாவின் கட்டுரை, ணி.றி.கீ., அக். 21, 2006) சுருக்கம் கருதி ஒரு சில மட்டும்:

1. ‘இந்தியத் தொழில் வளர்ச்சி வங்கி’யின் (மிஞிஙிமி) தலைவர் வி.பி.ஷெட்டி என்பவர் அவ்வங்கியின் மேலாளர் பாஸ்கர் ராம்டெக் என்கிற தலித் அதிகாரியைச் சாதி கூறி இழிவு செய்ததற்காக மே 2005_ல் கைது செய்யப்பட்டார். ‘‘பொது மக்களின் பார்வைக்குட்பட்ட ஓரிடத்தில் இச்சம்பவம் நிகழவில்லை’’ எனக் கூறி உச்சநீதிமன்றம் அவரை விடுவித்தது. தீர்ப்பை வாசிக்கும்போது ஏதோ ஷெட்டியின் வீட்டு வரவேற்பறையில் இச் சம்பவம் நடந்தது போலத் தோன்றும். உண்மையில் மிஞிஙிமி வளாகத்தில் பட்டியல் சாதியினருக்கான இட ஒதுக்கீடு தொடர்பாகப் பேசிக் கொண்டிருந்தபோதே அந்த தலித் அதிகாரி இத்தகைய அவமதிப்பிற்காளானார்.

2. 1996_ல் தலைச்சேரி தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தல் ஒன்றின்போது ‘இடது ஜனநாயக முன்னணி’ மாநாடொன்றில் கிருஷ்ணன் நாயர் என்பவர் ஏராளமான பொது மக்கள் முன் பேசும் போது, ‘‘அந்த அரிஜன் குட்டப்பன் மேசை மேலே ஏறி குதிக்கிறான்’’ என்றார். இது தொடர்பான வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் தீண்டாமை ஒழிப்புச் சட்டம் இதற்குப் பொருந்தாது எனக் கூறி நாயரை விடுதலை செய்தது. இந்த நிகழ்ச்சி பொது இடமொன்றில் ஆயிரக் கணக்கானோர் முன் நிகழ்ந்த ஒன்று. ஆனாலும் இவ்வாறு சாதியைச் சொல்லி இழிவு செய்தபோது இழிவு செய்யப்பட்ட தலித் அந்த இடத்தில் இல்லை என்பதால், அது அவரை அவமதித்ததாகாது என்பது மேன்மை தாங்கிய நீதிபதியின் கருத்தாக இருந்தது.

3. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த புல்சிங் என்கிற உயர்சாதி நிலப்பிரபு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பல்லா என்பவரின் வீட்டை இடித்து அவர் மனைவியையும் கடத்திச் சென்றான். நிலத் தகராறு ஒன்றில் பர்சாரி என்கிற ஒரு தாழ்த்தப்பட்டவரை சாதி சொல்லி இழிவு செய்தான். இந்த இரு வழக்குகளிலிருந்தும் புல்சிங்கை விடுதலை செய்தது உயர்நீதிமன்றம். இந்த இரு நிகழ்வுகளிலும் பாதிக்கப்பட்டவர்கள் தீண்டத் தகாதவர்களாக இருந்த பொதிலும், பொது இடங்களில் இந்த அவமானங்கள் நிகழ்த்தப்பட்ட போதிலும் பாதிக்கப்பட்டவர்கள் சம்பவ இடத்தில் இருந்த போதும் கூட ஏன் நீதிமன்றம் வழக்குகளைத் தள்ளுபடி செய்து, இழிவு செய்த உயர் சாதியானை விடுதலை செய்தது? புல்சிங்கிற்கும் பாதிக்கப்பட்ட தலித்களுக்கும் ஏற்கெனவே முன் விரோதமிருந்தது. எனவே தீண்டாமை நோக்கி இந்த அவமானம் நிகழ்த்தப்படவில்லை. அவர்கள் தீண்டத்தகாதவர்களாக இல்லாத பட்சத்திலும் இந்த அவமானம் நிகழ்ந்திருக்கும் எனக் கூறினார் நீதிபதி.

இப்படி நிறையச் சொல்லலாம். தேநீர்க் கடைகளில் இரட்டை டம்ளர் வைப்பதை எதிர்த்த வழக்கொன்றில் 12 மணி நேரம் தாமதமாகப் புகார் கொடுக்கப்பட்டது எனக் கூறி கர்நாடக உயர்நீதி மன்றம் குற்றவாளியை விடுதலை செய்தது. பாதிக்கப்பட்டவருக்கான சாட்சிகள் அவர்களின் சாதியைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடாது எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த மாதிரி வழக்குகளில் யார் தீண்டாமையைக் கடைப்பிடிக்கின்றனரோ அந்தச் சாதியைச் சேர்ந்தவர்களா சாட்சி சொல்வார்கள் என்பதைக் கூட நீதிபதிகள் சிந்திக்கத் தயாராயில்லை.

பயங்கர வாதம் தொடர்பான வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டவர்களைத் தண்டிப்பதற்கும் பிணையில் அவர்களை விடுதலை செய்யாமல் வைத்திருப்பதற்கும் மும்முரம் காட்டும் நமது நீதிபதிகள், பாதிக்கப்பட்டவர்கள் பழங்குடியினராகவும், ஏழை எளியவர்களாகவும், தலித்களாகவும் இருக்கும் பட்சத்தில் வன்கொடுமையாளர்களின் பால் காட்டும் இரக்கத்தை என்னென்பது.

வாரிசுகள்

நமது பிரதமர் மன்மோகன் சிங்கைப் பாராட்டி எழுதும் வாய்ப்பே எனக்குக் கிடைத்ததில்லை. நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது அமெரிக்க அரசால் இங்கே நிதியமைச்சராகத் திணிக்கப்பட்ட இந்த உலக நிதி நிறுவன அதிகாரி தொடர்ந்து அந்த விசுவாசத்துடன் செயல்பட்டு வருவதைக் கவனிக்கும் யார்தான் அவரைப் பாராட்ட முடியும். இருந்தாலும் தனிப்பட்ட வாழ்வில் நேர்மையான ஒரு அரசியல்வாதியை இப்படித் தொடர்ந்து கடுமையாகத் தாக்கி எழுத நேர்கிறதே என்று இலேசான வருத்தமும் உண்டு. அவரைப் பாராட்டுவதற்கு இப்போது எனக்கொரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதைத் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.

டாக்டர் மன்மோகன் சிங்கை நான் இப்போது பாராட்டுவது அம்ரித்சிங் என்கிற அவரது மகளுக்குத் தந்தையாக இருக்க நேர்ந்ததற்காக. பிரதமரின் மகளான அம்ரித்சிங், ஜமீல் ஜாஃபர் என்பவருடன் இணைந்து ‘சித்திரவதைக் கொடுமை: வாஷிங்டனிலிருந்து அபுகாரிப் வரைக்கும் அதற்கு அப்பாலும்’ என்றொரு நூலை எழுதியுள்ளார். கொலம்பியப் பல்கலைக்கழகம் இதை வெளியிட்டுள்ளது. நூலாசிரியர் இருவரும் வழக்கறிஞர்கள். அமெரிக்க சிவில் உரிமைக் கழகத்தின் (கிஞீலிஹி) உறுப்பினர்கள். அங்குள்ள தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் உதவியோடு பெற்ற ஒரு லட்சம் அரசு ஆவணங்களின் அடிப்படையில் அமெரிக்கக் காவல் முகாம்களில் நடைபெறும் சித்திரவதைக் கொடுமைகளைத் தோலுரிக்கிறது. இந்நூல் ‘‘அப்பா, புஷ்சுக்கு நீங்கள் வேண்டுமானால் அடிமையாக இருக்கலாம். நான் அப்படி இருக்க முடியாது’’ _ என ஒரு வேளை அம்ரித் சொல்லியிருக்கலாம்.

இந்தச் செய்தியை வாசித்த சரியாக ஒரு மாதத்தில் இன்னொரு வாரிசின் சாதனையையும் நான் அறிய நேரிட்டது. இது நம்மூர் இளவரசி கனிமொழியின் கன்னிப் பேச்சு தொடர்பானது. ராஜ்ய சபையில் சென்ற டிசம்பர் 3_ல் அவர் முதன் முதலாக முத்துதிர்த்துள்ளனர். கலைஞரின் மகள், திராவிட இயக்கத்தின் கொழுந்து, பெரியாரின் பாரம்பரியத்தில் வந்தவர், தமிழ்க் கவிஞர், பெண்ணியவாதி ஆகா, இவர் என்ன பேசியிருப்பார் என ஆவலோடு பத்திரிகையை வாசித்தேன். ராமர் சேது பிரச்னை, இட ஒதுக்கீட்டிற்கு வந்துள்ள ஆபத்துக்கள், டெஹல்கா வெளிப்படுத்தியுள்ள குஜராத் கொடுமைகள், தஸ்லிமாவின் கருத்து சுதந்திரம், மலேசியத் தமிழர் பிரச்னை... என்று ஏதாவது முழங்கியிருப்பார் என்று பார்த்தால், அம்மையார் இங்கேயுள்ள இடதுசாரிகளாலும், மனித உரிமை ஆர்வலர்களாலும் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களாலும் கடுமையாக எதிர்க்கப்படும் அமெரிக்க _ இந்திய அணு ஒப்பந்தத்தை ஆதரித்து வீர உரை ஆற்றியுள்ளார். ஆதரித்து அவர் பேசியுள்ளவை அனைத்தும் அபத்தமானவை. எந்த அளவுக்குக் கேவலமானவை என்றால், மன்மோகன் சிங்கால் பாராட்டப்படும் அளவுக்குக் கேவலமானவை. மன்மோகன் பாராட்டினால் என்ன, புஷ் பாராட்டினால் என்ன, இரண்டும் ஒன்றுதானே. ‘‘காலனியம் முடிந்தும் மேலை ஆதிக்கம் குறித்தும் நமது கூட்டுப் பிரக்ஞையை ஆட்டிப் படைக்கும் எண்ணங்களை விரட்டி அடிக்க வேண்டும்’’ என்று கூறித்தான் எத்தனை தூரம் நவீனமானவர் எனவும் நிரூபித்துள்ளார். அது சரி, அணு ஒப்பந்த விஷயத்தில் இதுதான் தி.மு.க.வின் கொள்கையா?

தயாநிதிமாறனை இடம் பெயர்த்து அங்கே அமர்த்தப்பட்டவர் கனிமொழி. அந்த இடத்திற்கு அவர் தகுதியானவர் என்பதை நிருபித்துள்ளார் என்று வேண்டுமானால் கலைஞர் திருப்தி அடைந்து கொள்ளலாம். கார்ப்ரேட்டுகளின் ஏஜண்டாக மாறனுக்குப் பதிலாக இனி அவர் தி.மு.க.விற்குள் உலவுவார் என எதிர்பார்க்கலாம்.

இந்தச் சமயத்தில் தமிழகத்தைச் சேர்ந்த இன்னொரு வாரிசைப் பற்றி இங்கே என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை. இதற்காக அந்த வாரிசு என்னை மன்னிக்க வேண்டும். அவர்தான் பெருஞ்சித்திரனாரின் வாரிசு பொழிலன். நினைவிருக்கிறதா, தனது தமிழ் தேசியக் கொள்கைகட்காக வாழ்நாளெல்லாம் போராடி, சிறை பல ஏகி மாண்ட தமிழறிஞர் பெருஞ்சித்திரனாரை? தனது குடும்பத்தினர் அனைவரையும் போராளிகளாக்கி, சிறைகளை மாங்குயில்கள் கூவும் பூஞ்சோலைகளாக நினைக்கும் மனப்பக்குவத்தை ஏற்படுத்தியவர். அவரது பெருமைக்குரிய வாரிசாக இன்று இயங்கி வரும் அவரது மகன் பொழிலன், பழைய வழக்கொன்றில் இன்று பத்தாண்டுகள் சிறைத்தண்டனைக்குள்ளாகியுள்ளார். உயர்நீதிமன்றம் இன்று இத்தண்டனையை உறுதி செய்துள்ளது. பிணையில் வர வேண்டுமானால் கூட இவர் உச்சநீதிமன்றத்தைத் தான் அணுக வேண்டும். அதற்குரிய நிதி வசதியும் கூட இல்லாத இயக்கம் அது. இப்படியும் ஒரு வாரிசு.றீ


தீரா நதி இதழில் அ.மர்க்ஸ் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரை


லேபிள்:-விஸ்ணுபுரம் தாண்டி வா

Read More...

Tuesday, February 19, 2008

India's Peace and War


India's Peace and War

[TamilNet, Wednesday, 20 February 2008, 01:24 GMT]
The now defunct Ceasefire Agreement in Sri Lanka was mooted and shadow-managed by the BJP government, according to Indian journalist, M.R. Narayan Swamy. Wickramasinghe and Pirapaharan were aware of this top secret mission of India, supervised by Vajpayee's Advisor Brajesh Mishra, but not J.N. Dixit who succeeded him with the change of government in May 2004. Dixit had to learn it from Wickramasinghe. The CFA signed in February 2002 was unilaterally withdrawn by the Sri Lanka government in January 2008. Swamy's revealing and the chronology of events implicate the Congress establishment and the ego war of the Chanakyas (Machiavellis) of New Delhi in belligerency returning to Sri Lanka.

Brajesh Mishra, son of a former Chief Minister of Madhya Pradesh comes from the background of Indian Foreign Service. He served as India's Ambassador to China. He became the Principal Secretary to the Prime Minister and National Security Advisor during Vajpayee's term as PM.

J.N. Dixit and M.K. Narayanan, both of Malayalee origins and retired from the service, were brought into the apex body of national security immediately after the Congress government came to power in May 2004. Dixit was High Commissioner of India in Sri Lanka during IPKF times. He retired as the Foreign Secretary of India. When Dixit, who held the title of the National Security Adivsor died, M.K. Narayanan was appointed to that post in January 2005. He was earlier the chief of the Intelligence Bureau of India (IB), from which he retired in 1992.
Mr. Narayan Swamy's exclusive article to the Indo-Asian News Service (IANS) was released on Sunday. Narayan Swamy, who previously worked for United News of India, the AFP and The Strait Times in Singapore is now based in New Delhi and works with the IANS. He has authored two books on LTTE and its leader V. Pirapaharan, 'Tigers of Lanka: From Boys to Guerillas' (1994) and 'Inside An Elusive Mind - Prabhakaran' (2003).



The full text of his article follows:

India's covert role in Sri Lanka's ceasefire

By M.R. Narayan Swamy, New Delhi, Feb 17 (IANS)

Now that Sri Lanka has jettisoned the Ceasefire Agreement (CFA) with the Tamil Tigers, one of India’s best kept secrets can be revealed: it was New Delhi that quietly authored the process that led to the Norway-brokered pact. The dominant thinking in India and Sri Lanka, and even elsewhere, is that New Delhi has been a distant watcher to the goings on in the war-hit island barring its interactions with Colombo and countries like Norway as part of a “hands off” policy sparked off by former prime minister Rajiv Gandhi’s 1991 assassination.

While it is true that India took a detached view of the ethnic conflict in the aftermath of Gandhi’s killing, things changed shortly after Atal Bihari Vajpayee took office in 1998 at the head of a non-Congress coalition.

By 1999, the Indian state had concluded after years of study that there could never be a military winner in Sri Lanka: neither the government nor the Liberation Tigers of Tamil Eelam (LTTE) would reign supreme although at that stage the rebels appeared to hold an upper hand.

The Indian government then took the view that it was time for a major peace push in Sri Lanka.

Supervised by National Security Advisor Brajesh Mishra, the Indian establishment got into the act of ushering in peace in Sri Lanka, with just one rider: everything would be done away from media glare. Only a few would be in the know of what was being planned.

Then Sri Lankan president Chandrika Kumaratunga was waging a “war for peace” against the LTTE that steadily lost steam as the Tigers hit back with a military precision that stunned the world.

The stalemate was a continuation of what had happened earlier. The Indian military intervention in 1987-90 had run aground; the fighting between 1990 and 1994, mostly during Ranasinghe Premadasa’s presidency, led to no decisive result; and the war during Kumaratunga’s presidency was going the same way.

The Indian establishment, however, felt that Kumaratunga was incapable of making peace. What Sri Lanka needed, so went the reading, was a leader who was ready to shake hands with the LTTE with a long-term vision to bring peace to the country.

It may have been a coincidence, but political convulsions quickly rocked Colombo, destabilising Kumaratunga’s government and sparking an election in 2000 and a second election the next year.

The Indian establishment felt there was a need to bring in an international player to facilitate peace in Sri Lanka, a party both Colombo and the LTTE could do business with as they appeared incapable of talking to one another.

Kumaratunga’s first choice was France, but this the LTTE rejected.

India by then had zeroed in on Norway. Norwegian diplomats began visiting New Delhi. No publicity was given to these brainstorming trips.

Norway was picked for mainly three reasons: it was physically far removed from South Asia; it had no territorial ambitions; and it had a proven record in peace building.

Kumaratunga and the LTTE eventually settled on Norway as the peace facilitator. The war, however, continued to rage.

Norway’s chosen Special Envoy Erik Solheim travelled to Kilinochchi, the LTTE-controlled northern part of Sri Lanka, in November 2000 and met the group’s top leader, Velupillai Prabhakaran, for the first time.

The next month, the LTTE offered a ceasefire and extended it, month by month, for four months. After that the Tigers again took the offensive.

In July 2001, the LTTE virtually overran Sri Lanka’s international airport at Katunayake, dealing a shattering blow from which Colombo never recovered.

The second of the two elections followed, and Ranil Wickremesinghe, the opposition leader, became prime minister in December 2001. Events galloped at a rapid pace, in both New Delhi and Colombo, but all under wraps.

Overseen by New Delhi, a truce document began to be drafted. Norway was deeply involved in the exercise, roping in some of its veteran diplomats.

Eventually, this translated into CFA. India also told Norwegian diplomats to let the LTTE know about the Indian involvement in the entire effort.

On Feb 21, 2002, LTTE chief Velupillai Prabhakaran signed the CFA. Wickremesinghe put his signature a day later.

Since India never publicised its role in the developments, many Indians argued that New Delhi was letting Sri Lanka slip into Western hands!

By then, India had also mooted the idea of a Sri Lanka Monitoring Mission (SLMM), the first such international peace monitoring body outside the UN aegis. India wanted Nordic countries - Norway, Iceland, Sweden, Denmark and Finland - to make up the SLMM to oversee the ceasefire.

The arrangement between India and Norway was that the latter would keep New Delhi informed about its peace diplomacy. At some point of time, irritations did crop up in this deal but these were quickly sorted out.

The CFA was a watershed in Sri Lanka’s blood-soaked history but within months things began to go wrong.

Norway came under attack from large sections in Sri Lanka. Solheim bore the brunt of the criticism, at times too personal, though he was only the best-known face of an international exercise that had India’s solid backing and he himself had no axe to grind.

In May 2004, Vajpayee gave way to Prime Minister Manmohan Singh, who headed a Congress-led coalition government. J.N. Dixit, a former Indian envoy to Colombo during the turbulent 1980s, was named the new national security advisor.

The nuts and bolts of India’s involvement in Sri Lanka’s peace process was till then known only to a few in New Delhi.

Dixit’s eyes opened up when Wickremesinghe, who by then had lost power, flew to New Delhi and gave a detailed briefing about India’s deep and covert role in the entire process.

It was the first time Dixit realised that India had for years pursued a pro-active policy towards Sri Lanka but quietly - in complete contrast to the public perception that New Delhi had lost interest in the ethnic conflict.

Dixit was to learn quickly that this was also the case vis-à-vis Nepal and Bangladesh. Unfortunately, Dixit died in office in 2005, and with him died many secrets.

India’s active participation in the later much-maligned peace process in Sri Lanka is as deep as was its role in the military training of Tamil militants two decades ago.

Official India denies that it ever trained Tamils in warfare. In the case of the peace process, even many in India are not fully aware of the story.

This was evident in some of the statements made in India when Colombo axed the CFA. This has also been evident in repeated statements from many quarters in Sri Lanka urging India to step in and throw out ‘imperialist’ Norway and the West!

In Norway, one diplomat recently made a public comment about India’s entanglement with the peace process without, however, spilling out any details.

Vidar Helgesen, who was assistant foreign minister of Norway during the inception of the peace process and is now secretary general of the Stockholm-based International Institute for Democracy and Electoral Assistance, said: “I may reasonably say that the Norwegian contribution in structuring the CFA … was, indeed, crucial. However, we could not have achieved any success without the active role played by India at every step of the negotiations. Nothing could be attempted without Indian support at every step, including the CFA.”


http://www.tamilnet.com/art.html?catid=79&artid=24710

லேபிள்:- எந்தப்புற்றுக்குள் எந்தப்பாம்பு?

Read More...

Monday, February 18, 2008

அடி வாங்குக ஜெயமோகனே

வலைப்பதிவில் ஜெயமோகனைப்பற்றி இனியும் எழுதாவிட்டால் மொக்கைப்பதிவு வைத்திருப்பதில் பிரயோசனமில்லை.

நான் நினைக்கிறேன் செந்தழலார்தான் முதல் முதல் திண்ணயிலிருந்த ஜெயமோகனை தமிழ்மணத்துக்கு அழைத்துவந்தவர்.(தொடுப்பை காணவில்லை)

இப்பொழுது திண்ணையிலிருந்துமதியின் பேஸ்மெண்டில் மூலையில் கிடக்கிற பெட்டியில் அடங்கவேண்டியதாயிற்று.

காசியார் வேறு விஷ்ணுபுரத்தை 5 பக்கத்திற்கு மேல் தாண்டமுடியவில்லை என்கிறார்.(ரொம்ப உயரமோ:) ),
இந்த் இலட்சணத்தில் இரவல் வாங்கியாவது விஷ்ணுபுரத்தை படிக்கபோவதாக வலைப்பதிவர் ஒருவர் முன்னறிவிப்பு விட்டிருந்தார். என்னாச்சு?

அல்லது சிந்தாநதியின் ஒவியப்போட்டி போலாயிடுமா?:)

அதென்ன அடி வாங்குக ஜெயமோகனே அதற்கான தொடுப்பு இங்கு
முடிவில்லா அடி வாங்குக.. வலைப்பதிவுக்கு வந்தாச்சில்லயா? :) தேவையா?



லேபிள் நுணலும் தன் வாயால் கெடும்.

Read More...

மகா வலைப்பதிவர்களே ஏய்யா இப்படி ச்செய்யிறீங்க



தீவாகிய நான் கேட்டை நட்சத்திரமும் விருச்சிராசியையும் சேர்்ந்தவன்.எனது ஊர் யாழ்ப்பாணம் நான் எனது ஆரம்பககல்வியை அங்கேயும் இறுதிப் படிப்பினை இங்கேயும் மேற்கொண்டேன்.எனது முதுகில் ஒரு மச்சம் இருக்கிறது.எனது ஜாதி என்னவெனில்..

வேறென்ன தகவல் உங்கள்வலைப்பதிவை நான் வந்து படிக்கும்போது உங்களுக்கு தேவைப்படுகிறது?

எந்த வலைப்பதிவிற்குப்போனலும் 1008 மெசின்போட்டு

ஏதோ உங்கள் அயா்ண்சேவை திருட வந்தவனை கணகாணிப்பதுபோல் Stat பட்டைகளைப் போட்டு மிரட்டிக்கொண்டிருக்கிறீர்கள்.

உங்க வலைப்பதிவிற்கு வந்தாலே இந்திரசித்து போர்க்களத்தில் நின்றதுபோலல்லவா இருக்கிறது.

தனி ஒருவர் எநதநாட்டிலிருந்து வந்தவர்? என்ன ஐபி என்பதை மட்டும் அறிந்தால் போதாதா?


ஒரு சிலர் இன்னும் ஒரு படி மேலே போய் பாரு பாரு நல்லாப்பாரு எங்கவீட்டுக்கு
ரஜனி வந்தாரு ராதிகா வந்தாரு என்று FEEDJIT என்று ஒரு கண்றாவியைபோட்ட நல்லாத்தான் Show காட்டுறாங்க..

நீங்க மட்டும் அறிந்தால் போதாதா?

ஊர் முழுக்க உங்கவீட்டு விருந்துக்கு யார் வந்தாங்க என்று நோட்டீஸ் ஒட்டணுமா?

லேபிள்:இங்கு ஜாதகம் பார்க்கப்படும்.

Read More...

Sunday, February 17, 2008

சிறீலங்காவிற்கு கோமணம் வேண்டுமா?கழட்டித்தர நாங்கள் தயார் -இந்தியா





விடியக்காலையில் அதுவும் ஞாயிற்றுக்கிழமை கொஞ்சம் மனப்பிறள்வோ அல்லது மன அழுத்தமோ இல்லாமல் சற்று நிம்மதியாக இருப்போம் என நினைத்து இருந்துவிட்டு கணனியைப்போட்டால் இன்றைய நாளுக்கான தீனி பரலோகத்திலிருந்து செய்தி ருபத்தில் வந்தது.

இனி வழக்கம்போல் விடிந்ததுமாதிரித்தான் !!


நினைப்பது எல்லாம் வலைப்பதிவில் (ஒரு சில காரணங்களுக்காக)எழுத முடியாவிட்டாலும் பெருமூச்சையாவது விடலாம்தானே..அதுதான் இந்தப்பதிவு.


இனி செய்தி



தமிழ்நாட்டின் கூடங்குளத்திலிருந்து மின்சாரத்தை வழங்குகின்றோம்: சிறிலங்காவுக்கு இந்தியா யோசனை
[சனிக்கிழமை, 16 பெப்ரவரி 2008, 06:32 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]
கடும் மின்சார நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ள சிறிலங்காவுக்கு மின்சாரத்தை தமிழ்நாட்டிலிருந்து வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் முன்வந்துள்ளது.

சிறிலங்காவின் மின்சார பிரச்சினைக்கு தீர்வாக தற்பொழுது நிர்மாணிக்கப்பட்டு வரும் மின் விநியோக திட்டங்கள் பூர்த்தியாவதற்கு 2012 ஆம் ஆண்டுவரை காத்திருக்க வேண்டும்.

இந்நிலையில் இந்திய அரசாங்கம் ஓராண்டிற்குள் சிறிலங்காவுக்குத் தேவையான முழுமையான மின்சாரத்தை வழங்க தயாராக இருப்பதாக இந்தியத் தரப்பிலிருந்து சிறிலங்காவுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் கூடங்குளம் அனல் மின்நிலையத்திலிருந்து தனுஷ்கோடி தலைமன்னார் ஊடாக இந்த மின்விநியோக மார்க்கத்தை அமைப்பதற்கு இந்திய மின்சக்தி நிபுணர்கள் திட்டமிட்டுள்ளனர்.

அந்த மின்விநியோக வழியை நிறுவிய பின்னர் மன்னாரில் மின்விநியோகத்திற்கென சிறப்பு விநியோக நிலையத்தை சிறிலங்கா அரசாங்கம் நிர்மாணிக்க வேண்டும்.

இந்த யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டால் ஒரு வருடத்திற்குள் சிறிலங்காவுக்குத் தேவையான அதிகபட்ச மின்சாரத்தை வழங்க முடியும் என்று இந்தியா தெரிவித்துள்ளது.

மின்சக்தி அமைச்சின் நிபுணர்களுடன் இது சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்காக அடுத்த சில நாட்களில் இந்திய மின்சக்தி வல்லுநர்கள் 10 பேர் பொழும்பு செல்கின்றனர்.

சிறிலங்கா அரசாங்க அறிக்கையின் படி மொத்த மக்கள் தொகையில் 75 வீதமானவர்களுக்கு மட்டுமே தற்பொழுது மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தியாவின் யோசனைக்கமைய நாட்டில் மின்சாரம் தேவைப்படும் அனைவருக்கும் மின் விநியோகத்தினை வழங்க முடியும் என்று இந்திய வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.


செய்தி மூலம் புதினம் கொம்



லேபிள்:- ஞாயிற்றுக்கிழமை ரென்சன்.

Read More...