Monday, November 27, 2006

Sinhala leaders' duplicity of war and peace has left Tamils with no choice but political independence - LTTE leader



[TamilNet, Monday, 27 November 2006, 12:36 GMT]
The leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE), Velupillai Pirapaharan, in his annual Heroes’ Day statement, expressed extreme frustration at the unchanging attitude of successive Sinhala regimes towards resolving the burning Tamil national question and, in particular, at the deceitful handling of the current peace efforts by three successive Sinhala regimes.



“Both our liberation movement and our people never preferred war to a peaceful resolution. We have always preferred a peaceful approach to win the political rights of our people. We have never hesitated to follow the peaceful path to win our political rights. That is why we held peace talks, beginning in Thimpu right through to Geneva, on several occasions, at various times, and in many countries,” he said.

The LTTE leader went on to say that President Mahinda Rajapakse has rejected his final call in his Heroes’ Day statement last year to find a resolution to the Tamil National question with urgency. He said that President Rajapakse had instead intensified the war on the one hand and whilst on the other hand talking about finding a peaceful resolution. The LTTE leader said that this dual war and peace approach is fundamentally flawed. “It is not possible to find a resolution by marginalizing and destroying the freedom movement with which talks must be held to find the resolution. This is political absurdity on the part of the Sinhala leaders.” Due to this strategy of the Rajapakse regime, the CFA has become defunct, he said.

The LTTE leader said that the present regime, which is denying food and medicine to the people to the extent of starving them, cannot be expected to show compassion and give the Tamil people their political rights. He said that the Sinhala nation, eternally trapped in the mythical ideology of the Mahavamsa, has failed to think afresh and has left the Tamils with only one option, political independence and statehood for the people of Tamil Eelam.

The full text of the official translation of his speech follows:



LTTE leader Mr. Velupillai Pirapaharan [Photo: LTTE]


“We are at a cross roads in our freedom struggle. Our journey has been long and arduous, and crowded with difficult phases. We are facing challenges and unexpected turns that no other freedom movement had to face. Unprecedented in history, we are dealing with war and peace talks at the same time.

Six years have passed since we dedicated ourselves to find a solution to the ethnic conflict through peace talks. In this long time span, has a solution been found to the burning Tamil national question? Was there any visible change in the mindset of the Sinhala leadership that continues to inflict unrelenting cruelty on the Tamil people? Were any of the justifiable requests of the Tamils been fulfilled? Were our people able to find relief from the daily harassment and misery at the hands of the occupying military? Were the daily basic problems of our people resolved? None of these has happened. Instead, death and destruction were heaped on the Tamils who hoped that they would receive justice.

While the countries that preached peace maintain silence without conscience, a great tragedy is unfolding in the Tamil homeland. The Sinhala government has imprisoned the Tamils in their own land after closing its main supply routes. Having removed their freedom by restricting their movement and constrained their lives, it is inflicting great suffering on them. It has split the Tamil homeland, set up military camps, bound it with barbed wire, and has converted it into a site of collective torture.

The Sinhala government has unleashed a two pronged war, military and economic, on our people. Our people are subjected to unprecedented assaults. Arrests, imprisonment, and torture, rape and sexual harassment, murders, disappearance, shelling, aerial bombing, and military offensives are continuing unchecked. At the same time our people are subjected to an inhuman economic embargo on essential items including food and medicine.

Even after the ceasefire, negotiations and the five years of patiently keeping peace, the dividends of peace have not reached our people. Instead our people are faced with unbearable burdens in their daily lives. Thousands of our people have been forced out of their homes and are languishing with disease and hunger in refugee camps. No one should expect that this Sinhala government which is denying food and medicine to our people to the extent of starving them would show compassion and give them their political rights.

The monumental growth in knowledge and the resulting global outlook is taking humanity into a new era. Ideas, views and philosophies are changing in tandem with this growth in knowledge and this is resulting in changes in society. Yet, within the Sinhala nation, there is little change in its ideas and philosophies. The Sinhala nation is refusing to broaden its thinking and take a new approach. The Sinhala nation remains mislead by the mythical ideology of the Mahavamsa and remains trapped in the chauvinistic sentiments thus created. Unable to free itself from this mindset, it has adopted Sinhala Buddhist chauvinistic notions as its dominant national philosophy. This notion is spread in its schools, universities and even its media. The domination of this Sinhala Buddhist chauvinism is preventing its students, intellectuals, and writers from stepping out of and thinking free from its domination. This, unfortunately, is preventing the Sinhala nation from undertaking a genuine attempt at resolving the Tamil national question in a civilized manner.

Both our liberation movement and our people never preferred war to a peaceful resolution. We have always preferred a peaceful approach to win the political rights of our people. We have never hesitated to follow the peaceful path to win our political rights. That is why we have tried to hold peace talks beginning in Thimpu right through to Geneva on several occasions, at various times, and in many countries. The current peace efforts, with Norwegian facilitation and with the blessings of the international community, taking place in the capitals of various countries are unique.

This peace journey began on 31st October 2000, when the then Norwegian special envoy Eric Solheim visited Vanni and met us. This peace journey is taking place in a unique period, under unique historical conditions, in a unique format and on a unique path. It is moving on two fronts, peace talks, on one hand, and a war of occupation by the Sinhala government, on the other.

During the six years when we kept peace, we were sincere in our efforts. Indeed, we initiated the peace efforts. We created a strong foundation for peace efforts by unilaterally declaring a ceasefire. We refrained from putting conditions or time limits for peace talks. We did not undertake these efforts from a position of weakness. We had recaptured the Vanni mainland and the Iyakkachchi-Elephant Pass military complex. We had beaten back the ‘Operation Fire’ of the Sinhala military. We carried out great military feats in the history of our struggle. It was from this position of strength that we undertook this peace effort.

The situation was just the opposite in the south. The south had faced defeat after defeat and was losing its will to face war. Its military had lost its backbone. The economy was very shaky. It was only under such conditions that the Sinhala nation agreed for peace talks. In this five years since the peace efforts began, three governments have come to power, that of Wickremasinghe, Bandaranayake and Rajapakse. Each time the government changed, the dove of peace moved from one cage to another but it was never able to fly freely. Stabbed many times, the dove is now struggling for its life.

We held talks with the Wickremasinghe government for six months after signing the Cease Fire Agreement (CFA) with him. Like all previous Sinhala regimes, the Wickremasinghe regime dragged time without implementing the clauses in the CFA and the agreements reached at the talks. Its military failed to move out of people’s homes, schools and hospitals and instead declared these vast areas of land as military security zones and permanently prevented the people from returning to their land. The sub-committee for De-escalation and Normalization became dysfunctional. The sub-committee created to solve immediate humanitarian needs of the people also become defunct due to planned sabotage by the government.

The Wickremasinghe government that refused to solve the humanitarian problems facing our people, secretly worked to marginalize our movement on the world stage. Even before setting up a working administrative structure in the Tamil homeland, it conducted donor conferences to obtain aid for the south. By failing to facilitate our participation in the donor conference held in Washington, it marginalized and humiliated our movement. As a result we were forced to stay away from the Tokyo conference. The Wickremasinghe regime did not stop with this. It plotted to trap our freedom movement in an ‘international safety net’ and destroy us.



LTTE leader Mr. Velupillai Pirapaharan [Photo: LTTE]
When we put forward the proposal for an Interim Self Governing Authority (ISGA), startling changes occurred in the southern politics. The Kumaratunge government took over the reins of power. While refusing to hold talks on the basis of our proposal, her government, using the paramilitary phenomenon, intensified the shadow war against us. The paramilitary factor turned the Tamil homeland into a violent blood stained theatre. Intellectuals, political leaders, journalists, LTTE members, supporters and civilians were all murdered. We were forced to halt the political work, carried out according to the CFA clauses by our members in Sri Lankan military occupied areas of the Tamil homeland. As a result, our people were left alone in the cruel grip of the occupying military. Finally the Kumaratunge regime failed to implement even the Joint Mechanism (PTOMS) agreement signed by her regime for tsunami rehabilitation. The Supreme Court, unable to step outside the Sinhala chauvinistic notions, rejected this purely humanitarian focused agreement citing the unitary constitution.

It was at this time that the Sinhala nation elected Rajapakse as its new President. Like the Sinhala leaders of the past, he too is putting his hopes in a military solution. He rejected our final call in our last year’s Heroes’ Day statement, to find a resolution to the Tamil National question with urgency. Instead, he intensified the war, on the one hand, with the view to destroy our movement and, on the other hand, he is talking about finding a peaceful resolution. This dual war and peace approach is fundamentally flawed. It is not possible to find a resolution by marginalizing and destroying the freedom movement with which talks must be held to find the resolution. This is political absurdity on the part of the Sinhala leaders.

The Rajapakse regime hopes to decide the fate of the Tamil nation using its military power. It wants to occupy the Tamil land and then force an unacceptable solution on the Tamils. Due to this strategy of the Rajapakse regime, the CFA has become defunct. The Rajapakse regime, by openly advocating attacks on our positions, has effectively buried the CFA. The Rajapakse regime’s attacks have expanded from land to sea and air. It has given a free hand to the paramilitary groups to kill at will. It has occupied Mavilaru and Sampur blatantly breaking the terms of the CFA. The Sinhala military misjudged our strategic withdrawal from Mavilaru and Sampur. It used heavy firepower and launched large scale offensives to bring Tamil lands under its control. Tamil land was soaked in blood. It is at this time we decided to give a shock to the Sinhala regime. Our forces conducted a massive counter-offensive on the Sinhala forces that attempted to move from Kilali and Muhamalai. The military sustained heavy losses and was forced to abandon its offensive temporarily. This, however, did not persuade the Sinhala regime to give up its military plans. It continues on its military path.

The Rajapakse regime, while conducting genocide of the Tamils, is portraying our movement which is waging a struggle to save the Tamils from this genocide as a terrorist organization. It has launched a malicious propaganda campaign to defame our movement. Ignoring the unanimous opposition of our people and the objection of the Sri Lankan Monitoring Mission (SLMM), the European Union and Canada have yielded to diplomatic pressure from the Sri Lankan government and listed our movement as a terrorist organization. They isolated us as undesirables.

This hasty decision, arrived at without considering the prevailing context, has created serious repercussions. It has gravely disturbed the parity of status and balance of power we held with the Sinhala regime. It encouraged the hard line stance of the Sinhala regime. It weakened the SLMM and facilitated the war plans of the Sinhala regime. Some countries that proclaim to be helping the peace efforts, have not only failed to condemn the genocidal attacks on our people but are also giving military and financial aid to the Sinhala regime to support its war plans. These are external factors that are encouraging the Rajapakse regime to carry on with its brutal military offensives in the Tamil land with absolute impunity.

The Rajapakse regime is not giving due importance to the peace talks because it has confidence in its military approach. The two Geneva talks were unproductive because of its lack of interest in the peace front. At the first Geneva talks, we placed evidence of military-paramilitary cooperation in the form of documents, statistics and incident reports. Unable to reject the solid evidence, the Sri Lankan government agreed to implement the CFA clause by removing the paramilitary groups from the Tamil homeland. After this first Geneva talks, there was only one change. State and paramilitary terror in the Tamil homeland escalated.

The second Geneva talks were also a failure. At these talks, we gave priority to the humanitarian issues facing our people and requested that the A9 road be opened and the SLMM be given freedom to function. The Sri Lankan government, putting military advantage ahead of humanitarian concerns, rejected both requests.

The Sinhala government that failed to show mercy to the people affected by a natural disaster is never going to budge on a humanitarian crisis that it planned and created. How could the peace talks move forward when the peace delegation is made up of people who proclaim that they will wage war and hold peace talks at the same time? How can trust be built? How can peace be arrived at like this?

To improve his posturing as a peace dove, President Rajapakse staged a deceptive ‘All Party Conference’. The Sinhala leaders have practiced this infamous political tradition of initiating commissions of inquiry, parliamentary select committees, all party conferences, or round tables to procrastinate whenever it is unable to face up to a situation and wants to drag time until attention is diverted. This is exactly what he is doing now. Rejecting our call to speedily find a resolution to the Tamil national question, he is hiding behind the All Party Conference. For the last ten months, the all party committee is looking for the Tamil question, like searching for a black cat in a dark room.

Once the All Party Conference lost its deceptive power, President Rajapakse has taken up his next card, the MoU between the two major parties. These two major parties that effectively have hegemonic control over the south are both essentially chauvinistic parties. Both these parties are born of Sinhala Buddhist chauvinism and compete with each other to carry out genocide of the Tamils. This MoU is a temporary opportunistic move by Rajapakse regime to avoid the multiple problems of international pressure to find a peaceful solution, the declining economic situation, and the opposition of his political partner, Janatha Vimukthi Perumuna (JVP). There is no sincere motive in this MoU agreement. These two parties will never put forward a just solution to the Tamil issue. Despite this, the Rajapakse regime continues to show interest in keeping the all party conference alive simply to deceive the world.

My beloved people,

A long time has elapsed since we embarked on this journey for peace with Norway’s facilitation. We have tried our best to take forward this peace effort. We have practiced patience. We gave innumerable opportunities for finding peaceful resolution. We postponed our plan to advance our freedom struggle twice to give even more chances to the peace efforts, once when the tsunami disaster struck and again when President Rajapakse was elected.

It is now crystal clear that the Sinhala leaders will never put forward a just resolution to the Tamil national question. Therefore, we are not prepared to place our trust in the impossible and walk along the same old futile path.

The uncompromising stance of Sinhala chauvinism has left us with no other option but an independent state for the people of Tamil Eelam. We therefore ask the international community and the countries of the world that respect justice to recognize our freedom struggle. At this historic time when the Tamils are recommencing their journey on the path of freedom, we seek the unwavering support and assistance of the world Tamil community. We express our gratitude to the Tamil Nadu people and leaders for voicing their support and ask them to continue their efforts to help us in our freedom struggle. We express our gratitude to the Tamil Diaspora, our displaced brethren living all around the world, for their contribution to our struggle and ask them to maintain their unwavering participation and support.”

Read More...

Thursday, September 28, 2006

சண்முகநாதன் சொல்லவேயில்லையா?

முதல்வர் கருணாநிதி கூறியதாவது :-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் யாரும் என்னை சந்திக்கவும் இல்லை. அதுபற்றி முயற்சிக்கவும் இல்லை.அந்தத் தரப்பில் முயற்சி மேற்கொண்டதாக கூறப்படுவதற்கு பெயர்தான் சால்ஜாப். என்னை யாரும் சந்திக்க தொடர்பு கொள்ளவில்லை.

என்னதான் நடந்தது? தினக்குரலில் விலாவாரியாக வந்திருக்கிறது.. விபரம் இதோ..


தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்களுடனான சந்திப்பு விவகாரம்- `கருணாநிதியின் கூற்று உண்மைக்குப் புறம்பானது'

[28 - September - 2006] [Font Size - A - A - A]

இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து விளக்கிக் கூறுவதற்காக அண்மையில் இந்தியா சென்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான கலைஞர் மு.கருணாநிதியை சந்திப்பதற்கு இடையறாது முயற்சி மேற்கொண்டிருந்த போதிலும், அவ்வாறு அவர்கள் தன்னைச் சந்திப்பதற்கு முயற்சித்ததாகக் கூறுவது வெறும் கட்டுக்கதையென்று அவர் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கூறியிருப்பது இலங்கைத் தமிழ் மக்களுக்கு பெரும் மனவேதனையை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தன்னைச் சந்திக்க முயற்சிக்கவில்லையென்ற கலைஞரின் கூற்று உண்மைக்குப் புறம்பானது என்று தமிழக கட்சிகளின் வட்டாரங்களும் தமிழக அரசியல் தலைவர்களுக்கும் அவர்களுக்கும் இடையேயான சந்திப்புகளை ஏற்பாடு செய்வதில் முன்னின்று பாடுபட்ட முக்கியஸ்தர்களும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

ஜூலை முதல் வாரத்திலிருந்து முயற்சி

கடந்த ஜூலை முதல் வாரத்திலிருந்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத் தலைவர்களைச் சந்திப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனும் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும் சந்திப்புகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் தமிழகத்தின் சகல கட்சிகளினதும் தலைவர்களுக்கு சென்னையில் நீண்டகாலமாகத் தங்கியிருக்கும் மறவன்புலவு க.சச்சிதானந்தன் தமிழரசுக் கட்சியின் கடிதத்தலைப்புகளில் தானே கையெழுத்திட்டு கடிதங்களை அனுப்பிவைத்திருந்தார். முதலமைச்சர் கருணாநிதி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா, தேசிய முற்போக்கு திராவிடர் கழகத் தலைவர் நடிகர் விஜயகாந்த், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகப் பிரிவு தலைவர்களிடமிருந்து இக்கடிதங்களுக்கான பதில் கிடைக்கவில்லை. சம்பந்தன் தமிழகம் வந்து சேருவதற்கு முன்னதாக பல கட்சிகளின் தலைவர்களை மாவை சேனாதிராஜாவும் சச்சிதானந்தனும் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தனர்.

கலைஞரின் வீட்டில் கடிதம் கையளிப்பு

சம்பந்தன் சென்னை வந்துசேர்ந்த பின்னர் செப்டெம்பர் முதலாம் திகதி அவரும் மாவை சேனாதிராஜாவும் கூட்டாக கையெழுத்திட்ட கடிதத்தை சச்சிதானந்தன் முதலமைச்சர் கருணாநிதியின் வீட்டுக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் கையளித்திருந்தார். தங்களைச் சந்திப்பதற்கு நியமனம் தருமாறு சம்பந்தனும் மாவையும் அக் கடிதத்தின் மூலம் கலைஞரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். பின்னர் செப்டெம்பர் 4 ஆம் திகதியும் மீண்டும் ஒரு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டது.

செப்டெம்பர் 6 ஆம் திகதிக்கு முன்னர் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறே அக் கடிதத்தில் வேண்டுதல் விடுக்கப்பட்டது. செப்டெம்பர் 7 ஆம் திகதியும் சம்பந்தன் தனியாகக் கையெழுத்திட்டு பிற்பகல் 2 மணியளவில் கலைஞரின் வீட்டுக்கு தொலை நகல் மூலம் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கிற்கும் அன்றைய தினமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சம்பந்தன் கடிதத்தை அனுப்பினார்.

கலைஞரின் செயலாளருடன் தொலைபேசியில் தொடர்பு

செப்டெம்பர் 7 ஆம் திகதிக்கும் 14 ஆம் திகதிக்கும் இடையில் சம்பந்தனும் மாவை சேனாதிராஜாவும் முதலமைச்சர் கருணாநிதியின் செயலாளர் சண்முகநாதனுடன் அடிக்கடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சந்திப்புக்கான நேரம் குறித்து வேண்டுகோள் விடுத்த வண்ணமிருந்தனர். 14 ஆம் திகதி நண்பகல் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியைச் சந்தித்து கலைஞருக்கான கடிதத்தின் பிரதியொன்றும் கையளிக்கப்பட்டது. தொலைபேசி மூலமான வேண்டுகோள்கள் சகலதுக்கும் முதலமைச்சரின் செயலாளரிடமிருந்து பல்வேறு சாக்குப் போக்குகள் கூறப்பட்டு காலம் இழுத்தடிக்கப்பட்டது. செப்டெம்பர் 19 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் தூதுக் குழு புதுடில்லிக்கு புறப்பட்டுச் சென்று விட்டது. இக் குழுவினர் புது டில்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோகர் எம்.கே.நாராயணன், வெளியுறவுச் செயலாளராகப் பதவியேற்கவிருக்கும் சிவ் சங்கர் மேனன், வெளியுறவு இணையமைச்சர் ஈ. அஹமட் ஆகியோர் உட்பட பல அதிகாரிகளை சந்தித்துப் பேசி நிலைவரங்களை விளக்கிக் கூறமுடிந்ததெனினும் பிரதமர் கலாநிதி சிங்கைச் சந்திப்பதற்கான வாய்ப்புக் கிட்டவில்லை. அவர்கள் புதுடில்லியிலிருந்து சென்னை திரும்பிய பின்னரும் கூட கலைஞர் கருணாநிதியைச் சந்திப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

பழ.நெடுமாறன் கருத்து

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தன்னைச் சந்திக்க முயற்சிக்க வில்லை என்ற கலைஞர் கருணாநிதியின் கூற்று குறித்து தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனுடன் நேற்று புதன்கிழமை மாலை சென்னைக்குத் தொடர்பு கொண்டு கேட்டபோது கலைஞர் கூறியது சகலதுமே உண்மைக்குப் புறம்பானது என்று சொன்னார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தூதுக்குழுவினர் முதலமைச்சரைச் சந்திப்பதற்கு 10 நாட்களாக இடையறாது முயற்சித்த போதிலும் அதற்கான வாய்ப்பை அவர் வழங்கவில்லை. சந்திப்பதற்கு அவர் மறுத்து விட்டார். இத் தூதுக்குழுவினரை இந்தியப்பிரதமர் சந்திக்க மறுத்தமைக்கும் கருணாநிதி அவர்களைச் சந்திக்க முதலில் மறுத்ததே காரணமாக இருக்கக் கூடும். தமிழக முதலமைச்சரே சந்திக்க மறுத்த தூதுக்குழுவினரை தான் ஏன் சந்திக்க வேண்டும் என்று பிரதமர் நினைத்திருக்கக்கூடும். இதற்கெல்லாம் முழுப் பொறுப்பு முதலமைச்சர் கருணாநிதியே என்று நெடுமாறன் கூறினார்.

சுப.வீரபாண்டியன்

திராவிட முன்னேற்றக் கழக முக்கியஸ்தரான சுப.வீரபாண்டியனுடன் தொடர்புகொண்டு கேட்டபோது, `கலைஞர் கருணாநிதி தெரிவித்த கருத்தையடுத்து, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸுடன் நான் தொடர்பு கொண்டு நிலைவரங்களைத் தெரிவித்தேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்ளுமாறு ராமதாஸ் என்னைக் கேட்டுக் கொண்டார். முதலமைச்சரை அவர்களுடன் சந்திக்க வைப்பதற்கான ஏற்பாடுகளில் இறங்குவதற்கு ராமதாஸ் தயாராயிருக்கிறார். ஆனால், பாராளுமன்ற உறுப்பினர்கள் இயங்கை சென்றுவிட்டதாகவும் ஒரேயொருவர் மாத்திரம் (சிவாஜிலிங்கம்) சென்னையில் நிற்பதாகவும் கொளத்தூர் மணி மூலம் அறிந்தேன். அத்தகவலை டாக்டர் ராமதாஸுக்கு தெரிவித்த போது, சிவாஜிலிங்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு என்னை அவர் கேட்டார் சிவாஜிலிங்கத்தை தொடர்பு கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்' என்று சொன்னார்.

Read More...

Tuesday, September 26, 2006

யாரைக் கேட்டு?

பூங்கா விளம்பரம் எனது பட்டையில்?

தமிழ்மண பின்னூட்ட வசதிக்காகவும் pdf வசதிக்காகவும் என சேர்த்த பின்னூட்ட பதிவு பட்டையில் இப்பாழுது திடீரென பூங்கா என ஒரு விளம்பரப் படம்
புகுந்துள்ளது.

இதற்கான அறிவித்தலை தமிழ்மணம் ஏற்கனவே அறிவித்துள்ளதா?
எனது வீட்டில் உங்களை எனது வசதிக்காக அனுமதித்தாலும் எனது வீட்டில் என்ன நடக்கிறது என்பதை நானும் அறிய வேண்டுமல்லவா?

நாளை பிரபாகரன் வாழ்க எனவோ அல்லது தமிழ் ஈழம் வெல்க எனவோ அல்லது கிழக்கு பதிப்பகத்தின் விளம்பரமோ வரலாம்.

எனவே சம்பந்தப்பட்டவர்கள் பட்டை அறிவித்தலில் தங்கள் சுதந்திரத்தை அறிவித்துகொள்வது நல்லது.

Read More...

Monday, September 25, 2006

0 comments



படத்தில் சூளமேடு புகழ் டக்ளசுடன் இந்தியப் பிரதமர் அருகில் மகிந்த..
படம் கட்டுரை சுட்ட இடம் புதினம் கொம். கட்டுரை இனி கட்டுரை..

கூர் மழுங்கிய ஆயுதத்தை கையிலெடுக்கும் இந்திய கொள்கை வகுப்பாளர்கள்
திங்கட்கிழமை, 25 செப்ரெம்பர் 2006, 18:47 ஈழம்] [ச.விமலராஜா]
சிறிலங்கா நாடாளுமன்றப் பிரதிநிகளாகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்திப்பதில்லை என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்க் அறிவித்துவிட்டதாக இந்திய நாளேடுகள் தெரிவித்துள்ளன.


இந்தியப் பிரதமர் தெரிவித்திருந்த விருப்பத்தின் அடிப்படையில் புதுடில்லியில் முகாமிட்டு, அவரின் தரிசனத்திற்காக காத்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏமாற்றத்துடன் சென்னைக்கும் திரும்பியுள்ளனர்.

அதேவேளையில் தமிழர் தலைவர்கள் என்ற போர்வையில் வேறு சிலர் புதுடில்லி வந்திருப்பதாகவும் இந்திய செய்தி ஊடகங்கள் வழியாக அறிய முடிகின்றது.

தினமணி நாளேடு தமிழர் தலைவாகளான வீ.ஆனந்தசங்கரி, த.சித்தார்த்தன், சிறீதரன் ஆகியோர் புதுடில்லிக்கு வந்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

இது இந்திய அரசின் தெளிவற்ற கொள்கையையும் தடுமாற்றத்தையும் குறிப்பதாகவே அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். அத்துடன் இலங்கை இனப்பிரச்சனையில் நீண்டகாலமாக மௌனம் காத்துவந்த இந்திய அரசு வழமைபோல் குட்டையை குழப்புகின்ற வேலையை தொடர்கின்றதோ என்ற சந்தேகத்தை தோற்றுவித்திருக்கின்றது.

ஏனெனில் சிறிலங்கா அரசு வெறுப்படையும் வகையில் இந்திய அரசு தனது அழுத்தத்தை பிரயோகிக்கின்றது என்ற தோற்றப்பாடே அண்மைக்காலமாக தென்பட்டு வந்தது.

அதனடிப்படையில்தான் மகிந்தர்களும் பண்டாரநாயக்கர்களும் ஏன் அனைத்து சிங்கள ஊடகங்களும் இந்தியாவைச் சீண்டி பிறாண்டிக் கொண்டிருந்தன. இந்நிலையில்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை புதுடில்லிக்கு வரவழைத்திருந்தது இந்தியா.

இச்செய்திகள் வெளிவந்தபோதே இந்திய கொள்கை வகுப்பாளர்களும் அரசியல் சிந்தனையாளர்களும் சுறுசுறுப்பான செயற்பாடுகளில் இறங்கியதையும் அவதானிக்க முடிந்தது.

இந்த இந்திய கொள்கை வகுப்புக்குழுக்கள் எனப்படுவோர் சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான புதுடில்லியின் மாற்றம் கண்டு குழம்பி விட்டனர் போல் தெரிகின்றது.

இந்நிலையில் புதுடில்லியில் இலங்கை இனப்பிரச்சனை ஆலோசனைகள் மீளத் தீவிரமடையத் தொடங்கியதாக கூறப்படுகிறது. அதேபோல் கொள்கை வகுப்பாளர்கள் என்றழைப்போரிடம் இந்திய அரசாங்கம் ஆலோசனைகளைப் பெறத் தொடங்கியிருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்திய கொள்கை வகுப்புக்குழுக்கள் என்ற பட்டியலில் பல நிறுவனங்கள் புதுடில்லியில் முகாமிட்டு தங்களது மேதாவித்தனத்தை வெளிப்படுத்தி வருகின்றன. ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள், வெளிவிவகாரத்துறையினர், ஊடகவியலாளர்கள் என்ற பட்டியலில் உள்ளவர்கள் கூடும் மையங்களாக இவை உள்ளன.

அண்மையில் இவ்வகையான கொள்கை வகுப்புக்குழுக்கள் என்றழைக்கப்படுவோரின் கூட்டத்தில் அரசியல் அரங்கில் காணாமல் போயிருந்த வரதராஜப்பெருமாளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

சிறிலங்காவுக்கான முன்னாள் இந்தியத் தூதுவர் என்.என்.ஜா, லெப்.ஜெனரல் வி.கே.சிங் மற்றும் நாராயணசுவாமி ஆகியோரும் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

இதில் என்.என்.ஜா கடும் போக்காளர். இந்தியாவின் "பிரதான கொள்கை வகுப்பாளர்"(!) சுப்பிரமணியசுவாமி, "சிங்கள ரத்னா" இந்து ராம் மற்றும் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் கூட்டணியில் வலம் வருகின்றவர்.

ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்தியாவுக்கும் தமிழர்களுக்கும் இடையே மோதலை ஏற்படுத்தி விட்ட இந்த கொள்கை வகுப்புக்குழுக்கள்தான் கடந்த 2004 ஆம் ஆண்டு புதுடில்லியிலே சுப்பிரமணியசுவாமியின் தலைமையில் மாநாடும் போட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர்கள் தங்கள் ஆலோசனைக்கு கீழ்வரும் விடயங்களை உள்ளடக்கியதாக அறியமுடிகின்றது.

- இலங்கை இனப்பிரச்சனையின் பின்புலம்

- ஆயுதக்குழுக்கள் உருவாக்கம் ஏன்?

- இந்திய- இலங்கை ஒப்பந்தம் மீதான விமர்சனங்கள்

- சந்திரிகா காலத்து அதிகாரப் பரவலாக்கல் யோசனைகள்

- தமிழீழ விடுதலைப் புலிகளின் வலிமை

- இந்தியாவின் பங்களிப்பு

- கிழக்கு மாகாண நிலைமை

- தமிழீழக் கோரிக்கையில் விடுதலைப் புலிகள் உறுதியாக உள்ளமை

- அகதிகள் பிரச்சனை

- சிறிலங்காவுக்கான இராணுவ உதவி

- சிறிலங்காவின் இரு பிரதான கட்சிகளுடன் இந்தியாவின் உறவு

என்றெல்லாம் விவாதித்து இறுதியில்

"ஐக்கிய இலங்கைக்குள் பேச்சு மூலமாக இறுதித் தீர்வு- அனைத்து இன மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்" என்ற கொள்கை முடிவுக்கு வந்திருக்கின்றார்கள்.

புதுடில்லியில் கொள்கை வகுப்பாளர்கள் எனப்படுவோர் இப்படியாக செயற்படும் நிலையில்தான் கியூபாவில் சிறிலங்கா அதிபர் மகிந்தவும் முக்கயமான ஒரு பணியை ஆற்றிவிட்டு வந்திருக்கின்றார்.

கீழே உள்ள இந்தப் படத்தை பார்த்தால் அவர் ஆற்றிய பணி புரியும்.



துணை இராணுவக் குழு டக்ளசை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு அறிமுகம் செய்து வைக்கும் மகிந்த ராஜபக்ச

அமைதியை உருவாக்க இராணுவ வலுச் சமநிலையை விடுதலைப் புலிகள் ஏற்படுத்திக் கொண்டனர். அமைதி முயற்சியும் முன்னெடுக்கப்பட்டது.

பேச்சும் யுத்தமும் யுத்தமும் பேச்சுமாக பேச்சுக்கள் ஒரு பக்கம் மற்றும் இராஜதந்திர நகர்வுகளுக்கு மத்தியில் இன்னமும் யுத்த நிறுத்த ஒப்பந்தம் என்பது செத்துவிட்டதாக அறிவிக்கப்படாத நிலை நீடிக்கிறது.

ஆனால் நீண்டகாலாமாக இந்திய உளவு அமைப்பின் உதவியுடன் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வரும்- கடந்த 15 ஆண்டு காலத்துக்கும் மேலாக தமிழீழ அரசியலில் எதுவித தொடர்புமற்று ஆனால் பெயருக்கு சிறிலங்கா இராணுவத்துடன் இணைந்து ஒரு துணை இராணுவக்குழுவை நடமாட விட்டுள்ள வரதராஜப்பெருமாள் புதுடில்லியில் ஆலோசனைக்கு அழைக்கப்பட்டதன் பின்னணி என்ன?

அல்லைப்பிட்டியில் நடந்தேறியது போன்று அப்பாவி பொதுமக்களை- புத்திஜீவிகளை சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கி தொடர்ச்சியாக கொன்று குவித்து வரும் துணை இராணுவக் குழுவைச் சேர்ந்த டக்ளஸ் தேவானந்தாவை மகிந்தர் இந்தியப் பிரதமருக்கு அறிமுகம் செய்தது தற்செயலானதா?

தற்போது தினமணி நாளேடு குறிப்பிடும் தமிழர் தலைவர்களான வீ.ஆனந்தசங்கரி, த.சித்தார்த்தன், சிறீதரன் போன்ற வகையறாக்கள் புதுடில்லி அழைக்கப்பட்டிருப்பதன் பின்னணி என்ன?

இவ்வகையானோரை முன்னிலைப்படுத்துவதில் கொள்கை வகுப்புக் குழப்பவாதக் குழுக்கள் முயற்சியாலும் அழுத்தத்தாலும் இந்திய அரசு தடுமாறுகின்றதா?

சிறிலங்கா நாடாளுமன்றப் பிரதிநிகளாகிய தமிழத் தேசிய கூட்டமைப்பினரை சந்திப்பதில்லை என்ற இந்திய பிரதமரின் முடிவிற்கும் இவைக்கும் தொடர்பிருக்கும் என்ற சந்தேகமே ஈழத்தமிழர்களிடம் மேலோங்கி இருக்கின்றது.

பல தடவைகள் தோற்றுப்போன இந்திய கொள்கை வகுப்பாளரின் திட்ட வரைவையே மீளவும் இந்திய அரசு ஏற்கப் போகின்றதா?


Read More...

Saturday, August 26, 2006

வேலவா வடி வேலவா

இது பக்தி முத்திய பதிவல்ல.. இப்பொழுதெல்லாம் ஒரு பதிவு போட முதல் பதிவைப் பற்றிய ஒரு முன்னோட்டம் கொடுக்கவேண்டியுள்ளது .இது சோகக் காட்சிகளோ சண்டைக்காட்சிகளோ இல்லாத பதிவு..ஈழத்து அரசியல் பற்றியோ அல்லது ராஜீவ் காந்தி பற்றியோ எந்த மனச்சாட்சியையும் உரசும் எந்த காட்சிகளும் இல்லாதது.

இனி

நம்ம வடிவேலு வர வர நிறையவே தனது பேச்சின்மூலம் நம்மை ஆச்சரியப்படவைக்கிறார்.நடிப்பை விட மனிதர் மிக இயல்பாகவே இருக்கிறார்.கேள்விகளுக்கு பதில்கள் மிக ஆளுமையாகவே டக் டக்கென்று வருகிறது...இதுதான் மதுரை மண் வாசமா?

குங்குமம் பார்க்க..











Read More...

Monday, August 14, 2006

உன் தலையில் இடி விழ!.





அதி உத்தம மேதகு கன பராக்கிரம ராஜாதிராஜ ராஜபக்ஸ மாத்தயா உன் தலையில் முப்பது முக்கோடி தேவர்கள் ஆசீர்வதிக்க இடி விழட்டும்.news

Read More...

Wednesday, July 26, 2006

ஓடவிட்டு உதைக்கணும்

புலிகேசி சொல்லுறாரு நான் ஆமோதிக்கிறேன்.





பல காலத்திற்கு பிறகு நல்ல தகுதரத்தில் இணையத்தில் இருந்து ஒரு படம் இறக்கிப் பார்த்தேன்.படத்தின் பெயர் உயிர்.ஒரு விதமான சைக்கோ படம்..அண்ணிக்காரி மைத்துனனை ஆணாள நினைக்கும் ஒரு படம்..

.என்னடா இப்படியெல்லாம் படமெடுத்திருக்கிறார்களே என நினைக்க நம்ம புலிகேசி இதுபற்றி பாய்ந்திருக்கிறார் எனது கருத்தும் அதுதான்.

தமிழ்முரசில் வந்த அந்த செய்தி இது..

புனிதமான அண்ணி உறவை சீரழிப்பதா?

'உயிர்' படம் எடுத்தவன ஓடவிட்டு உதைக்கணும்

சென்னை ஜூலை 26-ÔÔ

அண்ணி என்ற புனிதமான உறவை சீரழித்த உயிர் படம் எடுத்தவர்களை ஓடவிட்டு உதைக்க வேண்டும் என்று நடிகர் வடிவேலு ஆவேசமாக கூறியுள்ளார்.
சீமான் இயக்கிய தம்பி படத்தின் 110-வது நாள் வெற்றி விழா நேற்று இரவு சென்னையில் நடந்தது. பா.ம.க தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். திரைப்பட கலைஞர்களுக்கு செய்தி-விளம்பரத்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி கேடயம் வழங்கினார்.

விழாவில் நடிகர் வடிவேலு பேசியதாவது:சினிமா என் வீடு. ஆனா அது இப்போ அசுத்தமாயி கிடக்கு. அத சுத்தம் பண்ண வேண்டியது எம் பொறுப்பு, இப்பல்லாம் என்ன படம் எடுக்றாய்ங்க உயிரு .....ன்னு, இவங்கெல்லாம் அக்கா, தங்கச்சியோட பொறக்கலையா...அண்ணி உறவ பாத்ததில்லயா? அண்ணி கொழுந்தன் மேல ஆசப்படுறாளாம், கொழுந்தியா அக்கா புருஷன்மேல ஆசப்படுறாளாம், படமா எடுக்றாய்ங்க இவுங்கள எல்லாம் தூக்கிப்போட்டு அடிக்கலாம்போல இருக்கு. ஓடவிட்டு உதைக்கணும்போல இருக்கு.நல்ல குடும்பமா, கூட்டுக்குடும்பமா ஒண்ணுமண்ணா பழகிக்கிட்டிருக்கிற குடும்பத்துல சபலத்தையும் சந்தேகத்தையும் உண்டாக்குற அளவுக்கு படம் எடுக்கலாமா?ஏன் நல்ல படமே எடுக்க முடியாதா.

இப்ப இம்சை அரசன்னு ஒரு படத்தை நான் கொடுக்கலையா, குழந்தைங்க கொக்கி போட்டு பெத்தவங்கள கூட்டிக்கிட்டு கொத்து கொத்தா தியேட்டருக்கு போறாங்களே...

சினிமால இசட்டுல ஆரம்பிச்சு ஏ வரைக்கும் எல்லாம் பாத்தாச்சு. இப்படி சொன்னா, ஒரு படம் ஜெயிச்ச கொழுப்புல பேசுறான் பாருய்யாம்பாய்ங்க. இவனெல்லாம் பேசி நாம கேக்கவேண்டியிருக்கும்பாய்ங்க.

படத்துலதான் நான் காமெடியன். நிஜத்துல நானும் உங்கள மாதிரி உணர்ச்சியுள்ள மனுஷந்தேன்.
சினிமால தப்பு தப்பா படம் எடுத்தா தட்டிக் கேக்க ஒரு குழுவ போடுங்கன்னு அமைச்சர கேட்டுக்றேன்.
அப்பதான் இவிங்க திருந்துவாய்ங்க.
இப்ப ஆட்சிக்கு வந்திருக்கிற கலைஞர் அய்யா இத செய்யணும். ஏன்னா சினிமாக்கு நிறைய செஞ்சிக்கிட்டிருக்கிய. மாபெரும் நடிகன் சிவாஜிக்கு சிலை வச்சு பெருமை படுத்தினீங்க. தமிழ் பேரு வச்சா வரி கட்ட வேண்டான்னு சொல்லிட்டிங்க.இவ்வாறு வடிவேலு பேசினார்.

விழாவில் 'தம்பி' படத்தின் திரைக்தை வசன நூலை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் வெளியிட தயாரிப்பாளர் சங்க தலைவர் ராம நாராயணன் பெற்றுக் கொண்டார். இயக்குனர்கள் பாலுமகேந்திரா, எஸ்.பி.முத்துராமன், கவிஞர் அருள்மொழி, தமிழச்சி, சுப.வீரபாண்டியன், இசை அமைப்பாளர் வித்யாசாகர், நக்கீரன் கோபால், நடிகர் மாதவன், நடிகை பூஜா உள்பட பலர் பேசினார்கள். முன்னதாக கவிஞர் அறிவுமதி வரவேற்றார். சீமான் நன்றி கூறினார்.

Read More...

Monday, July 17, 2006

அடீங்கப்பா

பட்டணத்துராசா இப்படிக் கேட்டிருந்தார்..கேப்டனை மிஞ்சுவாரா சூப்பர் ஸ்டார்?
இதை படீங்க முதலிலே அப்புறம் மற்றதை வாசிங்க..








அவன் எனது தோழன் நான் அவனை அடிப்பேன் இது சகஜம்..இல்லை இல்லை நான் அவனை அடிப்பேன் அவன் எனது இரசிகர்களை அடிப்பான் இதுவும் சகஜம்..இதை யார் நீங்கள் கேட்க...இல்லை இல்லை நான் அவனுக்கு அடிக்க நீங்கள் எனக்கு அடிக்க..இல்லை இல்லை இது எனது அரசியல் பிடிக்காதவர்களின் சூழ்ச்சி .அதுதான் இப்படி நான் எடுத்துவைக்கும் அடிகளை திரித்துகொண்டேயிருக்கிறார்கள்..அடி .. முடி தெரியாத ஊடக நண்பர்கள்...

இப்படியெல்லாம் பேசத்தெரிந்தால் இரஜினி கப்டனை மிஞ்சுவார்.

அடீங்கப்பா...

Read More...

Wednesday, July 12, 2006

அவர் சொன்னார் இவர் சொன்னார்

பின்னூட்டங்களுக்கு நன்றி சொல்லி ஒவ்வொருமுறையும் நன்றி கூறி பின்னூட்டவரிசையில் முதலிடம் பெற்று அதற்கு என பிரத்தியேகமாக தர்ம அடி வாங்க விருப்பமில்லை. டோன்டு சார் போல உதவி செய்ய எனக்கு மகரகுழைநாதன் துணையுமில்லை.எனவே பின்னூட்டங்களுக்கான மறுமொழித் தனிப்பதிவு..

//இரஜனி ராம்கி குதித்த குதியைப் பார்த்தனீங்களா? பிரபாகரனையெல்லாம் தேவையில்லாமல் இழுத்துப் பிறகு அந்தப் பதிவையே சந்தடியில்லாமல் தூக்கிவிட்டார்//

யாரோ சொன்னாங்க..

நல்லவேளை நான் பார்க்கவில்லை இல்லையெனில் அதற்கு என நான் புதிதாக பதிவு போடவேண்டி வந்திருக்கும்.


செந்தழல் ரவி ...

//நான்கூட ஒரு பதிவை ரஜினி ராம்கி சொல்லி தூக்கினேன்..அதாவத்ய் ரஜினி - சிவாஜி போட்டோக்கள்//

இணையப் பலம் இரஜனி இரசிகர்களுக்கு இன்னமும் புரியாதது வேடிக்கையே..ஒரு செந்தழல் இரவியை தூக்கச்சொன்னால் இன்னொரு வன்தழல் இணையத்தில் போடும் என்பது தெரியாததா? அல்லது
இணையத்தில் சிவாஜி போட்டோக்கள் அதனுடன் வராமல் நின்றுவிட்டதா?.

இதில் வேடிக்கை என்னவென்றால் ஒரு பத்திரிகை .ஸ்பெயினில் உள்ள ஈழத்தமிழர்கள்தான் இந்தப் படங்களை இரகசியமாக எடுத்து வெளியிட்டுள்ளார்கள் என..செய்தி போட்டிருந்தது .படத்தின் தரத்தை ஒப்பிட்டுப்பார்க்கும்போது யாரோ யூனிட்டிலுள்ளவர்களே படத்தை எடுத்ததுபோலல்லவா இருக்கிறது..





G.Ragavan said...
//நடிகர்கள் வந்து காப்பாற்றுவார்கள் என்று நினைக்காத அளவிற்கு இலங்கைத் தமிழர்களுக்கு மூளை இருக்கிறது என்றே நான் நம்புகிறேன்.//

புலம் பெயர் ஈழத்தமிழர்கள் திரைக்கலைஞர்களை காப்பாற்றும்போது அவர்களுக்காக இவர்கள் அணில் போல ஒரு சிறு குரல் கொடுத்தாலே இந்திய மட்டத்தில் அது சற்று கவனிக்கப்படும். பிரச்சனை விரைவில் தீர பல அப்பாவி உயிர்கள் காப்பாற்றப்பட இது போன்ற சில நடவடிக்கைகளும் தேவைப்படுகின்றது.

நாகை சிவா said...

//நதி நீர் இணைப்பு திட்டம் தொடக்கப்பட்டு அதற்கு அவர் பணம் தராமல் இருந்தால், நீங்கள் கூறுவதை ஏற்றுக் கொள்ளலாம். அதை வரை அமைதி காணவும்//

ஆனானப்பட்ட தங்க கரண்டியில் உணவுண்ட பாகவதரிலிருந்து மாடியில் காரோடிய சந்திரபாபு வரையும் கடைசிக்காலத்தில் எப்படியிருந்தார்கள் என்பது வரலாறு சொல்லும்.எது எப்போ எப்படி நடக்கும் என்பதை யாரும் தீர்மானிக்கமுடியாது.நல்லது செய்வதை ஒத்திபோடக்கூடாது.தீயவற்றை ஒத்தி வைக்கலாம்.

எப்போ நதி நீர் இணைத்து எப்போ உதவி செய்து..

காலமாறறம்,, கடவுள்தான் காப்பாற்றவேண்டும் என்று சொல்லச்செய்யும் .அதே காலம்தான் தாலியை தனது மகளுக்கு எடுத்து கொடுங்கள் என்று சொல்லவும் செய்யும்.உஙகளுக்கு தெரியாததா?

//சூப்ரிம் கோர்ட் சொல்லியே கர்நாடகம் தண்ணீர் திறந்து விடவில்லை. பாரதிராஜா, ரஜினி சொல்லி தண்ணீர் தர போகின்றார்களா?//

இதற்கு பதில் பகவத்கீதைதான் . கடமையை செய்....

சுப்ரீம்கோர்ட்டைவிட பலமாக ஒரு மாநில அரசு இருக்குமானால் அதை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும்.


//Thamil said...

ரஜனிரசிகர்களுக்கு உண்மையில் மூளை இருந்தால் இனம் கண்டு கொள்வார்கள்.//

இரஜினி இரசிகர்கள் தமது தலைவரை விட செயலாளிகள்..அதற்கு சுனாமி செயற்பாடுகள் ஒரு உதாரணம்.அதை நாம் மறந்துவிடலாகாது.

புதுமை விரும்பி said...

//தீவு மன்னியுங்கள். தீவிரமாய் போய்க்கொண்டிருக்கும் வாக்குவாதத்தில் நடுவில் புகுந்து கலாய்ப்பதற்கு. செய்தி இதோ: இப்பொழுது முதலில் ஆடிய மகேந்திரன் தலைமையிலான "ரஜினி ரசிகர்களுக்கு மூளை இருக்கிறதா?" அணி முதல் இன்னிங்க்ஸ்ல் 110 ரன்கள் எடுத்து declare செய்திருக்கின்றனர். அடுத்ததாக வந்த பாலமுருகன் தலைமையிலான "இலங்கை தமிழர்களுக்கு மூளை இருக்கிறதா?" அணியினர் 18 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழக்காமல் இன்னும் விளையாடிக்கொண்டிருக்கின்றனர். இந்த 18 ரன்களில் captain பாலமுருகன் 11 ம் vice captain தீவு 7ம் அடித்த நிலையில் இருக்கின்றனர்.//

வாங்க சார் ..நானே எப்படா அவுட்டாவேன் என தவம் இருக்கையில் நீங்கள் வேறு..:)

பி.கு
நேரம் எடுத்து பின்னூட்டம் வழங்கிய அத்தனை சக பதிவர்களுக்கும் நன்றி கூறி உங்கள் பதிவுகளும் என்னை எழுதத் தூண்டும் பட்சத்தில் நேரமில்லையே என்று போகாமல் பின்னூட்டம் இடுவேன் என்று கூறிக்கொள்கிறேன்.நன்றி.

இலங்கை தமிழர்களுக்கு மூளை இருக்கிறதா? என்ற பதிவின் பின்னூட்டங்கள் இவை

Read More...

Tuesday, July 11, 2006

இலங்கை தமிழர்களுக்கு மூளை இருக்கிறதா?

பதிவர் பாலகுமாரன் ஒரு கேள்வி பதிவு ஒன்று போட்டுள்ளார் .அதற்கு எனது மனப்பதிவு இது.






தமிழ் மரபணுக்களில் வந்த இலங்கைத் தமிழர்களுக்கு மூளை இருக்கிறதா இல்லையா என்பதை அதே அணுக்களில் வந்த தொப்புள்கொடிகள்தான் சொல்லவேண்டும்.

கமல் வெறுமனே முன்னர் நரசிம்மராவுடன் அரசியல் கதைத்ததை விட சுகாசினி விடயத்தில் வாயைத்திறந்து தனது கருத்தையாவது சொல்லியிருக்கலாம்.பேசாமலிருப்பது நடுத்தரவர்க்கத்திற்கு வேணுமானால் இராஜதந்திரமோ அல்லது ஆட்டோ தடுப்பாகவோ இருக்கலாம்.ஆனால் சகல தடுப்புச் சுவர்களையும் கொண்ட மனிதாபித உணர்வுகொண்ட இந்த பிரபலங்கள், மௌனிப்பதுதான் வேடிக்கை இவர்கள் வாயைத்திறக்காமலிருப்பதுதான் பிரச்சனையை பெரிதாக்குகிறது.

நெய்வேலிப்பிரச்சனை கன்னடம் சார் பிரச்சனை என்பதற்காக ரஜனி மௌனமானார் அதனால் பாரதிராஜா போக்கில் உடன்படவில்லை என்று யாவருக்கும் தெரியும் .

நதியிணைப்பு கோடிருபாய் எல்லாம் பழங்கதையாயிற்று.

இரஜனி இரசிகர்கள் நல்லவர்கள் வல்லவாகள் என்பதில் எனக்கும் உடன்பாடே நானும் ஒரு இரஜனி இரசிகனே..

ஈழத்தமிழர்கள் விடயத்தில் இரஜனி என்றுமே வாயைத் திறக்கமாட்டார் என்பது நிதர்சனமான ஒரு உண்மை.

ஆனால் அதற்காக நாம் ஒன்றும் இரஜனி படத்தை ஒன்றும் பார்க்காமல் இருந்தோ பகிஸ்கரித்தோ விடமாட்டோம் என நண்பர் ஒருவர் சொன்னார்.

நான் துரோகி என முத்திரை குத்துவதற்குள் அவர் சொன்னார் இரஜனியின் அடுத்த படம் எல்லோரும் பார்த்து இன்புற அனைத்து இணையத் தளங்களிலும் மிக வேகமான முறையில் தரவிறக்கம் செய்து பார்க்ககூடியவாறு நல்ல தரத்துடன் வெளியிடுவோம் என்றார்.

நான் இராஜேந்தரகுமார் ஸ்ரைலில் ஙே என விழித்தேன்.

Read More...

Saturday, July 08, 2006

நீவிரும் கல்லெறியக் கடவீர்.

நாம் சபிக்கப்பட்ட இனத்திலிருந்து வந்தமையால் நீவிரும் கல்லெறிவீர்.

5 வயதாயிருந்தாலென்ன 7 வயதாயிருந்தாலென்ன ஒருவனுக்கு இவன் தமிழன் மற்றவனுக்கு இவன் அகதி..வேறென்ன வித்தியாசம்..

நாம் சபிக்கப்பட்ட இனத்திலிருந்து வந்தமையால் நீவிரும் கல்லெறிவீர்.



Read More...

Friday, July 07, 2006

விகடனில் பச்சான் பேட்டி

ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், விக்ரம், அஜீத், சூர்யான்னு ஆரம்பிச்சு இன்னிக்கு இருக்கிற
ஆர்யா, பரத் வரைக்கும், ஒவ்வொருத்தரும் இந்தப் பிரச்னையில் தங்கள் கருத்து என்ன
என்பதைப் பத்திரிகைகள் மூலமா தெரிவிக்கணும். ஒரு படம் முடிச்சுட்டு, துட்டை
அள்ளிட்டு, ஆயில் மசாஜ் எடுக்கவும், இமயமலைக்கும், ஓய்வெடுக்க வெளிநாட்டுக்கும் போனா நாங்க எங்கே போறது?


அய்யா, ஈழ விடுதலைப் போராட்டத்தில் உங்களுக்கு ஒரு கருத்து இருக்கும்,
எனக்கு ஒரு கருத்து இருக்கும்... அதை விடுங்க. ஆனா, உயிருக்குப் போராடி
பிள்ளைகுட்டிகளோட வந்து காப்பாத்துங்கன்னு கதறலோட கரை ஒதுங்குறானே நம்ம சகோதரன்...

அவனுக்கு நாம என்ன செய்யணும்னு ஒரு நிமிஷம் யோசிக்க வேணாமா?’’

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் யுத்த அபாயத்தால் தனுஷ்கோடி, ராமேஸ்வரம் கடற்கரைகளில் தினம்
தினம் அகதிகளாக ஈழத் தமிழர்கள் வந்து குவியும் துயரம் தொடர்கிறது.

இந்தச் சூழலில், வருகிற 8ம் தேதி சென்னையில் இது தொடர்பான அனைத்துக்
கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச்
செயலாளர் தொல்.திருமாவளவன். அதற்கான ணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு இருக்கும்
இயக்குநர் தங்கர்பச்சான், தன் உணர்வுகளை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் சோகமும் கோபமுமாக...

‘‘அப்பா எங்கே இருக்கார்னு பிள்ளைக்குத் தெரியாது... பிள்ளை உயிரோட இருக்கானா
இல்லியான்னுகூட அம்மாவுக்குத் தெரியாதுன்னு இருபது வருடங்களுக்கு மேலா வலியே வாழ்க்கையா
உலகம் முழுக்கக் கிடக்காங்க ஈழச் சகோதரர்கள். அந்த அவல வாழ்க்கையைப் பற்றி நமக்கு என்ன தெரியும்?


இங்கே இருந்து இருபது மைல் தூரத்தில் நம்ம சகோதரன் சாகிறானேங்கிற எந்த வலியும்
வருத்தமும் இல்லாம, நாம டி.வி. சேனலுக்குப் போன் போட்டு பாட்டுக் கேட்டு உட்கார்ந்-
திருக்கோம். எனக்கு அந்தச் சகோதரர்களின் வலி முழுசா தெரியும். காரணம், ஈழத் தமிழ்
சகோதரர்களின் வாழ்க்கையை மையமா வெச்சு ‘தாய்மண்’னு ஒரு திரைப்படத்தை இயக்க
நினைச்சிருந்தேன். அதுக்காக உலகம் முழுக்கப் போய் நூத்துக்கணக்கான அகதிகளைச் சந்
திச்சேன்.

இலங்கைக்கே போய் அந்த மக்களைப் பார்த்தேன். அந்தப் படம் மட்டும் இந்நேரம்
வந்திருந் தால், என் மக்களே திரண்டு பெருங்குரல் கொடுத்திருப்பாங்க. ஓங்கி ஒரே குரலா
ஒலிச்சிருக்கும். அந்த மாதிரி படைப்புகள் வராததுதான் தமிழனோட சாபக் கேடு.’’

‘‘ஏன் அந்தப் படம் இன்னும் ஆரம்பிக்கலை?’’

‘‘ஏங்க, என்ன சொல்றீங்க? இங்கே பெரியாரைத் திரைப்படமாக்கவே தயாரிப்பாளர்
கிடைக்கலீங்க. பொறுக்கி, ரௌடி, தாதா, சமூக விரோதியைக் கொண்டாடுற படங்களை
மட்டும்தானே இப்போ எடுத்திட்டிருக்காங்க. எங்கே பார்த்தாலும் எட்டு கொட்டாயிலேயும் அந்
தப் படங்கள்தானே ஓடுது! துருப்- பிடிச்ச நம்ம சிந்தனையையே மறுபடி உயிர்ப்பித்த, நம்ம
சமூகத்துக்கே பகுத்தறிவு ஒளிகாட்டிய பெரியாரைப் படமா எடுக்கப் பணம் போட ஆள்
இல்லைங்க. பெரியாரா நடிக்கக்கூட அந்த உணர்- வுள்ள சத்யராஜ்தான் ஆர்வமா வந்தார்.
நாகம்மை, மணியம்மையா நடிக்க ஒரு கதாநாயகியும் வர மாட்டேங்கிறாங்க. இதுதான்
இங்கே நிலைமை.

உலகம் முழுக்க எல்லா மொழிகளிலும் அவங்க வரலாற்றை, பண்பாட்டை, கலாசாரத்தைச்
சொல்ற திரைப்படங்கள் இருக்கு. நாமதான் வரலாறே இல்லாம எழுபது வருஷமா
படமெடுத்துட்டு இருக்கோம். தமிழகம் முழுக்க 55 ஆயிரம் அகதிகள் இருக்காங்க. ஒவ்-
வொருத்தருக்குள்ளேயும் எவ்வளவு கதைகள் இருக்கு. அதை ஏன் ஒரு படைப்பாளிகூட
உண்மையான சினிமா- வாக்கலை? வரலாற்றையும் பண்பாட் டையும் ஒதுக்கிட்டு குத்துப்
பாட்டு, அருவா, துப்பாக்கிச் சண்டைன்னு போனா யாருக்கு நஷ்டம்?’’

‘‘இலங்கை போய் வந்த அனுபவத்தைச் சொல்லுங்களேன்...’’


‘‘அங்கே போய்ப் பார்த்த பிறகுதான் நாம எவ்வளவு வசதியான நல்ல வாழ்க்கை வாழறோம்னு
தெரிஞ்சுதுங்க.
மின்சாரம் கிடையாது. சாலை கிடையாது. மருத்துவம் கிடையாது. விவசாயம் கிடை யாது.
செழித்து வளர்ந்த மண் இப்ப கந்தக பூமியாக் கிடக்கு. எங்கே பார்த்தாலும் பள்ளம் பள்ளமா
இருக்கு. ‘இங்கேதான் பள்ளிக்கூடம் இருந்துச்சு, இங்கே- தான் நூலகம் இருந்துச்சு’ன்னு
பள்ளங்களையாக் காட்டுறாங்க.

ஒரு கவிஞனோட வீட்டுக்குப் போனேன். பத்துக்கு எட்டு சைஸ் அறையில் 13 பேர் வாழ
றாங்க. ஒரே ஒரு விளக்கு இருக்கு. அந்த வெளிச்சத்தில் ஒவ்வொ ருத்தரா வந்து தன்
முகத்தைக் காட்டி, அறிமுகப்படுத்திக்கிறாங்க. ஒரு குட்டிப் பையன் மட்டும் எழுந்து
வராமல் அப்படியே படுத்துக்கிடந்தான். விளக்கை எடுத்துட்டுப் போய்ப் பார்த்தா, கையும்
இல்லை, காலும் இல்லை. ‘கண்ணி வெடியில் சிக்கிட்டான்’னு சொல்றாங்க. அய்யோ..!

அப்பிடியே எனக்கு உடம்பெல்லாம் ஆடிப்போச்சுங்க. அந்தக் குடும்பத் தில் மட்டும் இப்படி
மொத்தம் ஆறு பேர் ஊனமா இருக்காங்க. இப்படி ஒவ்வொரு வீட்டிலேயும் மரணம்.
விதவிதமான துயரம்.


அவங்களுக்கும் நம்மைப் போல பெரியாரும் காமராஜரும்தான் ஆதர்சம்.
பாரதியைத்தான் கொண்டாடுறாங்க. முருகனைத்தான் கடவுளா கும்பிடுறாங்க. ஆனா, பயங்கரமான
வாழ்க்கையை வாழ்ந்துட்டிருக்காங்க. அப்படித் துன்பப்பட்டு வர்றவங்களுக்கு நாம என்ன
செய்றோம்?


அவங்க ‘அண்ணா’ன்னு கூப்பிடும்போது அப்பிடியே எனக்கு உயிரே நடுங்குது.

அவங்க கஷ்டத்தைப் போக்க என்ன பண்ணியிருக்கோம்?
அங்கே இன்னும் கலை உயிரோடு இருக்குங்க. ஒரு கண்ணு இல்லை, கை இல்லை...
அதோட குறும்படங்கள் எடுக்கிறாங்க. படம் பார்த்தீங்கன்னா, நெஞ்சை அடைக்குது. எப்பவுமே ஒடுக்கப்பட்ட
இனத்தி லேர்ந்துதான் வீரியமான கலைகள் பிறக்கும். பேரழிவுகளைச் சந்திச்ச யூத இனத்திலேர்ந்துதான் ஸ்டீஃபன்
ஸ்பீல்பெர்க் வந்தார். அப்படி இனிமே ஈழத் தமிழர்கள் வருவாங்க.

எந்த தொழில்- நுட்ப வசதியும் இல்லாம அவங்க எடுக்கிற படங்களைப் பார்த்தால்தான், நம்ம லட்சணம்
நமக்கே புரியுது.

இங்கே தமிழ்நாட்ல எல்லாம் இருக்கு. மாத்தி மாத்தி மண்டையைக் குழப்ப, ஆளாளுக்கு ஒரு
சேனல் வெச்சிருக்கான். நாலு ஷோ சினிமா ஓடுது. கோயில் திறக்கிறதுக்கு முன்னாடி சாராயக்
கடை திறந்துடுறான். எப்பவும் செல்போன்- லயே அநா- வசியமா பேசிட்டு அலையு- றான்.
அப்புறம் எப்படி நல்ல விஷயத்- தைச் சிந்திப்பான்? சூடுசொரணை இல்லாத ஒரு தமிழ்ச்
சமூகத்தை உருவாக்கிட்டு இருக்கோம். இது ஈழத் தமிழ்ச் சகோதரர்களை நாம் அரவணைக்க
வேண்டிய நேரம் மட்டுமில்லை, அவர்களிடமிருந்து கத்துக்க வேண்டிய நேரமும்கூட!’’

‘‘ஈழத் தமிழர்கள் பிரச்னையில் தமிழ் நாட்டின் மீடியா, இலக் கியம், கலைத் துறை, அரசியல்-
வாதிகளின் அணுகுமுறை எப்படி இருக்கிறது?’’

‘‘ஐயோ, போங்க! படகு கவிழ்ந்து 60 ஈழத் தமிழர்கள் இறந்தார்கள்ங்கிறது இங்கே ஒரு
சின்ன செய்தி, அவ்வளவுதான்! யாரு பொண்டாட்டியை யாரு வெச்சிருக் கான், இன்னிக்கு
என்ன கள்ளக் காதல் கொலை, கஞ்சா கேஸ் என்னாச்சு, எந்தக் கோயிலுக்குள்ளே யார்
போனாங்கன்னு வேறு எதைப் பத்தியும் சிந்திக்கவிடாம, மக்களைத் தவறான முறையில்
ஊடகங்கள் வழி நடத்துது.


ஈழத்தில் இவ்வளவு பிரச்னை நடக்குதே... எந்த ஒரு தொலைக் காட்சியிலாவது ஈழத் தமிழர்
பிரச்னை பற்றி அரை மணி நேரம் காட்டறாங்களா? ஒரு சமூகத்தின் மிகப் பெரிய
பிரச்னையைப் பேசாத ஊடகங்கள் அந்தச் சமூகத்துக்கே துரோகம் செய்கிறதுன்னுதானே
அர்த்தம்? எப்போ பார்த்தாலும் ஏதாவது நடிகர், நடிகைகிட்டே போய், ‘யாரைக்
காதலிக்கிறீங்க, எப்போ கல்யாணம்?’னு இதே கேள்விகள்- தான். ஈழப் பிரச்னை பத்திக்
கேளுங்க. கேக்கணுமா இல்லியா?


ஊடகங்கள் இப்படின்னா, கலைத் துறை இன்னும் மோசம். ஈழத் தமிழர்களை நகைச்சுவைக்
காட்சிக்கு தான் இவங்க பயன்படுத்துவாங்க. இல்லைன்னா அங்கேயிருந்து ஒரு பெண்
வர்றா, அவளுக்குக் காதல்... இல்லேன்னா, பிரச்னை என்னன்னே புரியாம மேம்போக்கா
எதையாச்சும் எடுக்குற- து... என்னங்க நடக்குது இங்கே?


அப்புறம் நம்ம நடிகர்கள். பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வெச்சிருக்கிற நடிகர்கள் இதுவரைக்-
கும் இந்தப் பிரச்னையில் என்ன பண்ணி இருக்காங்க?

இந்த மாதிரி எரிகிற பிரச்னையில் உங்க அணுகுமுறை என்ன? அதைச் சொல்ல வேண்டாமா?
நீங்க அனுபவிக்கிற வசதி வாய்ப்புகள் தமிழ்நாட்டு மக்கள் மட்டும் கொடுத்ததில்லை. உலகம் முழுக்க இருக்கிற ஈழத்
தமிழர்களும் கொடுத்ததுதானே?

மண்ணை இழந்து அடக்கப்பட்டு, அவமானப்பட்டு, கேவலப்பட்டு தன் உயிரையே உருக்கி அவன் சம்பாதிக்கிற பணத்தை ஆளாளுக்குப் போய் கலை நிகழ்ச்சிகள் நடத்திப் பிடுங்கிட்டு வர்றீங்கள்ல... அப்போ அவங்களுக்கு ஒரு
கஷ்டம்னா, அதுக்கு என்ன பண்றதுன்னு யோசிக்க வேண்டியதும் உங்க பொறுப்பா,
இல்லியா?


இப்போ இருபது கோடி, முப்பது கோடின்னு போட்டுப் படமெடுக்கிறீங்களே... யாரை நம்பி? இந்தியாவுக்கு வெளியே
உலகமெல்லாம் வாழ்கிற ஈழத் தமிழர்கள் உருவாக்கியிருக்கிற சந்தையை நம்பித்தானே? அப்போ அவங்க துயரத்திலும் நீங்க
பங்கெடுக்கணுமா, இல்லையா?

ரஜினி, கமலெல்லாம் ஒரு வார்த்தை சொன்னா, அதைக் கேட்கவும் எடுத்துச் செய்யவும்
எவ்வளவோ பேர் இருக்காங்க. அவங்ககிட்ட நிறைய மக்கள் பலம் இருக்கு. ஏன் பேச
மாட்டேங்கிறாங்க? ஒவ்வொருத்தருக்கும் ஒரு அரசியல் பார்வை இருக்கணும். சமூகப்
பிரச்னையோட தங்களை இணைச்சுக்கணும். சும்மா மார்லன் பிராண்டோ நடிப்பைப் பத்தி
சிலாகிச்சா மட்டும் போதுமா?

ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், விக்ரம், அஜீத், சூர்யான்னு ஆரம்பிச்சு இன்னிக்கு இருக்கிற
ஆர்யா, பரத் வரைக்கும், ஒவ்வொருத்தரும் இந்தப் பிரச்னையில் தங்கள் கருத்து என்ன
என்பதைப் பத்திரி- கைகள் மூலமா தெரிவிக்கணும். ஒரு படம் முடிச்சுட்டு, துட்டை
அள்ளிட்டு, ஆயில் மசாஜ் எடுக்கவும், இமய- மலைக்கும், ஓய்வெடுக்க வெளி- நாட்டுக்கும்
போனா நாங்க எங்கே போறது?

மனச்சாட்சி வேண்டாமா? நம்ம மக்களுக்கு ஒரு துன்பம் வரும்போது அதுக்கான பொறுப்பு வேண்டாமா? இந்தப் பிரச்னையைக் கண்டுக்காம இருக்கோமேன்னு ஒரு குற்ற உணர்ச்சி வேண்டாமா? கார்கில்ல போர்னா தமிழ்நாட்டில் இருந்து ஏராளமா நிதி கொடுக்கிறோம், குஜராத்ல பூகம்பம்னா நிதி கொடுக்கிறோம், கோயில்ல அன்னதானம்னா நிதி கொடுக் கிறோம்... எல்லாம்
நல்ல விஷயம்தான்!

அதெல்லாம் போல இதுவும் ஒரு பெரிய பிரச்னை. உயிர்ப் போராட்டம்.
உதவி பண்ண வேண்டாமா? நம் உணர்வைக் காட்ட வேண்டாமா? ஈழத் தமிழர்களுக்காகப்
பேசுங்க. அகதி முகாம்களுக்குப் போய்ப் பாருங்க. அதுதான் மனிதாபிமானம்.
அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை மருத்துவர் தமிழ்க்குடிதாங்கி போராட்டம் நடத்துறார்.
தோழர் தொல்.திருமாவளவன் கூட்டம் போடுறார். ஆனால், எல்லோரும் ஒண்ணு சேர
வேண்டாமா? அரசியல் பகைமை, கோபங்களெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இப்படி ஒரு
நெருக்கடியான சூழலில் ஒரே குரலில் பேசலைன்னா, அப்புறம் எதுக்குப் பொதுவாழ்க்கை?
இதோ, வர்ற 8&ம் தேதி சென்னை மயிலை மாங்கொல்லையில் தோழர் திருமா அனைத்துக்
கட்சிக் கூட்டம் போட்டிருக்கார். இதைத் திருமா நடத்தினா என்ன, யார் நடத்தினா என்ன...
விஜயகாந்த்தே நடத்தினால்தான் என்ன? அங்கே எல்லோரும் வாங்க. மத்திய அரசுக்கு
இந்தப் பிரச்னையின் வீரியத்தைப் புரியவைப்போம்.

திருமா என்னிடம் கூட்டம் சம்பந்தமா பேசினார். ரஜினியில் தொடங்கி திரையுலகில்
முக்கியமானவங்க எல்லோருடைய தொலைபேசி எண்களையும் அவருக்குக் கொடுத்தேன்.
‘நானே அழைக்கிறேன். அவங்க எல்லோரும் வரட்டும்’னார். எல்லோரும் வாங்க. உங்க
ரசிகர்களையும் வரச் சொல்லுங்க. சினிமா, அரசியல் கூட்டம்னா அடிச்சுப் பிடிச்சுக்
கூடுறோமே... இங்கே எல்லோரும் வாங்க. ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ், சீனாவின்
தியான்- மென் சதுக்கங் களில் போராட்டக் காலங்களில் கூடிய கூட்டம் மாதிரி லட்சக்கணக்
கான பேர் திரண்டு, தமிழ் இனத்தின் ஒற்றுமையைச் சொல்வோம்.

முப்பதாண்டு காலமா அனைத்தையும் இழந்து அடக்குமுறையில் சிக்கி, அநாதைகளாக,
அகதிகளாக அலைந்து திரியும் நம் சகோதரர்களின் கண்ணீரை, மத்திய அரசுக்கும் உலகுக்கும்
புரியும்படி எடுத்துப் போவோம். கூட்டத்துக்கு வரமுடியா தவங்க, குறைந்தபட்சம் பிரதமருக்கு
ஒரு தந்தியாவது அனுப்பலாம். இந்த நேரத்திலும் இதைச் செய்யலைன்னா அது தமிழ்
இனத்துக்கு நாம செய்கிற துரோகம்!’’


‘‘இது சாத்தியம்தானா?’’


‘‘இப்பிடியே இருந்தா, தமிழ் இனத்தையே தடம் தெரியாம அழிச்சிடுவாங்க. நம் நதிகளை
எடுத்துக்கங்க. காவிரியை கர்நாடகம் பிடிச்சு வெச்சிருக்கு. முல்லைப் பெரியாறு விஷயத்தில்,
கேரளா பிரச்னை பண்றாங்க. பாலாறுக்குக் குறுக்கே அணை கட்ட ஆந்திரா முயற்சி பண்ணுது.
இங்கே ஓடுற தாமிரபரணியை வெளி- நாட்டு குளிர்பான நிறு- வனங்கள் நாசம் பண்- றாங்க.
ஒரு நதியைக்கூட தமிழன் உருப்படியா காப்பாத்த முடிய- லியே... இதெல்லாம் எதனால?
நம்மகிட்டே ஒற்றுமை இல்லை. மயக்கத்திலேயே திரியுறான் தமிழன். கிரிக்கெட்ல தோத்தா,
ஜெயிச்சா கூடிக் குடிக்கிற சமூகமா ஆகிட்டோமே!

அரசியல் கட்சிகளிடமே பொது நல விஷயங்களில் ஒற்றுமை இல்லை. அப்புறம் மக்களிடம்
எப்படி வரும்? நதிநீர் பங்கீட்டில் துவங்கி, ஈழத் தமிழர் பிரச்னை வரை அத்தனை கட்சித்
தலைமையும் ஒண்ணா நிக்கணும். அப்போதான் தமிழன் உருப்படுவான்’’ என்கிற தங்கர்,
பக்கத்திலிருக்கும் பெரியார் படத்தை உற்றுப் பார்த்துவிட்டு நிமிர்கிறார்.

‘‘இதை விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்குமான சண்டையா பார்க்காம, ஒரு இனம்
அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, இருக்க இடமின்றி அலைகிறதேங்கிற மனிதாபிமானத்தோட
எல்லாரும் பாருங்க. அகதிகளா இல்லை, நம்ம சகோதரர்களா அவங்க வாழ்க்கையை
மீட்டெடுத்துத் தர வாங்க. இல்லைன்னா, வருங்காலம் நம்மை மன்னிக்காது!’’

\ ராஜுமுருகன்,
படங்கள்: பொன்.காசிராஜன்

நன்றி
http://www.vikatan.com/av/2006/jul/16072006/av0201.asp
http://www.thamilnaatham.com

Read More...

Saturday, June 24, 2006

இந்தியா தும்மினால் இலங்கைக்கு சளிபிடிக்கும்

பெரியண்ணா உதவலாம்-
இந்தியா தும்மினால் இலங்கைக்கு சளிபிடிக்கும்'

சென்னையிலிருந்து வெளியாகும் முன்னணி ஆங்கில நாளேடான `இந்து' வுக்கு அளித்த பேட்டியில் இதனைக் கூறியுள்ள கோஹண, பெரியண்ணன் ஆகவோ, நெருங்கிய அயலவராகவோ 2 ஆயிரம் ஆண்டு கால நண்பனாகவோ பாரதம் இலங்கை விவகாரத்தில் முக்கிய பங்களிப்பை வழங்க முடியுமென கூறியுள்ளார்.

இலங்கை விவகாரத்தில் முக்கியமான பங்களிப்பை மிகப்பக்கத்திலுள்ள பெரிய நாடென்ற வகையில் இந்தியா வழங்கவேண்டும் என்று வலியுறுத்திக் கருத்துத் தெரிவித்திருக்கும் அரசாங்க சமாதான செயலகத்தின் செயலாளர் நாயகம் பாலித கோஹண, தனது கருத்தை வலியுறுத்தும் வகையில் இந்தியா தும்மினால் இலங்கைக்கு சளிபிடிக்குமென்ற பழையதோர் உவமையையும் கூறி வலுச்சேர்த்திருக்கிறார்.

சென்னையிலிருந்து வெளியாகும் முன்னணி ஆங்கில நாளேடான `இந்து' வுக்கு அளித்த பேட்டியில் இதனைக் கூறியுள்ள கோஹண, பெரியண்ணன் ஆகவோ, நெருங்கிய அயலவராகவோ 2 ஆயிரம் ஆண்டு கால நண்பனாகவோ பாரதம் இலங்கை விவகாரத்தில் முக்கிய பங்களிப்பை வழங்க முடியுமென கூறியுள்ளார்.

பாலித கோஹணவிடம் `இந்து' எழுப்பிய கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் இங்கு தரப்படுகின்றன.

கேள்வி: இலங்கை யுத்த நிறுத்த கண்காணிப்பு குழுவில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை சேர்ந்தவர்கள் இடம்பெறுவதற்கு விடுதலைப் புலிகள் ஆட்சேபனை தெரிவிப்பது குறித்து உங்கள் கருத்து என்ன?

பாலித : என்னால் உண்மையாக அவர்களது எதிர்ப்பை புரிந்து கொள்ள முடியவில்லை.

ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்கள் தேசங்களை அடிப்படையாக வைத்து அல்லாமல் தனி நபர்கள் என்ற அடிப்படையிலேயே தெரிவு செய்யப்படுகின்றனர்.

இவர்கள் ஸ்கன்டினேவிய நாடுகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும், நோர்வேயின் அதிகாரத்தின் கீழேயேயுள்ளனர்.

இது யுனிசெவ் போன்றது. அமெரிக்கா விடுதலைப் புலிகளை தடை செய்துள்ளது. இதற்காக இலங்கைக்கான யுனிசெவ் தலைவராகவுள்ள அமெரிக்கர் விடுதலைப் புலிகளால் ஏற்றுக் கொள்ளப்படாதவரா, இது விடுதலைப் புலிகள் தாங்கள் பேச்சுவார்த்தையில் பங்கு கொள்ளாமல் இருப்பதற்காக கூறும் ஒரு காரணமே.

கேள்வி: இலங்கையில் தற்போது கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள வன்முறைகள் குறித்த உங்களது மதிப்பீடுகள் என்ன?

பதில் : விடுதலைப் புலிகள் கிளைமோர் குண்டுகளை வெடிக்காத நாளோ, கைக்குண்டு வீச்சினை மேற்கொள்ளாத நாளோ துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொள்ளாத நாளோ கிடையாது. பொது மக்கள் பயணம் செய்யும் பேருந்தின் மீது கிளைமோர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை உலகிலேயே மிகவும் கொடூரமான காட்டு மிராண்டித்தனமான நடவடிக்கையாகும். விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் காரணமாக வன்முறைகள் தொடர்கின்றன. சமாதானம் ஏற்படவேண்டுமெனில், வன்முறைகள் முடிவிற்கு வரவேண்டும் என நாங்கள் எப்போதும் தெரிவித்து வந்துள்ளோம்.

அரசியல் இலக்குகளை எய்துவதற்கு வன்முறை ஒரு வழிமுறையல்ல என்பதை விடுதலைப் புலிகள் உணரவேண்டும். 1950, 1960 களிலிருந்து உலகம் மாறிவிட்டது. அரசியல் இலக்குகளை எய்துவதற்காக வழிமுறையாக பயங்கரவாதத்தை அது சகித்துக் கொள்வதில்லை.

கேள்வி: விடுதலைப் புலிகள் தங்களுக்கும் இந்த வன்முறைகளுக்கும் தொடர்பில்லை என தெரிவித்துள்ளதுடன், அரசாங்கமே இதற்கு காரணம் என குறிப்பிட்டுள்ளனர். இதற்கு உங்கள் பதில் என்ன?

பாலித: இது ஆழமற்றதாக தென்படுகின்றது. இவை அனைத்தும் ஒரு முறைக்குள் பொருந்துகின்றன. விடுதலைப் புலிகளே இவை அனைத்திற்கும் காரணம். ராஜீவ் காந்தியை கொலை செய்து விட்டு அதனை மறுத்ததை நீங்கள் மறக்கக் கூடாது. அவர்கள் இதனை மறுத்த போதிலும் இந்த சதித்திட்டத்தில் ஈடுபட்டவர்கள் இந்திய உயர் நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகள் கடந்த காலங்களில் மிகக் கொடூரமான படுகொலைகளில் ஈடுபட்ட பின்னர் அதனை நிராகரித்ததை மறுக்க முடியாது.

இலங்கையில் அதிநவீன கிளைமோரை தயாரிக்கும் தொழில் நுட்பம் விடுதலைப் புலிகளிடம் மாத்திரம் உள்ளதை சொல்ல வேண்டும். வேறு எவரிற்கும் இந்த திறமை கிடையாது.

கேள்வி: இதற்கான ஆதாரங்கள் உள்ளதா அல்லது இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளீர்களா?

பாலித: உலகின் எப்பகுதியிலும் 100 வீத ஆதாரம் கிடைக்கப் போவதில்லை என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. உறுதிப்படுத்த முடியாத ஆதாரங்களிலேயே நீங்கள் நம்பியிருக்க வேண்டியுள்ளது. இவற்றிற்கு காரணம் விடுதலைப் புலிகள் என இலங்கை அரசாங்கம் மாத்திரம் குற்றம் சாட்டவில்லை. சொந்த நலன்களற்ற சர்வதேச அமைப்புகளும் இதனை சுட்டிக்காட்டியுள்ளன.

கேள்வி : அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட தயார் என தெரிவிக்கின்றனர். பேச்சுவார்த்தைக்கான ஆரம்பப்புள்ளி என்ன?

பாலித : எந்த இடத்திலும் ஆரம்பிக்கலாம் என நாங்கள் நினைக்கின்றோம். எனினும் குறிப்பிடத்தக்க விடயங்களே ஆரம்பப் புள்ளியாக அமைவது நல்லது.

மனிதாபிமான, அபிவிருத்தி விடயங்களும் இடம்பெறலாம். இவை அனைத்தும் பேச்சுவார்த்தையின் பொருளாக அமையலாம். எனினும், விடுதலைப் புலிகள் இது குறித்து பேசத் தயாராகவில்லை. நாங்கள் வேறு விடயங்கள் குறித்துப் பேசலாம். இலங்கை யுத்த நிறுத்த கண்காணிப்பு குழுவின் பணி, கிழக்கிலிருந்து போராளிகளை வடக்கிற்கு கொண்டு செல்வது.

கேள்வி: ஆக பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதே முக்கியமானது என்கிறீர்களா?

பாலித : பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதே முக்கியமானது. இவ்வாறான சூழ்நிலையில் தொடர்ந்தும் பேசுவது முக்கியமானது. அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள தயாராகவுள்ளது.

கேள்வி : இந்தியா இலங்கை விவகாரத்தில் மேலும் ஆக்கபூர்வமான பங்களிப்பை செய்ய வேண்டும் என்ற கருத்துகள் இந்தியாவிலும், இலங்கையிலும் முன் வைக்கப்படுகின்றன. உங்களது கருத்து என்ன?

பாலித : இந்தியா எங்களது நெருங்கிய அயல்நாடு. இந்தியா ஒரு பாரிய அயல்நாடு. இந்தியாவிலிருந்து ஒவ்வொரு முறையும் தும்மல் வரும் போது இலங்கைக்கு சளி பிடிக்கும். இந்தியா ஆற்ற வேண்டிய முக்கிய பங்களிப்பு உள்ளது. அது ஒரு மூத்த சகோதரனின் பங்களிப்பாக இருக்கலாம். நெருங்கிய அயல்நாட்டின் பங்களிப்பாக இருக்கலாம். 200 வருட கால நண்பனின் பங்களிப்பாகவும் இருக்கலாம். இந்தியா ஒரு முதிர்ந்த ஜனநாயக நாடு என்ற வகையில் ஆக்கபூர்வமான பங்களிப்பாற்றும் என கருதுகின்றேன்.

கேள்வி : ஜனாதிபதி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் விடுதலைப் புலிகளுடன் நேரடி பேச்சுவார்த்தை குறித்து தெரிவித்திருந்தார். எந்தக் கட்டத்தில் இது சாத்தியம் எனக் கருதுகின்றீர்கள்?

பாலித: தனிப்பட்ட ரீதியில் விடுதலைப் புலிகளை பேச்சுவார்த்தை மேசைக்கு வரச் செய்ய முடியுமானால் அது அவர்களை உள்ளடக்குவதாக அமையும். விடுதலைப் புலிகள் இல்லாத எந்தத் தீர்வும் இறுதியில் சாத்தியமில்லை என்றே கருதுகிறேன்.

கேள்வி : ஆக, நீங்கள் விடுதலைப் புலிகளிடமிருந்து அவர்கள் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள விரும்புகின்றார்கள் என்ற பதிலுக்கு காத்திருக்கின்றீர்கள்?

பாலித : அவர்களை பேச்சுவார்த்தை மேசைக்கு வரச் செய்வதற்கு எம்மாலான அனைத்தையும் செய்வோம். இதுவே அரசாங்கத்தின் விருப்பமாகும். இந்த நாட்டிற்கு இனியும் வன்முறைகள் அவசியமில்லை. இரு தரப்பும் நீதியான தீர்விற்காக பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதே அவசியம்.

கேள்வி: இராணுவ தளபதி மீதான படுகெலை முயற்சிக்கு பின்னர் அரசாங்கம் இனங் காணப்பட்ட தாக்குதல்கள் மீது தற்பாதுகாப்பு தாக்குதலை மேற்கொண்டதாக குறிப்பிட்டது? இது குறித்து உங்கள் கருத்து என்ன?

பாலித : ஒரு இலக்கு இரணைமடுவில் உள்ள விடுதலைப் புலிகளின் சட்ட விரோத விமான ஓடு பாதை, சர்வதேச சிவில் விமான சேவை விதிமுறைகளின் படி அரசாங்கம் சில சர்வதேச நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். இதன்படி சட்டவிரோத ஓடு பாதைகளுக்கு அனுமதி கிடையாது. சர்வதேச விதிமுறைகளுக்கு ஏற்ப அரசாங்கம் அதனை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டது.

இதேபோல இலங்கையில் எவராவது அரசாங்க அனுமதியின்றி விமான ஓடுபாதையை அமைக்க முயன்றால் அதனை அழிப்போம்.

இது தவிர பிராந்திய பாதுகாப்பு விவகாரமும் உள்ளது. விமான ஓடுபாதையொன்று பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்தியா இந்த அமைப்பை பயங்கர இயக்கமாக அங்கீகரித்துள்ளது. இந்த அமைப்பு இலங்கைக்கு மாத்திரமல்ல பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கும், அயல் நாடுகளுக்கும் அச்சுறுத்தலாகவுள்ளது.

கேள்வி : இலங்கையிலிருந்து அகதிகள் வருவது இன்னுமொரு பிரச்சினை. இதனை எவ்வாறு உணர்கிறீர்கள்?

பாலித : அச்சுறுத்தப்பட்ட ஏழை மக்கள் தஞ்சமடைய முயல்கின்றனர். பாக்கு நீரிணையே அதுவாகவுள்ளது. அகதிகள் இந்தியாவிற்கு செல்வதை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நாங்கள் யு.என்.எச்.சி.ஆருடனும் பேசியுள்ளோம்.

இவ்வாறான அச்சுறுத்தலிற்கு அப்பால் சில அழுத்தங்களையும் அவதானித்துள்ளோம். அரசியல் ரீதியாக சாதகமான விடயம் என்பதால் தமிழ் நாட்டிற்கு அகதிகள் செல்வதை விடுதலைப் புலிகள் விரும்பக்கூடும்.

திருகோணமலையிலிருந்து மன்னாரிற்கு அங்கிருந்து ஏன் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள விரும்புகின்றார்கள் என்பது புரியவில்லை. இதைவிட தென்பகுதிக்கோ அல்லது புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கோ செல்லலாம் இது எனக்கு புரியவில்லை. இதன் பின்னால் ஏதோவுள்ளது.

thinakkural

Read More...

Tuesday, June 20, 2006

செங்கோலற்ற தேசத்திற்தான் வங்காலையும் இருக்கிறது.

ஒன்று மட்டும் உறுதி
தீர்ப்பெழுதும் கணம் வரை
உம்மைத் திருத்தவே முடியாது.

- தாயகக் கவிஞர் புதுவை இரத்தினதுரை-


வங்காலைப் படுகொலை பற்றி தாயகக் கவிஞர் புதுவையின் வெளிப்பாடு

ஏதுமறியாத எம் பிள்ளைகளை அமுக்கி
நித்திரையிற் கொல்.

நிலத்திற் காலுரசத் தூக்கிலிடு.
உரித்துச் சதையாக்கிப் பங்கிடு.
உறிஞ்சிய இரத்தம் கலந்து கறியாக்கி
எச்சமின்றி சுவைத்துச் சாப்பிட்டு ஏப்பமிடு.

பின்னர் பிள்ளைகளின் தாயைப்பிடி.
அவள் கணவன் முன்னே கவுணைத்தூக்கி
பிணத்தைப் புணருதலுக்கு ஒப்பாக
வெறி தீரும் வரையும் முயங்கு.
முடிந்ததும் பாதியுயிர் போயிருக்கும்
மீதியையும் வெளியேற்றி வீசிப்போ.

கணவனை மட்டும் ஏன் விடவேண்டும்?
பிடித்து மடக்கி முறி.
வதையின் வலியோலம் வெளியேறாதவாறு
சோறளித்த உளியாலேயே
தோண்டிசுவரோரம் எறிந்து செல்.

ஏனென்று கேட்கமுடியுமா உன்னையெவரும்?
உன் கனத்த சப்பாத்தின்
கீழே கசங்குவது தானேஎம் அடிமை ஜீவிதம்?


நேற்று நிலவெறித்த இரவில்
உன்னைப் பிடித்துலக்கிய உடற்பசி வடிந்திருக்கும்.
எங்கள் நெஞ்சில் கொதிப்புறும் நெருப்புக்குவடிகால் ஏது?


வெசாக் நாளில் மாடுரித்த ஒருவனுக்கு
பத்தாண்டு ஒறுப்பளித்த பௌத்த பூமியே!
என்ன தீர்ப்பு வழங்குவாய் இதற்கு?

நாளை நாடாளுமன்றம் கூடும்போது
கண்டனத் தீர்மானம் கொண்டு வருவர் சிலர்.
செங்கோலேந்திய சேவகன் முன்னேவர
சபாநாயகர் சபைக்கு வருவர்
வங்காலைக்கு மட்டும் பதில் வரமாட்டாது.


பனிஉறையும் தேசத்து குளிர் மலைச்சாரலுக்கு
பேசலாம் வருகவென அழைத்துச் சென்றவர்களுக்கும்
வங்காலையின் வலிக்குரல் கேட்டிருக்காது.


தங்கள் கதவுகளைச் சாத்தி
காற்றின் வழிகளை அடைக்கும் ஒன்றியமும்
இந்த உயிர் வதையைக் கணக்கிலெடுக்கப்
போவதில்லை.
எங்களை என்ன செய்யச் சொல்லுகின்றனர்
எல்லோரும்?

கண்காணிக்க வந்துள்ள
முன்னைய களமுனை அதிகாரிகளே!


பிணத்தின் முன்னே தொப்பி கழற்றவும்
மணக்கும் பிணக்குழி தோண்டி எடுக்கவும்
காய்ந்து கிடக்கும் கசங்கிய மலர்களை
கணக்கிலெடுக்கவும் தானா
நீங்கள் இங்கே காத்திருப்பது?

கதிர்காம அழகி “மன்னம்பெரி”யை
தென்னிலங்கைப் பேய்கள் குதறியபோது
எதிர்ப்புக்குரல் முதலில்
எங்களிடம் இருந்துதான் வந்தது.


“சூரியகந்த” புதைகுழிகளை
தோண்டியெடுத்து விசாரணையை தொடக்கு என்று
முதற்குரல் இங்கிருந்துதான் எழுந்தது.


மனிதம் சாகாது கொஞ்சமாயினும் எஞ்சியிருக்கும்
சிங்களத் தோழர்களே!
தோழியரே!
பதிலுக்கு எதிர்பார்க்கின்றோம் உங்களிடமிருந்து
ஒரு பதிலை.

தொடரும் எல்லாக் குற்றங்களுக்கும்
இங்கொரு சித்திரபுத்திரன் கணக்கெழுதுகிறான்.

எழுதும் குறிப்பேடு நிறைந்து வழிகிறது
குற்றங்களாக வங்காலை வரை.
நாளை கைகட்டிக்கொண்டு
தரும சபையிற் தலைகுனிந்து நிற்பீர்
வழங்கும் தண்டனைகளுக்காக.

ஒன்று மட்டும் உறுதி
தீர்ப்பெழுதும் கணம் வரை
உம்மைத் திருத்தவே முடியாது.

- தாயகக் கவிஞர் புதுவை இரத்தினதுரை-

orupaper

Read More...

Saturday, June 10, 2006

LTTE Commander killed in Claymore attack

Lieutenant Colonel Mahenthi, an LTTE Commander in Mannar district, and three LTTE cadres, were killed in a Claymore attack carried out by the Sri Lanka Army soldiers, on Vellankulam - Thunukkai Road, Saturday morning, ....
புலிகள் என்ன புடுங்குகிறார்கள்?மன்னிக்க இந்தக் கேள்விக்கு..சங்கரை பலி கொடுத்து ரமணனை பலி கொடுத்து இது அடுத்த கட்டம்..இன்னும் எத்தனை நாளைக்கு இந்த இழப்புகளை அனுமதிக்கப்போகிறோம் ?.மன்னார் இழப்புகளை விட புலிகளின் தளபதிகள் விழும்போது எமக்கு
அதிகம் வலிக்கிறது என்பது தலைவருக்கு தெரியாதா?

Read More...

Monday, May 29, 2006

ஐரோப்பியாவிற்கும் வாய்ப்பூட்டு

வி.புலிகளை தடை செய்து ஐரோப்பியாவும் தனக்கு வாய்ப்பூட்டை போட்டுவிட்டது.

பக்கத்து வீட்டுக்காரனோடை ஒருவன் கோபம் என்றால் அவனது பிரச்சனையில் தலையிடமுடியாது.
சண்டித்தனம் பண்ணலாமே தவிர புத்திமதி சொல்லமுடியாது.

இனி புலி சமாதான பேச்சுவார்ததை சிறுவர் படை சேர்ப்பு என்று பழைய வாய்பாட்டை ஒப்புவிக்கமுடியாது.

மகிந்த பிள்ளையார் பிடிக்கப்போய் பிள்ளையாராகவுமில்லாமல் குரங்காகவுமில்லாமல் முடிவு வந்திருக்கிறது.அனுபவி ராஜா அனுபவி

தேவையானால் ஐரோப்பியா இனி இலங்கை அரசுடன் மட்டும் பேசிக்கொள்ளட்டும்.

Read More...

Sunday, May 14, 2006

பிரபாகரன் பெயர் மாற்றம்!



வசந்தன் தேனியில் கொத்தி ஒரு பதிவு ஒன்று போட்டிருக்கிறார்.
என்னடா என்று பார்த்தால் அது ஒரு முசுப்பாத்திக் கட்டுரை.
பிரபாகரன் பெயரை மாற்றினால் அல்லது பிரபாகரன் என எழுதும் முறையை மாற்றினால் சகல மங்களம் உண்டாகும் .இது தான் அந்த கட்டுரையின் கதைச்சுருக்கம்.


பிரபாகரன் பெயர்தானே இப்போது ஈழத்திலும் சரி புலத்திலும் சரி தலைவர் என மக்களால் அழைக்கப்படுகிறது.இதே மாற்றம்தானே..

இப்போது வசந்தன் கட்டுரையை படிக்க அதுவும் ஞாபகம் வந்தது.

ஏற்கனவே இது போல பல கூத்துக்கள் விண்ணானங்கள் நடாந்திருக்கின்றன.

தமிழர் Tamilஎனறு எழுதும்போது 13 எண் வருகிறது அது ஒரு பிரச்சனையான எண் அதனால்தான் தமிழர்களுக்கு என்றும் பிரச்சனை தமிழர்கள் அதனால் Thamilஎன எழுதவேண்டும் என சிரித்திரன் இதழில் ஒருமுறை சீரியஸாக வந்தது.

.

அதே போல் இன்னொரு விடயம் தமிழ்நெற்றை´சாட்சிக்கு வேறு அழைத்திருந்தார்கள்.தமிழ்நெற் மாமனிதர் தராகி ஒருமுறை இந்த எண்கணித விளையாட்டால் எப்படி ஈழத்தமிழர்கள் தங்கள் பிள்ளைகளின் பெயர்களை பழுதாக்குகிறார்கள்
என ஈழமுரசில் ஒரு கட்டுரை முன்னர் எழுதியிருந்தார்.யாராவது அந்த நகல் இருந்தால் பிரசுரியுங்கள்.

இன்னொன்று சிறீரங்க ராஜகோபுரத்தால்தான் இலங்கைக்கு இந்தளவு பிரச்சனை எனவும் ஒரு கதை உலாவுகிறது..

அதே போல் இது நான் கண்டு கேட்ட கதை
1983 ல் நல்லூர் தேர்முட்டியில் பொருத்தியிருந்த கலசம்
சரியத்தொடங்கியது அல்லது சரிவாக தெரிந்தது.
நாட்டுக்கு இது கேடு என்று அந்த நேரத்தில் ஒரு பெரியவர் எங்களுக்கு நல்லூர் திருவிழாவில் சொன்னார்.அந்த நேரம் நாம் அதை பெரிதாக எடுக்கவில்லை.பின்னர் நினைத்து பார்க்கமுடியாதளவிற்கு நாம் திரிந்த தெருவோரமெல்லாம் தமிழர் பிணம் அநாதரவாக கிடந்த கதைகள் நாயிழுத்த கதைகள் ..

இதே போல் ஒவ்வொரு களப்போருக்கும் சிங்களஇராணுவம் நாள் பார்த்து பிக்குகளை வைத்து ஓதி சண்டைக்கு கிளம்பி தோற்பதுவும் ஞாபகத்தில் வருகிறது.

ஏதோ சரி பிழை தெரியாது சட்டென்று தோன்றியதை மட்டும் பதிவாக்கியுள்ளேன்.

Read More...

Saturday, May 13, 2006

தற்ஸ்தமிழ்

திண்ணை பற்றி நேசகுமார் எழுதியிருந்தார்.
நானும் இதே நேரம் தற்ஸ்தமிழ் பற்றியும் எழுதியாகவேண்டும்.
ஈழத்து செய்திகளை உடனுக்குடன் சுட சுட தருவதற்கு பல இணையத்தளங்கள் இருக்கின்றது.ஆனால் இந்திய செய்திகளை உடனுக்குடன் பார்க்க நான் மட்டுமல்லாது பலர் நாடுவது இந்த தளத்தைதான். பல வருடங்களுக்கு முன்னர் மகேஸ் என்பவர் இந்த தளத்தை மகேஸ் கொம் என்று நடாத்தி வந்தார் .முன்னரும் பல இணைப்புக்களுக்காக இந்த தளத்திற்கு சென்று வந்தேன்.பின்னர் அவர் நடாத்திய தளம் விரிந்தே இந்த தற்ஸ் தமிழ் மற்றும் திராவிட மொழிகளில்பெருகிற்று என நினைக்கிறேன்..

இதே போல் வேறு தமிழ்தளங்களும் செய்திகளை உடனுக்குடன் அப்டேற் செய்கிறதா எனத்தெரியவில்லை.

தளம் யுனிகோடில் இல்லை என்ற குறையை தவிர,திறமையாக செயல்படுகிறார்கள் பாராட்டுக்கள்.

Read More...

Wednesday, May 10, 2006

தாய்சொல்லைத்தட்டாதே

புத்தம் புதிய பிரதிகளாய் விரைவில் தீவு திரையரங்கில் காட்சிக்கு வர இருக்கும் சில திரைப்படங்கள்..காணத்தவறாதீர்கள்..

தாய்சொல்லைத்தட்டாதே
புதியவார்ப்புக்கள்
ஐயா
தம்பி
இணைந்த கைகள்
தவமாய் தவமிருந்து
காப்டன் பிரபாகரன்

Read More...

Monday, May 08, 2006

திமுக தோல்வி

திமுகவின் தோல்விகான காரணம் என்ன? வைகோவை வெளியேற்றம் செய்தது..சரத்ததை வெளியேற்றி அவரது சமூகத்தை பகைத்தது..விஜயகாந்துடன் சமரசம் பண்ணாது கல்யாணமண்டபத்தை இடிக்க முற்பட்டது.கலைஞர் கிள்ளியும் கொடுக்கமாட்டார் என்ற ராஜேந்தரை
அரவணைத்தது..தயாநிதி மாறனின் சதுரங்கம் ..ஜே க்கு போட்டியாக கலர் ரீவி விவசாயக் கடன் இரத்து என திட்டங்களை அறிவித்தமை போன்றவை மக்கள் மனதில் திமுக பற்றி இருந்த ஒரு கலக்கம் கலைந்து ஒரு தெளிவு பிறந்து வாக்களித்தார்கள்.

இதுவே திமுகவின் தோல்விக்கு ஓரு காரணம்..


இப்படி நாளைக்கு அரசியல் ஆய்வாளர்கள் திமுக தோற்றால் பிளந்து கட்டப்போகிறார்கள்..

வென்றபின்னும் தோற்றபின்னும் காரண காரியம் கணடுபிடிப்பது சுலபம் .

அதற்கு முதலே தீவு தனது ஆய்வை வெளிப்படுத்தியுள்ளார்.

திமுக நாளை வென்றால் வென்றதற்கும் மேலே குறிப்பட்ட காரணங்களைத்தான் ஆய்வாளர்கள் பத்திரிகையாளர்கள் சொல்லப்போகிறார்கள்..:)

நமக்கு
இராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன...
ராஜபக்க்ஷா கொடுக்கும் மலர்கொத்தை யாரோ ஒரு தமிழக முதல்வர் வாங்கத்தானே போகிறார்.

Read More...

Sunday, May 07, 2006

புதையுங்கள்...

ஒருமுறை பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள், "மீறப்படுவன எவரது உரிமைகள் என்பதும் மீறுவோர் எவர் என்பதுமே மீறப்படுபவை மனித உரிமைகளா என்பதை உலகம் தீர்மானிக்கும்" என்றார்.


பரப்புரைப் போரினூடாக சிங்களத்துக்கு இதுவரை உலகம் கொடுத்த ஆதரவை முற்றாக இழக்கச் செய்வதற்கான பணிகளில் புலம்பெயர் வாழ் தமிழர்கள் ஈடுபட வேண்டிய காலம் வந்துவிட்டது என்று விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே. பாலகுமாரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ வானொலியான புலிகளின் குரலின் அரசியல் அரங்கம் நிகழ்வில் நேற்று முன்தினம் சனிக்கிழமை (06.05.06) அவர் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்:

புதைகுழிகளும் படுகொலைகளும் எழுதும் வரலாறு பற்றி இம்முறையும் பேசுகிறோம்.

உலகம் முழுவதும் ஆக்கிரமிப்பாளர்கள் செய்ததைப் போல- அவர்கள் செய்ததை வரலாறுகள் கூறியது போல-

பொதுமக்களைக் கொல்வதற்கு ஊடாகத் தாங்கள் பெறுகிற மகிழ்ச்சியை-

தங்களுடைய தூக்குத் தண்டனையாக மக்கள் மேல் விதிக்கிற அந்த படுபயங்கரமான- மோசமான-தண்டனை முறைமையை தமிழ் மக்கள் மீது சிங்கள அரசு மீண்டும் கட்டவிழ்த்துவிட்டுள்ள வரலாற்றை மீண்டும் கூறுகிறோம்.

கடந்த வாரம் உதயன் பணிமனைக்குள் சென்று ரஞ்சித் மற்றும் சுரேஸ் என்ற இரு இளைஞர்களைப் படுகொலை செய்தனர்.

அவர்களுடைய சடலங்கள் புதைக்கப்பட்ட ஒரு சில மணிநேரங்களிலேயே மீண்டும் "துப்பாக்கிச் சூட்டில் 7 இளைஞர்கள் பலி" என்ற செய்தியைக் கேட்கிறோம்....

மணியம் சுபாஸ் (வயது 19)

நவரத்தினராசா நரசன்னா (வயது 19)

தாமோதரம்பிள்ளை மஞ்சு (வயது 17)

பாலச்சந்திரன் கிரிசாந்தன் (வயது 18)

நாகரட்ணம் நகுலேஸ்வரன் (வயது 18)

கோவில்மணி சின்னமணி (வயது 21)

சுமன் (வயது 22)

என்று அந்தச் செய்தி நீள்கிறது.

எங்கள் மக்கள் மீது தூக்குத் தண்டனை விதிப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் மகிந்தரின் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

இப்போது ஒரு மிகப்பெரிய கதவு திறந்துள்ளது.

புலம்பெயர் வாழ்க்கை வாழும் எமது உறவுகள்- மக்கள் விழிப்பாக இருந்து செயற்பட வேண்டிய கால கட்டம் வந்துவிட்டது. அது குறித்து பேசுவதற்கு முன்னர் சில விடயங்களைப் பார்க்கலாம்.

உலகம் இப்போது ஒரு பெரு நெருக்கடியில் நிற்கிறது. ஒருபொழுதும் எதிர்பார்க்காத ஒரு நெருக்கடியை- குட்டித்தீவான சிறிலங்காவில் அதுவும் குட்டித் தாயகமான எங்கள் தாயகத்தில் தொடர்புபடுத்திக் கொண்ட சர்வதேசம் இன்று குழம்பி நிற்கிறது.

ஒருமுறை பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள், "மீறப்படுவன எவரது உரிமைகள் என்பதும் மீறுவோர் எவர் என்பதுமே மீறப்படுபவை மனித உரிமைகளா என்பதை உலகம் தீர்மானிக்கும்" என்றார்.

புதையுங்கள்...

இன்னும் புதையுங்கள்....

ஆழங்கிடங்கெடுத்து அத்தனையையும் புதையுங்கள்....

ஆனால்

வானம் பொழிகின்ற

பூமி விளைகின்ற

வளமான ஒருநாளில்

எங்கள் வரலாற்றை

புதைகுழிகள் எழுதும்"

என்று இன்று நாங்கள் கூறுகிறோம்.

மனிதகுல வரலாற்றை படுகொலைகளும் புதைகுழிகளும்தான் எழுதி நகர்த்தியுள்ளன.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் ஹிட்லருடைய 60 இலட்சம் யூத மக்கள் படுகொலை-

திமோரில் நடந்த பல இலட்சம் படுகொலை-

பொஸ்னியாவில் கொத்து கொத்தான முஸ்லிம் மக்கள் படுகொலை-

ருவாண்டாவில் 10 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் படுகொலை

சூடானின் தர்வூர் மாவட்டத்தில் பட்டப்பகலில் இப்போது நடைபெறுகிற படுகொலைகள்

இவற்றைவிட

சிறிலங்காவில் நடக்கிற படுகொலைகள் என்கிற புதிய வரலாற்றை நாங்கள் எழுத வேண்டியுள்ளது.

உலகத்தை உலுக்கிய வரலாற்று நிகழ்வு ஒன்றை நினைவூட்டுகிறோம்.

1968 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16ஆம் நாள் தென்வியட்நாமின் மைலாயில் நடைபெற்ற படுகொலையானது உச்சகட்டமான ஒரு படுகொலை.

400 வியட்நாமிய பொதுமக்கள் வெட்டப்பட்டும் கொல்லப்பட்டதுமான அந்த சம்பவத்தின் போது முற்றாக அந்தக் கிராமம் எரித்து அழிக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பின்னர் செய்மூர் கேஸ் என்ற ஊடகவியலாளர் இது தொடர்பிலான தகவல்களைத் திரட்டி உலகத்துக்கு முன்வைத்தார். அப்போது உலகம் முழுமையும் துக்ககரமான-குழப்பகரமான-அதிர்ச்சியான சூழ்நிலை உருவானது.

அதையடுத்து மைலாய் படுகொலை விசாரணைகள் நடத்தப்பட்டு தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட்டனர்.

இந்தப் படுகொலையை நடத்திய படையணிக்குத் தலைமை தாங்கிய லெப். வில்லியம்ஸ் கலி என்பவர் தனது இறுதிக் காலத்தில் மனம் கலங்கி- பேதலித்து உளறிய வார்த்தைகளும் வரலாற்றில் பதியப்பட்டுள்ளன.

அதுபோலவே வியட்நாம் போரின் உச்சகட்டத்தில் அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளராக இருந்தவர் றொபோர்ட் மக்னமாரா. 1961 ஆம் ஆண்டுக்கும் 1968 ஆம் ஆண்டுக்கும் இடையே அவர் நீண்டகாலம் அந்தப் பதவி வகித்தார். விமானக் குண்டுகளை வீச உத்தரவிட்ட பெரிய மனிதர் இவர். காலையில் விமானக் குண்டு வீச்சுக்களைத் தொடங்கி மாலையிலே வியட்நாமியப் போராளிகளைக் கொன்றுவிட்டதாக பொய் கூறி அதிர்ச்சியூட்டிய மனிதர். அவர் பதவிக் காலம் பெப்ரவரி 1968 ஆம் ஆண்டு முடிவடைந்தது. அவருக்கு அளிக்கப்பட்ட பிரியா விடையின் போது முற்றாக அவர் உடைந்து போனார். கண்களில் நீர்மல்க, தழுதழுத்த குரலில் தான் செய்த பாவச்செயலுக்காக பாவமன்னிப்பு கோரினார்.

இரண்டாம் உலகப் போரில் ஐரோப்பாவில் வீசப்பட்ட குண்டுகளை விட அதிகளவிலான குண்டுகளை வியட்நாமில் வீச தான் உத்தரவிட்டதைக் கூறி மனம் பேதலித்துப் பேசினார். அதன் பின்னர் நீண்டகாலம் மௌனமாக இருந்த வர் 1995 ஆம் ஆண்டு திரும்பிப் பார்க்கிறேன் என்ற நூலை எழுதினார்.

தற்போது படுக்கையில் கிடக்கும் சிறிலங்காவின் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கும் இந்த எண்ணங்கள் மனதிலே ஓடக் கூடும் எனில் நாம் முன்னைய வரலாறுகளோடு இணைத்து பார்க்கக் கூடும்.

வரலாற்றின் அடிப்படையில் கொலைகள் மற்றும் படுகொலைகள் என்பன எதிர்பார்த்த இலக்கை அடைய ஆக்கிரமிப்பாளர்களுக்கு உதவி செய்யவில்லை. அதற்கு எதிர்மாறான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கின்றன. இதனை சிறிலங்கா அரசாங்கம் அறியாமல் இருப்பது குறித்து நாம் எதனையும் சொல்ல விரும்பவில்லை.

இனி தமிழீழத் தாயகத்தில் நடைபெற்ற படுகொலைகள் பற்றிய தகவல்களைத் தர விரும்புகிறோம்.

வடக்கு-கிழக்கு தகவல் புள்ளிவிவர மையம் வெளியிட்டுள்ள தகவல் திரட்டில் இந்தப் படுகொலை விவரங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

140-க்கும் மேற்பட்ட கொத்து கொத்தாக எங்கள் மக்கள் படுகொலைச் செய்யப்பட்ட சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. 20, 30, 40, 100, 250, 300 என்ற தொகைகளின் அடிப்படையிலும் ஊரின் பெயரிலுமாக எங்கள் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

வரலாற்றில் பதியப்பட்ட படுகொலையாக 1956 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 5 ஆம் நாள் அம்பாறை மாவட்டத்தில் இங்கினியாகலையில் கரும்புத் தோட்டத்தில் வேலை பார்த்த தமிழ் மக்களை சிங்களத் தொழிலாளர்கள் கூரிய கத்திகளால் துண்டு துண்டாக வெட்டி எரித்த சம்பவத்தோடு எங்கள் மீதான படுகொலைச் சம்பவங்கள் தொடங்கின.

1958 ஆண்டு மே இறுதி மற்றும் ஜுன் மாதங்களில் 300-க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். குறிப்பாக பாணந்துறை கதிர்வேலாயுதக் கோவிலில் எங்களுடைய அர்ச்சகர் தார் ஊற்றி எரிக்கப்பட்டார்.

தார்சி விட்டாச்சி என்பவர் எமர்ஜென்சி 58 என்கிற நூலில் இந்தப் படுகொலை விவரங்களைத் தந்துள்ளார்.

1958 ஆம் ஆண்டு படுகொலையின் போது பண்டாரநாயக்க கூறிய வார்த்தைகளை இன்று நினைவுபடுத்திக் கொள்கிறோம்.

"தங்களுடைய சதைத் துண்டங்களை தாங்களே ருசி பார்க்கட்டும்- தங்களுடைய குருதி வழிவதை தாங்களே கண்ணால் பார்க்கட்டும்" என்று "அழகாக ரசித்து" அவர் கூறியதும் அதன் பின்னர் ஒருவருடத்திலே அவர் கொல்லப்பட்டதும் வரலாறு. அவரை யார் கொன்றார்கள் என்பது உலகத்துக்குத் தெரிந்த விடயம். நிச்சயமாக நாங்கள் இல்லை. அதனையும் எம்மீது போட்டிருப்பார்கள்.

இன்று அதேபோல அதே துண்டுடன் அதே சிரிப்புடன் இதை சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார் மகிந்த ராஜபக்ச.

1977ஆம் ஆண்டு கலவரத்தில் 1500-க்கும் மேற்பட்ட தமிழர்கள்

1983 ஆம் ஆண்டு வன்முறையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களும் கொல்லப்பட்டனர்.

04.12.84 இல் மன்னாரில் படையினரது வெறியாட்டத்தால் 200-க்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை

31. 01.85 இல் மன்னாரில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர்

உலகத்தை இன்றும் உலுக்கும் 1987 ஆம் ஆண்டு சனவரி மாத முடிவில் கொக்கட்டிச்சோலையில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகொலை

1990 ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் நாள் சத்துருகொண்டானிலிருந்து புறப்பட்ட சிறிலங்கா இராணுவத்தினர் வந்தாறுமூலை பல்கலைக்கழகத்தில் அடைக்கலம் புகுந்த மக்களை வாகனத்தில் ஏற்றி 226 பேரை சுட்டுப் படுகொலை செய்தது. அவர்களது பெயர்களை நாம் பதிவு செய்து வைத்துள்ளோம்.

1995 ஆம் ஆண்டு ஜுலை 9 ஆம் நாள் யாழ். நவாலி தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட விமானப் படையின் வெறியாட்டம். மிகக் குறுகிய நேரத்தில் மிகப் பெரியளவில் எங்கள் மக்கள் பலியெடுக்கப்பட்டனர். 155-க்கும் மேற்பட்ட குழந்தைகளும் பொதுமக்களும் உடல் சிதறி துண்டு துண்டங்களாக கிடந்த படங்கள் இன்றைக்கும் அதிர்வூட்டக் கூடியவை.

இத்தகைய படுகொலைகளினூடாக எங்களினது வரலாறு எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தப் படுகொலைகளை எல்லாம் சிறிலங்கா இராணுவத்தினர் குறிப்பிட்ட கால அவகாசத்தை மேற்கொண்டு சாவகாசமாக செய்யப்பட்டவை.

இப்போது புலம்பெயர் மக்களுக்கான செய்தியை நாம் தெரிவிக்கின்றோம்.

புலம்பெயர் வாழ்க்கை வாழ்கின்ற மக்கள் எதற்கு அங்கு வாழ்கிறோம் என்று ஏங்கிக் கொண்டிருந்தனர்.

"உங்களுக்கு ஒரு காலம் வரும்- விடுதலையை முற்றுப்பெறுவதற்கான கடைசிப் பணியை நீங்கள் செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தோம்.

எந்த இடத்தில் புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் வாழ்ந்தாலும் சரி- கூடுகிற இடங்களில் அது பேரூந்து அல்லது தொடரூந்து நிலையங்கள், பணிமனைகள், உணவகங்கள் என்று எந்த இடமாக இருந்தாலும் இந்தப் படுகொலைகளின் நினைவுகளைக் கொண்டு அந்த மக்களிடத்தில் அதிர்வையூட்டி அந்த அரசுகளில் ஒரு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும்.

எங்கள் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைகளானது உலகத்தில் இதுவரை செய்யப்பட்ட படுகொலைகளுக்கு எந்த வகையிலும் குறைந்தது அல்ல.

21 ஆம் நூற்றாண்டிலும் கூட இந்தப் பகுதியில் நாளாந்தம் நடத்தப்படுகிற சம்பவங்கள் தொடர்பாக தமிழ் பேசும் மக்கள் அனைவரும் புலம்பெயர் நாடுகளில் மிகப் பெரிய பரப்புரையை- உலகின் மனசாட்சியை உலுக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய காலம் வந்துவிட்டது.

இரண்டாம் உலகப் போரின் படுகொலைகளை பிக்காசோ ஓவியத்துக்கூடாக எப்படி வெளிப்படுத்தி உலகத்தை உலுக்கினாரோ-

அதைப் போல தமிழ் மக்களினது படுகொலைகளை ஒழுங்குபடுத்தி ஒரு ஓவியமாக வரைந்து வைக்கலாம்- புகைப்படங்களாக வைக்கலாம்.

புகைப்படக் கண்காட்சிகளை வீதியோரங்களில் நடத்தி மக்களின் மனதை ஈர்க்கலாம்.

இந்தப் புகைப்படங்களுடன் மெழுகுவர்த்திகளைத் தாங்கி ஊர்வலமாகச் சென்று உலக மக்களினது மனசாட்சியை உலுக்கலாம்.

இத்தகைய புதிய முறைகளில் புலம்பெயர் நாடுகளில் வாழுகிற தமிழ் மக்கள் தாங்கள் வாழுகிற நாடுகளது நமக்குச் சாதகமாக்கி திசை திருப்ப முடியும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் குறித்து முடிவெடுக்க வேண்டிய அவசியம் இன்றைக்கு உலகத்துக்கு வந்துள்ளது. இப்போதைய சூழல் மிக மிக சாதகமான சூழல். இது நீண்டகாலத்துக்கு நீடிக்காது என்பதையும் நினைவில் நாம் கொள்ள வேண்டும்.

சிங்களப் பேரினவாதியாக மாறிவிட்ட புத்திஜீவி என்று சொல்லப்படுகிற மகிந்தரின் ஆலோசகராகிய ஜெயான் ஜயதிலக்க அண்மையிலே ஒரு கட்டுரையில் சிங்கள தேசம் என்ன செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

"ஆயிரம் வெட்டுக்களால் ஒரு படுகொலை" என்ற தலைப்பில்

"இன்று புலிகளுக்கு எதிராக நாங்கள் செய்கிற எதிர்த்தாக்குதல்கள்- நிச்சயமாக தமிழ் மக்களை வதைக்கக் கூடாது- அவர்கள் மீது கொலைகளை நிகழ்த்தக் கூடாது. அவ்வாறு நிகழ்த்தினால் எங்களுடைய நோக்கம் திசைமாறிவிடும். உலகம் ஒருபொழுதும் எங்களுக்கு ஆதரவாகச் செயற்படாது. அதே நேரத்தில் தமிழ் மக்களுக்கு ஆதரவாக உலகம் திரும்பிவிடும் என்கிற அபாயம் உள்ளது" என்கிறார்.

ஆகவே தமிழ் பேசும் மக்களுக்கு தற்போது நல்ல வாய்ப்பு உருவாகி உள்ளது.

அவரது கட்டுரையின் கடைசிப்பகுதியில், புலிகளுக்கு எதிரான பயங்கரவாத எதிர்ப்புப் போரைத் தவறி சிங்களம் கைக்கொண்டால் என்ன நடக்கும் என்பதைப் பற்றி மிகத் தெளிவாகச் சொல்லுகிறார்.

"நாங்கள் இந்த சண்டையை பிடிக்கும் போது அது வழிதவறி- ஒரு இனக்குழுமத்தின் மீதான- ஒரு மதம் சார்ந்த- பேரினவாத அடிப்படையிலான ஒரு கருத்தை உருவாக்கக் கூடிய- இனத்தின் மீதான போராக இதை நாங்கள் இதை மாற்றினால் நிச்சயமாக நாங்கள் எங்கள் தார்மீக ஆதரவுக்கான தளத்தை முற்றாக இழந்துவிடுவோம்.

உலக அபிப்ராயத்தை இழந்துவிடுவோம்- பிரதேச ரீதியாக(இந்தியா) ஆதரவை இழந்துவிடுவோம்-அதுமட்டுமல்ல இறுதியில் போரையே இழந்துவிடுவோம்" என்கிறார்.

சிங்களம் போரை இழப்பதற்கான அனைத்துப் பணிகளிலும் நாம் ஈடுபட்டிருக்கிறோம்.

நாங்கள் அவர்களுடன் நேரடியாக மோதி அவர்களது போரை இழக்க வைக்கப் போகிறோம்.

அதே நேரத்தில்-

எங்கள் புலம்பெயர் மக்கள்

பரப்புரைப் போரினூடாக சிங்களத்துக்கு இதுவரை உலகம் கொடுத்த ஆதரவை முற்றாக இழக்கச் செய்வதற்கான பணிகளில் ஈடுபட வேண்டிய காலம் வந்துவிட்டது என்றார் க.வே. பாலகுமாரன்.

-puthinam-

Read More...

படம் பார் பாடம் படி

சில நினைவூட்டல்கள்..சில புகைப்படங்கள்














memorial stone of M G Ramachandran



























Read More...

Saturday, May 06, 2006

சென்னை வருகிறேன் .பஞ்சம் பிழைக்க..

சென்னை வருகிறேன் .பஞ்சம் பிழைக்க..

வந்தோரை வாழவைக்கும் தமிழகம் என் குடும்பத்தை மட்டும் விலக்கியா வைத்துவிடும்? இப்போது போனால்தான் உண்டு என்று என் நண்பர்கள் சொன்னதை நம்பி குடும்பத்துடன் கிளம்புகிறேன். வெளிநாட்டில் வேலைவாய்ப்புகள் மங்கிப்போன நிலையில் சென்னையை நம்புவதைத்தவிர வேறு வழி தெரியவில்லை.

ஒரு 4 கிராம் பவுண்

பார்க்க ஒரு கலர் ரீவி
வீட்டுக்கு ஒரு கோமாதா.
மகனுக்கு ஒரு கணனி.
.இலவச அரிசி வீடு
தேடிவரும் ரேசன் கடைப்பொருட்கள்...

இவ்வளவும் ஓரிடத்தில் கிடைப்பதற்கு நான் சென்னையென்ன நிக்காராகுவாவே செல்லத்தயார்.

எங்கள் குடும்பத்தில் 3 வாக்குச்சீட்டுக்கள்.

வாக்காளர் சீட்டில் இல்லாவிட்டாலும் எமது வலைப்பதிவு நண்பர்கள் யாராவது உதவி செய்தால் 3 பேரும் 3கட்சிகளில் எதுக்கென்றாலும் வாக்குப்போட்டு மினிமம் கியாரண்டியாவது பெற்றுக்கொள்வோம்.


நங்கநல்லூர் தொகுதியாயின் விசேடம்.அங்குதானே நமது எல்லோரும் அறிந்த வலைப்பதிவின் சுழியாகிய டோன்டுசார் இருக்கிறார்..பக்கபலமாக இருப்பார்.ஜமாய்த்துவிடலாம்.

வலைப்பதிவாளர்களே உதவுங்கள்.

Read More...

Thursday, May 04, 2006

அந்நியன் பற்றிய தகவல்

எனக்கும் அன்னியன் பினனூட்டமிட்டிருந்தார்.

இது பற்றி பல காலமாகவே சந்தேகமிருந்தது.எழுத்தை வைத்து கண்டுபிடித்துவிடலாம் என்றால் மாறி மாறி எழுதப்படுகிறது.

தமிழில் இதற்கு ஏதும் விதி இருக்கிறதா?

அந்நியன் என்று எழுதுவது சரியா?அன்னியன் என்று எழுதுவது சரியா?

Read More...

Tuesday, May 02, 2006

அட்ரா சக்கை எண்டானாம்..

கலைஞர் மகன் முக முத்துவிற்கு ஜெ 5 இலட்சம் உதவி .இன்றைய செய்தி.
மற்றைய செய்தி. மோதிரம் தட்டல் புகழ் தாமரைக்கனியின் மகன் இன்பத்தமிழன் தகப்பனுக்கு (தாமரைக்கனி) கொள்ளி வைக்ககூட ஜெ யின் அனுமதியைகோரிய உத்தமபுத்திரன் இப்போது திமுகவிற்கு....என்ன உலகமடா...

..அட்ரா சக்கை எண்டானாம் அம்மன் கோயிலிலை புக்கை எண்டானாம்...

Read More...

Monday, May 01, 2006

என்ன சொல்லுதிய..வெட்கமாயில்லை?

நேற்று தொலைக்காட்சியில் அந்த தாயின் கதறலை காட்டினார்கள் .அந்த தகப்பனை இழந்த குழந்தைகள்..இதன் வேதனை இழப்புக்கள் ஈழத்தவனுக்கு நன்று புரியும்


நேற்று நொந்ததை இன்று பதிவாய் சாத்தாங்குளத்துக்காரர் பதிவாயிருக்கிறார்.மகிழ்ச்சியாயிருக்கிறது.

இந்தியா ஒரு வல்லரசு நாடு தனது குடிமக்களை பாதுகாப்பதில் ஒரு அமெரிக்கா போல் இயங்கவேண்டும் .

இலலாவிட்டால் நானொரு இந்தியன் என்று அந்த மக்கள் பெருமையாக சொல்வதில் அர்த்தமில்லாது போய்விடும்.

Read More...

Wednesday, April 26, 2006

பேய்க்கு வாழ்க்கைப்பட்டால்--

வலைப்பதிவில் இனி மட்டுறுத்தல் செய்யவேண்டும்.எந்த ஊரிலிருந்து எவர் வருகிறார் போன்ற வாசகர்களின் ஜாதக விபரங்களை சேமிக்கவேண்டும். நானுண்டு பதிவுண்டு என்றிருந்தேன் .ஒரு நாளில் தலைகீழாக்கிவிட்டார்கள்.இனி நானும் விருப்பத்திற்கு மாறாக இவையெல்லாவற்றையும் செய்தாகவேண்டும்.இதற்கு காரணமான புண்ணியவான் எங்கிருந்தாலும் நன்றாகவிருக்கட்டும்.

Read More...

தந்தால் அம்மா தராட்டால் சும்மா..

த(ங்)கட்சி புகழ் ராஜேந்தர் இவர் வேறு தன் பங்குக்கு...இன்னமும் அரசியலுக்கு வாலமீன் சுறாமீன் வராததுதான் ஆச்சரியம்

Read More...

Tuesday, April 25, 2006

விசுவரூபம் 2

இன்றுதான் நிம்மதியாகவுள்ளேன்- விசு பேட்டி


dinamalar

Read More...

Monday, April 24, 2006

விசுவரூபம்

அதிமுகவில் விசு.. No Comments.






போற போக்கில் எல்லாருமாக சேர்ந்து திமுகவை வெல்லப்பண்ணிவிடுவார்கள் போல் இருக்கிறது.

Read More...

தமிழ்நாட்டில் செம்படை


தமிழ்நாட்டில் எண்ணைக்கு பஞ்சமா?

ஆளாளுக்கு செம்ப(ட்)டை தலையுடன் அலைகிறார்கள்..முதல் விக்ரத்தை பார்த்தேன் .ஏதோ படத்திற்காக காய்கிறாராக்கும் என நினைத்தேன்.பின்னர் விஜயின் தகப்பன் சந்திரசேகரன் அதே செம்பட்டை கோலம் .இப்போ இன்று நமது புரட்சி தளபதி விஜயகாந்தும் அந்தக்கோலம்..



இதுதான் இப்போதைய தமிழ்நாட்டு ஸ்ரைலா?இதற்கு வயது வித்தியாசம் எல்லாம் கிடையாதா?

பி.கு கூந்தலுள்ளவன் டை அடிக்கிறான் நீ ஏய்யா வயிறெரிகிறாய்?(இப்படிக்கு மனச்சாட்சி)

Read More...

Friday, April 21, 2006

அதிமுக வெல்லும் தீவாரின் கருத்துக் கணிப்பு


லயோலா கருத்துக்கணிப்பு உளவுப்படை கருத்துக்கணிப்பு என வெளியாகும்போது தீவாரின் கருத்துக்கணிப்பு இது.

தமிழகத்தில் எந்த அனுதாப அலையும் இம்முறை வீசாவிட்டாலும் பல கூட்டணிகளை எதிர்க்கும் நோஞ்சான் திமுக என ஒரு அனுதாப அலையை உருவாக்க ஆரம்பித்துள்ளார்கள் போலிருக்கிறது.

எனினும்

கருணாநிதி டால்மியாபுரத்தில் தண்டவாளத்தில் தலைவைத்து படுத்தென்ன இந்த வயதில் இப்படி சுறுசுறுப்பாயிருந்தென்ன.. எம்ஜிஆர் தோஷம் இருக்கும்வரை இரட்டை இலைக்குத்தான் வெற்றி!

Read More...

Friday, April 07, 2006

நான் இனி என்ன செய்ய?



தம்பி திரைப்படத்தில் வரும் இந்த வரி போல்
தலைவர் பிரபாகரன் அவர்களும் சர்வதேசத்தை நோக்கி ஒருநாள் நான் இனி என்ன செய்ய என கேட்கும் நிலை உருவாகும் என்பது போல் தம்பி பட இயக்குனர் சீமான் விகடன் பேட்டியில் கூறியிருந்தார்.

சிங்களவர் தமிழர்களை பேயர்களாக நினைத்து தமது கட்டாக்காலித்தனத்தை அவிட்டு விட்டுள்ளனர்.புலிகள் அமைதிப்பேச்சுவார்த்தைக்கு வந்து இழந்தது கூட.

திருமலையில் விக்னேஸ்வரன் அரசதுணைப்படைகளால் கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் விடுதலைப்போராளிகள் தொடர்ச்சியாக கொல்லப்படுவது மேலும் உச்சக்கட்டமாக திருமலை வன்முறையில், புலிகள் பலம் வாய்ந்து இருந்தும், தமிழர் பிரதேசத்திலேயே தமிழர்கள் வெட்டியும் எரித்தும் கொல்லப்பட்டுள்ளார்கள்.

திருமலை வன்முறை படங்கள் யாழிணையத்தில் இன்று வெளியாகியுள்ளது.



சர்வதேச அரசியல் இனி காணும். புலிகளே மக்களை காப்பாறறுங்கள்.

Read More...

Friday, March 31, 2006

(தின) கரன் VS மலர்

50 ஆண்டுகளாக தமிழ்ப்பத்திரிகை உலகம் எந்தக் குடும்பத்தின் ஆதிக்கத்தில் இருந்தது?

Read More...

Tuesday, March 28, 2006

புஸ்பராஜா ஒரு நாட்டுப்பற்றாளரா?

ஒரு 70 களில் வண்ணைஆனந்தன் சபாலிங்கம் புஸ்பராஜா மாவை சேனாதிராஜா காசி ஆனந்தன் என்ற பெயர்கள் யாழில் இளைஞர்களுக்கு மிகப்பிரபலம்.சிங்கள அரசின் அடக்குமுறையால் கைது செய்யப்பட்டு சிறையில் பல சித்திரவதைகளை அனுபவித்தவர்கள்.விடுதலைப்புலிகள் தோன்றாத அல்லது தம்மை வெளிப்படுத்தாத காலமது

இவர்களது வரலாறு பெரிதாக இன்றைய தலைமுறைக்கு தெரியாது .தெரியவருமோ என்பதும் நிச்சயமில்லை.வண்ணை ஆனந்தனும் சபாலிங்கமும் புஸ்பராஜாவும் இறந்துவிட்டார்கள்.புஸ்பராஜா மட்டும் அவர் எழுதிய புத்தகம் மூலமாக இன்னமும் பல ஆண்டுகள் உயிர் வாழ்வார்.

புஸ்பராஜா ஒரு நாட்டுப்பற்றாளரா என்ற கேள்விக்கு விடையை காலம்தான் சொல்லவேண்டும்.

புஸ்பராஜா பற்றிய ஒரு கட்டுரையை அ. முத்துலிங்கம் அவர்கள் பதிவுகள் தளத்தில் எழுதியுள்ளார் .அந்த கருத்துடன் ஒன்றி அதை இங்கு மறு பதிப்பிடுகிறேன் .

நன்றி பதிவுகள் .திரு அ.முத்துலிங்கம் அவர்கள்.

இலக்கியம்!
சொந்த நாட்டுக்குப் போ!
அ.முத்துலிங்கம்

இறப்பதற்கு சில நாட்கள் முன்பு நான் சுந்தர ராமாசாமியுடன் பேசிக்கொண்டிருந்தபோது, 'இளையராஜா ஒரு மேதை. அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் அவரைப் பற்றி எழுதுவேன்' என்று சொன்னார். கடைசி வரை அந்த வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை என்றே நினைக்கிறேன். இளையராஜா பற்றி ஒன்றும் எழுதாமலே சுந்தர ராமசாமி இறந்துபோனார். சில விசயங்களை தள்ளிப்போடக் கூடாது; முக்கியமாக பாராட்டுகள். 2004ம் ஆண்டு எனக்கு மிகவும் மோசமான ஆண்டு. கோடைக்கால முடிவில் எனக்கு தீவிரமான ஓர் அறுவை சிகிச்சை நடந்தது. பதினாலு நாட்கள் படுத்த படுக்கையாக, அசைய முடியாமல் ஒரே இடத்தில் கிடந்தேன். அந்தச் சமயங்களில் எனக்குப் பக்கத்தில் இருந்தது ஒரேயொரு புத்தகம். சி.புஸ்பராஜா எழுதிய 'ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்.' கடுமையான மருந்துகள் உள்ளே எடுத்ததால் நித்திரையும், முழிப்புமாக என் காலம் கழிந்தது. விழித்திருக்கும் ஒவ்வொரு கணமும் நான் அந்தப் புத்தகத்தை நெற்றிக்கு மேலால் பிடித்து படித்தேன். நெஞ்சில் அது விரித்தபடி படுத்திருக்க நான் நித்திரையாகினேன். மீண்டும் எழும்பியதும் விட்ட இடத்திலிருந்து படித்தேன். இப்படி 14 நாட்கள் என் பக்கத்தில் உறுதுணையாக, நண்பனாக அந்தப் புத்தகம் இருந்தது. 631 பக்கங்களையும் இந்தக் காலகட்டத்தில் நான் படித்து முடித்தேன். சில அத்தியாயங்களை இரு தடவை; சில பத்திகளை இரு தடவை; சில வசனங்களை இரு தடவை; சில வார்த்தைகளை இரு தடவை. என்னை அது மிகவும் பாதித்தது.

புஸ்பராஜாவை எனக்கு முன்பின் தெரியாது. கேள்விப்பட்டதும் இல்லை. எப்படியும் அவரைத் தொடர்புகொண்டு பாராட்டவேண்டும் என்று நினைத்தேன். ஒருவருக்கும் அவருடைய முகவரியோ, தொலைபேசி இலக்கமோ தெரியவில்லை. அப்படியே காலம் கடந்துபோய் விட்டது. இனிமேல் நான் எவ்வளவுதான் முயன்றாலும் அது முடியாத காரியம். ஒருவரைப் பாராட்ட வேண்டுமென்றால் அதை உடனேயே செய்யவேண்டும். தூற்றுவதாயிருந்தால் தள்ளிப் போடலாம், பாதகமேயில்லை. சுந்தர ராமசாமிக்கு நடந்ததுபோலவே எனக்கும் நடந்தது. மரணம் முந்திக்கொண்டு விட்டது.

சில நண்பர்கள் சொன்னார்கள் புஸ்பராஜா எழுதிய நூலில் பல சரித்திரப் பிழைகளும், தகவல் பிழைகளும் இருக்கின்றன என்று. இருக்கலாம். ஆனால் அவரே சொன்னதுபோல நான் இதை ஒரு ஆய்வு நூலாகப் பார்க்கவில்லை. சரித்திர மாணவர்களுக்கு பயன்படும் முதல் ஆவணமாகவே பார்த்தேன். இனிமேல் வரும் பதிப்புகளில் தகவல் பிழைகளை திருத்திக் கொள்ளலாம். நான் மெய்யாகவே அனுபவித்தது அவருடைய இயல்பான நடையையும், இலக்கிய மொழியையும், மருத்துவர்கள் எல்லாம் கைவிட்ட நிலையில் புஸ்பராஜா பிரான்ஸில் இருந்து புறப்பட்டு இந்தியா போனார். மரணத்தை தற்காலிகமாக தள்ளிவைக்கலாம் என்று நினைத்தார். அவர் செய்து முடிப்பதற்கு இந்தப் பூமியில் இன்னும் சில இலக்கிய வேலைகள் இருந்தன. சிறிது அவகாசம்தான் தேவைப் பட்டது. இந்தியாவில் அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள் 'ஒன்றுமே செய்ய முடியாது. உங்கள் சொந்த நாட்டுக்கு போங்கள்' என்று சொல்லிவிட்டார்கள். 56 வருடங்களாக சொந்த நாடு ஒன்றைத் தேடித் திரிந்தவருக்கு இந்த வார்த்தைகள் எப்படி இருந்திருக்கும். மறுபடியும் பிரான்ஸ் தேசம் வந்தார். அங்கேயே உயிரை விட்டார்.

The View from Castle Rock ல் அலிஸ் மன்றோ சொன்னது நினைவுக்கு வருகிறது. 'It cannot be my home. It can be nothing to me but the land where I will die.' புகுந்த நாடு ஒரு போதும் சொந்த நாடாக மாறமுடியாது. நீ இறக்கப் போகும் நாடாக வேண்டுமானால் இருக்கலாம்.

கனடாவில் நடந்த இரங்கல் கூட்டத்தில் கற்சுறா அவருடன் தான் இறுதி நாட்களில் தொலைபேசியில் உரையாடியதை நினைவு கூர்ந்தார். புஸ்பராஜா சொன்னார், 'நண்பரே, மரணம் பின் வாசல் வழியாக வரும் என்று நினைத்தேன். அது முன் வாசல் வழியாக வந்துவிட்டது.' புஸ்பராஜா வாசல் கதவில் மரணத்தை ஒரு சில மாதம் தடுத்துவைக்க நினைத்தார். 'நான் எழுத நினைத்ததை முடிக்க எனக்கு ஒன்பது மாதங்கள் அவகாசமே போதும்' என்று வருந்தினார். அப்படி வருத்தப்படுவதற்கு அவசியமே இல்லை.

திருவள்ளுவர் எத்தனை நூல்கள் எழுதினார். ஒன்றுதான், அது திருக்குறள். கணியன் பூங்குன்றனார் 1800 வருடங்களுக்கு முன்னர் படைத்த ஒரு கவிதைக்காக இன்றுவரை போற்றப்படுகிறார். ஹார்ப்பர் லீ தன் வாழ்நாளில் எழுதிய புகழ் பெற்ற ஒரேயொரு நாவல் To Kill a Mocking Bird. பிரிட்டிஷ் இளம் பெண் Emily Bronte படைத்த வாழ்நாள் சாதனை இலக்கியம் Wuthering Heights.

இந்த வகையில் 'ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்' நூல் அடங்கும். ஒரு வாழ்வுக்கு ஒரு நூல் போதுமானது. ஒரு தேசத்துக்கு ஒரு நூல் போதுமானது. ஒரு வரலாற்றுக்கு ஒரு நூல் போதுமானது. ஓர் இலக்கியத்துக்கு ஒரு நூல் போதுமானது.

Read More...

Thursday, March 23, 2006

வயாக்ரா ஜூஸ்

கண்டிப்பாக வயது வந்தோர்க்கு மட்டும் (A)
















மூலம் தமிழ்முரசு மாலைத் தினசரி

Read More...

Saturday, March 18, 2006

வலைப்பதிவர்க்கும் ஒரு சீட்! திராவிட கட்சிகள் குழப்பம்

எமது பலத்தை அறிந்து எமக்கும் ஓரு சீட்டை கோவையிலோ அல்லது காசிமேட்டு தொகுதியையோ தரும் கட்சிக்கு எமது பலத்தை நிருபித்து அந்தக் கூட்டணி கட்சியினரை ஆட்சிக் கட்டிலில் படுத்துவோம் என வபக சார்பில் கட்சி கொள்கை பரப்பு செயலாளர் தீவு இன்று பத்திரிகையாளர் மத்தியில் பரபரப்புபேட்டி ஒன்றை வழங்கினார்.


பேட்டியின் மேலதிக விபரம் கட்சி பலம் மற்றும் இதர விடயங்கள் யாவும் கொபசெ அவர்கள் வேலைக்குப்போட்டு வந்து வெளியிடுவார் .அதுவரை பத்திரிகைகள் உளவுப்பிரிவுகள் அமைதி காக்கும்படி கழக கண்மணிகள் கேட்டுக்கொள்கிறார்கள்.


p.s அண்ணன் ஆனந்தராஜ் கலைஞர் செந்தில் போன்றோருடன் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறன்றன.

Read More...

Sunday, March 12, 2006

அமைதிப்பூங்கா

செந்தமிழ் காவலர்களின் தேர்தல் பேச்சை இட்லிவடை ஒரு சில உதாரணங்களோடு காட்டியுள்ளார்.

எனக்கு இதில் பெரிய ஆச்சர்யமென்னவென்றால் ஆட்டோ பயம், ஓட ஓட வாள்வெட்டு என தமிழக அரசியல் இருக்கும் என நினைத்தால் இந்த கருத்து சுதந்திர அரசியல் நன்றாகத்தானிருக்கிறது.

அவனவன் அகண்ட காவேரியிலிருந்து, ஒண்டிக்கு ஒண்டி வாரீயா என வீராப்புடன் பேசுமளவிற்கு தமிழக அரசியல் ஜனநாயக உரிமை இருப்பதை எண்ணி வியக்கத்தான் முடிகிறது.

சில விடயங்கள் தேவைக்கதிக வெளிச்சம்போட்டு காட்டப்படுகின்றன என்பதற்கு(ஆட்டோ பயம்) இந்த தேர்தல் மேடைப்பேச்சுக்கள் உதாரணமாகவிருக்கின்றன.

Read More...

Friday, March 10, 2006

தாய் சொல்லை தட்டாதே

திமுக குறும்பு ...y go goனாலும் goனார் இவங்க ரவிசுதாங்க முடியலை.படத்தை அழுத்திப் பார்க்கவும்.



Read More...