Friday, January 27, 2006

அவர்கள் போகும்போது
















ஏன்
எதற்கு
எங்கே
எதுவும் தெரியாதுஉனக்கு.

வழமைபோல்
உலகம் காத்திருக்கும்
ஒரு வேளையில்

அவர்கள் வருவார்கள்

கைகளும்
கண்களும்

தாய்
தங்கை
பந்தம்
பாசம்
உணர்வு
யாவும்
உனது போலவே
அவர்களுடையதும்

எனினும்

அவர்கள் வருவார்கள்

அவர்கள் போகும்போது

உனது இறப்பு
ஊடகங்களுக்கு

நாளைய செய்தி.


100106
-theevu-

Read More...

Sunday, January 08, 2006

சண்டைக்கோழி- கிளம்ப்பிட்டாங்க.

மாட்டிக்கிட்டது நம்ம எஸ்.ராமகிருஸ்ணன்.துப்பட்டவாவை வீசி பெண் கவிஞர் ஆர்ப்பாட்டம்!
என்னடா ஏதோ எக்கச்சக்கவிவகாரம் போல என்று பத்திரிகையை புரட்டிப்பார்த்தால் ஓன்றுமே புதிதாக தெரியவில்லை.
பிரபஞ்சன் பெண் கவிஞருக்கு வக்காலத்து வேறு..

படத்தை பார்த்தவன் என்ற முறையில் எதுவுமே தவறாகத்தெரியவில்லை..
இதுக்கெல்லாம் ஒரு ஆர்ப்பாட்டம்...ஒரு பரபரப்பு ..விளம்பரம்...

என்னதான் நடந்தது ?
http://epaper.tamilmurasu.in/2006/jan/08/default.htm






இதுதான் அந்த பிரச்சனைக்குரிய வசனம்



மேலதிக விபரத்திற்கு

Read More...

Friday, December 23, 2005

திலகவதிக்கு சாகித்ய அகாடமி விருது

தமிழக காவல்துறையின் கூடுதல் டிஜிபி திலகவதிக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது.
மாநில அளவில் தலை சிறந்த எழுத்தாளர்களுக்கு ஆண்டுதோறும் மத்திய சாகித்ய அகாடமி விருது வழங்கி கௌரவித்து வருகிறது. சாகித்ய அகாடமி விருது வழங்கும் கமிட்டியின் கூட்டம் கோவாவில் நடந்தது. இதில் விருது பெறுவோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் தமிழில் சிறந்த எழுத்தாளருக்கான சாகித்ய அகாடமி விருது திலகவதிக்குக் கிடைத்துள்ளது. அவர் எழுதிய கல்மரம் என்ற நிõவலுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த நாவலை அவர் கடந்த 2001ம் ஆண்டு எழுதியிருந்தார்.
ரூ. 50,000 ரொக்கம், பாராட்டுப் பட்டயம் ஆகியவை அடங்கியது சாகித்ய அகாடமி விருது. விருது கிடைத்திருப்பது குறித்து திலகவதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

thatstamilcom

Read More...

Sunday, December 18, 2005

எந்த நூற்றாண்டு இது?



எத்தனை சிறப்பு தொழில் நுட்பம் வந்தென்ன? மழை பாதி விதி பாதி என்று இந்த மக்களின் வாழ்க்கை முடிந்துவிட்டிருக்கிறது.அரசை குறை கூறமுடியவில்லை.
யாரிடம் நோவார்கள் இந்த மக்கள்?

இறந்த தமிழக உறவுகளுக்காக அஞ்சலிகள்.

Read More...