Tuesday, October 09, 2007

செல்லாவிற்கு திருப்பூர் பனியன் வழங்கும் திட்டம்.

இனமானத் தாரகை தமிழச்சியை தாக்கிய டவுசர்களுக்கு செல்லாவின் வீடியோ கண்டனப் படம்!


post signature






அண்மையில் துருத்தி தமிழச்சி (சொல்லடை அறிமுகம் கொழுவி)பாதுகாப்பு கழகம் சார்பில் பேன் செல்லா வழங்கிய (பேன் சொல்லடை அறிமுகம் பெயரிலி) ஓளிநாடாவில் வலைப்பட்டறை செயல்வீரர் ஒசை செல்லா அவர்கள் பாதிக்குமேல் ஆடையில்லாமல் நின்றது வலைப்பதிவர்களை மிகப் பாதித்தது.

எனவே வலைப்பதிவர் சார்பில் அவருக்கு திருப்பூர் பனியன் வழங்கும் திட்டமொன்றை மேற்கொள்ளுவதாக இருக்கிறோம்.

எனவே என்னைப்போன்ற கலகக் கண்மணிகள் இதனை என்னுடன் சேர்ந்து முன்னெடுத்து செல்லவேண்டும்.

அதனுடன் கொசுறாக.

அவருக்கு கராட்டி பயில கராட்டி பயிலுமிடத்தில் சண்டை செய்யாவிடினும் காட்டா வாவது ஒழுங்காக பழக வசதி செய்து கொடுக்கப்படும்.அதிலும் விசேடமாக

காராட்டியோ காட்டோவோ செய்யும்போது காலை சரியாக நிலத்தில் உறுதி எடுத்து நிற்கும்நிலை.

முஸ்டியை எவ்வாறு மடிப்பது

நெஞ்சுக்குநேரே எவ்வாறு விறைப்பாக பஞ்சு் பண்ணுவது

வாழைவெட்டுக்கும் கராட்டிவெட்டுக்கும் உள்ள வித்தியாசத்தை காண்பிப்பது

போன்ற துறைகளில் பிரத்தியேகபயிற்சிக்கும் ஒழுங்கு பண்ணப்படும்.

அதனைவிட தனித்து நேராக நிற்கும்போது காரில் சாயாமல் கார் துணையில்லாமல் எவ்வாறு
நிற்பது என தண்டு வட பயிற்சியும் அளிக்கப்படும்.






இடையிடையே ரென்சனாகாமல் இருக்க ரவிசங்கர் லேகியமும் வழங்கப்படும்.


இன்னமும் 24 மணித்தியாலத்திற்குள் ஓசையவர்கள் பனியன் போடாவிட்டால் எமது தோழர்கள் பனியன் வழங்கும் போராட்டத்தில் குதிக்கவிருக்கிறார்கள்.

எனவே உங்கள் வீட்டு கூரையை பிரித்து
தோழர்கள் குதிக்க வசதி செய்ய கேட்டுகொள்ளப்பபடுகிறீர்கள்


அடுத்தமுறை நடைபெறவிருக்கும் வலைப்பதிவர் பட்டறையில் வலைப்பதிவர் முன்னேற்றம்
என்ற நிகழ்ச்சிநிரலில் பனியன் வழங்குதல் பற்றி ஒரு சிறு குறிப்பு ஒன்றை 45 நிமிடத்திற்கு மேற்பட வழங்க நீங்கள் வழி வகை செய்து தரவேண்டும்.


லேபிள்:- பெரியார் திருப்பூர் பட்டறை கராத்தே பொப்மார்லி கஞ்சா

Read More...

Monday, October 08, 2007

வலைஞர் செந்தமிழார் ஓய்வு பெறவேண்டும்-

கொடுமை கொடுமை என கொரியாக்கு ஓடினா கிருமி கலைச்சு கலைச்சு கடிச்சுதாம்.

அந்த பழமொழி போல நமது மொக்க தலைவர் வலைஞர் செந்தழலார் பெங்களூரில் மோட்டார் சைக்கிள் போராட்டத்தில் காலில் நாய் கடித்து விழுப்புண்பெற்றதோடு மட்டுமல்ல அதனுடன் சளைக்காமல் கொரியாவிற்கும் சென்று அங்கும் கொரிய ம(க்)கள் மனம் கொள்ளை கொண்டு அங்கு வலைவரித்த ஆதிக்க கிருமிகளுடன் போராடி வென்றுமிருக்கிறார்.

திராவிடர்கள் மகிழவேண்டிய ஒரு செய்திதான்

எனினும்

செந்தழலார் உடல்நலன் முதுகு, முள்ளந்தண்டு நலனை கருத்தில் கொண்டு அவர் கும்மி, கரகாட்டம், காவடி போன்ற பதிவுகளை தவிர்த்து வலைப்பதிவிலிருந்த ஓய்வு பெறவேண்டும் என அன்பாக கேட்டுக்கொ(ல்)ள்கிறேன்.


அவர் அண்மையில் பாத்றூம் போக முக்கிய காரணமாகவிருந்த புகைப்படம் ஒன்றினை நான் தற்செயலாக பார்க்க நேர்ந்தது. அதிலிருந்து அவரைப்பற்றிய
பதிவு ஒன்றை போடுவது என்று முடிவு செய்திருந்தேன்.

மாவீரன் செந்தழலாரை ஓய்வு பெறு என சொல்ல நீ யார் எனக் கேட்கும் ,பின்னூட்டமிடும் நண்பர்களுக்கு ஒரு வார்த்தை..

புலி கொன்று புலிப்பல்லை சொந்தமாக்கிய புலியேறு செந்தழலாரும்(தகவல் லக்கிலுக் பதிவு)
ஆயாவின் பொருள் காணாமல்போனதற்காக புலிகளை சந்தேகித்து வீரப்பதிவுபோட்ட வீரசோழன் செந்தழலாரும்

போலிக்கே ஆப்பு வைத்த செந்தழலாரும்

வந்தோரை வாழவைக்கும் தமிழகத்திலிருந்து விருந்தோம்பலுக்கு சிறப்பாக நீ வா நான் என் வீட்டு இளநீர் தருகிறேன் என பதிவர் வெற்றிக்கு அழைப்பு விடுத்த செந்தழாலாழனுமாகிய

மறத்தமிழனை

ஓய்வு பெறு என்கிறேன். ஏன்?

என் சட்டைக்குள் பூணூலா ஒளிந்திருக்கிறது?

அல்லது ஏதாவது நீள ஆழ வகுப்பா எடுக்கிறேன்?

ஏன்?

என்னை மிகவும் யோசிக்க சிந்திக்க வைத்த அவரது பாத்றூம் போக முக்கிய காரணமாகவிருந்த புகைப்படம்

இந்தப்படம்

இந்தப்படத்தை உங்களுக்கும் பார்வைக்கு வைக்கிறேன்.

இதனை உன்னிப்பாக கவனித்தீர்களானால்

துப்பாக்கி பிடிக்கும் கைகள் நடுங்குவதை காண்பீர்கள்.

நடுங்கும் கரங்களுக்கு ஓய்வு தேவை.

உங்கள் வீட்டில் இப்படி ஒருவர் நடுங்கும் கைகளுடன் துப்பாக்கி பிடிக்க விடுவீர்களா?

அண்மையில் 1954 ல் எம்ஜிஆர் கை நடுங்க பிடித்தாரே..அப்போது எங்கே போனீர்கள் என பதிவுகள் போடவேண்டாம்.

எத்தனை பேர் நலமில்லாது மூளை கலக்கத்துடன் (உதாரணம் தீவு)பதிவுபோடுகிறார்கள். அவர்களை ஓய்வுபெறு என நீ ஏன் கேட்கவில்லை என கலககண்மணிகள் சீறி பதிவு போடாதீர்கள்.

தீவு தாங்காது.

எனவே வலைஞர் செந்தழலார் சிறிது காலமாவது நிம்மதியாக ஓய்வு பெறுங்கள்.

சுவர் இருந்தால்தான் சித்திரம்.

இனி அந்த சிறப்புமிகு பகைப்படம்.

இதனை உன்னிப்பாக கவனித்தீர்களானால் துப்பாக்கி பிடிக்கும் கைகள் நடுங்குவதை காண்பீர்கள்.






லேபிள்:- கலைஞர் ஞானி விகடன் ஆயா புலி கொரியா

Read More...

தட்டுக்கழுவி

ப்ரான்ஸில் நடக்கும் தலித் மகாநாடு வெற்றியடைய வாழ்த்துக்கள்.

posted by தட்டுக்கழுவி தீவு


லேபிள்:- தட்டுக்கழுவி வெள்ளாளன் பெரியாரிசம் புண்ணாக்கு

Read More...

Saturday, October 06, 2007

வாழ்க யோகன் பாரிஸ் எனும் இணையப் பதிவர்.



கார் எல்லாம் என்ன கார் பாரோயோ தேரழகை என்று என்னப்பன் மாணிக்கவிநாயகன் பவனிவரும் அழகை தனது காமிராக்கண்ணால் அளந்து

தரணியெல்லாம் வாழும் உலகத்தமிழரும் கண்டு பக்தி பரவசம் அடைந்து அவர்கள் நினைத்தது எல்லாம் ஈடேற வழி செய்துள்ளார்.



இன்றுதான் இவரது இந்த அரிய பதிவை பார்த்தேன்.பெரியாருக்கு கூட இந்தப்பதிவு பிடிக்காதுதான்


.அதற்காக நமது நம்பிக்கையை விட்டுவிடமுடியுமா என்ன ?


நன்றி யோகன் பாரிஸ் அவர்களே..அடுத்த வருடமும் உங்கள் சேவையை எதிர்பார்க்கிறோம்.



லேபிள்:- புதுச்சேரி கச்சேரி அரோகரா

Posted by இணையப்பொறுக்கி தீவு

Read More...