Monday, January 26, 2009

தமிழக இந்திய அரசியல்வாதிகளுக்கான இழவுப்பத்திரிகை




அன்புக்குரிய எமது தொப்புள்கொடி உறவுகளின் தலைவர்களே

பல காலம் இம்சைப்பட்டு நோய்வாய்ப்பட்டு உங்களுக்கு பலமுறை சொல்லியனுப்பியும் உங்களை பார்க்க கடைசிவரை பார்த்திருந்து இன்று மீளா தூக்கத்தில் ஆழ்ந்த எம் உடன் பிறப்புக்களின் மரண செய்தியை இந்த இழவுப்பத்திரிகையை வைத்து எம்முறவுகளின் துயரில் பங்கு கொள்ள உரிமையடன் அழைக்கிறோம்.

தாங்களும் தங்கள் சமூகங்களும் முடியுமானால் உடனடியாக எமது துயரில் வந்து பங்கு கொள்ள அழைக்கிறோம்.

உங்களால் இன்னோரென்ன காரணங்களால் வரமுடியாத நிலமையாயின் முதலே சொல்லியனுப்புக.பிப்ரவரி 15 தான் வரமுடியுமாயின் நேரடியாக இடுகாட்டுக்கு வந்து எமது சொந்தங்களை தரிசித்து செல்லவும்.

நேரடியாக எல்லோரையும் தனிப்பட சந்திக்கமுடியாத காரணத்தினால் இந்த பத்திரிகையின் ஒரு நகலை திருமதி சோனியா அம்மையாருக்கும் அனுப்பிவிடுங்கள்.

இதய ஆப்ரேசன் காரணைமாக மருத்துவமனையில் தங்கியிருக்கும் திரு மன்மோகன் சிங்கிற்கு எமது உறவுகளின் இழப்பு தகவலை தயவு செய்து சொல்லவேண்டாம்.அது அவரது உடல் நிலையை மேலும் மோசமாக்ககூடும்.

இப்படிக்கு
தமிழ்ஈழ தேசம்
மற்றும்
இலங்கைதமிழர்

லேபிள்:- தொப்புள்கொடியும் அறுநாக்கொடியும்.

5 comments:

Anonymous said...

கவலை வேண்டாம்.முகர்ஜி அவர்கள் இன்று இலங்கை செல்கிறார்.

கந்தப்பு said...

/Anonymous said...
கவலை வேண்டாம்.முகர்ஜி அவர்கள் இன்று இலங்கை செல்கிறார்.

9:10 PM/


தமிழர்களை கொல்லும் அரக்கன் மகிந்தாவுக்கு ஆசி சொல்லப் போகிறாரோ? அல்லது இன்னும் அதிக ஆயூத உதவிகள் தேவையா என்று கேட்கப் போகிறாரோ?

ஜெகதீசன் said...

:((

Anonymous said...

நாளைய செய்தி

பிரணாப் யுத்த நிறுத்தத்திற்கு வலியுறுத்தவில்லை!
-மகிந்த ராசபக்ச-

Anonymous said...

MK WILL HAVE TO BE THROWN INTO OCEAN AND CHECK WHETHER HE FLOATS OR DROWNS.