Saturday, March 18, 2006

வலைப்பதிவர்க்கும் ஒரு சீட்! திராவிட கட்சிகள் குழப்பம்

எமது பலத்தை அறிந்து எமக்கும் ஓரு சீட்டை கோவையிலோ அல்லது காசிமேட்டு தொகுதியையோ தரும் கட்சிக்கு எமது பலத்தை நிருபித்து அந்தக் கூட்டணி கட்சியினரை ஆட்சிக் கட்டிலில் படுத்துவோம் என வபக சார்பில் கட்சி கொள்கை பரப்பு செயலாளர் தீவு இன்று பத்திரிகையாளர் மத்தியில் பரபரப்புபேட்டி ஒன்றை வழங்கினார்.


பேட்டியின் மேலதிக விபரம் கட்சி பலம் மற்றும் இதர விடயங்கள் யாவும் கொபசெ அவர்கள் வேலைக்குப்போட்டு வந்து வெளியிடுவார் .அதுவரை பத்திரிகைகள் உளவுப்பிரிவுகள் அமைதி காக்கும்படி கழக கண்மணிகள் கேட்டுக்கொள்கிறார்கள்.


p.s அண்ணன் ஆனந்தராஜ் கலைஞர் செந்தில் போன்றோருடன் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறன்றன.

Read More...

Sunday, March 12, 2006

அமைதிப்பூங்கா

செந்தமிழ் காவலர்களின் தேர்தல் பேச்சை இட்லிவடை ஒரு சில உதாரணங்களோடு காட்டியுள்ளார்.

எனக்கு இதில் பெரிய ஆச்சர்யமென்னவென்றால் ஆட்டோ பயம், ஓட ஓட வாள்வெட்டு என தமிழக அரசியல் இருக்கும் என நினைத்தால் இந்த கருத்து சுதந்திர அரசியல் நன்றாகத்தானிருக்கிறது.

அவனவன் அகண்ட காவேரியிலிருந்து, ஒண்டிக்கு ஒண்டி வாரீயா என வீராப்புடன் பேசுமளவிற்கு தமிழக அரசியல் ஜனநாயக உரிமை இருப்பதை எண்ணி வியக்கத்தான் முடிகிறது.

சில விடயங்கள் தேவைக்கதிக வெளிச்சம்போட்டு காட்டப்படுகின்றன என்பதற்கு(ஆட்டோ பயம்) இந்த தேர்தல் மேடைப்பேச்சுக்கள் உதாரணமாகவிருக்கின்றன.

Read More...

Friday, March 10, 2006

தாய் சொல்லை தட்டாதே

திமுக குறும்பு ...y go goனாலும் goனார் இவங்க ரவிசுதாங்க முடியலை.படத்தை அழுத்திப் பார்க்கவும்.



Read More...

Tuesday, March 07, 2006

சிறப்பு வலைப்பதிவு

அநேகமாக சில வலைப்பதிவுகளைப்பார்த்தால் மெச்சத்தோன்றும்.தமது உணர்வுக் கலவையை அல்லது சில ஆய்வுக்கட்டுரைகளை எழுதியிருப்பார்கள்.ஆ என்று படித்துவிட்டு ஆச்சர்யப்படத்தோன்றும்.அந்த கட்டுரைக்கேற்ப பின்னூட்டமிட தகுதி வராது.முடிந்தால் ஒரு தரமானது என ஒரு புள்ளடி போட்டுவிட்டு நகர்ந்து விடுவேன் .ஆனால் கட்டுரையின் பாதிப்பு சில நாட்களுக்கு இருக்கும்.

ஒரு பதிவில், பின்னூட்டமிட்டஒருவர் அமலாசிங் என்று நினைக்கிறேன் திருச்சியில் ஒரு பஸ் ரூட் சொல்லி அந்த பஸ்ஸில் தினசரி நடப்பதை சொல்லியிருந்தார் .என்னவோ அது சற்று நம்பமுடியாமல் வேதனையாகவிருந்தது.பல நாடகள் அந்தக்கருத்து மனதை மறக்கவிடாது இப்படியுமா என சினக்கவைத்தது

இன்று மதி அது போல் மற்றவர்கள் தொடத்தயங்கும் ஒரு பதிவை இட்டிருக்கிறார்.அதன் தரம் கருதி அதற்கு என்னால் பின்னூட்டமிடமுடியவில்லை அதனால் இங்கு அதைப்பற்றி பதிகிறேன்.தமிழகப் பத்திரிகைகள் இதுபோன்ற கட்டுரைகளை இணையத்திலிருந்து எடுத்து மறுபிரசுரம் செய்தல் வேண்டும்

யாழிலும் நாமும் எமது கல்லூரிப்புருவத்தில் சேட்டைகள் செய்துள்ளோம்.ஆனால் அது ஒருபோதும் பாலியல் வன்முறையாக இருந்ததில்லை.

Read More...