Monday, February 02, 2009

முதுகு வலியிலிருந்து அவர் தப்பிக்க




இதற்குமுக்கிய காரணங்களாக திராவிட பரம்பரை அலகு காரணமாக சொல்லப்பட்டாலும் கலிபோர்ணியா பல்கலைகழக இறுதி ஆராய்ச்சி முடிவுகளின் படி இந்தியாவில் தமிழ்நாட்டிலேயே இந்த நோய்காரணிகளை கொண்டோர் அதிகம் பேர் வாழ்வதாக சொல்லப்படுகிறது.

முதலாவது இந்த முதுகு வலியை தவிர்ப்பதற்கு இதன் அடிப்படைக்காரணங்கள் என்னவென்று முதலில் தெரிந்துகொள்ளவேண்டும்.


முக்கிய காரணிகளாக சிலவற்றை பட்டியலிட்டுள்ளோம்.

1.முதுகுவலியால் அவதிப்படும் இன்னொருவர்(பெண்ணாககூட இருக்கலாம்) அடிக்கடி கொடுக்கும் பேதி மருந்தால் வருவது

2.இக்கட்டான சூழ்நிலையில் இருதலைக்கொள்ளி நிலையில் சில பல காரணங்களுக்காக சிலரை தமது கட்சியில் வேண்டா வெறுப்பாக அரவணைக்கவேண்டிய சூழ்நிலை வரும்போது வருவது

3.மக்களுக்கிடையில் ஏதோ காரணத்தால் பிரபலமாகவிருந்து அது தன்னிலை சறுக்குகையில் இறங்குமுகமாக மாறும்போது

4.தன் பலம் தனக்கு தெரியாது டெல்லி குளிரில் வேட்டியுடன் அலைவதால்

5.இந்தா வாறன் இந்தா உடனடியா போறன் என மற்றவர்களால் ஏமாற்றப்படுவதால்

6. அரசியல் கோமாளியாக சரத்பொன்சேகா போன்ற வீர தீர புருசர்களால் பரிகாசம் செய்யப்படுவதால்

7. சிலோனுக்கு வாறீயா என நக்கலாக ராஜபக்ச அழைத்ததால்

5. பதவி எனக்கு சால்வை வேட்டி கோமணம் என அடுக்குமொழி பேசியதால்


இப்படி அல்லது இதை விட மேலும் பல தொலைக்காட்சி குழும காரணங்களால் கூட வரக்கூடும்


இதற்கான ஒரே நிவாரணம் ஈழம் சித்திலெப்பை லேகியம்!.இன்றே வாங்கி உடனடியாக பாவியுங்கள்.

லேகியம் பாவிக்கும்போது கண்டிப்பாக காங்கிரஸ் உறவுமுறை கண்டிப்பாக இருக்குகூடாது.

உடனடி பலன் நிச்சயம்!!

லேபிள்:- முட்டாள் முத்துக்குமாரா ஏன்டா உனக்கு முதுகுவலி வரல்லை? :(

4 comments:

Anonymous said...

உடன்பிறப்பே

திமுக என்பது 3 எழுத்து நீயோ 2 எழுத்து ஈழம் என்பது 3 எழுத்து.

நாளை முக்கியமான முதுகுவலி மகாநாட்டில் நாம் எடுக்கப்போகும் எமது முக்கிய முடிவுக்காய் காத்திருப்பாய் என் உடன்பிறபபே

Anonymous said...

/லேகியம் பாவிக்கும்போது கண்டிப்பாக காங்கிரஸ் உறவுமுறை கண்டிப்பாக இருக்குகூடாது./

:))

Anonymous said...

கூட்டம் இனிதே முடிந்தது.

Anonymous said...

அண்ணை முள்ளந்தண்டு இருக்கிறாக்களுக்குத்தான் முதுகுவலி வரும்..இதெல்லாம் சும்மா